புதன், 24 மார்ச், 2010

திலீபன் நினைவுத் தூபி இலங்கை இனவாதிகளால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது



நல்லூர் பருத்தித்துறை வீதியில் அமைக்கப்பட்டிருந்த திலீபன் நினைவுத் தூபி உடைத்து அழிக்கப்பட்டுள்ளது.

இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையில் இருந்த காலத்தில் சில கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபன் ஞாபகார்த்தமாக நல்லூர் மேற்குப்பக்க வீதியில் இத்தூபி அமைக்கப்பட்டிருந்தது.


சிறிலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நடைபெற்ற காலங்களில் இத்தூபி ஓரளவு சேதடைந்திருந்தது. இந்நிலையில் ஏ – 9 நெடுஞ்சாலை மக்களின் பாவனைக்குத் திறக்கப்பட்டதும், தென்னிலங்கை வியாபாரிகள் இவ்விடத்தில் தமது விற்பனை நிலையங்களை ஆரம்பித்து இருந்தனர்.

அத்துடன், சர்வதேச மற்றும் உள்ளுர் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் இந்நினைவுத் தூபி இருந்தது. இந்நினைவுத் தூபிக்கு முன்னாள் சுற்றுலாப் பயணிகள் நின்று புகைப்படம் பிடித்து வந்தனர்.

இந்நிலையில், திடீரென இந்த நினைவுத் தூபி முற்றாக அழிக்கப்பட்டு கற்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் காணப்படுகின்றது. இத்தூபி இருந்த அடையாளமே இல்லாத நிலையில் இவ்விடம் மாற்றப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த வரலாற்றுத் தடயங்களை அழிக்கின்ற முயற்சிகளை சிறிலங்கா அரசு அண்மையில் மேற்கொண்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வாழ்ந்த இருப்பிடங்கள், அவரர்களால் கைவிடப்பட்ட முகாம்கள் மற்றும் அவர்களின் காரியாலயங்கள் போன்ற இடங்கள் வடக்கை நோக்கிப் பயணிக்கின்ற உல்லாசப் பயணிகளின் பெரும் கவனத்தைப் பெற்று வருவதை அடுத்தே, சிறிலங்கா அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக