வியாழன், 29 ஏப்ரல், 2010

குறளில் கோயில் இல்லை

இன்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்-களின் 120 ஆம் ஆண்டு பிறந்த நாள். தந்தை பெரியார் அவர்களின் உரையைக் கவிதைத் தேனில் தந்த தேர்ந்த புலவன் பாரதிதாசன்.

ஒரு கட்டத்தில் மயிலம் ஸ்ரீ ஷண்முகன் வண்ணப்பாட்டு பாடிக் கொண்டிருந்த இந்தக் கவிஞர் புரட்சிக்கவிஞன் ஆனது _ மயிலாடு-துறையில் தந்தை பெரியார் அவர்களின் ஒரு சொற்பொழிவைக் கேட்ட மாத்திரத்திலேயே ஆகும்.

இது தந்தை பெரியார் அவர்களுக்கு மட்டுமே உள்ள ஆளுமை! கருத்தின் வலிமை சேர்ந்த வளமை!!

தந்தை பெரியாரின் ஓர் உரை ஒரு புரட்சிக்கவிஞரைத் தமிழ்நாட்டுக்குத் தந்தது. ஒரு தொண்டரைத் திராவிடர் கழகத்துக்குத் தந்தது எனின் தந்தை பெரியார் அவர்களின் ஒப்பு-வமையில்லா சிந்தனைப் பெருக்கை எண்ணிப் பார்க்கவேண்டும் எவரும்!

தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்! தந்தை பெரியார் கருத்துகளை, கொள்கை முழங்கும் எழுத்துகளைக் கொண்டு சேர்ப்பதுவரைதான் நமது கடமையும், பணியும் ஆகும். அது கொண்டு போய் சேர்க்கப்பட்டால் அதன் வேலை-யைக் கண்டிப்பாய் செய்து முடித்தே தீரும் என்-பதில் எவ்வித அய்யமும் கிடையவே கிடை-யாது! புரட்சிக்கவிஞரே இதற்கொரு ஈடில்லா எடுத்துக்காட்டாகும்.

இந்து சமய கலை விழா என்று கூறி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சென்-னையில் 1983 இல் விழா ஒன்றை நடத்துவதாக அறிவித்தார். இந்துத்துவாவைத் திணிக்க, பரப்பிட சங்கராச்சாரியார் புது அவதாரம் எடுக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அந்த ஆண்டுமுதல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விழாவை தமிழர் கலை,பண்பாட்டுப் புரட்சி விழாவாக நடத்திட முடிவு செய்தார்.

சங்கராச்சாரியார் அந்த ஆண்டோடு அதனை மூட்டைக் கட்டிக் கொண்டாலும் திராவிடர் கழகம் தொடர்ந்து புரட்சிக்கவிஞர் விழாவை தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழாவாக நடத்திக்-கொண்டு வருகிறது.

இந்த ஆண்டு விழாவில், அவர் கூறிய கருத்து ஒன்றுக்கு வலிமை சேர்கிறது. குடும்ப விளக்கு நான்காம் பகுதியில் திருக்குறள் குறித்து புரட்சிக்கவிஞர் கூறும் வரிகள் மிகவும் முக்கியமானவை _ நயமானவை.

நாடி முத்து வேடப்பனிடம்

இன்றியமையா ஒன்றுக்காகக்

கடன் பத்து ரூபாய் கொடுவென்று கேட்டான்

வேடன் கொடுப்பதாய் விளம்பினான் அதற்குள்

அமிழ்து, திருக்குறள் ஒன்றை அங்கையில்

தூக்கி வந்து தொப்பென்று போட்டுக்

கோவிலுக் காட்டுப்பா என்று கூறினாள்

குறளில் கோயிலே இல்லையம்மா

என்றான் வேடன். இதனைக் கேட்ட

நாடிமுத்து நவிலுகின்றான்;

தில்லைக் கோவிலுக்குச் செல்ல எண்ணியே

பத்து ரூபாய் பணம் உன்னைக் கேட்டேன்

கோவில் இல்லையா குறளில்?

ஆயில் என் பணத்துக்கில்லை அழிவே!

இதன்மூலம் திருக்குறளில் கோயில் என்ற சொல்லே இல்லை என்பதை மிக அழகாக எடுத்துக் கூறி இருக்கிறார் புரட்சிக்கவிஞர்.

இப்பொழுது தமிழ்நாட்டில் ஒரு சிறப்பான கருத்துத் தலைதூக்கி எழுந்துள்ளது. தமிழ்நாட்டு அரசின் சின்னம் இந்து மதக்கோயில் கோபுரமாக உள்ளது.

மதச்சார்பற்ற ஓர் அரசின் சின்னம் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்ததாக இருக்கலாமா என்ற அர்த்த-முள்ள வினா சட்டப்பேரவையில் எழுப்பப்-பட்டது. கோபுரத்திற்குப் பதில் திருவள்ளுவர் உருவத்தைப் பொறிக்கலாம் என்பதுதான் அந்த அறிவார்ந்த யோசனையாகும்.

திருக்குறளிலேயே கோவில் இல்லை என்கிறபோது, அரசு சின்னத்தில் கோயில் ஏன்? கோயி-லையோ, கடவுள் என்ற சொல்லையோ எந்த இடத்திலும் குறிப்பிடாத மிகமிகச் சிறந்த மதச் சார்பற்ற புலவரான திருவள்ளுவர் உரு-வத்தை கோயிலுக்குப்பதில் பொறிப்பது என்பது-தானே பொருத்தமானதும், அறிவார்ந்ததுமாக இருக்க முடியும்?

இந்தக் கருத்தை சட்டப்பேரவையில் தோழர் ரவிக்-குமார் தெரிவித்தாலும், இதற்கு அடி-யெடுத்துக் கொடுத்தவர் புரட்சிக்கவிஞர்தான் என்-பதை, கவிஞரின் பிறந்த நாளில் நினைவு கூர்வோம்.

அடுத்த கட்டத்திற்கு இந்தக் கருத்தை நகர்த்த சூளுரைப்போம்!

மோடிவித்தை!






இராமலிங்க விலாஸ் மிலிட்டரி ஓட்டல், அயூப்-கான் சைவ உணவகம், காந்தியார் சாராயக் கடை, அன்னை தெரசா பயில்-வான் கூடம்; திருவிக சுருட்டுக்கடை, சீனிவாச அய்யங்கார் கசாப்புக் கடை என்றெல்லாம் பெயர் இருந்தால் சிரிப்பு மட்டுமா வரும்? அடுத்த நொடியில் எரிச்சல்கூட பீறிட்டுக் கிளம்பும்.

இப்பொழுது ஒரு செய்தி குஜராத்திலிருந்து வெளிவந்திருக்கிறது.

உலகின் பல்வேறு பகுதி-களில் இருந்து கொண்டு வரப்படும் மணல் மற்றும் தண்-ணீரைப் பயன்படுத்தி குஜ-ராத் காந்திநகரில் காந்தி யாருக்குப் பிரம்மாண்ட-மான நினைவிடம் கட்டப்படும் என்பதுதான் அந்தச் செய்தி.

பரவாயில்லையே. நற்செய்தி தானே _ இதில் என்ன பிரச்சினை என்ற வினா எழக்கூடும்;

இந்த அறவிப்பைக் கொடுத்தவர் யார் என்பது-தானே முக்கியம். குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரபாய் தாமோதர-தாஸ் மோடிதான். (மோடி வித்தை என்பது இது தானோ!) இந்த அறிவிப்-புக்குச் சொந்தக்காரர்.

இராமலிங்க விலாஸ் மிலிட்டரி ஓட்டல் என்ப-தோடு -_ இப்பொழுது இதனைப் பொருத்திப் பார்த்தால் உண்மை பட்ட வர்த்தனமாகப் புலப்பட்டு விடுமே!

பகவத் கீதையிலிருந்து சுலோகத்தை எடுத்துக்-காட்டி காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை நியாயப்படுத்திய நாதுராம் கோட்சே கதை ஒருபுறம் இருக்கட்டும்.

நாட்டில் நல்லவர், வல்லவர் என்று பீற்றிக் கொள்ளும் அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையில் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இந்தக் கூட்டம் மும்பை, டில்லி போன்ற முக்கிய நகரங்களில் நாடகம் ஒன்றை அரங்கேற்றினார்-களே _நினைவிருக்கிறதா?

மை நாதுராம் கோட்சே போல்தா _ என்பதுதான் அந்த நாட-கத்தின் பெயர். நான் தான் நாதுராம் கோட்சே பேசு-கிறேன் என்பது தலைப்பு.

நான் காந்தியார் என்ற மனிதனைக் கொல்ல-வில்லை; காந்தியார் என்ற அரக்கனைக் கொன்றேன் என்று அந்த நாடகத்திலே கோட்சே கூறுகிறான். காந்தியாரைக் கொன்ற கோட்சே மகான் என்பது-தான் அந்த நாடகத்தின் அடிநாதம் _ உச்சகட்டம் (சிறீவீனீணீஜ்)

இந்தக் கூட்டம் காந்தியாருக்கு உலகப் பல பகுதிகளிலிருந்தும் மண்-ணையும், தண்ணீரையும் கொண்டு வந்து பிரம்-மாண்ட நினைவுச் சின்னம் எழுப்புகிறது என்றால் இதன் பொருள் என்ன?

படிப்பவர் புத்திக்கே விட்டு விடுவோம்!

- மயிலாடன்

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

ஒரு உண்மை விளக்கம்

பிரபாகரனின் தாயாரைத் திருப்பி
அனுப்பிய பாவிகள் யார்?
ஒரு உண்மை விளக்கம்
நாள்: 25.4.2010 ஞாயிறு மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை, இடம்:

பெரியார் திடல், சென்னை_7, வரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன்,

தலைமை: வழக்கறிஞர் கோ.சாமிதுரை, சிறப்புரை: தமிழர் தலைவர்
கி.வீரமணி, எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், பேராசிரியர்

சுப.வீரபாண்டியன், நன்றி: இரா.வில்வநாதன்.

திராவிடர் கழகம்

புதன், 21 ஏப்ரல், 2010

மக்கள் தொகைக் கணக்கெடுப்பும்

நமது முக்கிய வேண்டுகோளும்
சென்னையில் நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக எழுச்சி மாநில மாநாட்டுத் தீர்மானங்களுள் முக்கியமானது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பானதாகும்.

(1) நடக்க இருக்கும் 15 ஆவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்,- சமூகநீதிக் கண்ணோட்டத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ளவேண்டும் என்று நடுவண் அரசை இம்மாநாடு வலியுறுத்து-கிறது.

கணக்கெடுப்பின்போது மதம் என்று கேட்கப்படும் பகுதியில் மத நம்பிக்கையற்றவர் , நாத்திகர் (athiest) என்று தெரிவிக்குமாறு பகுத்-தறிவாளர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

இது ஏழாவது தீர்மானமாகும்.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதில் வெறும் மக்கள் தொகை என்பது மட்டு-மல்-லாமல் வேறு பல தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன.

ஆடு, மாடுகள் உள்பட வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் தொலைக்காட்சிப் பெட்டி, குளிர் சாதனப்-பெட்டிகள் வரை கேட்கப்பட்டுப் பதிவு செய்யப்படுகிறது.

தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி மக்கள் பற்றிய புள்ளி விவரங்களும் திரட்டப்படுகின்றன. ஆனால் பிற்படுத்தப்பட்டோர் எவ்வளவு பேர் என்று தெரிந்து கொள்ளும் கணக்கெடுப்பு மட்டும் திட்டமிட்டே தடுக்கப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுங்கூட நடுவண் அரசு கேளாக் காதுடையதாக இருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

குறிப்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசக்கட்சியைச் சேர்ந்த மூத்த நாடாளுமன்றவாதி கே. எர்ரான் நாயுடு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தென்ன? 1931_க்குப் பிறகு பிற்படுத்தப்பட்டோர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பெறவில்லை. எனவே அத்தகு கணக்கெடுப்பு அவசியம் தேவை என்று உச்சநீதிமன்றத்தால் வலியுறுத்தப்பட்டதே_ அப்படியிருந்தும் பிற்-படுத்தப்பட்டோருக்கான கணக்கெடுப்பு மேற்-கொள்ளப்படாதது_ பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்பதை இருளில் மூழ்கடிக்கும் சதியாகும் என்று எழுதியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமீர் புஜ்பால் பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில் தெளிவாக ஒன்றை நினைவூட்டி உள்ளார்.

பிற்படுத்தப்பட்டோருக்கான புள்ளி விவரங்கள் திரட்டப்படவேண்டும் என்று காகாகலேல்கர் ஆணையமும், மண்டல் ஆணயமும் வலியுறுத்தி-யிருப்பதைச் சுட்டிக்காட்டி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

திராவிடர் கழகம் இது குறித்து தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது.

பிற்படுத்தப்பட்டோர் பற்றிய புள்ளி விவரம் தேவை-யில்லை என்பதற்கான நியாயபூர்வமான அல்லது சட்ட பூர்வமான எந்தக் காரணத்தையும் தெரிவிக்காமலேயே_- அதேநேரத்தில் அத்தகு விவரங்கள் திரட்டாத ஒரு நிலையை மத்திய அரசு எடுத்துள்ளது. மக்கள் தொகையில் 52 விழுக்காடு உள்ள (மண்டல் குழு ஆணையத்தின் கணக்-கீட்டின்படி) பிற்படுத்தப்பட்ட மக்களை அவமதிப்பதும், உரிமைகளைத் தடுப்பதுமாகும். இப்பொழுதுகூட காலம் தாழ்ந்துவிடவில்லை. இடையில் இன்னும் இரு மாதங்கள் இருக்கின்றன. மறுபரிசீலனை செய்து, நாட்டின் பெரும்பான்மையரான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நல்லது செய்யுமாறு நடுவண் அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழக முதலமைச்சர் அவர்களும் இந்த மிக முக்-கியமான பிரச்சினை குறித்து பிரதமரை வலி-யுறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

(2) மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது மதம் என்ற கலத்தில் மதமற்றவர் (ழிஷீஸீ-க்ஷீமீறீவீரீவீஷீ) நாத்திகர் (கிலீமீவீ) என்று சொல்லவேண்டும்.

தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் பகுத்தறிவாளர்கள் எவ்வளவு என்கிற புள்ளி விவரம் மிகவும் முக்கியமானது. உலகிலேயே தமிழ்நாட்டில் கடவுள் மறுப்பாளர்கள், - மத மறுப்பாளர்கள் புள்ளி விவரம் அதி-காரப்பூர்வமான புள்ளி விவரத்தில் இடம் பெற-வேண்டாமா?

தோழர்கள் இந்த முக்கியமான பிரச்சினையில் அலட்சியமாக இருந்துவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இனம் என்று வரும்போது திராவிடர் என்று கூறப்படவேண்டும். இது வரலாற்று ரீதியான உண்-மையாதலால் அதனையும் பதிவு செய்யவேண்டும்.

சிந்து சமவெளி நாகரிகம் உள்பட திராவிட நாகரிகம் என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலை-யிலும், பார்ப்பனர் அல்லாதார் எனும் கண்-ணோட்டத்திலும் இது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி -விடுதலை

வைகுண்ட சாமிகள்

வைகுண்டசாமிகள் என்பவர் குமரியில், அன்று பெரிதும் ஒடுக்கப்பட்ட நாடார் சமுதாய மக்களின் தன்மானத்திற்காகப் போர்க்-கொடி தூக்கிய பெரு-மகனார் ஆவார்.

கன்னியாகுமரிக்கு அரு-கில் பூவண்டன்-தோப்பு எனும் கிராமத்தில் நாடார் சமூகத்தில் பிறந்த-வர் (1809)

முடிசூடும் பெருமாள் என்று பெயரிடப்பட்டார். தாழ்ந்த ஜாதியினருக்கு இத்தகு மேன்மை தாங்-கிய பெயரைச் சூட்டக்-கூடாது என்பதுதானே மனுதர்மம்? மன்னர்ஆட்சி தடுத்தது. விளைவு_ புதுப்-பெயர் முத்துக் குட்டி.

அன்றைய தினம் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் மரம் ஏறும் மக்கள் சாணார் என்று அழைக்கப்பட்டனர். உரிமை-கள் அறவே மறுக்-கப்பட்ட பரிதாபத்துக்குரிய-வர்களாக அவர்கள் ஒடுக்-கப்பட்டனர். நம்பூதிரிப் பார்ப்பான் எதிரே வந்தால் அவர்கள் 36 அடிதூரம் விலகி நிற்க வேண்டும். நாயரிடமிருந்து 12 அடி தூரம் ஒதுங்கவேண்டும். பொதுவீதிகளில், சாலை-களில் நடக்க உரிமை-யில்லை. பெண்கள் ரவிக்கை (தோள் சேலை) அணிந்திடத் தடை!.

மன்னர் ஆட்சி மனு-தர்ம ஆட்சியாகச் சீறியது. இந்த நிலையில்தான் வைகுண்ட சாமிகள் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட முத்துக்-குட்டி சமத்துவ சங்கம் என்ற ஓர் அமைப்பைத் தொடங்கினார்.

அவர் ஆன்மிகக் குடைக்குள்ளேயே சீர்-திருத்தங்களைச் செய்ய முன்வந்தார். அதே நேரத்-தில் உருவ வழிபாட்டை எதிர்த்தார். காணிக்கை கொடுப்பது கண்டிப்பாகக் கூடாது என்றார். மாந்திரீ-கர்களிடம் மதி மயங்காதீர் என்று எச்சரித்தார்.

தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளில் உணவருந்து-மாறு தம் சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

காவி நிறத்தில் வெள்-ளைத் தீபச் சுடரைத் தாங்-கிய கொடியை அறிமுகப்-படுத்தினார். ஒரு வகை-யில் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் சாயலை இவரிடம் காண முடியும்.

மன்னரையும் பார்ப்ப-னர்களையும் எதிர்க்கத் துணிந்த அவர் 110 நாள்-கள் கொடுஞ்சிறையையும் அனுபவிக்க நேர்ந்தது.

இன்றைய நிலை என்ன தெரியுமா? சென்னை மணலியில் அவருக்குக் கோயில் கட்டி கோபுரங்-கள் எழுப்பி, தேர்த் திருப்-பணியையும் நடத்தியுள்-ளனர்.

எந்த உருவ வழி-பாடு கூடாது என்றாரோ, அந்த உருவ வழிபாட்டை, அவரையே கடவுளாக்கி நடத்துகின்றனரே.

கடவுள் இல்லை; இல்லவே இல்லை என்று தந்தை பெரியார் சிலை-களின்கீழ் கடவுள் மறுப்பு பொறிப்பதன் முக்கியத்-துவம் புரிகிறதா?

- மயிலாடன்

இந்தி செய்த உதவி!

சக்ரவர்த்தி ராஜ-கோபாலாச்சாரியாரால் (ராஜாஜி) சென்னை மாகா-ணத்தில் கட்டாய இந்தி புகுத்-தப்பட்ட நாள் தான் இந்நாள் (1938).

சென்னை மாகாணத்தின் பிரதம அமைச்சர் என்ற முறை-யில், 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடிய கையோடு கட்டாய இந்தி-யையும் திணித்தார்.

இந்தியைப் புகுத்திய-தற்குப் பிரதமர் ஆச்சாரியார் சொன்ன காரணம் என்ன தெரியுமா? சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தத்தான் இப்பொழுது இந்தியைக் கொண்டு வந்துள்ளேன் என்று சென்னை லயோலா கல்லூரியில் உரையாற்றும்-போது குறிப்பிட்டார்.

1926 ஆம் ஆண்டி-லேயே இந்தியின் இரகசி-யம்பற்றி எழுதினார் தந்தை பெரியார். தமிழிற்குத் துரோ-கமும் _ இந்தியின் இரகசிய-மும் (குடிஅரசு, 7.3.1926) என்ற தலைப்பில் எழுதி-யிருந்தார்.

1931 இல் நன்னிலத்தில் கூடிய நன்னிலம் வட்டார சுயமரியாதை மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பழைய புராணக் கதை களைச் சொல்வதைத் தவிர வேறு அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாத இந்தி, வட மொழி முதலிய மொழி களை நமது மக்கள் படிக் கும்படிச் செய்வது, பார்ப் பனீயத்துக்கு மறைமுக மாக ஆக்கம் தேடுவ தாகும் என்று 1931 ஆம் ஆண்டிலேயே எச்சரிக்கப்-பட்டது. அதைத்தான் 1938 இலும் லயோலா கல்லூரியி-லும் ஆச்சாரியார் எதிரொ-லிக்கிறார்.

பார்ப்பனர்களின் உள்-ளத்து ஆழத்தில் பதுங்கிக் கிடக்கும் நச்சுப் பொருள் எவ்வளவுத் தொலைநோக்-கோடு துல்லியமாகக் கண்-டறிந்து வெளிப்படுத்தப்பட்-டுள்ளது என்பதை நினைக்-கும்பொழுது மிகுந்த ஆச்-சரியமாகவே இருக்கிறது.

ஆச்சாரியாரின் இந்தித் திணிப்பும், அதனால் ஏற்-பட்ட எதிர்ப்பும்தான் தமிழ்-நாடு தமிழருக்கே! என்ற முழக்கத்தைத் தந்தை பெரியார் அவர்களால் முழங்கச் செய்தது.

கட்சிகளை மறந்து ஜாதி மதங்களைத் துறந்து தமி-ழர்கள் என்ற உணர்வுடன் தந்தை பெரியார் தலைமை-யில் தமிழர்களை ஓரணியில் திரட்டியது ஆச்சாரியாரின் இந்தித் திணிப்புதான்.

இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், தந்தை பெரியார் தலைமை தாங்கிப் போர்க்குரல் எழுப்பி, இன-மான, மொழிமான, தன்மான எழுச்சிப் பேரலையைத் தமிழர்கள் மத்தியில் எழுப்-பியதன் விளைவுதான் பெண்கள் சென்னையில் மாநாடு கூட்டி பெரியார் என்ற பட்டத்தைக் கொடுக்-கும் உணர்வை ஊட்டியது (13.11.1938).

இறுதி வெற்றி தமிழர்-களுக்கே. கட்டாய இந்தி தொலைந்தது (21.2.1940).

எப்படியோ ஆச்சாரி-யாரின் சமஸ்கிருதத்தின் குட்டியான இந்தித் திணிப்பு தமிழர்கள் தம் தலைவரை அடையாளங் காணவும், தமிழர்கள் மத்தியில் இன உணர்வு வெடித்துக் கிளம்-பவும் பேருதவி செய்தது என்பது மட்டும் உண்மை
!

- மயிலாடன்

சபரிமலையில் தமிழன்

இரண்டாம் தரக் குடிமகனா?

சு. செந்தில்குமரன்

மாநிலம், மொழி வேறுபாடுகளைக் கடந்து ஆண்டுதேறும் லட்சக்கணக்கில் சபரிமலை யாத்திரை சென்றுவரு-கிறார்கள் தமிழர்கள். அப்படிச் செல்லும்போது அங்கே எல்லோரையும் போல, தமிழர்கள் உள்ளிட்ட மற்றவர்-களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தில் விளைந்ததுதான் இந்தக் கட்டுரை...

ஒன்பது முறை பெரிய பாதையில் எரிமேலி,காளைகட்டி, அழுதா நதி, அழுதா ஏற்றம் , கல்லிடுங் குன்றம், அழுதா இறக்கம், கருங்குழி மாரியம்மன் கோவில், கரிமலை ஏற்றம், கரிமலை பகவதி கோயில், கரிமலை இறக்கம், பெரியானை வட்டம், சிறியானை வட்டம், பம்பா, கன்னி மூல கணபதி , நீலிமலை ஏற்றம், நீலிமலை இறக்கம், சரங்குத்தி சபரி பீடம், சன்னிதானம், பதினெட்டு படிகள், அய்யப்பன் , புல்மேடு என்று பயணித்து, பம்பாவிலும் சன்னிதானத்-திலும் புல் மேட்டிலும் இருந்து ஜோதி தரிசனம் செய்தவன் என்ற முறையிலும் ஓரிரு முறை சித்திரைக் கனி தரிசனம் செய்தவன் என்ற முறையிலும் நன்கு ஆய்ந்து நான் எழுதும் கட்டுரை இது. மெக்காவிற்கு அடுத்த-படியாக உலகின் இரண்டாவது பெரிய பக்திப் பயணம் என்ற பெருமை, சபரி-மலை பெரிய பாதை சாமி தரிசனத்துக்கு உண்டு. ஆனால், சபரி மலை யாத்திரை பிரபலமான விதம்?

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு எல்லா மலையாளிகளின் குல தெய்-வமும் முருகன்தான். சரியாகச் செல்ல வேண்டுமானால் பழனிமலை முருகன். இன்றும் மிக வயதான மலையாளத் தாய்மார்களும், பெரியவர்களும், பக்திப் பரவசத்தேடு கண்ணில் நீர் பெருக மலையேறுவதைப் பழனியில் பார்க்க முடியும் _ சற்றுக் கூர்ந்து கவனித்தால்.

தமிழுக்கு எதிராக மலையாளப் போக்கு பரபரப்பாக வளர்ந்தபோது, பக்தி என்ற பெயரில் மலையாளிகளின் பணம், பழனி உண்டியலில் விழுவதை, பொறாமை கொண்டவர்களால் பொறுக்க முடியவில்லை. அவர்களுக்கு ஒரு மாற்று தேவைப்பட்டது. மலையாளிகளின் பணம் பழனிக்கும் தமிழ் மண்ணுக்கும் வருவதைத் தடுக்கவேண்டும்.

தேடியபோது அவர்களின் கண்ணில்-பட்டதுதான் மலைகளுக்கும், அருவி-களுக்கும் அடர்ந்த கானகத்துக்கும் உள்ளே இருந்த அந்த அற்புதமான சிறிய அய்யப்பன் கோயில். விடுதலை உணர்வுள்ள புலிகள் உலவிய காடு அது. பிடித்து அடைப்பது முடியாது. ஆனால் சபரிமலையில் ஆதியில் கோயில் கட்டியவர்களுக்கும், நியமங்கள் அமைத்தவர்களுக்கும், ஏன் அன்றைய அய்யப்பனுக்கும்கூட இந்தப் பிரிவினை வஞ்சகம் தெரியாது.

அதற்கு அய்யப்பனின் வரலாறே சாட்சி. அரக்கனை அழிக்க பெண் உரு பூண்ட நாராயணனுக்கும் சிவனுக்கும் உருவான அய்யப்பன், பந்தள ராசன் என்பவனின் வளர்ப்பு மகன் ஆகிறார். பந்தள ராசன், தமிழ் மூவேந்தர்களில் தெற்குப் பகுதிக்குச் சொந்தமான பாண்டிய வம்சத்தில் வந்தவன்தான். பழசிராஜா வம்சத்திலே, வடக்கன் வம்சத்திலே வந்த-வன் அல்ல. இதை அப்படியே சொன்-னால்-தான் தமிழர்கள் அய்யப்பனை நாடி வருவார்கள். மறைக்க முடியாது என்ற நிலைமை அந்தக் காலத்தில்.

தவிர ஒரு மலை ஏறி முருகனை தரிசிப்-பதைவிட, பல மலைகள் கடந்து அய்யப்பனை பார்க்கப் போகிற த்ரில், போதை முதலிய பழக்கங்களில் ஊறி-யிருக்கிற மக்களை, 42 நாள் கட்டாய-மாக விரதத்தில் இருக்கச் செய்வதன் மூலம், பெண்கள் சபரிமலை பயணத்-தைத் தன் வீட்டு ஆண்களிடம் ஊக்-குவித்த தன்மை.

முருகனின் தம்பியானார் அய்யப்-பன், சிவன் என்ற பொதுவான தகப்-பனின் மகன் என்பதால். தவிர, அய்-யப்பன் கோயில் பயணத்தின் பெரும்-பாலான பகுதிகள், தமிழர்கள் பெரும்-பான்மையாக வசித்த பகுதிகள். மொழி-வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு அவை கேரளாவோடு சேர்க்கப்பட்டு தமிழனும் தமிழும் புறக்கணிக்கப்படும் வரை அவை பெரும்பாலும் தமிழ் நிலப் பகுதி-களாகவே இருந்தன.

எனவே, சபரிமலை என்பது தமிழர்-களின் கோயிலாகவே இருந்த காலம் உண்டு. பூஜை செய்பவர்கள் தவிர, இன்-றைக்கும் பல மலையாளிகள் சபரி-மலைக்கு இருமுடி சுமந்து வருவது இல்லை. பதினெட்டாம்படி ஏறாமல் பக்கவாட்டில் வந்து, ஆனால் முதல் மரியாதையோடு சாமி கும்பிட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.

சபரிமலையைப் பிரபலமாக்கியவர்-கள் என்றால், எம்.என்.நம்பியார் என்று சொல்வார்கள். இருக்கட்டும். ஆனால் எம்.என்.நம்பியாருக்கு சபரிமலையைப் பற்றி அய்யப்பனைப் பற்றிச் சொல்லி மாலை போட வைத்தவர் நவாப் ராஜ-மாணிக்கம் பிள்ளை என்ற பச்சைத் தமிழர். அய்யப்பனின் தீவிர பக்தர் அவர். அவரது நாடகக் குழுவில் இருந்த-போதுதான், அய்யப்பன் என்ற கடவுள் இருப்பதே நம்பியாருக்குத் தெரியவந்தது. அந்தக் காலத்தில் பெரிய பாதையில் மலை ஏற, இப்போது இருக்-கிற குறுகிய பாதைகள்கூடக் கிடை-யாது. தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்கிற அய்யப்ப சாமிகள் இரு-முடி-யோடு, கூடவே ஒரு கூரிய கத்தியும் கொண்டு செல்வார்கள்.

வழியெங்கும் செடி-கொடிகளை வெட்டி பாதையமைத்துக்கொண்டே செல்வார்கள். அவ்வளவு சிரமப்பட்டு சபரிமலையைச் செப்பனிட்டவர்கள் தமிழர்கள். தமிழர்களைப் பார்த்துதான் தெலுங்கர்கள், கன்னடர்கள், வட இந்தியர்கள் வந்தனர். மலையாளிக்கும் தமிழர்கள் கடைப்பிடிக்கிற அதே நியமங்களோடு இருமுடி ஏற்றினார்கள். மலையாளிகள் பழனிக்குத் தந்த முக்கியத்துவம் குறைந்தது. சபரிமலை புகழ் பெற்றது.

ஆக, உலகில் இரண்டாவது நீண்ட புனிதப்பயணம் என்கிற பெருமை-யுடன், சபரிமலைக்கு இவ்வளவு பெய-ரும், புகழும் கிடைத்ததில் தமிழர்-களுக்கு கணிசமாகப் பங்கு உண்டு. ஏன்... ஆண்டவன்களுக்குப் பிறந்த ஆண்டவனான அய்யப்பனின் வளர்ப்புத் தந்தையான பந்தள ராசனே ஒரு தமிழன்தானே...

ஸ்டாப்... ஸ்டாப்.... சரண கோஷத்தில் மனம் கரையும் நேரத்தில் இதெல்லாம் இப்போது எதற்கு? என்று கேட்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரையே. சபரிமலை வரலாறு பற்றிய தமிழ் வெளியீடுகளில்தான் பந்தள ராசனுக்கு, உரிய முக்கியத்துவம் தரப்-படு-கிறது. ஆனால், அய்யப்பன் பற்றி வரும் தற்போதைய மலையாள வெளி-யீடுகளில் பந்தள அரசன் பெயரும் அவன் ஒரு பாண்டிய மன்னன், தமிழன் என்பதும் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. சும்மா ஒப்புக்குச் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள். போகப் போக இதுவும் இல்லாமல் போய்விடலாம் என்ற நிலை.

அதே முன்பு அய்யப்பன் பற்றிய மலையாள வரலாற்று வெளியீடுகளில் பந்தள ராசன், அவன் பாண்டிய மன்னன், அதுவும் மூவேந்தர்களில் ஒருவன் என்று வணங்கி வணங்கி விலாவாரியாகச் சொன்ன காலங்கள் உண்டு.

இப்போது அயாள் ஒரி பாண்டி-யானு... என்று பாண்டி என்ற சொல்-லையே கேவலமாகச் சொல்லும் மலை-யாளிகளால், அய்யப்பனே அந்தப் பாண்டியின் மகன் என்ற உண்-மையை ஏற்க விரும்பவில்லை. சபரி-மலை சன்னிதானத்தில் பதினெட்டாம் படி ஏறி தளத்தில் நாம் நடக்கும் இடத்தில் முன்பெல்லாம் சாமியே சரணம் அய்யப்பா என்ற வாசகம் மிகப்பெரிய வடிவில் தமிழிலும் மலையாளத்திலும் வைக்கப்பட்டு இருக்கும். சில வருடங்களுக்கு முன்பு தமிழைத் தூக்கி எறிந்துவிட்டார்கள்.

அய்யப்பனின் திருவாபரணப் பெட்டி தனது சபரிமலை நோக்கியப் பயணத்தில் செங்கோட்டை சிவன் கோயிலுக்கும் வந்து போவது காலம்-காலமான அய்தீகம். அங்கும் வழி-படும் பக்தர்கள் ஏராளம். அதைத் தடுத்தால் அவர்களும் கேரளாவிற்-குள் வந்து வழிபடுவார்கள். இன்னும் கொஞ்சம் கல்லா கட்டலாம் என்று கேரள அரசு முடிவு செய்தபோது, அய்-யப்பனின் தீவிர பக்தரான செங்-கோட்டை குருசாமி நாடார் என்பவர், கேரள அரசின் கையில் காலில் விழுந்து அந்த உரிமையை மீட்டு வந்தார். அதற்குள் அவருக்கு நுரை தள்ளிவிட்டது.

பழைய கதையை விடுங்கள், நீங்கள் இந்த ஜோதி தரிசனத்திற்கு சபரி மலை போகிறீர்களா? கேரளா-வின் பதிவு எண் கொண்ட வாகனத்-தில் போனால் பிரச்சினையில்லை. பம்பா நதி வரை வாகனம் போகலாம். அதே தமிழ்நாட்டின் பதிவு எண் கொண்ட வாகனத்தில் போனால்... அய்யோ பாவம்... வெகு தூரத்திலேயே நீங்கள் உங்கள் வாகனத்தைவிட்டு இறங்கவேண்டும். மலையேறி சாமி கும்பிட்டு உடல்சோர்ந்த பின்னரும் சுமார் ஒன்பது கிலோ மீட்டர் நடந்த பின்னர்தான் உங்கள் வாகனத்தை அடைய-முடியும். ஏனென்றால் நீங்கள் தமிழன்.

இன்னும் சில வருடம் போகட்டும் மலையாளியாக இருந்தால் பதினெட்-டாம் படிவரையே வாகனம் செல்லும் வசதி கிடைக்கலாம். தமிழர்கள் தரிசனம் முடிந்த பின்னரும் ஒரு பெரிய பாதைப் பயணம் நடக்க வேண்டி வரலாம். பயணப்பாதைகளி-லும் கோயிலிலும் பெரும்பாலும் அய்யப்பா சேவாசங்கம் நடத்துவது தமிழர்கள்தான். அங்கு எல்லோருக்கும் சம உரிமை உண்டு. ஆனால், மலை-யாளிகள் நடத்தும் கடைகள், சன்னி-தானக் கடைகள் இவற்றில் தமிழனுக்கு என்றால் விலை அதிகம். சன்னிதான அலுவலகத்தில் தமிழன் இரண்டாம் தரக் குடிமகன்தான்.

தவிர்க்க முடியாதது மலையாள காவல்-துறையினரின் அராஜகம். எந்த ஒரு விஷயம் என்றாலும் மலையாளிகளி-டம் மென்மையாகவும், தமிழர்களிடம், கடுமையாகவும் நடந்துகெள்வார்கள். இருமுடி சுமந்து செல்லும் பக்தர்கள் சன்னிதானத்தில் நுழைந்ததும் அப்படியே பதினெட்டாம் படியேறி அய்யப்பனிடம் இருமுடியைக் கட்டிவிட்டு பிறகுதான் முடியைப் பிரிக்கவேண்டும் என்பார்கள்.

அந்த ஆசையில் தமிழ் பக்தர்கள் கியூவில் நிற்க, அது நடை அடைக்க-வேண்டிய நேரமாகவும் இருந்து, அந்த சமயத்தில் தமிழ் பக்தர்களுக்குப் பின்னால் மலையாளிகள் வந்து.. அவர்கள் நடை அடைக்கும்முன்பு அய்யப்பனைப் பார்க்க ஆசைப்பட்டு-விட்டால் போச்சு. மலையாள காவல்-துறையினரிடம் கண் காட்டினால்,

அவர்கள் தமிழ் பக்தர்களைப் பிடித்து வெளியே இழுத்துத் தள்ளிவிட்டு, மலையாள பக்தர்கள் பார்க்க வசதி செய்து தருவார்கள். பாவம் பாண்டிய பந்தள ராசன்!

இப்படியாக, தமிழன் வளர்த்த சபரி-மலையில் மலையாளிகள் தமிழனைப் புறக்கணிப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிறது. சரங்குத்தியில் குத்தப்படும் ஒவ்வொரு சரமும் தமிழினத்தின் நெஞ்சில் குத்தப்படும் ஊசியாகவே மாறிக் கொண்டிருக்கிறது சபரிமலையில்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்-பட்டபோது, கடவுள் மறுப்புக்கொள்-கையை வெளியே முழங்கிக்கொண்டு, தமதுவீட்டுப் பெண்களை ரகசியமாகக் கோயிலுக்கு அனுப்பிய இரட்டை வேடக்காரர்களே மக்களிடம் ஆரவாரச் செல்வாக்கு பெற்றிருந்தனர். எனவே கண்ணகிக் கோயில், சபரிமலைப் பாதையின் பெரும்பகுதி, திருப்பதி, காள-ஹஸ்தி பேன்ற தமிழனின் பக்தி கலா-சாரச் செல்வங்கள் வேறு மாநிலங்-களுக்குப் பறிபோனதை வேடிக்கை பார்த்தனர். தமிழன் எல்லாம் இழந்தான்.

ஒருவேளை இவர்கள் மக்களை வாழ வைக்கிற நல்லாட்சி கொடுத்தி-ருந்-தால் மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை-யாவது குறைந்திருக்கும்.

அப்படியில்லை. விளைவு?-

இவர்களை நம்புவதைவிட, கட-வுளை நம்புவதே மேல் என்ற மன-நிலைக்கு தமிழன் வந்தான். அந்தக் கடவுள்கள் எந்த மாநிலத்தில் இருந்-தாலும் பரவாயில்லை என்று ஓடி வணங்கி, தான் சிறுகச்சிறுக சம்-பாதிக்கும் பணத்தின் ஒருபகுதியை வேற்று மாநில அரசுகளுக்குக் கொட்டி-விட்டு அவப்-பெயரையும் சம்பாதித்து வருகிறான்.

அதன் விளைவுதான் திருப்பதி, சபரிமலை என்று அபயம் தேடிப்போகிற இடங்களிலும்கூட தமிழன் அவலம் சுமக்கும் நிலை.

சரணம் சொல்வதும், சரணம் அடை-வதுமே தமிழனின் தலையெழுத்தாகி-விட்டதோ!
www.viduthalai.com

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

இப்படியெல்லாம் ஒரு நேர்த்திக் கடன்களாம்


ஏப். 15_ புதுக்கோட்டை மாவட்-டம் பொன்னமராவதியை அடுத்த கொன்னையூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழா நடந்ததாம். இத்திருவிழாவை முன்-னிட்டு சுற்று வட்டாரக் கிராமங்களில் உள்ள மக்கள் பல நேர்த்திக் கடன்களைச் செலுத்-தினார்-களாம். அது வழக்கமா-கவும் நடந்து வருகிறது. அதாவது கோயிலுக்கு வரும்போது அரிவாள் கம்புகளுடன் வருவது, கோயிலில் உருண்டு வரு-வது, பால்குடம் எடுப்பது போன்று சேறு சகதியை உடலில் பூசிக்கொண்டு கோயிலுக்கு வருவதும் இப்-படியெல்லாம் ஒரு நேர்த்திக் கடன்களாம்.

கோயிலுக்குப் போவ-தற்-குக் காரணம் தெரி-யாமல் மக்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் அய்யா தந்தை பெரியார் காலந்-தொட்டு சொல்லிக் கொண்-டிருக்கிறோம். அதில் பக்தியின் பெயரால் எவ்-வளவோ மூடத்தனங்-களும், முடை நாற்றங்-களும் நடந்து கொண்-டி-ருக்கின்றன. அதன் உச்ச கட்டமாக குளங்களில் உள்ள சேற்றைப் பூசிக்-கொண்டு அப்படியே கோயிலுக்கு வருவது அடுத்தவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. நாம் கோயிலுக்குப் போகப் போவதில்லை என்ற போதிலும் கோயிலுக்கு வரும் பக்தர்களே அவர்-கள் ஆண்களாக இருந்-தாலும் பெண்களாக இருந்தாலும் அன்று-தான் புத்தாடை உடுத்தி வெள்ளை வேட்டி சட்-டையில் அழகாக வந்தி-ருப்பார்கள். அவர்களு-டன் இந்த சேறு பூசிய பக்தர்களும் தங்கள் நேர்த்திக் கடனைத் தீர்க்க வரும்போது எப்-படியிருக்கும் என்று கற்பனை மட்டும் செய்து பார்த்தால் புரியும் நாமி-ருப்பது கணினி காலத்-திலா அல்லது காட்டு-மிராண்டி காலத்திலா என்று. கலாச்சாரம் என்ற பெயரில் அடுத்த தலைமுறையான இளஞ்-சிறார்களையும் அழைத்-துச் சென்று இந்ந சேற்-றுக் கலாச்சாரத்தில் இறக்கி விடத்தான் வேண்-டுமா? பக்தர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்.
நன்றி- விடுதலை

நடுக்கடலில் தத்தளிக்கும் தமிழர்கள்

இலங்கையில் உள்நாட்டில் வாழ இயலாமல் கப்பல்மூலம் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற 254 தமிழர்கள் நடுக்கடலில் கடந்த ஆறுமாத காலமாகத் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய அரசு இவர்களுக்கு அகதிகளாக அடைக்கலம் கொடுக்க மறுப்பதால் ஏற்பட்டதே இந்த அவல நிலைக்குக் காரணமாகும்.

ஆஸ்திரேலிய பிரதமர் கெவின்ரூட்டின் ஆணைப்படி இந்தோனேசியக் கடற்படை ஈழத் தமிழர்கள் பயணம் செய்த கப்பலை இடை-மறித்-தது. கிறிஸ்துமஸ் தீவுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனாலும் ஈழத் தமிழர்கள் கப்பலை விட்டு இறங்க மறுத்துவிட்டனர்.

ஓர் ஆறு மாத காலம் கடலில் தத்தளிக்கும் மக்களின் அன்றாட வாழ்வு என்பது எவ்வளவு பெரிய தொல்லைகளுக்கும், மன உளைச்சலுக்கும், உடல்நலக் கேட்டிற்கும் ஆட்பட்டு இருக்கும் என்பதை மனித நேயம் உள்ள ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளனர்.

பிறந்து வளர்ந்து வளமாக வாழ்ந்த சொந்த நாட்டிலும் நிம்மதியாக வாழ முடியவில்லை. அடைக்-கலம் நாடிச் சென்ற நாடும் நடுக்கடலில் வழி மறித்துவிட்டது. இந்த நிலையில், இத்-தமிழர்களின் வாழ்வு கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டது.

ஈழத் தமிழர்களை கொடுங்கோலன் ராஜபக்சே கொன்று குவித்தபோதும் அய்.நா. தன் கடமையினைச் செய்ய முன்வரவில்லை; இந்த இக்கட்டான காலகட்டத்திலும் தன் மனித நேயக் கரத்தை நீட்ட முன்வரவில்லை.

மீண்டும் இலங்கைத் தீவுக்கே அனுப்பி வைத்து விடுவார்களோ என்ற அச்சம் ஈழத் தமிழர்-களை ஒரு பக்கம் உலுக்கிக் கொண்டி-ருக்கிறது.

இன்னும் முள்வேலி முகாமுக்குள் இருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை 50 ஆயிரம் என்று கூறப்படுகிறது.

ராஜபக்சே அதிபர் ஆகிவிட்டார். நாடாளு-மன்றத் தேர்தலிலும் வெற்றியைக் குவித்து-விட்டார். இதனால் ஈழத் தமிழர்களுக்கு அடி-மேல் அடிதான். குடிக்கும் நீரைக்கூட நிறுத்தி-விட்டார் என்ற கொடுமையான தகவல்கூடக் கசிந்-தது. இந்த நிலையில் நடுக்கடலில் தத்-தளிக்கும் 254 ஈழத் தமிழர்களும் மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்களேயானால் மிகப்-பெரிய அளவுக்குச் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பதில் அய்யமில்லை.

இந்தக் கொடுமைகளை எதிர்த்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அழுத்தமாக குரல் கொடுக்க வேண்டும். இந்தியா போன்ற நாடுகள் அய்.நா.விடம் வலியுறுத்தவேண்டும்.

ஆஸ்திரேலியா அடைக்கலம் கொடுக்க மறுப்பதில் பிடிவாதமாக இருக்குமேயானால், இத் தமிழர்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறிட மற்ற நாடுகள் முன்வரவேண்டாமா? இந்தியாவுக்கு அந்தக் கடமையில்லையா? ஏற்கெனவே ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் வாங்கிக்கட்டிக் கொண்ட இந்தியா, இந்த இக்கட்டான நேரத்திலாவது அரவணைத்துக் கொள்ள முன்வந்தால் அந்தக் கறையைக் கொஞ்சம் கழுவிக்கொள்ள ஒரு சிறிய வாய்ப்புக் கிடைத்தது என்று பொருளாகும்.

உலகின் மனித உரிமை அமைப்புகள் இம்-மக்களுக்கு உரியது செய்ய முன்வரவேண்டும். அவர்களும் ஏன் இப்பிரச்சினையில் தூங்கி வழிகிறார்கள் என்பது விளங்கவில்லை.

வெளியுலகத் தொடர்புக்கும் வழியில்லாமல் ஆக்கப்பட்ட இத் தமிழர்கள் வலுக்கட்டாயமாகக் கப்பலில் இறக்கப்படுவார்கள் என்று கருதிடவும் இடமிருக்கிறது. அப்படி செய்யப்பட்டால் அதைவிட மனித வதை வேறு ஒன்று இருக்க முடியாது.

இப்படி ஒவ்வொரு நொடியும் சித்திரவதை அனுபவிப்பதை விட கடலில் வீழ்ந்து தற்கொலை செய்துகொண்டால் என்ன என்று நினைக்கும் அளவுக்குக்கூட, சூழல்கள் அவர்-களை விரக்தியின் எல்லைக்குத் துரத்துமானால் அதற்கு ஆஸ்திரேலியா மட்டுமல்ல, அய்.நா. மன்றம் உள்பட உலக நாடுகள் அனைத்துமே பொறுப்பேற்க வேண்டிவரும்.

உலகில் மிகவும் பரிதாபத்துக்குரிய இனம் என்ற பட்டியலில் தமிழர்கள் முதலாவதாகவும், கடைசியானதாகவும் இருப்பார்கள் போலும்.

கடலில் தத்தளிக்கும் தமிழர்களுக்குப் புது வாழ்வுக்கு உத்தரவாதம் கிடைக்காவிட்டால், தமிழ்-நாடு ஏதோ ஒரு வகையில் மேலும் கொந்தளித்து எழக்கூடிய நிலைதான் ஏற்படும், -எச்சரிக்கை!
www.viduthalai.com

மட விவகாரம் - கிரிமினல் வகை


கதம்பம்
சு.அறிவுக்கரசு

"மடம் கட்டி வைத்ததனாலே -தம்பி வசம் கெட்டுப்போனது நம் நாடே"

என்றார் புரட்சிக் கவிஞர். இதைக் கேட்காத காரணத்தால் நிறைய கேடுகள் மடங்களால் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பழைய மடங்களில் நடப்பவை அதிகமாக வெளியே வருவதில்லை; தெரி-வதில்லை. நஞ்சு கொடுத்து பெரிய மடாதிபதியைக் கொல்ல முயன்று மாட்டிக் கொண்ட சின்ன மடாதிபதி-யைச் சில ஆண்டு-களுக்கு முன்பு தஞ்சை மாவட்ட மடம் ஒன்று அடையாளம் காட்டியது. அடையாளம் காட்டப்படாமல் அமுக்கப்-பட்டது அநேகம்.

மடாதிபதிகளாக இருப்பவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை கருநாடகா மாநிலம் இப்போது கூட ஓர் அடையாளத்தைக் காட்டியுள்ளது. கோயில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட அயோக்கியர்கள் - எத்தகைய படுபாதகச் செயல்களையும் செய்வதற்கு அஞ்சாத அயோக்கியர்கள் என்பதைக் காஞ்சிபுரம் தேவநாதன் போல, பல உதாரணங்களை ஊர் அறி-யும். அந்த வரிசையில் புதிதாக ஒன்று.

கருநாடகா மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள கோகர்னா எனும் ஊரில் உள்ள மகாபலேசுவரா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாம். அந்தக் கோயிலின் அர்ச்சகப் பார்ப்பனர்கள் செய்து வந்த அயோக்கியத் தனங்கள் பற்றி ஏராளமான புகார்கள். தாங்க முடியாத நிலையில் பா.ஜ.க. அரசு இந்தக் கோயிலின் நிருவாகத்தை ஒரு மடத்திடம் ஒப்படைத்து விட்டது.

மடத்தின் பெயர் ராமச்சந்திரபுர மடம் என்பது. இதன் அதிபதி ராகவேசுவர-பாரதி சாமி என்பவர். கருநாடகத்தைப் பொறுத்தவரையில் மடங்கள் அரசியல் ஆதிக்கம் பெற்றவை. ஜாதிக்கு ஜாதி மடங்கள் உண்டு. அந்தந்த ஜாதிமீது இந்த மடங்கள் செல்வாக்கைச் செலுத்தும், தத்தம் ஜாதிக்காரர் வெற்றி பெறவேண்டும் என வேலை செய்யும்- கட்சி பற்றிக் கவலை இல்லை, ஜாதிதான் முக்கியம். முதலமைச்சராக சொந்த ஜாதிக்காரர் வரவேண்டும் என்று ஜாதி மடங்கள் வேலை செய்யும். அந்த அடிப்படையில் லிங்காயத்து ஜாதி முதல் அமைச்சருக்கு வேண்டப்பட்ட மடமோ?

கோயிலின் ஆதிக்கம் தங்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. அர்ச்சகப் பார்ப்பனர்களுக்குக் கோபத்தை உண்டு பண்ணிவிட்டது. 14 அர்ச்சகர்களும் ஒன்று சேர்ந்து சதித் திட்டம் தீட்டினர். ராமச்சந்திரபுர மடத்தின் மடாதிபதியின் ரகசியங்களை அம்பலப்படுத்தத் திட்டம் போட்டுச் செயல்பட்டனர். இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு முயற்சிகளில் இறங்கியவர் தலைமை அர்ச்சகரின் மகன் கணேஷ் ஜோக-லேஷ்-வர் என்பவர். ராமச்சந்திரபுர மடத்தின் யோக்கியதையைத் துண்டுப் பிரசுரமாக வெளியிட்டார், அதன் வாச-கங்கள் நான்காம் தரத்தைச் சேர்ந்தவை. படிக்கப் பல்கூசும். படித்துப் பார்த்ததைச் சொல்ல நாக்கூசும். அந்த அளவுக்கு நாராச நடை.

அத்துடன் நின்றுவிடாமல் கணேஷ் ஜோகலேஷ்வரப் பார்ப்பனர் ஒரு குறுந்-தகடையும் வெளியிட்டார். இந்த சி.டி. பாலிவுட் சினிமா நடிகை ஒருத்தியுடன் சல்லாபிக்கும் ஏடாகூடக் காட்சிகள் இடம் பெற்ற சி.டி.ஆகும். 20 நிமிடம் ஓடக்கூடிய சி.டி. இளவயது பக்தைகள் மடாதிபதியுடன் உரையாடும் கவர்ச்சிகர காட்சிகள், சினிமா நடிகைகள் மடத்-திற்கு வந்து போகும் காட்சிகள், அந்தக் காட்சிகள் பற்றிய கவர்ச்சிகரமான வருணனைகள் என்று அசத்தலான சி.டி. என்கிறார்கள்.

எப்படி எடுத்திருப்பார்கள்? ஏன் எடுத்தார்கள்? காவல்துறை வேறெந்த வழக்கையும் விட மிகத் தீவிரமாக விசாரணை நடத்திப் பின்னணியைக் கண்டு பிடித்துவிட்டார்கள். பாராட்ட-லாம். இதே வேகத்தை - தீவிரத்தை - புத்திசாலித்தனத்தை - கிறித்துவ, இசுலாமி-யர்கள் மீதான தாக்குதல்களின் பின்னணி பற்றியும், வழிபாட்டு இடங்கள் தகர்க்கப்படுவது பற்றியும் விசா-ரித்து உண்மையைக் கண்டறிந்து வெளியிட்டார்களா? விருந்துகளில் கலந்து கொண்ட மகளிர் ஆபாசமாகத் திட்டப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவங்-களின் பின்னணி பற்றி விசாரித்து அறிந்து நடவடிக்கை எடுத்தார்களா? ராமன் சேனை என்று பெயர் வைத்துக் கொண்டு, இந்து மத வெறியைக் கிளப்பிக் கொண்டு, பிற மதத்தவரைத் தாக்குவதையே தொழிலாகக் கொண்-டிருக்கும் முத்தாலிக் பற்றிய உண்மை-களை வெளிக் கொண்டு வந்து சட்டப்-படி நடவடிக்கை எடுத்தார்களா? செய்யவில்லை. செய்ய மாட்டார்கள். ஏன் என்றால் இவற்றிற்குப் பின்னணி ஆர்.எஸ்.எஸ்.!

ராமச்சந்திரபுரா மடவிவகாரம் என்ன? எல்லாமே திட்டமிட்ட சதி-யாம். மடாதிபதி அப்படிப்பட்டவர் அல்லவாம். அவரைப் போன்ற தோற்றம் உள்ள 26 வயதான ரவி கோடி-யக்-கரா என்று அழைக்கப்படும் பாலச்சந்திர பிரபாகர் கோடியக்கரா என்பவரை வைத்து தயாரிக்கப்பட்ட சினிமா சி.டி.யாம். கன்றுக்குட்டியை அணைத்துக் கொண்டு, முத்தம் கொடுப்பது போலப் பல கோணங்களில் படம் பிடித்தார்களாம். பிறகு தொழில் நுட்பத்தைப் பயன் படுத்திக் கன்றுக் குட்டிக்குப் பதில் நடிகையின் உருவைப் புகுத்தித் தயாரித்துவிட்டார்களாம். மூன்று நாள்கள் முயற்சி செய்து- இதனைக் கண்டுபிடித்த கருநாடகக் காவல்துறை மடாதிபதியாக நடித்த ரவி-யையும் சிவராமன் ஆடி, கஜன்னா உபாத்யாயா, உமேஷ் கஜன்னா, சங்கரலிங்கா மற்றும் விஷ்வராஜ் பானிராஜ் கோபி ஆகியோரையும் கைது செய்துவிட்டனர்.

735 ஆபாச சினிமாக்கள் அடங்-கிய கணினி ஒன்றையும் கைப்பற்றி-யிருக்கிறார்கள். கேரளாவின் பொன்-னுமாடி அரசு விருந்தினர் விடுதியில் படமாக்கப்பட்ட நீலப்படம் ஒன்றும் இதில் அடக்கமாம். கேரள மாநிலத் தலை-நகர் திருவனந்த புரத்திலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள ஊர் பொன்-னுமாடி. ஆக, இது இரு மாநிலக் குற்றம்.

எல்லாம் சரி, இந்தக் கேள்விக்கு என்ன பதில்?

இத்தகைய சதிச் செயலுக்கும், குற்றங்களுக்கும் மூளையாகச் செயல்பட்ட கணேஷ் ஜோகலேகர், அவரின் தந்தையான தலைமை அர்ச்-சகர், மற்றும் சதியில் சம்பந்தப்பட்ட 14 அர்ச்சகர்கள் கைது செய்யப்பட-வில்லையே, ஏன்?

சூத்திரனுக்குச் சிரச்சேதம் - பார்ப்பனனுக்குச் சிகைச் சேதம் என்பது போன்ற நிலையா?

மகளிர்க்கு 25 விழுக்காடு

பரமண்டலங்களில் இருக்கிற(?) பரமபிதாவிடம் யோசனை கலந்து உத்தரவு பெற்று அமெரிக்க அதிபராக இருந்த புஷ் சண்டை போட்டு நாசம் பண்ணிய ஈராக் நாட்டை மறந்திருக்க முடியாது. அந்த நாட்டில் தேர்தல் நடந்து முடிவுகள் மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட்டன. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத தொங்கு நிலை.

தற்போது பிரதமராக இருக்கும் நூரி அல்மாலிக்கின் கட்சிக்கு 89 இடங்கள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் பிரதமராகும் வாய்ப்பு பெற்ற இயாத் அல்லாவியின் கட்சிக்கு 91 இடங்கள் கிடைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளவை 45 சன்னி பிரிவு முசுலிம் இயக்-கங்கள். குர்திஷ் இனத்தவர்களின் கூட்டணிக் கட்சிக்கு 45 இடங்களும், இராக்கிய தேசியக் கூட்டணிக்கு 70 இடங்களும் கிடைத்துள்ளன.

மொத்தம் உள்ள 325 இடங்களில் ஆட்சி அமைக்கத் தேவையான 162 இடங்களைப் பெற்றவர்கள் யாரும் இல்லை. ஆட்சி அமைப்பது யார் என்பது இழுபறி. பிரதமராக யார் வருவார் என்பதையும் கணிக்க முடியவில்லை. அதற்குப் பிறகு குடிய-ரசுத் தலைவராக யார்? சபாநாயகராக யார் வருவது? எல்லாமே குழப்பம்தான்.

ஆனால் ஒன்றில் ஈராக் சட்டமும், நாடாளு மன்றமும் தெளிவாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் 325 இடங்களில் நான்கில் ஒரு பங்கு இடங்களைப் பெண்கள் நிரப்ப வேண்டும். தேர்தலில் நின்று வெற்றி பெற்றாலும் சரி, அல்லது இட ஒதுக்கீடில் நியமிக்கப்பட்டாலும் சரி, பெண்கள்81 பேர் இருந்தே ஆகவேண்டும்.

எவ்வளவு மனநிறைவான ஏற்பாடு! எல்லாப் புகழும் (அமெரிக்காவும் பிரிட்டனும் சேர்ந்து கொலை செய்த) சதாம் உசேனுக்கே!

அமெரிக்க அழிம்பு

எவ்வளவு அற்பத்தனமாக அமெரிக்-கர்கள் நடந்து கொள்வார்கள் என்பதற்கு பழைய சம்பவங்கள் நிறையவே உண்டு.

1960 ஆம் ஆண்டு. உலக நாடுகள் மன்றத்தில் உரையாற்ற க்யூபாவின் அன்றையப் பிரதமர் ஃபிடல் காஸ்ட்ரோ நியூயார்க் சென்றிருந்தார். அமெரிக்-காவின் அறிவிக்கப்பட்ட எதிரி அவர். அதனால், நியூயார்க் நகரில் அவர் தங்குவதற்குப் பெரும் ஓட்டல்கள் ( 5 நட்சத்திரம் பெற்றவை) இடம் தர மறுத்து-விட்டன. ஒரு நாட்டின் அதிபருக்கு ஏற்பட்ட நிலை அது. என்ன காரணம் என்பது சொல்லாமலே விளங்கும். ஃபிடல் என்ன செய்தார் தெரியுமா?

உலகநாடுகள் மன்றத்தின் தலைமைச் செயலாளருக்குத் தகவல் அனுப்பினார்_ அய்.நா. மன்றத்தின் புல்வெளியில் டென்ட் அடித்து, தாம் அதில் தங்கப் போவதாக!

அந்த நிலையில், நியூயார்க்கில் உள்ள தெரசா ஓட்டலின் அதிபர் காஸ்ட்ரோவைச் சந்தித்துத் தமது ஓட்டலில் தங்கும்படி கேட்டுக் கொண்-டார். நியூயார்க்கின் கருப்பர் வாழும் பகுதியில் இருந்த ஓட்டல் அது. அங்கே-தான் அவர் தங்கினார்.

இதை அறிந்த உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் அவரை அந்த ஓட்டலுக்குச் சென்று சந்தித்துப் பேசி மகிழ்ந்தனர். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவரின் பெருமை கூடியது. அப்போது அவருக்கு வயது 34 தான்.

தெரசா ஓட்டலுக்கு வந்து ஃபிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்த முதல் தலைவர் நேரு பண்டிதர்.

ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு

ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால்

ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாத அளவுக்கு ஜோதிடம், வாஸ்து, எண்கணிதம், பெயரியல், நாடி ஜோதிடம், சோழி உருட்டுதல், குறி சொல்லுதல் எனப் பலவேறு முகங்களில் மக்களை மூளைச் சலவை செய்து பணம் கறந்து வருகிறார்கள் ஜோதிட சிகாமணிகளும், பூஷணங்களும்.
ஜோதிடம் என்பது அறிவியல் ரீதியில் மூட நம்பிக்கையே. அது இந்தி-யாவில் வேத நூல்களிலோ, மகாபாரதம், ராமாயணம், உபநிஷத்துகள் போன்ற-வற்றிலோ அது பற்றிய சிறுகுறிப்புகள் கூட இடம் பெறவில்லை.
ஜோதிடம் பற்றிய குறிப்புகளோ கிரகங்கள், ராசிகள் பற்றிய தகவல்களோ பழைமையான இந்திய நூல்களில் எதிலும் காணப்படவில்லை.
ஜோதிடக் கலை என்பது புராதன கிரேக்க - ரோமானிய கலாச்சாரத்தி-லிருந்து பிறந்து உலகம் முழுவதும் பரவியதாகும்.
பெரும்பாலான ஜோதிடர்கள் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்-களிடம் பேச்சு கொடுத்து கிடைக்கும் தகவல்களிலிருந்து யூகமாக பல ஆரூடங்களைக் கூறுவார்கள்.
இப்படி சுமார் 10-12 ஆருடக் குறிப்புகள் சொல்லும்போது அவற்றில் ஒன்றிரண்டு இயற்கையாகவே பொருந்தி இருந்தால் மக்கள் ஜோதிடரை நம்பத் தொடங்கிவிடுகிறார்கள். சரியாக 10 பலன்கள் சொன்னால் அதில் பலித்த 3 பலன்களையே ஜோதிடத்தில் நம்பிக்கை-யுள்ள பலரிடம் சொல்லிக் கொண்டு திரிவார்கள். பலிக்காக பலன்களைப் பற்றி வாய்த் திறப்பதில்லை. ஜோதிடர்-களிடம் ஏமாந்துவிட்டோம் என்பதை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ள விரும்பாத மனநிலையின் விளைவே இதற்குக் காரணம்.
தன்னிடம் வரும் வாடிக்கையாளர்-களின் நம்பிக்கைகள், மனப்பயம், கவலைகள் இவையே ஜோதிடரின் மூலதனமாகும். இவற்றை மிகைப்படுத்தி கற்பனை கலந்து பல ஆருடங்களைச் சொல்லி வாடிக்கையாளர்களை பிரமிக்க வைத்துவிடுவார்கள்.
தேடி வரும் வாடிக்கையாளர்கள் மனத்தில் நம்பிக்கை உண்டாக்கும் வகையில், பல்வேறு சாமி படங்கள், பூஜைப் பொருள்கள், சங்கு சக்கரங்கள், செப்புத் தகட்டில் வரைந்த எந்திரங்கள், கமகமக்கும் பூமணம், ஊதுவத்தி நெடி, திருநீறு, சாம்பிராணி புகை, சந்தனம் போன்ற பொருள்களுடன் ஜோதிடரி-டம் பணிந்து போகும் சூழ்நிலையை உருவாக்கி வைத்து உளவியல் ரீதியாக தாங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வைத்து விடுவார்கள். பூர்வஜென்ம கர்மபலன் என்றெல்லாம் சொல்லி, சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுவார்கள். எந்தவொரு ஜோதிடமும் பத்துக்குப் பத்து பலன்களை மிகத் துல்லியமாகச் சொன்னது இது வரையில் யாரும் கிடையாது
ஜோதிடம் மூடநம்பிக்கை என்பதை விளக்குவதற்காக பல்வேறு அறிவியலாளர்கள் பெரு முயற்சி எடுத்து வருகிறார்கள். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஏ.எஸ்.நடராஜ் என்பவர் ஜோதி-டத்தைக் கற்றிருப்பவர். இந்த ஜோதி-டம் மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்குத்தான் பயன்படும் என்று எண்ணி ஜோதிடத்திற்குப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ஜோதிடத்திற்கே சவால், கடவுள் ஒரு முழு சிந்தனை, போன்ற தனது கன்னட மொழி பெயர்ப்பு நூல்களில் வாஸ்து, ஜோதிடம், ஆன்மா, மறு-பிறப்பு மற்றும் உள்நாட்டு, வெளி-நாட்டு கடவுள்கள் உள்பட அனைத்-துப் பிரச்சினைகளையும் அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து கன்னடமொழியில் பல நூல்களை எழுதியுள்ளார்.
முதன் முதலில் 2001 ஆம் ஆண்டில் ஜோதிடம் உண்மையென்பதை நிரூபித்துக் காட்டுமாறு ரூ 10 லட்சம் பரிசு தருவதாக சவால் விட்டு நாடு முழுவதுமுள்ள பல ஜோதிடர்களுக்கு ஏ.எஸ்.நடராஜ் கடிதங்கள் எழுதி அனுப்பினார். ஆனால், ஜோதிடர் எவரும் அந்தச் சவாலை ஏற்று ஜோதிடத்தை நிரூபிக்க முன்வர-வில்லை. ஒரு சிலர் சவாலை ஏற்பதாக பத்திரிகைகளில் அறிவித்து விளம்பரம் பெற்றுவிட்டு காணாமல் போனார்கள்.
எனவே, இப்பொழுது பரிசுத் தொகையை ரூபாய் ஒரு கோடியாக உயர்த்தி தனது சவாலை நடராஜ் திரும்பவும் அறிவித்திருக்கிறார். அவரது சவால் விவரம் வருமாறு:
சவாலை ஏற்று வரும் ஜோதி-டரிடம் ஒரே ஒரு ஜாதகம் வழங்கப்-பட்டு 10 கேள்விகள் கேட்கப்படும். இவை கடந்த காலத்தைப் பற்றி, நிகழ்-காலத்தைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றியதாக இருக்கும்.
ஜோதிடம் என்பதே எதிர்-காலத்தைப் பற்றி கூறும் ஆரூடம் என்பதால் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகள் மிக முக்கியமானவை. இவற்றிற்கு 80 சதவிகிதமாவது சரியான பதில்களைக் கூறவேண்டும். சவாலை ஏற்க வரும் ஜோதிடரோ, மந்திர-வாதியோ யாராக இருந்தாலும் ரூபாய் ஒரு லட்சம் காப்புத் தொகை செலுத்தி கலந்து கொள்ளலாம். போட்டியில் வென்றால், டெபாசிட் தொகையுடன் ரூபாய் ஒரு கோடி பரிசும் வழங்கப்படும்.
ஜோதிடத்திற்கு சவால் விட்டுள்ள ஏ.எஸ். நடராஜ் பெங்களூரு பத்மநாப நகர், 5-ஆவது பிரதான சாலையில் வசித்து வருகிறார்.
ராஜ் வைச்சரிக்கா வேதிகே என்ற சங்கத்திற்கும் அகில கர்நாடக விச்சரவாடி சங்கத்திற்கும் தலைவராக உள்ளார். அவர் ஜோதிஷெகே சவாலு என்ற புத்தகத்தை ஜோதிடர்களுக்கு சவால் விட்டு அவர் எழுதியுள்ளார். ஜோசியம், ஆவி, மறுபிறவி, கீதை, வேதாந்த இந்து மதம், கடவுளின் தோற்றம், வேத உபநிடதத்தில் பவுத்த வாதம், புராணங்கள், தர்மங்கள், ஆதியாத்மா போன்ற பல புத்தகங்கள் பிரபல ஜோதிடர்கள் எழுதியுள்ள புத்தகங்களைப் படித்து ஆராய்ந்-துள்ளார்.
ஜோதிடப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்த போது, பாலஜோதிடம் என்பது முற்றிலும் தவறானது; அடிப்-படையற்றது; இந்தியாவைச் சேர்ந்ததல்ல; முறையற்றது என்பதை நன்றாக அறிந்து கொண்டார். பிறகு, அவர் பழைய பாரம்பரியத்திலிருந்து பகுத்தறிவு வாதியாகவும் பழைமை வாதத்திலிருந்து நவீன விஞ்ஞான பார்வைக்கும் மாறினார். ஜோசியத்தில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் அவற்றின் பலன்கள் அனைத்தும் முற்றிலும் பிழையானது; ஆதாரமற்றது; விஞ்-ஞானத்திற்கு எதிரானது என்று அறிந் தார். ஏ.எஸ்.நடராஜ் கன்னடத்தில் எம்.ஏ., பட்டமும், அறவியலில் எம்.ஏ.பட்டமும், பி.எட். பட்டமும் பெற்றவர். கல்லூரிப்பேராசிரியராகவும் பணியாற்றியவர். தற்போது அவர் பங்குச் சந்தை ஆலோசகராக உள்ளார்மனமறிந்து ஒரு சின்னஞ்சிறு சிசுவை-படுகொலை செய்வதற்கு ஒப்பானது ஜோதிடம்.
மடமையை அறியாமையால் பயந்து சாகின்ற அப்பாவி மக்களை ஏமாற்றி தங்கள் வயிற்றை வளர்க்கின்ற அயோக்-கியத்தனம் என்கிறார்.
இயற்கைவாதி செ. கஜபதி
நன்றி: எதிரொலி -(28-02-2010)
Contact:
A.S.NAGARAJ,
President,
Akila Karnataka Vicharvaadi sangha,
43,Rohini 5’th main road,
Padmanapa nagar,
Bengaluru- 560070.
Ph: 080-26696553.
080-26691927.
Mobile: 0934743305.

திங்கள், 12 ஏப்ரல், 2010

மீண்டும் பழைய குப்பையா?

நாரதன் என்ற ஆணுக்கும், கிருஷ்ணன் என்ற ஆணுக்கும் பிறந்த அறுபது
குழந்தைகள்தாம் தமிழ்ப் புத்தாண்டுகள் என்ற அருவருப்பான ஆபாசக் கதையை
அடிப்படையாகக் கொண்ட சித்திரை முதல் நாளாகக் கொண்ட அந்தக் குழப்பத்துக்கு
இடமான கணக்கு முறையைத் தூக்கி எறிந்து, தமிழர் பண்பாட்டு மறுமலர்ச்சியை
மய்யப்படுத்தி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மானமிகு
கலைஞர் அவர்களின் தலைமையிலான தி.மு.க. அரசு தமிழ்நாடு சட்டப் பேரவையில்
ஒரு மனதாக சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில் பிரபவ என்று தொடங்கும் அந்தப் பார்ப்பன ஆண்டு முறை என்பது
காலாவதியாகிப் போய்விட்ட ஒன்றாகும்.

ஆனால் பார்ப்பனர்கள் விடாப்பிடியாகவும், பார்ப்பனர்களுக்குத் துணை போகும்
சில தொங்கு சதைகளும் பழைய பத்தாம்பசலித்தனமான ஆண்டு முறையை நிலைநாட்டும்
வகையில் நடந்து கொள்வது சட்டவிரோதம் மட்டுமல்ல, தமிழர்களின் தன்மான
உணர்வுக்கும், மறுமலர்ச்சிக்கும் தடை போடும் அற்பத்தனமுமாகும்.

தமிழால் வயிறு வளர்த்துக் கொண்டு, அந்தத் தமிழையும், தமிழர்களையும்
கொச்சைப்படுத்தும் வகையில், பழைய சேற்றுக் குட்டையில் தமிழர்களை விழச்
செய்யும் வகையில் தமிழ் நாளேடுகள் சில விக்ருதி ஆண்டு ராசி பலன்கள் என்ற
பெயரில் இணைப்புகளை (supliments) வெளியிடுவது அசல் வெட்கக்கேடாகும். இந்த
ஏடுகளின் இத்தகைய போக்குகள் கண்டிக்கத்தக்கதும்,
வெட்கப்படத்தக்கதுமாகும்.

இதில் ஒரு வேடிக்கையும், விபரீதமும் என்னவென்றால், இந்த ஆண்டுப்
பிறப்பில் ஏதோ விஞ்ஞான உண்மைகள் இருப்பது போலவும், வான அறிவியல் கொஞ்சி
விளையாடுவது போலவும், வானியல் புறந்தள்ளிய குப்பைகளை முட்டாள்தனமாக
கூசாது எழுதித் தொலைக்கின்றன.

12 ராசிகளிலும் சூரியன் தங்கியிருக்கும் காலம்தான் ஒரு மாதம். சித்திரை
ஒன்றாந்தேதி சூரியன் பூமிக்கு அருகில் இருக்கும். தற்போது விரோதி ஆண்டு
முடிந்து விக்ருதி ஆண்டு பிறக்கிறது. இந்த ஆண்டில் சனி பகவான் மற்றும்
ராகு, கேது ஆகியோர் பெயர்ச்சி அடையவில்லை. சனிபகவான் ஆண்டு முழுவதும்
கன்னி ராசியிலும், ராகு தனுசிலும், கேது மிதுனத்திலும் இருக்கிறார்கள்
என்றெல்லாம் தம் போக்கில் எழுதுகிறார்களே, அவர்களை நோக்கி அறிவியல்
வானியல் விடுக்கும் வினா இதுதான்:

கோள்களில் ராகு, கேது என்று இருக்கின்றனவா? எந்த வானியல் அறிவு இதனை
ஏற்றுக் கொண்டிருக்கிறது?

ராகு என்ற பாம்பும், கேது என்ற பாம்பும் சந்திரனை விழுங்குகின்றன
என்றெல்லாம் மனிதர்களுக்குத் தவறான முட்டாள்தனமானவற்றைச் சொல்லிக்
கொடுக்கலாமா? மோசடிக் குற்றத்தில் இவர்களைக் குற்றக்கூண்டில்
நிறுத்தவேண்டாமா?

சூரியன் என்பது நட்சத்திரம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் அதனைக்
கோளாகச் சித்திரிப்பவர்களுக்கு எந்த அளவுக்கு வானியல் அறிவு இருக்கிறது?

மக்களிடத்தில் பக்தி இருக்கிறது; பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால்,
புராணங்களின் பெயரால் கூறப்படுபவற்றைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்
கொள்வார்கள் என்ற ஒரு காரணத்தால் எந்தக் குப்பையையும் கொட்டி
பத்திரிகைகளாக்கி, பாமர மக்களின் பணத்தைப் பறிக்கும் வழிப்பறி அல்லாமல்
இது வேறு என்னவாம்?

விஞ்ஞான மனப்பான்மையை மக்களிடம் வளர்க்கவேண்டும். இது ஓர் அடிப்படைக்
கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. அதற்கு எதிராக மக்களை
மூடக் குழியில் தள்ளும் இந்த ஊடகங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை
எடுப்பது தவறல்ல!

குற்றங்களில் மாபெரும் குற்றம் மக்களின் அறிவைத் திசை திருப்புவதாகும்.

தந்தை பெரியார் அவர்கள் அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்துச்
சீர்திருத்தத்தை அரசு ஏற்றுக் கொண்டு, சட்டமியற்றியதற்குப் பிறகு, பழைய
முறையில் எழுதினால் அது எப்படி தவறோ, குற்றமோ, அதேபோன்றதுதான் மக்களால்
தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றம் ஒருமித்த குரலில்
ஒரு சட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்தவேண்டும் என்று ஆணை பிறப்பித்த பின்,
அதற்கு நேர் எதிரான ஒன்றைக் கடைபிடிக்கச் சொல்வது குற்றம்தான்.

தமிழ் உணர்வாளர்களும், பகுத்தறிவாளர்களும் இத்திசையில் மக்களைக்
குழப்பும் சக்திகளை அம்பலப்படுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

மூடத்தனத்தை வளர்க்காதே, மக்களின் முற்போக்குச் சிந்தனையை மழுங்கடிக்காதே
என்ற முழக்கம் எங்கும் ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!

" விடுதலை” தலையங்கம் 12-4-2010

ராமநாமம்!

ராமநாமம்!

ராம நாமம் சொல்வோம்! தவறுகளைத் திருத்திக் கொள்வோம் என்று
பார்ப்பனர்களால் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள திருச்சி கல்யாணராமன்
கூறியதாக ஒரு பார்ப்பன ஏடு பிரஸ்தாபித்துள்ளது.

அத்வைகானந்த... எனத் தொடங்கும் ராம கவசம், அகத்திய மாமுனிவர் கூறுவதுபோல்
அமைந்துள்ளது. தினமும் காலையில் புளியதோரை, பால் பாயசம்,
நைவேத்தியத்துடன் இந்தக் கவசத்தை 45 நாள்கள் பாராயணம் செய்து வந்தால்
சர்வ காரிய சித்தியும், சகல மங்கலமும் பெறலாம்.

விசுவாசமித்திரருடன் இருந்தபோதும், அதன் பின்னர் 14 ஆண்டுகள் வனவாசம்
மேற்கொண்ட போதும், ஸ்ரீராமர் நீர் மோர் மற்றும் பானகம் மட்டுமே
அருந்தினாராம். அதனாலேயே ராம நவமியன்று நீர் மோரும், பானகமும் நிவேதனப்
பொருட்களாகப் படைக்கப்-படுகின்றன என்று இன்னொரு ஏடு எழுதுகிறது.

ராம நாமம் சொல்லி மற்றவர்கள் திருந்திக் கொள்வது ஒருபுறம் இருக்கட்டும்.
முதலில் அந்த ராமனே தவறு இல்லாத உத்தமனாக வாழ்ந்தானா என்பதுதான்
கேள்விக்குறி.

ஒரே ஒரு எடுத்துக்காட்டு போதுமே!

தசரதனுக்குப் பிறகு நாடு பரதனுக்கு உரியது என்று இராமனுக்குத் தெரியும்.

கைகேயி வயிற்றில் பிறக்கின்ற மகனுக்கே முடிசூட்டுவதாகக் கைகேயி-யிக்கும்,
அவன் தந்தைக்கும் தசரதன் வாக்குறுதி கொடுத்-திருந்ததை ராமன் அறிவான்.
அந்த வாக்குறுதி தனக்குத் தெரியும் என்பதைச் சித்திரக் கூடத்தில்
பரதனிடம் பேசியபோது இராமன் தெரிவித்தான். (திரு. டி. அமிர்தலிங்க
அய்யரால் எழுதப்பட்ட Ramayana vimarsa p403).

இது நன்கு தெரிந்திருந்தும் பரதன் தன் பாட்டனார் வீட்டில் இருந்தபோது,
அவனுக்குத் தெரியாமல் தன் தந்தையார் தசரதன், தனக்குப் பட்டம் சூட்ட
முடிவு செய்ததை ஏற்றுக்கொண்டானே இத்தகைய ராமன்தான் வாய்மையாளனா? நற்குணம்
வாய்ந்தவனா?

இத்தகையவனை நினைத்தால் தவறுகளை எப்படி திருத்திக் கொள்ள முடியும்?

கடவுள் தான் உலகைப் படைத்தார் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு, சிவன்
திருவாதிரை நட்சத்திரத்திலும், ராமன் நவமி திதியிலும், கிருஷ்ணன் அஷ்டமி
திதியிலும், விநாயகன் சதுர்த்தியிலும், சுப்பிரமணியன் விசாக
நட்சத்திரத்திலும் பிறந்தார்கள் என்பது எப்படி?

அப்படியானால், இந்தக் கடவுள் கந்தாயங்கள் பிறப்பதற்கு முன்பே உலகம் ஒன்று
இருந்திருக்கவேண்டும் என்று ஆகிவிடவில்லையா?

ராம நவமியில் புளியோதரை சாப்பிட்டு நீர் மோரும் பருகினால் நினைத்தது
நடக்கும் என்றால், ராம பாலத்தைக் காப்பாற்ற ராம பக்தர்கள் புளியோதரை
சாப்பிடுவதை யார் தடுத்தது? நீர்மோர் குடிப்பதற்குக் குறுக்கே
நின்றவர்கள் யார்?

ராமன் பாலத்தைக் காப்பாற்ற உச்சநீதிமன்றம் சென்ற சு.சாமியும், ஜெயலலிதா
அம்மையாரும் பதில் சொல்லட்டுமே, பார்க்கலாம்.

மயிலாடன் அவர்கள் 10-4-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

--

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

சென்னையில் 32 கோயில்களை இடிக்க முடிவு


சென்னையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்-படுத்தும் வகையில், சாலையை ஆக்கிரமித்து அமைந்துள்ள மேலும் 32 கோயில்களை இடிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

உச்சநீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு அளித்த தீர்ப்பில், பொது இடங்கள் மற்றும் சாலை-களில் புதிதாக வழிபாட்-டுத் தலங்களை அமைப்-பதற்கு தடை விதித்து உத்-தரவிட்டது. ஏற்கெ-னவே பொது இடங்-களில் இடையூறாக அமைந்-துள்ள வழிபாட்டுத் தலங்களை என்ன செய்-வது என்று அந்தந்த மாநில அரசுகளே தீர்-மானித்து, நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்-தியது.

இதனடிப்படையில், தமிழகத்தில் போக்கு-வரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மற்-றும் சாலை ஓரம் அமைந்துள்ள வழிபாட்-டுத் தலங்களை இடிக்கும் பணி நடைபெற்று வரு-கிறது.

சென்னை மாநகராட்-சியின் 10 மண்டலங்களி-லும், இதுபோல் சாலையை ஆக்கிரமித்து 200_க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள் கண்டறியப்-பட்டு பட்டியல் தயா-ரிக்கப்பட்டுள்ளது. இது-வரை 20_க்கும் மேற்-பட்ட கோயில்கள், மாநக-ராட்சி சார்பில் இடிக்-கப்பட்டுள்ளன. இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மேயர் மா. சுப்பிரமணியன் கூறியது:

சென்னை மாநகராட்-சி-யில் அடுத்தகட்டமாக 32 கோயில்களை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்-ளது. மேலும் போக்கு-வரத்துக்கு இடையூறாக பொது இடங்களில் அமைந்துள்ள வழி-பாட்டு தலங்கள் கண்-டறியப்பட்டு இடிக்கப்-படும் என்றார்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும்


திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்-டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்க-வுரையாற்றினார்.

சென்னையில் உலகத் திருக்குறள் மய்யத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவு விழா, வள்ளுவர் கோட்-டத் திருக்குறள் உயர் ஆய்வரங்குகள் பத்தாம் ஆண்டுத் தொடக்கவிழா இரண்டுநாள் மாநாடு-கள் (10, 11 இரண்டு நாள்-கள்) சென்னை வள்ளு-வர் கோட்டத்தில் நடை-பெற்றது. முதலாம் நாள் மாலை தொடக்க விழா 10.4.2010 அன்று காலை 10 மணிக்கு மிகச் சிறப்-பாகத் தொடங்கியது.

திருவள்ளுவர் வாழ்த்-தினை திருக்குறள் தூதர் சொ. பத்மநாபன் பாடி-னார். திருக்குறள் மாமுனி-வர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு வரவேற்புரை ஆற்றினார். பின்னர் இனமானத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையுரையாற்றினார்.

அவர் தமது உரையில், 133 திருக்குறள் திருத் தொண்டர்கள் வரலாற்-றினை ஆய்வு செய்யக் கூடிய இந்த மய்ய அறி-ஞர்கள் வரலாற்றில் இடம் பெறவேண்டும்.

தந்தை பெரியார் அவர்-கள் திருக்குறளை மிகப் பெரிய அளவில் ஏற்றுக் கொண்ட ஒன்-றாகும். வேறு நூல்கள் எதையும் ஏற்றுக் கொள்ள-வில்லை.

அறிவுக்கு முதலிடம்

அறிவுக்கு முதலிடம் கொடுக்கக்கூடிய ஒரே நூல் திருக்குறள்தான். செம்மொழி மாநாட்டின் இலட்சினையிலே திரு-வள்-ளுவர் படத்தினை வைத்து உருவாக்கி இருப்-பது திருவள்ளுவருக்கு மிகச் சிறப்பு செய்வ-தாகும்.

தஞ்சையில் நடத்துங்கள்

இது போன்ற நிகழ்ச்சி-களை சென்னையில் நடத்-தினால் போதும் என நிறுத்திவிடாதீர்கள். தஞ்சைக்கு வாருங்கள். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திலே இது போன்ற சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்துங்-கள். இரண்டு நாள் மாநாடு நடத்துங்கள். ஏற்பாடுகளையெல்லாம் நாங்கள் செய்து தருகி-றோம். அடுத்த கட்டமாக திருக்குறள் சார்பாக உள்ள அமைப்புகளை ஒருங்கிணைத்து மாநாட்-டினை நடத்த வேண்டும்.

தேசிய நூல்- திருக்குறள்

இந்தியாவின் தேசிய பொதுநூலாக திருக்-குறளை வைப்பதற்கு வலி-யுறுத்தவேண்டும். நீதி-மன்றத்தில் பிர-மாணம் எடுப்பதற்கு மத நூல்கள் உள்ளன. மதத்தை ஏற்-காதவர்கள் பிரமாணம் எடுப்பதற்காக திருக்-குறளை வைக்க வலி-யுறுத்த வேண்டும். அதை நீதிமன்றம் ஏற்கச் செய்ய வேண்டும். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை பெரியார் திடலில் நடத்த வாய்ப்பு உள்ள நேரங்-களில் பயன்படுத்தலாம் என குறிப்பிட்டு விளக்க-வுரையாற்றினார்.


திருக்குறள் வள்ளி-யம்மாள் தமிழர் தலைவருக்கு திருவள்ளுவர் படத்தினை அன்பளிப்பாக வழங்கினார். இது ஒரு இன உணர்வு விழா-வாக நடைபெற்றது என்-பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

பள்ளிகளில்

பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை நடத்தப்பட இருப்பதாக கல்வி அமைச்சர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவித்-துள்ளார். இதுகுறித்து இந்து முன்னணி பிரமுகர் திருவாளர் இராம கோபாலன் வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நாலடியார், தேவாரம், திவ்யபிரபந்தம் முதலான அற நூல்களும், நல்ல தமிழ்ப் பாடல்களும், ராமாயணம், மகாபாரதக் கதைகளும் இடம்பெறும் என்று நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிகளில் முன்பு நீதிபோதனை என்பதற்காக வாரத்தில் ஒரு வகுப்பு இடம் பெற்றதுண்டு. பெரும்பாலும் இந்த வகுப்புகளில் மதத் தொடர்பான சங்கதிகளைத்தான் சொல்லிக் கொடுப்பார்கள்.

அந்தக் காலத்தில் ஆசிரியர்கள் பெரும்-பாலும் பார்ப்பனர்களாகவே இருந்தனர். ராமாயணம் போன்றவைகளையும், சிவன் தொடர்பான புராணங்களையும் அள்ளிக் கொட்டுவார்கள்.

அது ஒரு காலம், இப்பொழுது காலம் வெகுவாக மாற்றத்திற்கு ஆளாகியுள்ளது. ஒழுக்கம் என்பது என்ன என்ற கேள்விக் குறிகள் எழுந்துவிட்ட காலகட்டம் இது.

தவம் செய்த சம்பூகனை இராமன் படுகொலை செய்தது வருண தருமம் என்று அப்பொழுது சொல்லிக் கொடுக்கப்பட்டு இருக்கலாம்.

இது விழிப்புணர்வு பொங்கும் காலகட்டம். தந்தை பெரியார் அவர்களும், பகுத்தறிவு இயக்கமும் சமூகத்தில் புதிய சிந்தனை வெளிச்சத்தைப் பரப்பியுள்ளது. இப்பொழுது இராமாயணம் சொல்லும் வருண தர்மத்தைப் போதித்தால் அது வீணான சர்ச்சைக்குத்தான் இடம் கொடுக்கும்.

ஏகலைவன் கட்டை விரலைக் காணிக்-கையாகக் கேட்ட துரோணாச்சாரிகளின் காலம் மலையேறிவிட்டது! குரு பக்திக்கு இதுதான் இலக்கணம் என்று சொன்னால் அதைவிட மோசடி உண்டா? இப்பொழுது மகாபாரதத்திலிருந்து அதனைச் சொல்லிக் கொடுத்தால் ஏவுகணைகள் எதிர் திசையிலிருந்து வரும் என்பதை நினைவில் நிறுத்தட்டும். பொதுவாக இந்த வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களின் மனப்பாங்குக்கு ஏற்ப இந்த வகுப்புகளின் நிறம் மாறக்கூடும்.

இது வரையறை செய்யப்படவேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்த வகுப்புகளில் எந்த மதத் தொடர்பான கதைகளும், கருத்துகளும் சொல்லிக் கொடுக்கப்படக்கூடாது. மாறாக மனித நேயக் கருத்துகளை, பகுத்தறிவைத் தூண்டும் தகவல்களை, முற்போக்குச் சிந்தனையாளர்-களின் எண்ணங்களை, சீர்திருத்தச் சிந்த-னைகளை, தன்னம்பிக்கையூட்டும் தத்-துவங்களை, மூடநம்பிக்கைகளை முற்றாகத் துரத்தியடிக்கும் அறிவியல் வயப்பட்ட கண்டு-பிடிப்புகளை மாணவர்-களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

முற்போக்கு பகுத்தறிவுச் சிந்தனை
யு-டையவர்கள் அடங்கிய குழு ஒன்று இதற்-கான பாடத் திட்டத்தை உருவாக்கவேண்டும். நீதிபோதனை என்றாலே மத போதனைதான் என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது.

பகுத்தறிவாளரான கல்வி அமைச்சர் அதனை மனதிற் கொள்வார் என்று எதிர்-பார்க்கிறோம்.

கடவுள் படங்களை அகற்றிட துணிந்து நடவடிக்கை எடுத்தார் அண்ணா

ஆக்கிரமிப்பு கோயில்களை அகற்றிடவும் மாவட்ட ஆட்சியருக்கு சுற்றறிக்கை
கோபுர சின்னத்திற்குப் பதிலாக திருவள்ளுவர் உருவம் பொறிக்கவேண்டும்!
முதலமைச்சர் கலைஞருக்கு கி.வீரமணி கனிவான முக்கிய வேண்டுகோள்
கடவுள் படங்களை அகற்றச் சொன்னவர் அண்ணா. நடைபாதைக் கோயில்கள் சாலைகளை ஆக்கிரமித்து அனுமதியின்றி கட்டப்பட்டதை இடிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பே உள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும், முதல்வர் கலைஞர் சுற்றறிக்கை அனுப்பி ஆக்கிரமிப்பு கோயில்களை அகற்றிடவேண்டும். கோபுர சின்னத்தையும் மாற்றி மதச் சார்பின்மையைக் காப்பாற்றிட தமிழக அரசும், முதல்வரும் துணிந்து முன்வரவேண்டு மென்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

தமிழக அரசுக்கு வேண்டுகோள்

நேற்று (8.4.2010) சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை-பற்றிய விவாதத்தின்போது பேசிய விடுதலை சிறுத்-தைகள் கட்சியின் சட்டமன்றத் தலைவர் திரு. ரவிக்-குமார் அவர்கள் மிக அருமையான, ஆக்க ரீதியான ஒரு வேண்டுகோளை தமிழக அரசுக்கு வைத்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் கோபுர சின்னத்தை மாற்றி...

தமிழ்நாடு அரசின் அடையாளமாக (Emblem of the State) கோபுரத்தைத் தற்போது போட்டிருப்பதை மாற்றி,திருவள்ளுவரைப் போட்டு பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று போடலாம் என்று கூறி-யிருக்கிறார்.

இது பாராட்டி வரவேற்கவேண்டிய முக்கியக் கருத்-தாகும். மதச் சார்பின்மை (Secular) அரசுதான் மத்திய, மாநில அரசுகள்.

அப்போதே திராவிடர் கழகம் கண்டனம்

இதில் ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் சின்னமே; சிறீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்தான் அது! 1947 வாக்கில் யாரையும் கலக்காமல் காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக (ஓமாந்தூரார் ஆட்சிக்காலத்தில்) எடுக்கப்பட்ட முடிவு அது.

அப்போதே திராவிடர் கழகமும், விடுதலையும் _ மதச் சார்பின்மைக் கொள்கைக்கு விரோதமானது இது என்பதைச் சுட்டிக்காட்டி தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது!

அசோக ஸ்தூபி சக்கரம்

இந்திய அரசுக்கு அசோக ஸ்தூபி சக்கரம் உள்பட தேர்வு செய்துள்ளது நியாயமானது. எம் மதத்தையும் சாராத ஒன்று. இஸ்லாமியரின் மசூதி, கிறித்துவரின் சர்ச், சீக்கியரின் தங்கக்கோயில் என்பது போன்ற பன் மதத்தவரின் பல சின்னங்கள் இருக்கும்போது, திடீ-ரென்று இந்துத்துவா எப்படியோ நுழைந்துவிட்டது! இது நியாயமற்றது, முரணானது.

பல ஆண்டுகாலமாக இருந்து வருகிறது என்ற சமாதானத்தையோ, விளக்கத்தையோ யார் எந்தத் தரப்பிலிருந்து கூறினாலும் ஏற்க இயலாது.

தமிழ் வருட ஆபாசத்தை கலைஞர் அரசு ஒழித்தது

கணினி ஆன்லைன் நிருவாகம், வீடியோ கான்ஃபரன்சிங் பல ஆண்டுகாலமாக இல்லை. அதனை நாம் ஏற்கவில்லையா?

பல ஆண்டுகாலமான தமிழ் வருடப் பிறப்பு என்ற ஆபாசத்தைக் கலைஞர் அரசு துணிச்சலுடன் ஒழித்துக்-கட்டி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு ஆணைமூலம் அறிவித்து மிகச் சிறப்பாக கொண்டாடிடவில்லையா?

( ஏடுகள் விக்குருதி வெங்காயம் என்று விளம்பரப்படுத்திட முயன்றாலும், அம்முயற்சி வெற்றி அடையப் போவதில்லை. பழையன கழிதல் _ காலத்தின் கட்டாயம்).

அண்ணா கடவுள் படங்களை அகற்றினார்

அறிஞர் அண்ணா அவர்கள் பதவிக்கு வந்தவுடன், அரசு அலுவலகங்களில் உள்ள கடவுள், கடவுளச்சிகள் படங்களை அகற்றிட அத்துணை அரசு தலைமை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை விடுத்து, அகற்றும் பணியும் தொடங்கியதே!

ஆச்சாரியார் போன்றவர்கள் எதிர்த்ததைக்கூட, அறிஞர் அண்ணா உறுதியாகப் புறந்தள்ளினார்களே _ பல ஊர்களில் அரசு மருத்துவமனைகள், வட்டாட்-சியர் அலுவலகங்களில், (நடைபாதை ஆக்கிரமிப்பு கோயில்கள் தனி) ஆங்காங்கு இந்து முன்னணி தூண்டுதலில் கோயில் கட்டி, திராவிடர் கழகம், பகுத்தறி-வாளர் கழகத்தவரின் சட்டபூர்வ நடவடிக்கையால் இடித்துத் தள்ள நீதிமன்ற ஆணை _ தீர்ப்பும் பெறப்-பட்டுள்ளது!

உச்சநீதிமன்ற தீர்ப்பேயுள்ளது!

உச்சநீதிமன்றமே நடைபாதை கோயில்கள், அனுமதியின்றி ஆக்கிரமிப்புக்களாகக் கட்டப்படும் கோயில்களை இடிக்கவேண்டும் என்ற ஆணையை _ தீர்ப்பினை வழங்கியுள்ளது.

இதுகுறித்து எல்லா மாவட்ட ஆட்சியருக்கும் மாண்பு-மிகு முதல்வர் அவர்கள் ஒரு சுற்றறிக்கை _ ஆணை _ தாக்கீது அனுப்பி, அகற்றிட வேண்டியவை-களை அகற்றிடவேண்டும்!

விஸ்வரூப அனுமார்

மதக்கலவரங்களுக்கு வித்திட ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியினர் அரசு வளாகங்களில் கோயில் கட்டுவது, நெடுஞ்சாலைகளில் விஸ்வரூப அனுமார் சிலையை வைப்பது இப்படிப் பலவும் செய்கின்றனர்! குறிப்பாக, முஸ்லிம், கிறித்துவர் வாழும் பகுதிகளில்!

இந்த அரசே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று சட்டமன்றத்தில் முதல்வர் அண்ணா அவர்கள் சொன்னார்கள்; என்ற போதிலும், முதல்வர் கலைஞர், துணை முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டு திறந்து வைக்கும் தந்தை பெரியார் சிலைகளுக்குக்கூட முறைப்படி, சட்டப்படி அனுமதி வாங்காமல் நாம் ஓர் இடத்தில்கூட வைப்பதில்லையே!

கோபுரச் சின்னம் நீண்ட கால அநீதி!

மதவெறி மாய்த்து மனிதநேயம் காக்கப்படவேண்டும்; கோபுரம் போன்ற குறிப்பிட்ட மதச் சின்னம் இடம்பெற அனுமதித்ததே நீண்ட கால அநீதி; அதைச் சரிப்படுத்திட வேண்டும்.

முதல்வருக்கு வேண்டுகோள்!

துணிந்து நல்ல முடிவெடுத்து ஜனநாயகத்தின் முக்கிய கூறுபாடான, மதச் சார்பின்மையைக் காப்-பாற்-றிட தமிழக அரசும் முதல்வர் அவர்களும் முன்வர-வேண்டும்.

தந்திகள், தீர்மானங்களும் குவியட்டும்!

முற்போக்குச் சக்திகள் அனைத்தும் இதற்குப் பேராதரவு அளிப்பது உறுதி! உறுதி!!

வியாழன், 8 ஏப்ரல், 2010

விளம்பரப் பலகைகளில் தமிழுக்கு முதலிடம்

சென்னைப் பெருநகரில் வணிக நிறுவனங்-களில் பெரிய அளவில் தமிழில் விளம்பரப் பலகைகள் வைக்கப்படவேண்டும். அதனை-யடுத்து ஆங்கிலத்தில் இடம்பெறவேண்டும் என்று சென்னை மாநகராட்சியால் முடிவு செய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

கருநாடகம் போன்ற வெளிமாநிலங்களில் இவையெல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. வட மாநிலங்களில் அனைத்தும் இந்தி மய-மாகவே நீக்கமறக் காட்சி அளிக்கின்றன.
நன்றி-விடுதலை
தமிழ்நாட்டில் காலந்தாழ்ந்தாவது இந்த வகையில் செயல்பாட்டுக்கு வருவது பெரிதும் மகிழத்தக்கதாகும்.

இப்பொழுதே சில ஆங்கில ஏடுகளில் ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியில் இந்த முடிவைக் கேலி செய்தும், எதிர்த்தும் கடிதங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

எப்பொழுதுமே இதுபோன்ற தமிழ் ஆர்வ அடிப்படையில் சில நடவடிக்கைகளை அரசு எடுக்கும்பொழுதெல்லாம் பெரும்பாலும் பார்ப்பன சக்திகள், வடவர்கள் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளன என்பது நாம் அறிந்த ஒன்றே!

மும்பையில் இதுபோல் எழுத முடியுமா? பேச முடியுமா? கேலி செய்ய முடியுமா என்பதை நினைத்துப் பார்க்கட்டும். தமிழ்நாட்டில் அத்தகு அடாவடித்தனமான போக்குகள் இல்லை என்பதால், அதனை ஒரு பலகீனமாகக் கருதி-விடக் கூடாது.

மும்பை நிலைமை இங்கு இளைஞர்கள் மத்தியில் உருவாகும் ஒரு சூழலை, அவசியத்தை உருவாக்குவது நல்லதல்ல என்பதே நமது வேண்டுகோள்.

வெளிமாநிலத்தவர்கள் மும்பை போன்ற இடங்களில் பணியாற்றுவது எல்லாம் கேள்விக் குறி ஆக்கப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், அதுவும் தலைநகரமான சென்னையை எடுத்துக்கொண்-டால், எங்கு பார்த்தாலும் வடவர்களின் ஆதிக்கம்தான். அதற்கு முன்பெல்லாம் ஒரே ஒரு சவுகார்ப்பேட்டைதான். இப்பொழுது அநேகமாக சென்னையின் வடிவம் முற்றிலும் மாறும் அளவுக்கு சென்னையே சவுகார்ப்பேட்-டையாக ஆகிவிட்டதோ என்று அய்யுறும், அச்சமுறும் நிலைமைதான்.

வடநாட்டுக்காரர்கள் குடியிருக்கும் அடுக்கு மாடிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வாடகைக்கு விடுவது கிடையாது. வீடுகளை விலைக்கு வாங்கவும் முடியாது.

சென்னைப் பெருநகரக் குழுமம் கட்டட வரைபடத்திற்கு (பிளான்) அனுமதி அளிக்கும்-போது குறைந்தபட்சம் சில நிபந்தனைகளை வைப்பதுகூட அவசியம் என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால், தமிழர்கள், பிற மாநிலத்தவர்கள் என்கிற வேற்றுமை வெளிப்படையாகத் தெரிந்து, அதனால் பிரச்சினைகள் வெடிக்கக்கூட வாய்ப்பு உண்டு. அந்த நிலை மாற்றப்பட வேண்டுமானால், சகலரும் கலந்து வாழக்கூடிய அன்னியோன்ய-மாகப் பழகக் கூடிய ஒரு சூழலை ஏற்-படுத்துவதுதான் நல்லது.

ஒரு காலகட்டத்தில் வடவர் ஆதிக்கச் சுரண்டல் மாநாடுகளும், வடவர் கடைகள் முன் மறியல் போராட்டமும் திராவிடர் கழகத்தால் நடத்-தப்பட்டதுண்டு. மீண்டும் அந்த நிலை உருவாக-வேண்டுமா? வேண்டாமா? என்பது வடவர்-களின் நடவடிக்கைகளைப் பொறுத்ததுதான்.

இன்னொரு முக்கியப் பிரச்சினை. நாட்டுக்-காகப் பாடுபட்ட தலைவர்களின் பெயர்கள் சில முக்கிய சாலைகளுக்குச் சூட்டப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக அண்ணா சாலை, தந்தை பெரியார் நெடுஞ்சாலை, காமராசர் கடற்கரைச் சாலை, வ.உ.சிதம்பரனார் சாலை என்று பெயர்கள் சூட்டப்பட்டன.

ஆனால், இன்னும்கூட வணிக நிறுவனங்-களில், மவுண்ட் ரோடு என்றும், பூந்தமல்லி நெடுஞ்-சாலை என்றும், வெறும் கடற்கரைச் சாலை என்றும் வால்டாக்ஸ் சாலை என்றும் விளம்பரப் பலகைகளில் எழுதப்பட்-டுள்ளன.

ஏடுகள், இதழ்கள், தொலைக்காட்சிகள்கூட இந்த வகையிலே சிறிதும் பொறுப்பற்ற தன்-மையிலே எழுதப்படுகின்றன, உச்சரிக்கப்படு-கின்றன. இவற்றிற்கும் ஒரு முடிவை ஏற்படுத்த-வேண்டும். அரசு நினைத்தால் இதனை ஒரு நாளிலேயே சாதித்துக் காட்டிட முடியும் என்பதால், இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமாய் வலியுறுத்துகிறோம்

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

சீனாவில் பெண் குழந்தைகளைக் கொன்று ஆற்றில் வீசும் கொடூரம்!


பெய்ஜிங்: ஆண் குழந்தைகள்தான் வேண்டும் என்ற மனப்பான்மையால், பெண் குழந்தைகளைக் கொல்லும் கொடூரம் சீனாவில் அதிகரித்துள்ளது.


சமீபத்தில் கிழக்கு சீனாவில் 21 பெண் குழந்தைகள் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்டுள்ளன.

சீனாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால், அங்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஒரு தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்து விட்டால் பிறகு அவர்கள் ஆண் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியாது.

இந்த நிலையில், கிழக்கு சீனாவில் உள்ள ஜினிங் நகரில் ஓடும் ஆற்றில் 21 குழந்தைகளின் உடல்கள் மிதந்தன. அவற்றில் சில முழு வளர்ச்சி அடையாத கருக்களாக இருந்தன. குழந்தைகளின் உடலில் மருத்துவமனையின் அடையாளச் சின்னம் பொறிக்கப்பட்ட துணி சுற்றப்பட்டு இருந்தது. இந்த குழந்தைகளை பெற்றோரே கொன்றுவிட்டு உடல்களை ஆற்றில் தூக்கி வீசி இருப்பதாகக் கூறப்படுகிறது.

21 குழந்தைகளின் உடல்களை தீயணைப்பு படையினரும், உள்ளூர் மக்களும் கைப்பற்றிய போதிலும், கொன்று ஆற்றில் தூக்கி வீசப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குறிப்பிட்ட மருத்துவமனை ஊழியர்கள் சிலரைகிழக்கு சீன மாகாண அரசு சஸ்பெண்ட் செய்தது.

சீனாவில் பெண் சிசுக்கொலை அதிக அளவில் நடக்கிறது என்று மனித உரிமைக் குழுவினர் குற்றஞ்சாட்டி வந்தபோதிலும், அதை கையும், களவுமாக பிடித்து சுட்டிக்காட்ட அவர்களால் முடியாமல் இருந்தது. இப்போது அவர்களுக்கு இந்த சம்பவம் மூலம் போதுமான ஆதாரம் கிடைத்து உள்ளது.

இந்த சம்பவம் சீனாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
www.sivajitv.com

செல் பேசியில் தமிழ் மொழி


இணையத்திலும் கணனியிலும் தமிழில் எழுதி வாசிப்பது இப்போது இலகுவான காரியம் ஆகிவிட்டது. ஆனால் தகவல் தொழில்நுட்ப உலகை ஆக்கிரமித்து வரும் செல்லிடத் தொலைபேசிகளில் தமிழின் பாவனை மந்தமாகவே உள்ளது. அண்மையில் செல்பேசி மூலம் ஒரு ட்விட்டர் செய்தியிட அது எப்படி என்று காங்கோன் கேட்டதன் விழைவே இந்தப் பதிவு.

பொதுவாக செல்பேசிகளில் ஆங்கில மொழி இயல்பிருப்பாகவும் பிரஞ்சு, சீனம், ஜப்பானிய மொழிகள் இணைப்பாகவும் வருவதுண்டு. தற்போதைய நிலையில் மற்றய மொழிகளுக்கு இணையாக ஹிந்தி மொழிக்கு செல்பேசிகளில் தனியிடம் வழங்கத் தொடங்கியுள்ளனர். தமிழ் மொழியை ஏதோ கண்டும் கணாதது போலத்தான்.

குறிப்பாக விலை குறைந்த தொலைபேசிகளில் தமிழ் ஆதரவு இருந்தாலும் விலை கூடிய செல்பேசிகளில் தமிழ் ஆதரவு இருப்பதில்லை. இந்த நிலையில் செல்பேசி உலாவியில் தமிழ் தளங்களைப் பார்த்தால் அனைத்தும் பெட்டி பெட்டிகளாகத் தெரியும்.

இந்த பிரைச்சனையில் இருந்து விடுபட டிவிஸ் எழுதிய பதிவைப் படியுங்கள். ஒபெரா மினி எனும் உலாவி மூலம் தமிழ் தளங்களைப் படிக்க கூடிய வசதியுள்ளது. ஆனாலும் இதன் மூலம் தமிழில் உள்ளிட முடியாது. ஒபேரா மினி இப்போது தமிழ் மொழியிலும் கிடைக்கின்றது என்பதைக் குறிப்படவேண்டும்.

தமிழில் உள்ளிட வேண்டுமானால் தொலைபேசியில் தமிழ் உள்ளிடுவதற்கான ஆதரவு இருக்கவேண்டும். பெரும் பாலான தொலைபேசிகளில் இந்த வசதி இருப்பதில்லை.

நான் அறிந்த வரையில் இந்திய, இலங்கை சந்தைகளுக்காகச் செய்யப்பட்ட தொலைபேசிகளில் தமிழ் உள்ளீட்டு ஆதரவு இருக்கும். ஆனாலும் பெரும்பாலான தொலைபேசிகளில் இது இருப்பதில்லை. இலங்கையில் வெளியாகும் தமிழ் ஆதரவு செல் பேசிகளில் கீ-பாட் பெரும்பாலும் சிங்களத்திலேயே இருக்கும். ஆனாலும் தமிழகத்தில் கீ-பாட்டையும் தமிழில் செய்து வைக்கின்றார்கள்.

சில வருடங்களிற்கு முன்னமே தமிழிற்கு ஒரு செல்பேசி தளக்கோலம் தேவை என்று ரவி கூறியிருந்தார். அண்மையில் ரவி வாங்கிய நொக்கிய 5310 இல் தமிழ் கீ பாட் மற்றும் தமிழ் இடைமுகம் இருப்பதாகக் கூறியிருந்தார். நொக்கியாவில் எவ்வாறு தமிழில் தட்டச்சிடுவது என்றும் ரவி ஒரு பதிவிட்டுள்ளார். அவ்வகையான தொலைபேசிகள் மூலம் இணையத்தில் உலாவுவதுடன் தமிழ் மொழியில் உள்ளிடவும் முடியும். இயல்பிருப்பாக இந்த தொலைபேசிகளில் தமிழ் மொழி ஆதரவு இருப்பதினால் SMS, Email போன்றவற்றையும் தங்குதடையின்றி தமிழ் மொழியில் பார்க்கலாம்.


நொக்கியா 2730
சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நொக்கியா 2730 எனும் தொலைபேசியை சுமார் 10,000 ரூபாவிற்கு (100 USD) வாங்கினேன். இந்த தொலைபேசியின் சிறப்பு என்னவெனில் 3G வசதியுள்ளமை. 3G வீடியோ அழைப்புகளை எடுக்க முடியாவிட்டாலும் WCDMA வேகத்தில் இணையத்தில் உலாவ முடியும். அத்துடன் கணனியுடன் இணைத்தால் சாதாரண அகலப்பட்டை இணைப்பு வேகத்தில் இணையத்தில் உலாவ முடியும்.

இந்த நொக்கியா 2730 இல் தமிழ், சிங்களம், ஹிந்தி, வங்க மொழி ஆகிய மொழிகளுக்கு ஆதரவு வழங்ப்படுகின்றது. இதில் இயல்பிருப்பாகவே MSN Messenger, Opera Mini, Email Client போன்றவை இருக்கின்றமை சிறப்பியல்பு.

Gmail, Hotmail போன்றவற்றை செல் பேசியிலேயே வாசிக்க கூடியதாகவும் தமிழிலேயே பதில் போடக் கூடியதாகவும் இருப்பது இரட்டை மகிழ்ச்சி. நாங்கள் அதிகம் பாவித்தால் அதிகம் கேட்டால் தானே மற்றய புதிய மாதிரிகளிலும் தமிழ் ஆதரவு தருவார்கள். நானும் ஒரு தமிழ் ஆதரவு நொக்கியாவைப் பயன்படுத்துவதில் சந்தோஷம்

நொக்கியா 2730 பிடித்துவிடவே அது பற்றிய உதவிக் குறிப்புகளை ஒரு வலைப்பதிவில் எழுத தொடங்கியுள்ளேன். நீங்கள் அந்த தொலைபேசி பாவிப்பவரானால் நீங்களும் சென்று படித்துப் பயனுறுங்கள்.

இந்த வலைப்பதிவை நீங்கள் உங்கள் செல்பேசியில் காண இந்த முகவரிக்குச் செல்லுங்கள்.

நொக்கியாவில் எவ்வாறு தமிழில் தட்டசிடுவது என்று கேட்க பில்ட்டப்பு கொடுத்த மு.மயூரனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்
http://www.mayuonline.com

மாறுங்கள் இல்லை மாற்றப்படுவீர்கள் புரோகிதர்களே...







புரோகிதர்களுக்கு மட்டும் எழுதிக்கொள்வது.....

காலம் காலமாக திருமணத்திற்க்கு புரோகிதர்களை வைத்து திருமணம் செய்வது நமது தமிழ் கலாச்சாரத்தில் ஊறிப்போய் இருக்கிறது.திருமணம் மட்டுமின்றி ஏனைய சடங்குகள் அனைத்திற்க்கும் புரோகிதர்களை வைத்து மந்திரம் ஓதி சடங்குகள் செய்து கொள்வது வழக்கமாகிவிட்டது...


எத்தனை பேர் அந்த மந்திரங்களை அர்த்தம் புரிந்து சொல்லியிருக்கிறோம் என்று தெரியவில்லை.ஒருவேளை அந்த மந்திரங்கள் புரிந்தவர்கள் சமஸ்கிருதம் அறிந்தவர்களாக இருக்கலாம்...ஆனால் சமஸ்கிருதமே என்னவென்று தெரியாத பாமர மக்கள் வீட்டு சடங்குகளிலும் இன்னும் இந்த சமஸ்கிருத மந்திரங்கள் சொல்வது ஏன்?


தமிழ் நாட்டில் தமிழர்கள் ஆளும் தமிழர்கள் வாழும் ஊரில் இன்னமும் சமஸ்கிருதத்திலயே மந்திரங்கள் ஓதப்படுவது ஏன் ஓய்?


இது மாற்றாததற்க்கு காரணம் இன்னும் தானே உசத்தியென்றும் தாங்கள் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்கவேண்டும் என்ற ஆணவமா? இல்லை மரபாக வந்ததை மாற்ற இயலாது என்று சாக்கு போக்கா? என்ன என்னவோ கண்டுபிடிச்சாச்சு இந்த விஞ்ஞான உலகத்தில் இந்த சமஸ்கிருதத்திற்க்கு தமிழ் அர்த்தம் கண்டு பிடிக்காமலா இருந்திருப்பார்கள்?


கண்டுபிடிச்சுருக்கான்யா தமிழன் நான் படிச்சதை சொல்றேன் கேளுங்க...







சோமஹ ப்ரதமோ விவிதே கந்தர்வோ
விவித உத்ரஹ த்ரியோ அக்னிஸ்டே பதி
துரியஸ்தே மனுஷ்ய ஜாஹ


இந்த மந்திரத்தை திருமணம் நடத்திவைக்கிற புரோகிதர் மணப்பெண்ணை நோக்கி சொல்றார்.இதுக்கு அர்த்தம் சொன்னா இந்த மந்திரங்கள் சொல்லி திருமணம் முடிந்த மணப்பெண்களுக்கு வருத்தமாய்த்தான் இருக்கும் சொல்லித்தான் ஆகவேண்டியிருக்கிறது இந்த மணப்பெண் முதலில் சந்திரன் எனும் சோமனுக்கு மனைவியாய் இருந்தாள் இரண்டாவதாக கந்தர்வனுக்கு மனைவியாய் இருந்தாள் மூன்றாவதாக அக்னிக்கு மனைவியாய் இருந்தாள் நான்காவதாக இந்த பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மணமகனுக்கு மனைவியாகப்போகிறாய்...


கேட்டீங்களாப்பா என்னதான் அவங்க எல்லாரும் கடவுள்களாக இருந்தாலும் மூன்றுபேருக்கு மனைவியாய் இருந்த ஒருவளை எப்படி ஒரு தன்மானம் உடைய மணமகன் திருமணம் முடிப்பது ? பிறந்ததிலருந்து பொத்தி பொத்தி பாதுகாத்து வளர்த்து எந்த களங்கமும் இல்லாத தன்னோட பொண்ணை ஒருத்தனுக்கு திருமணம் நடத்திவைக்கும் பெற்றோர்களுக்கு இதன் அர்த்தம் தெரிந்தால் கொதித்து போய்விடமாட்டார்களா ஓய்? இதைவிட இவ்வளவு வருடங்கழித்து எந்த ஆடவரின் இச்சைக்கும் அடிபணியாத முதல் முதலாக ஒரு ஆடவனுக்கு மனைவியாகப்போகிறவளுக்கு இதன் அர்த்தம் தெரிந்தால் அவ்வளவுதான் எரிந்து கொண்டிருக்கும் அதே அக்னியில் அந்த புரோகிதனை பொசுக்கிவிடமாட்டாளா?




இதுக்கு பதிலாக


இன்னார் மகளாய் பிறந்த இன்ன பெயருடைய நீ இன்னாருக்கு பிறந்த இன்ன பெயருடைய ஒருத்தருக்கு மனைவியாகப்போகிறாய் என்று கூறினால் போதாதா ஓய்?


நோக்கு எப்டி தெரியுன்றவாளுக்கு சொல்றேன் கேளுங்க...


விளக்க?உரை பெயர் : விவாஹ மந்த்ராத்த போதினி


எழுதியவர் : கீழாத்தூர் ஸ்ரீநிவாச ஆச்சாரியார் (பெயருக்கு பின்னால் சாதி பெயர் போடுறவங்களுக்கு முதலில் கருட புராண தண்டணை கொடுக்கணும் ஓய்)


பக்கம் : 22....


இதைவிட கொடுமை


தாய் தகப்பனுக்கு திவசம் கொடுக்கப்படும்பொழுது சொல்லப்படும் மந்திரம்...


தகப்பனுக்குதிவசம் கொடுக்கும்பொழுது சொல்ற மந்திரம்


யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா
தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப
பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா
ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம
கிருஸ்ண கிருஸ்ண கிருஸ்ண…



இதுக்கு அர்த்தம்


என்னோட அம்மா பத்தினியா இல்லாமல் வேறொருத்தருக்கு என்னை பெற்றிருந்தால் இந்த திவசத்திற்க்கு உரிமை கோரி உண்மையான என்னுடைய தகப்பன் வருவார் அப்படியில்லையென்றால் என்னுடைய அம்மாவின் கணவர் இந்த திவசத்தை பெற்றுக்கொள்ளட்டும்.. என்ன கரும மந்திரம்டா இது அப்பன் பேர் தெரியாதவன்னு அசிங்கப்படுத்துற மாதிரியில்ல இருக்கு...


இதுக்கு பதிலா அப்பா நான் இதுவரைக்கும் உன்னை இகழ்ந்து பேசியிருந்தாலோ இல்லை உனக்கு அவமானம் தரக்கூடிய வகையில் நடந்திருந்தாலோ அதற்க்காக என்னை மன்னித்து இந்த திவசத்தை ஏற்றுக்கொள்வாயாகன்னு சொன்னா போதுமே ஓய்...




அம்மாவுக்கு கொடுக்கிற திவசத்தில் சொல்ற மந்திரம் இது


என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ
பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா
அவபத்ய நாம….



என்னுடைய அம்மா என்னை யாருக்கு பெற்றாளோ தெரியவில்லை ஒரு நம்பிக்கையில் தான் அவளை என்னுடைய தகப்பனின் மனைவியாக கருதுகிறேன் அந்த அம்மாவிற்க்கு இந்த திவசம் போய் சேரட்டும் மானங்கெட்ட மந்திரம்டா இது சொல்றதுக்கே வாய் கூசுது...


இதுக்கு பதிலா அம்மா என்னை பத்து மாசம் சுமந்து பெற்றதற்க்கு ஈடு இணையாக நான் எதுவும் செய்யவில்லை அதற்க்காக என்னை மன்னித்து இந்த திவசத்தை ஏற்றுக்கொள்வாயாக இப்படி சொன்னால் போதாதா ஓய்...


நானும் இந்துமதத்தை சேர்ந்தவன்தான் இல்லையென்று சொல்லவில்லை அதற்க்காக இப்படி அபத்தமான மந்திரங்களை சொல்ல தன்மானம் இடங்கொடுக்கவில்லை முற்றிலும் சமஸ்கிருத மந்திரம் ஓதுவதை தவிருங்கள் ஓய்..இல்லை இந்த மந்திரங்களுக்கு வேறு அர்த்தங்கள் வைத்திருப்பீர்களானால் அதையே தமிழ் படுத்தி கூறுவதில் என்ன நஷ்டம் வந்துவிடப்ப்போகிறது உங்களுக்கு? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த சமஸ்கிருதத்தையே பிடிச்சு தொங்கிண்டு இருப்பேள் ஓய் ஒழுக்கமாக மரியாதையாக கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்வதை போலவே சடங்குகள் சம்பிரதாயத்திற்க்கும் தமிழில் மந்திரம் ஓதவும்... இல்லையேல் தமிழ் நாட்டை விட்டே ஒதுக்கி வைக்கப்படும் நிலைக்கு ஆளாகும் நிலை வெகு தூரம் இல்லை...நீங்கள் இல்லாமலே திருமணங்கள் நடக்கும் சூழ்நிலைகள் உருவாகலாம் ஓய்....உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியும் என்பதற்க்காக மற்றவர்கள் மீதும் அதை திணிக்காதீர்கள்...


மாறுங்கள் இல்லை மாற்றப்படுவீர்கள் புரோகிதர்களே...
நன்றி-ப்ரியமுடன்வசந்த்.

மதங்களுக்கு மதம் பிடித்தால்!

சமீபத்தில் கவனத்தை ஈர்க்கும் வகை-யில் இந்தியாவில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இந்நிகழ்வுகள் குறித்து பெரும்பாலா-னோர் கவலைப்படாதது மிகவும் கவலைக்குரியது. ஒன்று இந்தியாவின் தலைசிறந்த ஓவியரான எம்.எப்.-உசேனை தொடர்ந்து அச்சுறுத்திய இந்து மத அடிப்படைவாதிகளுக்கு பயந்து, அவர் கத்தார் நாட்டின் குடியுரிமையைப் பெற்றிருப்பது. மற்றொன்று வங்கதேச பெண் எழுத்தாளரான தஸ்லீமா நஸ்ரின் ஏற்கெனவே அவுட்லுக் ஆங்கில இதழில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதில் இருந்து விடுபட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எழுதிய கட்டுரையின் கன்னட மொழி-யாக்கத்தை கன்னட பிரபா என்ற நாளிதழ் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிமோகா நகரில் முஸ்லிம் மதவெறி அமைப்புகள் நடத்திய கலவர ஆர்ப்பாட்டத்தில் இரண்டு பேர் சாகடிக்கப்பட்டனர்.

எம்.எஃப்.உசேன் இந்துமத கடவுள்-களை நிர்வாணமாக படம் வரைந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பஜ்ரங்தள் பேன்ற ஆர்.எஸ்.எஸ்.-ன் பல்வேறு அமைப்புகள் 1996 முதல் தொடர்ந்து அவர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தாக்குதல்கள் பல்வேறு வகைப்பட்டவை. அகமதாபாத்தில் இவரது ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்த கலைக்கூடத்திற்குள் புகுந்து பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

1998 இல் இதே பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மும்பையில் உள்ள உசேனின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். மகாராஷ்டிராவில் சிவசேனாவைச் சேர்ந்த அன்றைய பண்-பாட்டுத்துறை அமைச்சர் பிரமோத் நாவல்கர் மும்பை காவல்துறை ஆணை-யரிடம் கொடுத்த புகாரின் அடிப்படை-யில் உசேன் மீது முதன் முதலாக வழக்கு தொடரப்பட்டது. இதைத்-தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்-சராக இருந்த காங்கிரஸ் கட்சியின் சிவராஜ் பாட்டீல் உத்தரவிட்டதன் அடிப்படையில் மும்பை மற்றும் புதுடில்லி காவல்துறை ஆணையர்கள் உசேன் மீது வழக்குகளைத் தொடர்ந்-தனர். அதன் பிறகு ஏராளமான வழக்குகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உசேன் மீது தொடுக்கப்பட்டு, ஜாமீனில் அனுமதிக்கக் கூடிய மற்றும் அனு-மதிக்காத தாக்கீதுகள் நீதிமன்றங்களால் தரப்பட்டன. முத்தாய்ப்பாக 2006இல் இவ்வழக்குகள் அனைத்தையும் டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றச் சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்-டது. வழக்குகளை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இவ்வழக்குகளில் ஆதாரம் இல்லை என்று கூறி அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது. இறுதியாக உச்சநீதிமன்றமும் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டது. இவ்வாறான வழக்குகளைத் தொடுக்க மாநில, மத்திய அரசுகளின் முன் அனுமதி தேவை என்ற விதிமுறையும் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த உசேனுக்கே இந்த கதி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் மீதான வழக்குகளுக்கு ஆதாரமில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும், உசேனுக்கு அச்சுறுத்தல்கள் தொடர்ந்-தன. குஜராத் மாநிலத்தின் மேசானா மாவட்ட பி.ஜே.பி. தலைவர், உசேனின் கண்களைத் தோண்டி அவரது வலதுகை கட்டைவிரலை வெட்டி வருபவருக்கு ஒரு கிலோ தங்கம் பரிசு என வெளிப்படையாகவே அறிவித்தார்.

இவ்வாறு மதவாத அமைப்புகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டு-வதன் மூலம் தங்கள் அராஜகங்களை நியாயப்படுத்திக் கொள்கின்றனர். ஒட்டுமொத்தத்தில் இவர்கள் எழுத்து மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவர்கள். தங்கள் மீதான சிறு விமர்சனங்களைக் கூட ஏற்றுக் கொள்ளும் உறுதி இல்லாதவர்கள். அந்த அளவிற்கு இவர்களுக்கு தங்கள் நம்பிக்கையின் மீது அய்யப்பாடு ஏற்பட்டுள்ளது தான் இரக்கத்திற்குரியது. இந்த மண்ணின் சட்டத்தை இவர்கள் கிஞ்சித்தும் மதிக்காதவர்கள். சட்டத்தை தாங்களே உருவாக்கிக் கொள்பவர்கள். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை பேசித் தீர்த்துக் கெள்ள வேண்டும் என்ற நடைமுறை சாத்தியப்பாட்டிற்கு எதிரானவர்கள். யாரையும் எதையும் மதிக்காதவர்கள். தான்தேன்றித்தனமான இவர்களின் அராஜக நடவடிக்கை-களுக்கு முன்பு நமது ஆட்சியாளர்கள் கைகட்டி நிற்பது மிகவும் ஆபத்தானது.

இந்து மதவாத அமைப்புகளின் அராஜகத்திற்கு உசேன் மீதான தாக்குதல் கட்டியம் கூறுகிறது. அதே-போல் முஸ்லிம் மதவாத அமைப்பு-களின் அராஜகத்திற்கு வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் மீது அவர்கள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் சாட்சியமாக உள்ளது. பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் வங்க-தேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை தஸ்லிமா நஸ்ரின் தனது லஜ்ஜா நாவல் மூலம் வெளிப்படுத்தினார். அந்-நாவலை வங்கதேச அரசு தடை செய்தது நமக்கு வியப்பை அளிக்க-வில்லை. ஆனால் இந்தியாவிலும் பல மாநில அரசுகள் அந்நாவலை தடை செய்ததுதான் விந்தையானது. இந்-நாவல் வெளிவந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச முஸ்லிம் தீவிரவாதிகள் தொடுத்த தாக்குதலைத் தாங்க முடியாமல் தஸ்லிமா நஸ்ரின் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இங்கும் அவர் மீதான தாக்குதல் தொடர்கிறது. அவர் ஒவ்வெரு ஊராக ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். மேற்கு வங்கத்தில்தான் தனக்கு பாதுகாப்பு உள்ளது என்று வந்த தஸ்லிமாவுக்கு பாதுகாப்பு தர அம்மாநில இடது முன்னணி அரசு மறுத்துவிட்டது. சமீபத்தில் கர்நாட-காவில் இவரது கட்டுரைக்கு எதிராக பலத்த எதிர்ப்பு நடவடிக்கைகள் நிகழ்ந்துள்ளன. இவர் முஸ்லிம் பெண்-களின் விடுதலைக்காக குரல் கொடுப்-பதை முஸ்லிம் தீவிரவாதிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆப்கானில் மதத்தின் பெயரால் அட்டூழியம் செய்து வரும் தலிபான்-களின் கொடுமைகளை அந்நாட்டு மக்களால் தாங்க முடியவில்லை. இவர்கள் வளர்ந்து விட்டால் அடக்-குவது கடினம். இவர்களை முளை-யிலேயே கிள்ளியெறிய வேண்டும். ஆனால் வாக்குவங்கி அரசியலில் மூழ்கியுள்ள நமது அரசியல்வாதி-களால் இதை சாதிக்க முடியுமா? நடந்த நிகழ்வுகளைப் பார்த்தால் முடியாது என்றே தெரிகிறது. காங்-கிரஸ் கட்சி ஒரு மதவாத அமைப்பாக இல்லை என்றாலும், அதன் மதச்சார்பற்ற கோட்பாடு உறுதியற்றது என்று விமர்சனம் செய்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1980 வரை கேரளாவில் முஸ்லிம் லீக்-கு-டன் கூட்டணி வைத்திருந்தது. 1980_-க்-குப் பிறகு முஸ்லிம் லீக்குடன் கூட்-டணி சேர்வதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்தது. பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னர் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தனது பெயரை இந்தியன் நேஷனல் லீக் என்று மாற்றி, தன்னை மதசார்பற்ற கட்சி என்று அறிவித்தது. அப்போதும் அக்கட்சியுடன் கூட்டணி வைப்பதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை சி.பி.எம். எடுத்தது. பெயர் மாறினால் குணம் மாறி-விடாது என்று கூறியது. ஆனால் அதே கட்சி வாக்கு வங்கி அரசியலுக்காக பின்னால், கோவை குண்டுவெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்ட மதவாத அமைப்-பான மதானியின் மக்கள் ஜனநாயகக் கூட்டணியுடன் கூச்சநாச்சமில்லாமல் உறவு கொண்டது. மண்டல் கமிஷன் அறிக்கை வந்த போது மேற்குவங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவினரே இல்லை என்பதால் மண்டல் கமிஷனின் பரிந்துரையை மேற்குவங்கத்தில் அமல்படுத்த தேவையில்லை என்றது. ஆனால் தற்போது மேற்குவங்கத்தில் 24 சதமாக உள்ள முஸ்லிம் வாக்கு வங்கியைக் குறிவைத்து, அவர்களுக்கு 10 சதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்-டத்தை நிறைவேற்றியுள்ளது. ஏற்கனவே ஆந்திராவில் முஸ்லிம்-களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய சட்டம் நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில் சி.பி.எம். இந்த இடஒதுக்கீட்டு சட்டத்தை இயற்றியிருப்பது ஓர் ஏமாற்று வேலை. இதில் வியப்பு என்ன-வென்றால் இவர்கள் இச்சட்டத்தை இயற்றிய அதேநாளில், ஆந்திராவில் தரப்பட்ட இந்த ஒதுக்கீடு செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது தான். மத அடிப்படையில் இடஒதுக்கீடு தரு-வதற்கு அரசியல் சட்டத்தில் இடமில்லை என்று நீதிமன்றம் ஆணித்தரமாக கூறியபிறகும் இவர்கள் அச்சட்டத்தை திரும்பப் பெறவில்லை. வாக்குவங்கி அரசியலுக்கு இவர்களும் பலியாகிவிட்-டார்கள். இவர்களே இப்படியென்றால் மற்றவர்களைப் பற்றி சொல்ல வேண்-டியதில்லை.

ஆனால் உண்மை என்னவென்றால் இவ்விரு மதங்களையும் சேர்ந்த பெரும்பாலான மக்கள் மதவெறி உணர்வு கொண்டிருக்கவில்லை. இருபுறமும் உள்ள ஒரு சிறுபான்மை கூட்டம்தான் பிரச்சினைகளை பெரிதாக்கிக் கொண்டு வருகிறது. பெரும்பான்மை மக்கள் நினைத்தால் இவர்களுக்கு கடிவாளம் போடுவது மிகமிக எளிதானது. அந்நிலை உருவாகும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

- கலை
நன்றி: தமிழக அரசியல்,
28.3.2010

திங்கள், 5 ஏப்ரல், 2010

குருவாயூர் கோயில்:


பிற மதத்தவர் நுழையக்கூடாது என்ற தடை தகர்ந்தது!
பாடகர் ஜேசுதாஸ் தாராளமாக செல்லலாம் - நீதிமன்றம்

திருவனந்தபுரம், ஏப். 4_ பொதுவாக இந்து மதக் கோயில்களில் பிற மதத்தவர் செல்லக்கூடாது என்ற தடை உண்டு; ஏன், விளம்பரப் பலகைகூட இந்து மதக் கோயில்களில் வைக்கப்பட்டுள்ளது.

குருவாயூர் கோயிலில் இந்த பேதம் நீண்ட காலமாக உண்டு. இப்பொழுது வழக்கு ஒன்றில் கேரள உயர்நீதிமன்றம், ஜேசுதாஸ் குருவாயூர் கோயிலுக்குள் செல்லத் தடையில்லை என்று மண்டையில் அடித்துக் கூறியுள்ளது.



குருவாயூர் கோயிலுக்குள் செல்ல புகழ்பெற்ற பாடகர் ஜேசுதாசுக்கு அனுமதி அளிக்கும்படி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலுக்குள் இந்து மதத்-தினரை தவிர வேறு மதத்தினர் யாரும் செல்லக்கூடாது. இந்தக் கோயிலில் சில ஆண்டுகளுக்குமுன்பு நடைபெற்ற கச்சேரியில் பாடுவதற்காக புகழ்பெற்ற பாடகர் ஜேசுதாஸ் சென்றார்.

அப்போது, அவர் பிற மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்தப் பிரச்-சினையில் தலையிட்ட அமைச்சர் சுதாகரன், ஜேசுதாசை கோயி-லுக்குள் அனுமதிக்கவேண்டும் என்று கூறினார்.

வேறு மதத்தவர்கள் கோயி-லுக்குள் சென்றதால், கோயில் தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி தோஷம் கழித்த சம்பவங்களும் இதற்குமுன் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில், குருவாயூர் கோயிலுக்குள் ஜேசுதாசை அனுமதிக்கும்படி உத்தரவிடக் கோரி, கோழிக்கோட்டைச் சேர்ந்த லலிதா பாஸ்கரன் என்பவர் கேரள உயர்நீதி-மன்றத்-தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், கோபிநாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், குருவாயூர் கோயிலுக்குச் செல்ல ஜேசுதாசுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. அதற்காகப் பொதுநலன் வழக்கு தொடரவேண்டிய அவசியமும் இல்லை என்று மனுவை தள்ளுபடி செய்தனர்.

சனி, 3 ஏப்ரல், 2010

மூலத் திராவிட மொழிக்குச்


குப்பம் திராவிடப் பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கு

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் சகோதர மொழிகளாகும். வேற்-றுமை மனப்பான்மை-யோடு பார்க்கும் மன நிலையை மாற்றிக் கொண்டு நாம் அனை-வரும் திராவிடர், மூலத் திராவிட மொழிக்குச் சொந்தக்காரர்கள் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று கருத்தரங்கில் பெருங்-கவிக்கோ வா.மு. சேது-ராமன் பேசினார்.



செம்மொழித் தமி-ழாய்வு மத்திய நிறுவ-னத்தின் நிதி நல்கையில், குப்பம் திராவிடப் பல்-கலைக் கழகத் தமிழ்த் துறையின் சார்பில் திரா-விட மொழிகளின் ஒப்பி-லக்கியக் கருத்தரங்கின் தொடக்க விழா மார்ச் 31 ஆம் நாள் காலை 11 மணி-யளவில் தொடங்கியது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இராக. விவே-கானந்த கோபால் வர-வேற்புரை கூற, திராவிட மொழிகளின் ஒப்பிலக்-கியப் புலத்தலைவர் பேராசிரியர் ஜி. லோகநாத ரெட்டி தலைமையில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் தொடக்க
வு-ரை-யாற்றினார்கள்.

அவர் தமது உரையில், தமிழ், தெலுங்கு, கன்ன-டம், மலையாளம் ஆகிய மொழிகள் சகோதர மொழிகளாக இருந்தா-லும், மேலை நாட்டு மொழிகளுக்கு அளிக்கப்-படும் மதிப்பு அளிக்கப்-படுவதில்லை. வேற்றுமை மனப்பான்மையோடு பார்க்கும் நமது மன-நிலையை மாற்றிக்-கொண்டு நாம் அனைவரும் திராவி-டர்; மூலத் திராவிட மொழிக்குச் சொந்தக்கா-ரர்கள் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள-வேண்-டும் என்று கூறினார்.

பின்னர் பேசிய பேரா-சிரியர் செ. இராமசாமி, தெலுங்கு இலக்கியத்தை-யும், கன்னட இலக்கியத்-தையும் முழுமையாகப் புரிந்துகொள்ள தமிழிலக்-கியம் கற்பது அவசியம் என்-பதை வலியுறுத்தி-னார். கலைச்சொற்கள் உருவாக்கத்தில் தமிழ் மொழியின் தேவையும் உள்ளது என்றார்.

திராவிடப் பல்கலைக்-கழகம் எந்த நோக்கத்-திற்-காக முதுமுனைவர் வ.அய். சுப்பிரமணியம் மற்றும் காசிப்பாண்டியன் இ.ஆ.ப. ஆகியோரால் உருவாக்கப்-பட்டதோ அந்த நோக்கம் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கிய ஆய்வாகும் என்பதையும், அதற்காகப் பல்-கலைக்கழகம் பாடுபட-வேண்டும் என்றும் வலி-யுறுத்தினார்.

செம்மொழி தமி-ழாய்வு மத்திய நிறுவனத்-திலிருந்து வருகை தந்த ஒருங்கிணைப்பாளர் பேரா-சிரியர் கு.சிவமணி இத்தகைய கருத்தரங்கை நடத்துவதற்கு அடிப்-படைக் காரணமாக இருந்-தவர் திராவிடப் பல்-கலைக் கழக துணைவேந்-தர் கடப்பா இரமணய்-யாவே ஆவார் என்பத-னைச் சுட்டிக்காட்டிய-தோடு, செம்மொழித் தமி-ழாய்வு நிறுவனத்தின் பணி-களையும் விவரித்தார்.

கருத்தரங்கு இணை ஒருங்கிணைப்பாளர் உத-விப் பேராசிரியர் முனை-வர் பூலோகரம்பை நன்றி நவில, கருத்தரங்கத் தொடக்க விழா நிறைவு பெற்றது.

இக்கருத்தரங்கு ஏப்ரல் 3 ஆம் தேதிவரை நடை-பெறும் என்றும், இத்த-கைய அரங்கில் ஒப்பிலக்-கிய ஆர்வலர்கள் கலந்து-கொள்ளவேண்டும் என்-றும் துறைத் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார்

அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார் கொடுக்கப்பட்டுள்ளது.முன்ஜாமீன் மறுப்புபிரபல சாமியார் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ படம் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்தப்படத்தை எடுத்த அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன், நித்யானந்தா மீது சென்னை போலீசில் புகார் கொடுத்தார்.இதன் அடிப்படையில், நித்யானந்தா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர், இவ்வழக்குகள் கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டன. நித்யானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.இந்நிலையில், அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார் எழுந்துள்ளது. கலிபோர்னியா மாகாணம் சான் ஜோஸ் பகுதியை சேர்ந்த டக்ளஸ் மெக்கல்லர் என்ற முன்னாள் சீடர், அம்மாகாண அட்டர்னி ஜெனரல் ஜெர்ரி பிரவுனிடம் இந்த புகாரை அளித்துள்ளார்.சுவாமி நித்ய பிரபா என்று அழைக்கப்பட்டு வந்த இவர், தனது புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-காவலுக்கு நிற்க சொன்னார்அமெரிக்காவில் பல இடங்களில் நித்யானந்தாவுக்கு ஆசிரமங்கள் உள்ளன. அங்கு வரும்போது, அவரது தனிப்பட்ட குடியிருப்பில், அழகான பெண்களுடன்தான் இருப்பார். அவர்களுடன்தான் சாப்பிடுவார். ஒருமுறை, கலிபோர்னியா மாகாணம் நார்வாக் பகுதியில் உள்ள சனாதன் தர்மா கோவிலில் 2 நாட்கள் பயிற்சி முகாமுக்கு நித்யானந்தா வந்திருந்தார்.அப்போது, அவரை தனியறையில் ஒரு பெண் சந்தித்தார். அப்பெண்ணுடன் தனிமையில் இருக்கும்போது, வேறு யாரும் வந்து விடாமல் பார்த்துக்கொள்ளுமாறு நித்யானந்தா என்னை கதவு அருகே காவலுக்கு நிற்க சொன்னார்.கஞ்சா விதைமேலும், இந்து மத நம்பிக்கைகளை நித்யானந்தா தவறாக பயன்படுத்தினார். ஆசிரமத்தில் இருப்பவர்களை அவர் அடிக்கவும் செய்வார். எனது வங்கிக்கணக்கில் இருந்து 4 லட்சம் டாலர் பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளார்.லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில், நான் 2007-ம் ஆண்டு ஜுன் மாதம், ஒரு வார கால தியான பயிற்சிக்காக தங்கி இருந்தேன். அந்த தியான வகுப்பின்போது, நான் மயக்க நிலையில் இருந்தேன். ஏதோ மருந்து காரணமாக, நான் உணர்வை இழந்தது போல இருந்தது.அந்த தியான வகுப்பின்போது, நித்யானந்தா, யாகம் வளர்த்தார். பக்தர்கள் அனைவரும் தங்கள் தலைமுடியை வெட்டி, தீயில் போடுமாறு சொன்னார். மேலும், அவர் அந்த தீயில் கஞ்சா விதை போல தோன்றிய ஏதோ ஒன்றை போட்டார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தகவல் அளிக்க அழைப்புஇதற்கிடையே, நித்யானந்தா மீதான புகார்களை விசாரித்து வரும் கர்நாடக சி.ஐ.டி. போலீசார், நித்யானந்தாவால் பாதிக்கப்பட்டவர்கள், புகார் அளிக்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, சி.ஐ.டி.யின் போலீஸ் சூப்பிரண்டு யோகப்பா கூறியதாவது:-பாதிக்கப்பட்டவர்கள், என்னை சந்தித்து சாட்சியம் அளிக்கலாம். அவர்களை பற்றிய விவரங்கள், ரகசியமாக பாதுகாக்கப்படும். தகவல் அளிக்க வருபவர்களின் போக்குவரத்து செலவுகளை சி.ஐ.டி. பிரிவே ஏற்றுக்கொள்ளும்.இவ்வாறு அவர் கூறினார்
துணுக்குகள்..
பிராமணங்கள் தோன்றுவதற்கு முற்பட்ட வேத காலத்தில் பூணூல் அணியும் வழக்கம் காணப்படாமையால், அதுபற்றி உண்டான சாதி வேற்றுமையும் அஞ்ஞான்று இருந்ததில்லை. சதபத பிராமணத்திலும் (2,4,2) கவ்ஷீதகி உபநிஷத்திலுமே (2,7) பூணூல் அணியும் குறிப்பு முதன் முதல் காணப்படுகிறது. இவ்விரண்டிலுங்கூடப் பகலவன் கீழ்பால் எழும்போது அவனை வணங்கும் காலைப் பொழுதிலும், வேள்வி வேட்கும் பொழுதிலுமே மாந்தர் பூணூல் அணிந்து, மற்றைக் காலங்களில் அதனைக் கழற்றிவிடும் பழக்கம் நன்கு தெரிந்தோதப்பட்டமையால், இந்நூல்கள் உண்டான காலத்திலும் சாதி வேற்றுமையின் பொருட்டுப் பூணூல் அணியப்படவில்லை. மற்று இக்காலத்திலோ இறைவனை வணங்காமல், உலகியல் தொழில்களையே அல்லும் பகலும் புரிந்து, தமது வயிற்றுக்கும் தம்மைச் சேர்ந்தாரது வயிற்றுக்குமே பாடுபட்டு உழன்று, தீவினைகளை ஈட்டுவோர் எந்நேரமும் அப்பூணூலை அணிந்து கொண்டு தம்மை உயர்ந்த சாதியாராக எண்ணி இறுமாந்து அய்யகோ! மேன்மேல் தீவினைகளைப் பெருக்கி வருகின்றனரே!

மறைமலையடிகள், (சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் பக்கம் 14)


-------------------------------------------------------------------------------------------------
இராம ராஜ்யமா?

காந்தியடிகளின் சில சொற்கள் எனக்கு வெறுப்பாகக்கூட இருந்ததுண்டு. உதாரணமாக, இராம ராஜ்யம் என்ற பொற்காலம் இனி வரப்போகிறது என்று அடிக்கடி அவர் சொல்லிக் கொண்டிருந்தது எனக்கு அறவே பிடிக்கவில்லை. ஆனால், அதில் தலையிடுவதற்கு நான் சக்தியற்றவனாயிருந்தேன்.

_ ஜவகர்லால் நேரு


-------------------------------------------------------------------------------- ----------------
வியாபார பக்தி!

நமது வியாபாரிகளுக்குச் சிறிது பணம் வந்துவிட்டால் வீட்டில் பூஜை, விரத அனுஷ்டானங்கள் வந்து புகுந்து கொள்ளும். மேல் ஜாதி என்பதற்கு வேண்டிய நடிப்பைக் கற்றுக்கொடுக்க புரோகிதக் கூட்டம் நிறைந்துவிடும். கோவில் கட்டுவதும், கும்பாபிஷேகம் செய்வதும், தெய்வங்களுக்கு வாகனங்கள், ஆபரணங்கள் செய்வதும், பிராமண சமாராதனைகள் பண்ணி புண்ணியத்தைத் தேடி மோட்சமடைவதற்கு யாத்திரை முடிப்பதும் -_ ஆகிய இவற்றில் அவர்கள் பணமும், காலமும், புத்தியும் செலவழிக்கப்பட்டு விடும். வியாபாரத்தில் ஒரு சிறு மாறுதல் வந்தால் நஷ்டமடைந்து, அதற்குப் பிறகு காலட்சேபம் கேட்பதோடு திருப்தியடைந்து விடுவார்கள். இவ்வித முறைகளினால் நமது தேசத்து வியாபாரம் கெட்டு மேல் நாட்டு வியாபாரம் விருத்தியாகி விட்டது

கைவல்ய சாமியார்
-------------------------------------------------------------------------------------------

கம்பனும் வால்மீகியும்

தமிழனாகிய கம்பன் ஆரியம் என்றால் கேழ்வரகு என்கிறவரையில் மாத்திரம் தெரிந்திருந்-தானானால் அவனுக்கு வால்மீகி நூலை எடுத்தோதிய வேதியர்கள் புளுகியிருத்தல் வேண்டும். ஆனால், அக்காலத்து வேதியர்கள் புளுகர்கள் அல்லர் என்று யான் முழுதும் நம்பியிருத்தலினாலே புளுகு என்று தோன்றிய முழுமையினையும் நம்மவன் கம்பனின் புளுகு என்றே யான் தீர்மானித்தேன். அவ்வளவு திறமையுடன் புளுகும் வன்மையும் புளுகு சக்ரவர்த்தியாகிய கம்பனையன்றி வேறு யார்க்கும் கிட்டக் கூடிய தென்றும் யான் நம்பவில்லை.

புலமையுடையோர் சங்க நூற்களை மிகவும் பாராட்டுதல் அவைகளுள் பொதிந்து பொலியும் இயற்கை நவிற்சியணிகளை வியந்தன்றோ? அவ்வாறாயின் உலக இயற்கை நிகழ்ச்சிகள் அன்று எத்தகையனவோ இன்றும் அத்தகையனவாகவே நம் இரு விழிகள் காண நிகழ்வதெனத் தோன்றும் அழகுடன் நவின்று செல்வது வால்மீகம், அதற்கு முற்றிலும் மாறாக, செயல் கடந்த செயற்கைக் கட்டென்றும் கம்பன் கனவென்றும் இயற்கை உணர்வினர் எவரும் எண்ணும்படி நவின்று செல்வது கம்பன் நூற்ற நூல்.

மற்றையப் புலவர்களைப் போன்று காலத்தால், சொல் வழக்கால், செவி வழக்கால் மாறி மாறிப் பிறழ்வடைந்து பின் வந்தெய்திய பாட்டிக் கதைகளைத் தங்கள் புலமை கொண்டு புனைந்து எழுதுபவர்கள் போன்றவரல்லர் _ வால்மீகி.

.. இராமன், சீதை, இலக்குவன், தாரை, இராவணன் _ முதலிய பெயர்களைப் பெயரள-விலும், இராமன், சீதை, இலக்குவன் மூவரும் காட்டிற்குப் போனார்கள், இராமன் மனைவி சீதையை இராவணன் கொண்டோடிப் போனான், இராமன் குரங்குக் கூட்டத்தோடு கடல் கடந்து சென்று இராவணனைக் கொன்று சீதையை மீட்டு வந்தான் என்பன போன்ற நிகழ்ச்சிகள் நிகழ்ச்சியளவிலும் வால்மீகி நூலிற்கும் கம்பன் நூலிற்கும் பொதுப்படக் காணக்கிடக்கின்றனவே-யன்றிச் சிறிது உற்று நோக்குங்கால் வால்மீக இராமன் வேறு, கம்ப இராமன் வேறு _ வால்மீக சிதை வேறு, கம்பன் சீதை வேறு _-வால்மீக தாரை வேறு, கம்பன் தாரை வேறு என்பனவும், கம்ப மண்-டோதரியோ கம்பன் மண்டையோட்டிற்குள்ளிருந்து பிறந்தவள் என்பதும் தெளிவாகும்.

கதை நிகழ்ச்சிகளிலும் வால்மீகி நிகழ்ச்சிகளோ இயற்கைக்கு மாறாத வாய்மையெனத் தோன்றும் நிகழ்ச்சிகள் கம்ப நிகழ்ச்சிகள் என்றாலோ இயற்கைக்கு வேறாய பெரும் பெரும் புளுகுகள் என்று ஓரமின்றிய உள்ளப் பாங்கினருக்கு வெட்ட வெளியாகப் புலப்படக் கூடியனவாம்..

(கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் என்று நூலிலிருந்து)
www.viduthalai.com

மனிதனைக் கடவுள் படைக்கவில்லை!

இடைவெளி சுருங்குகிறது

சு. அறிவுக்கரசு

அறிவியல் ஆய்வுகள் முற்றுப் பெறுவது இல்லை. அவை முடிவற்றவை. எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் தொடர்ந்து நடைபெறக் கூடியவை. நடைபெறவேண்டியவை. ஆய்வு முடிந்து விட்டது என்று யாரும் ஓய்வு கொள்ள முடியாது. ஆய்வு... ஆய்வு... மேலும் ஆய்வு... என்று போகப் போகப் புதுப்புது முடிவுகள் தோன்றும்... தெரிய வரும்... அதன் பிறகும்... அதன் பிறகும்... இதுதான் அறிவியலின் சிறப்பே!

எந்தக் கேள்விக்காவது விடை தெரியவில்லை என்றால் அதனை நிரப்பு-வதற்குப் பக்தர்களுக்குக் கிடைத்துள்ள பதம்தான் கடவுள் என்பது. கோடிட்ட இடங்களை நிரப்புக எனும் கேள்விக்குப் பள்ளியில் பதில் எழுதிய பழக்கம் இன்னும் விட்டுப் போகவில்லை அவர்-களுக்கு. ஆனால்... அறிவைப் பயன்-படுத்துபவர்களுக்கு...? ஆய்வு தேவைப்-படுகிறது. விடையைக் காணும் முயற்சி-யில் இறங்கவேண்டி வருகிறது. செய்-யும்போது விடை கிடைக்கிறது - காலந்தாழ்ந்தாவது!

விநாடி வினா-விடை நிகழ்ச்சியைப் போல, இயற்கை தொடர்பான அனைத்-திற்கும் விடை அளித்திட வேண்டும் என எதிர்பார்ப்பது அவசரக்காரனுக்கு அடையாளம் மட்டும் அல்ல... அறிவற்ற அவசரமும் கூட!

ஆற அமர ஆராய்ச்சி செய்ததன் பயனாக மனிதனின் (பரிணாம வளர்ச்சி) படிநிலை வளர்ச்சி பற்றிய ஆய்வில் ஒரு முக்கிய படிநிலை புலப்பட்டிருக்-கிறது என்பது, இயற்கை (Nature) ஏட்டில் மார்ச் 25 ஆம் தேதி ஏட்டின் மூலம் தெரிய வருகிறது (தரவு: தி இந்து 25.3.2010).

சிம்பன்சி வகைக் குரங்குகளிலிருந்து படிநிலை வளர்ச்சி அடைந்து இன்றைய மனிதன் உருவானான் எனும் முடிவில் ஒரு தொடர்பு (லிங்க்) கிடைக்கவில்லை என்று அறிவியல் ஆய்வாளர்கள் ஒத்துக் கொண்டிருந்த நிலை இதன் மூலம் மாறுகிறது. உண்மையை ஒப்புக் கொள்ளும் அறிவு நாணயம் புத்தி-யைப் பயன்படுத்துபவர்களுக்கு உண்டு; வரும்! பக்தியில் திளைப்பவர்களுக்கு வரவே வராது. - பூனைக்கு இறக்கை உண்டு, நான் பார்த்தேன் என்பார்கள், இந்த வேதத்தில் கடவுளால் அருளப்-பட்ட வாசகம் தெரிவிக்கிறது என்பார்கள்.

இதோ தொடர்பு

இத்தகைய முக்கியமான தொடர்புச் சங்கிலி புதிய மரபணுவை வரிசைப்-படுத்தி ஆய்ந்ததில் கிடைத்துள்ளது. அந்த மரபணு மிடோ கான்ட்ரியால் டி.என்.ஏ. எனப்படுகிறது. சுருக்கமாக mt DNA என்கிறார்கள். இந்த மர-பணுவை மனிதனுக்கு முந்திய ஓர் உயிரில் (Hominin) இருந்து எடுத்து ஆய்வுக்குப் பயன்படுத்தியுள்ளனர். இந்த உயிர் ரஷியாவின் சைபீரியப் பாலை நிலப் பகுதியான அல்டாய் மலை-யில் வாழ்ந்ததாகும். தற்கால மனிதர்-களும், அவனுக்கும் முந்திய நியாண்டர்தால் மனிதனும் வாழ்ந்திருந்த காலத்தில் உடன் வாழ்ந்த உயிராகும். இந்த உயிர் அல்டாய் மலையில் டெனி-சோவா குகையில் வாழ்ந்துள்ளது 2008 இல் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்குப் பயன்பட்டுள்ளது. இதன் காலம் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தியது என்கிறார்கள்.

தற்கால மனிதர்கள் (ஹோமியோ சேபியன்கள்) நியாண்டர்தால் மனிதர்-கள் ஆகியோருக்கும் அல்டாய் மலை-மனிதனுக்கும் மாறுபாடுகள் தெரிகின்-றன. இத்தகைய மாறுபாடுகளின் அளவை நெக்ளியோடைட் (Necleotide) என்பதால் நிருணயிக்கி-றார்கள். அதன்படி, ஹோமியோசேபி-யன் மனிதனுக்கும் நியாண்டர்தால் மனிதனுக்கும் உள்ள வேறுபாட்டின் அளவு 202 என்றும், இதுவே அல்டாய் மனிதனுக்குள்ள வேறுபாடு அளவு 385 என்றும் கணக்கிட்டுள்-ளனர். என்றால், வேறுபாட்டின் அளவை விளங்கிக் கொள்ளமுடியும். இந்த ஆராய்ச்சி முடிவு மனிதப் படிநிலை வளர்ச்சி எனும் மரத்தில் துண்டு விழுந்த இடத்தை நிரப்புகிறது. கோடிட்ட இடத்தை அறிவியல் தொடர் ஆராய்ச்சி நிரப்பியிருக்கிறது. அவசரக்கார, அறிவற்றவர்கள் போலக் கடவுளைக் கொண்டு நிரப்பவில்லை.

படிப்படியாய்...

சிம்பன்சி குரங்கு இனத்தின் ஒரு கிளைப் பிரிவாக 60 லட்சம் ஆண்டு-களுக்கு முன்பு மனித இனம் பிரிந்-தது. அல்டாய் மனிதன், நியாண்-டர்தால் மனிதன், ஹோமோசேபியன்-(இன்றைய)மனிதன் ஆகியோரின் மூதாதை ஒருவராகவே 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. அதன் பின் கிளைகளாக வளர்ச்சி பெற்றது என்பது முடிவு. அல்டாய் மனிதன் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வரை வாழ்ந்துள்ளான் என்று நிறுவியுள்ள-னர். இவர்களுக்கு 100 கி.மீ. தூரத்தில் நியாண்டர்தால் மனிதர்கள் வாழ்ந்தி-ருக்கிறார்கள்.

இந்தோனேஷியாவில் ஹோமோ புளோரசியன்கள் எனும் மனிதர்கள் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்திருந்தனர் என்பதை முந்திய ஆய்வுகள் எடுத்துக் காட்டி-யுள்ளன. 19 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோஎரக்டஸ் எனும் மனித இனத்தவர் ஆப்ரிக்கக் கண்-டத்திலிருந்து வெளியேறிச் சென்றுள்-ளனர். இவர்களுக்குப் பிறகு வேறு இரண்டு வகையினர் அங்கிருந்து வெளியேறி உள்ளனர் என்பதையும் தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்-கின்றன. இவர்கள் ஹோமோ ஹெய்டல்பெர்ஜென்சிஸ் அல்லது ஹோமோ ரொடீசியன்சிஸ் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இவ்வகையினர் நியாண்டர்தால் மனித இனத்தின் மூதாதையர். 3 லட்சத்-திலிருந்து 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தனர் என்றும் இன்றைய மனித இனத்தவர் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தனர் என்பதும் ஆய்வுகளின் மூலம் அறியப்படும் உண்மை.

மனித இனம் உருமலர்ச்சி பெற்று வளர்ந்த பகுதி, பூமிப்பந்தின் மய்யப் பகுதியாகவும் மிகுந்த வெப்பம் நிறைந்த பகுதியாகவும் இருக்கின்ற காரணத்தால், மனித இனத்தின் எலும்புகள், பற்கள் போன்றவை மட்கிஅழிந்து போகாமல் கிடைக்கும் வாய்ப்பு குறைந்து போய்-விட்டது. இதனால் ஆய்வுக்கும் மர-பணுக்களைக் கண்டறியும் சோதனை-களுக்கும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இந்நிலையில், குளிர்ப்பகுதி-யான கிரீன்லாந்தில் கிடைத்த எஸ்கிமோ ஆணின் மயிரிலிருந்து எடுக்கப்பட்ட நியூக்ளியர் மரபணுக்கள் ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது ஊக்கம் தருவதாக உள்ளது. மயிர் என்று அலட்சியப்படுத்தப்படாமல் ஆய்வுக்குப் பயன்படுவதாக இருப்பதால், ஆய்வுகள் தொடரும் எனும் நம்பிக்கை நிறையவே வளர்கிறது. வெப்பப் பகுதிகளில் கிடைக்கும் மயிர்களிலிருந்து மரபணு பிரித்தெடுக்க முடியுமா என்பது பற்றிய ஆய்வுகள் தொடர்கின்றன.

சிறு துரும்பு வேண்டுமானால் பல் குத்த உதவலாம். ஆனால் அதனிலும் மெல்லிய மயிர் - மரபணு - மனிதனின் படிநிலை வளர்ச்சி- ஆகியவை பற்றிய ஆராய்ச்சிக்கு உதவுகிறது. மனிதனைக் கடவுள் படைத்தது எனும் மடமையை உடைக்க உதவுகிறது.

புத்தி வந்தால் பக்தி போகும்!