புதன், 17 மார்ச், 2010

விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி பிரிட்டனில் அரசியல் கட்சியாக பதிவு
லண்டன், மார்ச் 17_ தமிழீழ விடுதலைப் புலி-களின் அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியான விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற கட்சி, பிரிட்டனில் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அரசியல் கட்சி தொடர்பாகப் பேசிய என் பாலசுப்-பிர-மணியம், விடுதலைப் புலிகளும், ஈழத் தமிழர்-களும் பயங்கரவாதிகள் என்ற கண்ணோட்டம் பிரிட்டனில் மறையும் காலம் உருவாகி இருக்-கிறது என்று தெரிவித்-தார். விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சி, விடுதலைப் புலி-கள் தலைவர் பிரபாகர-னால் எதிர்காலத்தில் தேவைப்படலாம் என்ற நோக்கத்தில் உருவாக்-கப்பட்டது.ஆனால் தொடர்ந்து இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் அந்தக் கட்சியின் தேவையை சிறிது காலத்திற்கு இல்-லாமல் செய்திருந்தது. தற்பொழுது ஆயுதங்கள் மவுனித்துள்ள நிலையில், இந்தக் கட்சியின் தேவை மீண்டும் ஏற்பட்டுள்ளது. தேசியத் தலைவர் காட்-டிய பாதையில் எமது மக்களின் விடுதலைக்-கான பயணத்தை தாம் தொடர இருப்பதாக அதன் தலைவர்களில் ஒருவரான பாலசுப்பிர-மணியம் தெரிவித்தார். தமிழ் மக்களின் விடு-தலைக்காக போராடி-வரும் புலம் பெயர் அமைப்புக்களுடன் இணைந்து போராட்-டத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்று பால-சுப்பிரமணியம் மேலும் தெரிவித்தார்.

புலிச்சின்னமே தமது கட்சியின் சின்னமாக பிரிட்டனில் பதியப்பட்டு உள்ளதாகவும், புலிக்-கொடி-யேற்றப்பட்ட தமது கட்சி அலுவலகம் விரைவில் திறக்கப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் 1989ஆம் ஆண்டின் பிற்-பகுதியில் உருவாக்கப்-பட்டது. விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சி, சிறிலங்-காவின் தேர்தல் ஆணை-யத்தில் தன்னை ஓர் அர-சியல் கட்சியாகப் பதிவு-செய்து கொண்டது. இன்றைக்கும் இலங்கை தேர்தல் ஆணையத்தில் ஒரு அரசியல் கட்சியாக இருந்துவரும் விடுதலைப் புலிகளின் மக்கள் முன்-னணி என்ற கட்சி, தற்-பொழுது பிரிட்டனிலும் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்-பட்டுள்-ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக