வெள்ளி, 26 மார்ச், 2010

வள்ளலார் கோயிலில் உருவ வழிபாடு கூடாது

நீதிமன்றத் தீர்ப்புவள்ளலார் கோயிலில் (லிங்க) உருவ வழிபாடு கூடாது_ இந்து அறநிலை-யத்-துறை உத்திரவிட்டது.

இந்த ஆலயத்தின் அர்ச்சகரான சபாநாத ஒளி சிவாச்சாரியார்_ அறநிலையத்துறை ஆணை-யினை ரத்துச் செய்யக்கோரி உயர்நீதி-மன்றத்தில் ஒரு வழக்குப் போட்டார்.

வடலூர் வள்ளலார் கோயிலின் கருவறையில் ஜோதியை ஏற்றித்தான் வழிபாடு செய்ய வேண்-டும் என்று வள்ளலாரே கொள்கை வகுத்துத் தந்துவிட்டுப் போயிருக்-கிறார். இந்தக் கோயிலின் பரம்பரை அர்ச்சகரான நான் மக்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கருவறைக்குள் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வந்தேன். வள்ளலார் கோயில் கருவறையில் உரு வழிபாடு நடத்தக் கூடாது என்று இந்து அறநிலையத்துறை தடைவிதித்துவிட்டது. இந்தத் தடையை ரத்துச் செய்ய வேண்டும் என்று அவர் கோரி இருந்தார்.

இந்த வழக்கை விசா-ரித்த நீதிபதி கே.சந்துரு வள்ளலார் கோயிலில் உருவ வழிபாடு கூடாது என்று தமிழ்நாடு அரசு விதித்த தடை சரியா-னதே என்று சிறப்புமிக்க-தோர் தீர்ப்பினை வழங்கி-யுள்ளார். அது வருமாறு:

வள்ளலாரின் கொள்-கையை அரசு சரியாக பின்பற்றி, இந்த உத்த-ரவை பிறப்பித்துள்ளது. வள்ளலார் கொள்கை-யில், மதத்துக்கு இட-மில்லை. மனிதாபிமானத்-துக்கு-தான் இடமுள்ளது. ஜாதி, மத வேற்றுமை இல்லை. மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவது கடமை. வன்முறைக்கு இடமில்லை. ஊனமுற்-றோர், ஏழைகளுக்கு பரிவு காட்ட வேண்டும். எனவே, லிங்க வழிபாடு செய்ய அனுமதிக்கக் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அரசு உத்தரவு செல்லும் என்-பதே அந்தச் சிறப்புமிக்க தீர்ப்பாகும்.
விடுதலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக