சனி, 13 மார்ச், 2010

தாளமுத்து
1938_ இந்தி எதிர்ப்புப் போராட்டம், திராவிடர் இயக்க வரலாற்றில் மட்டு-மல்ல, தமிழினத்தின் வர-லாற்-றில் _ தமிழர்களை ஒரு குடை-யின்கீழ் கொண்டு-வந்து நிறுத்திய மிகப்பெரிய கலாச்-சார மாற்றத்திற்கு வித்-திட்ட எழுச்சிப் போராட்ட-மாகும்.

ஆரியப் பண்பாட்டின் சின்னமான சமஸ்கிருதம் போட்ட குட்டியான இந்தி-யைத் தமிழர்கள் மீது திணித்-தார் பிரதமர் ஆச்சாரியார் அன்று. சமஸ்கிருதத்தைப் படிப்படியாக புகுத்தவே முத-லில் இந்தியைக் கொண்டு வந்தேன் என்று சென்னை லயோலா கல்லூரியில் வெளிப்படையாகவே பேசி-னார் அவர்.

தந்தை பெரியார் தலை-மையில் தமிழர்கள் ஓரணி-யில் சேர்ந்தனர். எங்கும் போராட்டம் _ எங்கும் பேரணி _ எங்கும் எழுச்சிப் பொதுக்கூட்டங்கள் _ கல்வி நிறுவனங்களை மாணவர்கள் புறக்கணிப்பு.

திருச்சியிலிருந்து தமிழர் பெரும்படை புறப்பாடு என்று தமிழ்நாடே போராட்ட உணர்-வின் கந்தக மலையாகத் தகித்தது. தந்தை பெரியார் அழைப்பை ஏற்று தோழர்-கள், தாய்மார்கள் (கைக்குழந்-தைகளுடன்கூட) சிறைக்-கோட்டம் ஏகினார்கள்.

அவ்வாறு சிறைக்-கோட்-டம் ஏகிய நடராசனும் (சென்னை) தாளமுத்துவும் (குடந்தை) சிறையிலே பலி-யானார்கள்.

நடராசன் என்ற தாழ்த்-தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழர் முதலில் (15.1.1939) பலி-யானார். தாளமுத்து என்ற நாடார் சமூகத்தைச் சேர்ந்த தோழர் இரண்டா-வது பலி இந்நாளில்தான் (12.3.1939).

கலாச்சாரப் போரில் காளையர்களைப் பலி கொடுத்து தமிழினம் கண்-ணீர்க் கடலில் மிதந்தது.

ஆனால், அந்த நேரத்-தில் ஆச்சாரியார் சட்டமன்-றத்தில் என்ன சொன்னார் தெரி-யுமா? நடராஜன் என்பவர் படிப்பு வாசனை அறியாத அரி-ஜன். தன் தாய்-மொழியி-லும்கூட நடராஜ-னுக்கு எழுதத் தெரியாது என்றார்.

படிப்பு வாசனையற்ற காரணத்தால்தான் நடராஜ-னுக்கு மரணம் நேர்ந்தது என்று அமைச்சர் கருதுகி-றாரா? என்று அப்துல் அமீத்-கான் சுடச்சுட கேள்வி எழுப்பினார். படிப்பில்லாத-தால்-தான் அந்தக் கைதி மறியல் செய்ய நேர்ந்தது. சிறை-யில் அவர் இறந்து போனார் என்று ஆரியச் செருக்குடன் பதில் கூறினார்.

இந்த மாவீரர்களின் இறுதி ஊர்வலம் சென்னை மாநகரையே கலக்கியது. நடராசன் உடல் புதைக்கப்-பட்ட இடத்தின் அருகி-லேயே தாளமுத்துவின் உடலும் புதைக்கப்பட்டது. கூட்டத்தில் உரையாற்றிய அண்ணா அவர்கள் கூறினார்:

இரண்டு மணிகளை இழந்தோம். தமிழர் ஆட்சி ஏற்படும்போது இவ்விரு வீரர்களின் தியாகத்தை அடிப்படையாகக் கொண்டே அது எழுப்பப்படும். வருங்-காலத்தில் விடுதலை பெற்ற தமிழகத்தில் தலைவர் பெரியாரை நடுவில் வைத்து இறந்த இரு மணிகளையும், பக்கத்தில் வைத்து உருவச்-சிலை எழுப்பவேண்டும். ஏன் பெரியார் தளர்ச்சி அடைந்த காலத்திலெல்லாம் இந்த இரண்டு சமூகங்கள்-தான்_ அதாவது நாடார் _ ஆதிதிராவிடர் சமூகங்கள்-தான் அவருக்கு உதவி செய்து வந்திருக்கின்றன என்றார் அறிஞர் அண்ணா. இதில் மிகவும் மதிக்கத்தக்க ஓர் தகவல் உண்டு. தாளமுத்-து-வைப் பறிகொடுத்த மனைவி குருவம்மாள், முடங்கிவிடாமல், கணவன் பயணித்த பாதையில் இந்தி எதிர்ப்புக் களத்தில் குதித்து ஆறு மாத கடுந்தண்ட-னையை சிரித்த முகத்துடன் ஏற்றார்!

- மயிலாடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக