வெள்ளி, 26 மார்ச், 2010

தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு...

தனி ஆயுதப்படை (Reserve Police) வளாகத்தில்

உமா மகேஸ்வரி ஆலயம்!

சிவகாசியிலிருந்து திருவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) செல்லும் நெடுஞ்-சாலையில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் காவல் துறையின் தனி ஆயுதப் படைப் பிரிவு ஒன்று இயங்கி வருகிறது. ஒரு நூற்றாண்டைக் கடந்த தொன்மையானது. அன்றைய வெள்ளையர் ஆட்சியின் போது, ஒரு நிகழ்வை - சிவகாசி கொள்ளை என்று வரலாறு பதிவு செய்துள்ளது. இரு பிரிவினரிடையே தலைதூக்கியிருந்த மோதல் போக்கைத் தவிர்ப்பதற்காகவே நிறுவப்பட்டதாகும்!

காவலர்கள் குடியிருப்பு (Reserve Line) ஆயுதக் கிடங்கு, பயிற்சிக்கான விரிந்த மைதானம், அதிகாரிகளுக்கு சிறப்பு இல்-லங்கள் என பழம் பெரும் கட்டடங்கள் போக எஞ்சியுள்ள இடம் காவல் துறை-யின் பார்வையிலேயே இருந்து வந்தது. இங்-குள்ள பயிற்சிக் களம் மாநிலத்தி-லேயே முதன்மையானதாக ஒரு காலத்தில் கருதப்பட்டது. வேலியே பயிரை மேய்வது போல் தற்போது இந்த இடம் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் கோயில் கட்டும் இடமாக மாறியதுதான் கொடுமை!

சில ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்-சாலையை ஒட்டிய விலை மதிக்க முடியாத அந்த விளையாட்டுத் திட-லில் காவலர்களும், அதிகாரிகளும் விரும்-பிய அம்மன்கோயில் ஒன்று சிறிய அளவில் எழுந்தது. நீண்ட நெடுங்---கால-மாக மருந்துக்குக் கூட கோயில் இல்-லாதிருந்த இடத்தில் சின்னஞ்சிறிய-தாக அமைந்த அம்மன் கோயில் மெள்ள மெள்ள விரிவடைந்து இன்று 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. உமா மகேஸ்வரி ஆல-யம் என்று பெய-ரிட்டாலும் பிள்ளை-யார், சுப்ரமணியன், சிவலிங்கம், நவக்-கிரகங்கள் என பல சில்லரைக் கோயில்-களும் முளைத்-தெழுந்துள்-ளன. நடை சாத்தவும், நடை திறக்க-வும், வடமொழியில் பூஜை வழி-பாடு-கள் செய்யவும் அர்ச்சகர்கள் நிய-மிக்-கப்-பட்டுள்ளனர். கோயிலைச் செப்-பனிடவும், செம்மைப்படுத்தவும் செம்மண் தேவைப்பட்டது. கோயிலை ஒட்டியுள்ள ஒரு ஏக்கர் பொட்டல் தரையை நாலடி ஆழத்திற்குத் தோண்டிப் போட்டு சின்னா பின்னப் படுத்தியிருப்பதைப் பார்க்க நெஞ்சு பொறுக்குதில்லையே!

கட்டுமான வேலைகளுக்கும், விழாக்-களுக்கும் வெளியில் வசூல் வேட்-டையும் நடக்கிறது. மண் சுமப்-பதும், மலர் அலங்கார வேலைகள் செய்வதும் அரசு சம்பளம் பெறும் காவல்-துறையினர் மட்டுமே! நிரந்தர-மாய் அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்-கிகளில் எந்த நேரமும் பக்திப் பாடல்-கள் ஒலித்துக் கொண்டேயிருக்கின்-றன. பஜனைக் கூட்டத்திற்கும், பக்தி சுரண்டலுக்கும் பஞ்சமில்லை.

இது போன்ற அத்து மீறல்களால் இந்து அல்லாத பிற மதத்தினரின் உள்-ளக்குமுறல் வெளிப் படத் தொடங்-கி-யுள்-ளது. பதற்ற நிலை உருவாகும் சூழல் துளிர் விடுவதையும் மறுப்ப-தற்கில்லை.

அரசு அலுவலக வளாகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்-கக்கூடாது என்று ஏற்கெனவே அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது.

இதனைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்த நெல்லை மாவட்டம், தாழை-யூத்து, சங்கர் நகரைச் சேர்ந்த முத்து-ராமன் என்பவர் மதுரை உயர்நீதி மன்-றத்-தில் வழக்கு தொடுத்தார். இரண்டு நீதி-பதிகள் வழங்கியுள்ள தீர்ப்பு குறிப்-பிடத் தகுந்ததும், பாராட்டுதலுக்குரியது-மாகும்.

அரசு அலுவலகங்களில் மத வழி-பாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என ஏற்கெனவே அரசு உத்தரவிட்-டுள்-ளது. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்-டியது அரசின் கடமை. உத்தரவு ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதை அமல்-படுத்த அரசு தேவையான நடவடிக்-கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு அலுவலக வளாகங்-களில் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்-படவேண்டும் என்கிறது தீர்ப்பு! சம்பந்தப்பட்டவர்-களுக்கே வெளிச்சம்!

- சிவகாசி மணியம்

விடுதலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக