வியாழன், 25 மார்ச், 2010

என் உயிருக்கு ஆபத்து

ராஜபக்சேவின் கொடுமைகளை அம்பலப்படுத்துவேன்

பொன்சேகா ரகசியப் பேட்டி

கொழும்பு, மார்ச் 25-_ முறைகேட்டையும் மீறி, ராஜபக்சேயை விட அதிக வாக்குகள் வாங்கி-யதால், என் மீது ராஜ-பக்சே பொறாமைப்படு-கிறார். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று ராணுவக் கட்டுக்காவலை மீறி அளித்த பேட்டியில் பொன்சேகா கூறியுள்-ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேயி-டம் தோல்வி அடைந்த முன்னாள் ராணுவ தள-பதி சரத் பொன்சேகா, கடந்த மாதம் ராணுவ காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கடற்-படை தலைமையகத்தில் அவர் காவலில் வைக்கப்-பட்டுள்ளார். அவர் மீது போடப்பட்ட 2 குற்றச்-சாற்றுகளுக்காக ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடுமை-யான ராணுவக் காவலை-யும் மீறி, இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சிக்கு பொன்சேகா பேட்டி அளித்துள்ளார். எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் எழுதி அனுப்பி உள்-ளார். அதில் பொன்-சேகா கூறி இருப்ப-தாவது:-

என் மீதான குற்றச்-சாற்றுகள், பொய்யா-னவை. நான் சிறை வைக்கப்பட்டது, சட்ட விரோதம். அதிபர் தேர்-தலில், ராஜபக்சே செய்த முறைகேடுகளையும் மீறி, நான் அவரை விட அதிக வாக்குகள் பெற்றேன். அதனால் அவர் என்-னைப் பார்த்து பொறா-மைப்படுகிறார். அவரது வெற்றியை எதிர்த்து நான் வழக்கு தொடரு-வேன் என்று அவருக்கு தெரியும். எனவே, என் மீது பொய் குற்றச்சாற்று சுமத்தி கைது செய்துள்-ளார்.

எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. இருப்-பினும், நாட்டு நலனுக்-காக, ராஜபக்சேயின் உண்மை முகத்தை அம்-பலப்படுத்-துவேன். அதில் பின்-வாங்க மாட்டேன்.

இவ்வாறு பொன்-சேகா கூறியுள்ளார்.

இதற்கிடையே, ராணு-வக் காவலை மீறி பொன்-சேகா தனது பதில்களை அனுப்பியதை அறிந்து இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இது-குறித்து, தேசிய பாது-காப்புக்கான பத்திரிகை மய்ய தலைமை இயக்கு-நர் லட்சுமணன் குலு-கல்லே கூறியதாவது:-

பொன்சேகா எப்படி தனது பதில்களை வெளியே அனுப்பினார் என்று முழு அளவில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது-தொடர்-பாக, அவரது மனைவி அனோமாவிடம் விசா-ரணை நடத்தி உள்-ளோம். அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, பொன்-சேகா அந்நியச் செலாவணியைப் பயன்-படுத்-தியது பற்றியும் விசாரணை நடத்தி-னோம். இதுபோல், ஜனதா விமுக்தி பெர-முனா தலைவர் அனுரா குமார திசநாயகேவி-ட-மும் தனியாக விசா-ரணை நடத்தி உள்-ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக