சனி, 27 மார்ச், 2010

வியாபாரம்!




சினிமாவில் சில காட்சிகள் வரும்; நாகப்-பாம்பைப் பார்த்து நாகப்பா என்று சாஷ்-டாங்கமாகக் கும்பிட்-டால், பாம்பு படம் எடுக்காது; கடிக்காது என்றெல்லாம் கதைப்-பார்கள். திரைப்படத்தைப் பார்த்து பாம்பைக் கண்டு கீழே விழுந்து கும்பிடு போட்ட சிறுமி பாம்பு தீண்டியதால் மரணம் அடைந்தாள் என்றெல்-லாம்கூட செய்தி வந்தது (உளுந்தூர்ப்பேட்டையில் நடந்த சம்பவம்).

சினிமாதான் இந்தச் சில்லறைத்தனமான சில்லுண்டி வேலைகளில் இறங்குகின்றன என்-றால், ஏடுகளும், இதழ்-களும், அவற்றிற்குச் சளைத்தவையல்ல நாங்-கள் என்று மார்தட்டு-கின்றன.

தலப் புராணம் என்ற தலைப்பில் அவிழ்த்துக் கொட்டும் அறியாமைக் குப்பைகளுக்கு அளவே-யில்லை.

திருப்பதியில் வெங்-கடாசலபதிக்கு மாலை கட்டுவதற்காக திருமலை நம்பி என்பவர் பூ பறித்தார். அப்போது அவ-ரைப் பாம்பு தீண்டிவிட்-டது. அவர் கவலையே படாமல், மாலை கட்டிக் கொண்டு வெங்கடாசல-பதியிடம் போனார்.

பாம்பு கடித்தும் நீ மாலையுடன் என்னிடம் வந்திருக்கிறாயே, நம்பி என்று கேட்டார் பெரு-மாள்.

கடித்த பாம்பு விஷம் இல்லாததாக இருந்தால், தங்களை இங்கு வந்து தரிசிப்பது; விஷமுள்ள பாம்பாக இருந்தால் வைகுண்டத்தில் வந்து சந்திப்பது என்ற வைராக்-கியத்தில் இருந்தேன்! என்று பதில் சொன்னா-ராம் நம்பி.

இப்படி ஒரு தலப் புராணம் ஓர் இதழில். ஒவ்வொரு கோயிலுக்-கும் இதுபோல அற்புதக் கதைகளைக் கட்டி விடு-வது _ அந்தக் கோயி-லின் மீது ஓர் ஈர்ப்பை, நம்பிக்கையை ஏற்படுத்-தும் வர்த்தக ரீதியான தந்திரம் என்பதை மன-தில் வையுங்கள்.

கடவுள் ஒருவரே; அவர் பல நாமகரணங்-கள் கொண்டவர் என்று ஆன்மிகவாதிகள் சொல்-லு-கிறார்களே, அது உண்-மையானால், ஒவ்வொரு கோயிலின் சக்தியின் டிகிரி வேறுபடுவதுபோல் எழுதி வைப்பானேன்?

காரணம் இருக்கிறது_ தன் பக்கம் அதிக எண்-ணிக்கையில் ஈர்த்தால் தானே அவர்களின் பொருள்களைச் சுரண்ட முடியும். உண்டியலை-யும் நிரம்பி வழியச் செய்ய முடியும்?

- மயிலாடன்
விடுதலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக