சனி, 20 மார்ச், 2010

பெண்களின் நோய்களை குணப்படுத்த பிரம்படியாம்!

பெண்களின் நோய்களை குணப்படுத்த பிரம்படியாம்!
சாமியாருக்கு வலைவீச்சு

லக்னோ, மார்ச் 18_- நோய்களை குணப்-படுத்-துவதாகக் கூறி பெண்-களை பிரம்பால் அடித்-தும், உதைத்தும் வந்த மந்திர வைத்திய சாமி-யாரை காவல்துறையினர் வலைவீசி தேடி வரு-கின்றனர்.

உத்தரப்பிரதேச மாநி-லம் இடா மாவட்டத்தில் சிட்புரா என்ற கிராமம் உள்ளது.

இங்குள்ள காளி கோயிலில் நேக் சிங் என்ற சாமியார் பெண்-களை அடித்து, உதைத்து, விசித்திரமான முறையில் நோய்களை குணப்படுத்-துவதாக தகவல்கள் பரவின.

பெண்களுக்கு மட்-டுமே மந்திர வைத்தியம் பார்க்கும் இவர், பாதிக்-கப்பட்ட பெண்களை காளி கோயிலில் உட்கார வைத்து தாறுமாறாக அடித்து உதைக்கிறார். பிரம்பால் அடித்தும், காலால் எட்டி உதைத்-தும், கன்னத்தில் ஓங்கி அறைந்தும், திடீரென வயிற்றிலும், முதுகிலும் குத்து விட்டு அலற வைக்கிறார். சில சமயங்-களில் தலை மீது கூட ஏறி நின்றிருக்கிறார் என கிராம மக்கள் கூறுகின்ற-னர். இந்த அடிதடி மந்-திர வைத்தியத்தின் மூல-மாக புற்றுநோய் உள்-ளிட்ட பல்வேறு நோய்-கள் குணமாகிவிடுவதாக தகவல் பரவியது. காளி ஆத்தாள் தன் உடலில் புகுந்து, நோயாளிகளை தன் கையாலேயே அடித்து நோய்களை வாங்கிக் கொள்கிறாள் என்று இவர் கூறுவதை நம்பி ஏராளமான முதிர்கன்னி-கள், இளம் பெண்கள் என ஏராளமானோர் கடந்த சில நாள்களாக அடி வாங்கிக் கொண்டி-ருந்தனர். இந்நிலையில் இது-பற்றிய தகவல் தேசிய பெண்கள் ஆணை-யத்-துக்கு செய்தி அறிக்கை மூலம் தெரியப்படுத்தப்-பட்டது.

உடனடியாக இது-குறித்து நடவடிக்கை எடுக்குமாறு உ.பி அர-சுக்கு உத்தரவிடப்பட்-டது. இதையடுத்து இடா மாவட்ட தனிப்படை காவல்துறையினர் சிட்-புரா கிராமத்துக்கு சென்-றது. காவல்துறையினர் அங்கு வரும் தகவலை அறிந்த சாமியார் தப்பி-யோடி விட்டார். அவ-ரைக் கைது செய்ய காவல்துறை-யினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக