செவ்வாய், 16 மார்ச், 2010


இலங்கை விவகாரம் குறித்து பான் கீ மூனுக்கும் நவனீதம் பிள்ளைக்கும் இடையில் பேச்சுவார்த்தை
இவ் விடயம் 16. 03. 2010, (செவ்வாய்), தமிழீழ நேரம் 12:47க்கு பதிவு செய்யப்பட்டது
செய்திகள்இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம் பிள்ளைக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆலோசனை வழங்கும் நிர்புணர் குழு நியமனம் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.


நிபுணர்கள் குழு இதுவரையில் பெயரிடப்படவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் பலரிடமும் பான் கீ மூன் ஆலோசனை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நவனீதம்பிள்ளை உள்ளிட்ட முக்கியஸ்தர்களிடம் பான் கீ மூன் கலந்தாலோசித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

எவ்வாறெனினும், இலங்கை தொடர்பான நிபுணர்கள் குழு விரைவில் அமைக்கப்படக் கூடிய சாத்தியம் கிடையாதென தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக