சனி, 20 மார்ச், 2010

சிறுவர்களுடன் பாதிரியார்கள் தகாத உறவு

போப் தலைகுனிவு

வாடிகன், அமெரிக்கா, அய்ரோப்பா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பாதிரியார்கள், சிறுவர்களுடன் தகாத உறவு வைத்து கொண்டது தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதால், இது தொடர்பாக அனைத்து தேவாலய பாதிரியார்-களுக்கும் எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப உள்ள-தாக போப் பெனிடிக்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, அயர்-லாந்து, ஜெர்மனி, நெதர்-லாந்து, ஆஸ்திரியா, ஆஸ்-திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ரோமன் கத்-தோலிக்க பாதிரியார்கள், சிறுவர்களிடம் தகாத உறவு வைத்துக் கொள்-வதாக நூற்றுக்கணக்கான புகார்கள் தெரிவிக்கப்பட்-டுள்ளன. இதனால், வாடி-கன் நகரில் உள்ள போப் பெனிடிக்ட் வருத்தம-டைந்துள்ளார்.

போப் பெனிடிக்ட் ஜெர்மனியில் பிறந்தவர். முனிச் நகர பிஷப்பாக 77ஆம் ஆண்டு முதல் 81ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர். ஜெர்-மனி-யில் உள்ள பாதிரி-யார்கள், சிறுவர்களுடன் செக்ஸ் வைத்து கொண்-டது தொடர்பான புகார்-கள் வந்த வண்ணம் உள்-ளன. இந்த புகார்களுக்கு தீர்வு காண்பது குறித்து வாடிகன் நகரில் போப் பெனிடிக்ட் உயர் மட்ட ஆலோசனை நடத்தி-னார்.

சிறுவர்களிடம் செக்ஸ் வைத்து கொண்டதாக புகார் வந்த தேவாலயங்-களுக்கு அவர் எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப உள்-ளார். இந்த கடிதம் செய்த தவறுக்கு பாவ மன்னிப்பு கேட்பதாகவும், இந்த விஷயத்தால் ஏற்பட்ட மனப்பாதிப்பை அமைதிப்-படுத்த உதவும் வகையில் அமையும் என்று கோடிட்டு காட்டினார்.-இதற்கி-டையே அயர்லாந்-தைச் சேர்ந்த கத்தோ-லிக்க தலைவர்கள் நடந்த தவ-றுக்கு மன்னிப்பு கேட்-டுள்-ளனர். அயர்லாந்தில் தந்தை பிரன்டன் ஸ்மித் என்பவர் இக்குற்றச்சாற்-றிற்குஅதிகம் ஆளானவர். அவர் வெளிப்படையாக, என்னால் பாதிக்கப்பட்ட-தாக கருதுபவர்கள் அனை-வரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என்று கூறினார். அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் மலை போல வந்ததற்கு வருத்தம் தெரிவித்தார்.

இன்றைய நிலையில், ஜெர்மன் தேவாலயங்-களில் உள்ள பாதிரியார்-கள் மீதான சிறுவர் பாலியல் புகார்கள் ஏரா-ளமாக வாடிகனில் வந்து குவிந்திருப்பதாகவும், அவற்றை பரிசீலிப்பதில் பத்து பேர் ஈடுபட்டிருப்ப-தாகவும் தெரிவிக்கப்-பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக