திங்கள், 22 மார்ச், 2010

ராஜபக்சே எதிர்ப்பை மீறி

ராஜபக்சே எதிர்ப்பை மீறி
அய்.நா.குழு இலங்கை வருகை


கொழும்பு, மார்ச் 22_ இலங்கையில் மனித உரிமை வல்லுநர் குழுவை அமைப்பதற்காக அய்.நா. சபை அதிகாரி விரைவில் கொழும்பு வரவுள்ளார்.

விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததை-யடுத்து இலங்கையில் நிலவும் சூழ்நிலை குறித்து கருத்து அறிய இக்குழுவை அய்.நா. சபை அமைக்க-வுள்ளது.

இதுகுறித்து அய்.நா. சபையின் ஒருங்கிணைப்-பாளர் நீல் பூனே கொழும்-பில் நடைபெற்ற நிகழ்ச்சி-யொன்றில் கூறியதாவது: அய்.நா. பொதுச்செயலா-ளர் பான் கீ மூனின் அறிவுறுத்தலின்படி இந்த வல்லுநர் குழு அமைக்கப்-பட உள்ளது. இது-தொடர்-பாக ஆலோசனை நடத்த ஏப்ரலில் அய்.நா. சபை மூத்த அதிகாரி ஒருவர் வரவுள்ளார்.

இலங்கையில் தற்-போதுள்ள மனித உரிமை நிலைமை, இலங்கைக்குத் தேவையான உதவிகள் குறித்து அய்.நா. பொதுச் செயலர் பான் கீ மூனிடம் எடுத்துச் சொல்வதற்கு இந்தக் குழு அமைக்கப்-பட-வுள்ளது. மேலும் இலங்கையில் மனித உரி-மையை நிலைநாட்ட என்னென்ன செய்யலாம் என்றும் அந்தக் குழு இலங்கை அரசுக்கு ஆலோ-சனைகளை வழங்கும் என்றார் அவர்.

இலங்கைக்கு அய்.நா. மனித உரிமைக் குழு தேவையில்லை என்று அதிபர் மகிந்த ராஜபக்சே ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இலங்கையில், அய்.நா.வின் மனித உரிமைக் குழு அமைப்பது தேவையில்-லா-தது; சட்டப்படி உரிமை-யற்றதும்கூட என்று ராஜ-பக்சே எதிர்ப்பு தெரிவித்-தார்.

மேலும் பான் கி மூனை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது கருத்தையும் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இது-தொடர்பாக பான் கி மூனுக்கு கடிதமும் எழுதி-யிருந்தார். இந்நிலையில் இலங்கையின் எதிர்ப்பை-யும் மீறி மனித உரிமைக் குழு அமைப்பதற்காக அய்.நா. மூத்த அதிகாரி ஒருவர் கொழும்புக்கு வர-வுள்ளது குறிப்பிடத்-தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக