வெள்ளி, 31 டிசம்பர், 2010

தமிழ் மாதப் பெயர்கள் எப்படி வந்தன?



தமிழ் மாதம் என்பது சித்திரை,வைகாசி எனத் துவங்குகின்றன.இதற்கான பெயர் காரணத்தை இனி காண்போம்.

பெரும்பாலும் ஒரு மாதத்தில் பௌர்ணமி அன்று எந்த நக்ஷத்திரமோ அதுவே
அந்த மாசத்தின் பெயராக இருக்கும்.அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும் விழாவாகவும் இருக்கும்.

அனேகமாக சித்ரா நக்ஷத்திரத்தன்றுதான் சித்திரை மாசத்தில் பௌர்ணமி வரும்.அதனால் சித்திரை மாசம் என்றானது.
விசாக சம்மந்தமானது வைசாகம்.விசாக நக்ஷத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் தான் வைசாகி.மதுரை என்பது மருதை என திரிவது போல் சமஸ்கிருத வைசாகி தமிழில் வைகாசி ஆயிற்று.

அனுஷ நக்ஷத்திர சம்மந்தமானது ஆனுஷீ.அந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் ஆனுஷீமாசம்.தமிழில் ஷ என்ற எழுத்து உதிர்ந்து ஆனி என்றாயிற்று.

ஆஷாட நக்ஷத்திரத்தில் பூர்வ ஆஷாடம்,உத்தர ஆஷாடம் என்று இரண்டு.பூர்வம் என்றால் முன்,உத்தரம் என்றால் பின்.பூர்வ/உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அந்த ர்வ என்ற கூட்டெழுத்து சிதைந்தும்.ஷ உதிர்ந்தும் தமிழில் பூராடம் உத்திராடம் என்கிறோம்.இந்த இரு நக்ஷத்திரங்களில் ஒன்றில் பௌர்ணமி வரும் மாதம் ஆஷாடி.இதில் ஷா உதிர்ந்து ஆடி ஆயிற்று.

ச்ராவணம் என்பது ச்ரவண நக்ஷத்திரத்தை குறிக்கும்.முதலில் உள்ள ச்ர அப்படியே தமிழில் drop ஆகி வணத்தை ஓணம் என்கிறோம்.அது மஹாவிஷ்னுவின் நக்ஷத்திரமாதலால் திரு என்ற மரியாதை சொல்லை சேர்த்து திருவோணம் என்கிறோம்.அனேகமாக பௌர்ணமி ச்ராவண நக்ஷத்திரத்தில் வருவதால் ச்ராவணி எனப்படும்.இதில் சமஸ்கிருதத்திற்கே உரிய ச்,ர என்ற கூட்டெழுத்து drop ஆகி ஆவணி மாதமாயிற்று.

ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு.பூர்வ ப்ரோஷ்டபதம் தான் தமிழில் பூரட்டாதி ஆயிற்று.அஷ்ட என்பது அட்ட என திரிந்தது.உத்திர ப்ரோஷ்டபதம் என்பது உத்திரட்டாதி ஆயிற்று.இந்த நக்ஷத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் ப்ரோஷ்டபதி என்பது எப்படியோ திரிந்து புரட்டாசி ஆயிற்று.


ஆச்வயுஜம்,அச்வினி என்பதை அச்வதி என்கிறோம்.அதிலே பௌர்ணமி வருகிற ஆச்வயுஜீ அல்லது ஆச்வினீ தான் திரிந்து ஐப்பசி ஆயிற்று.

க்ருத்திகை நக்ஷத்திரம் தான் கார்திகை.இந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் அது கார்த்திகை மாதமாயிற்று.

மிருகசீர்ஷம் என்பது மார்கசீர்ஷி என்றாயிற்று.இதில் பெரும்பாலும் பௌர்ணமி வரும் மாதம் மார்கசீர்ஷி என்றாயிற்று.அதில் சீர்ஷி என்பது மறுவி மார்கழி என்றாயிற்று.

புஷ்யம் தான் தமிழில் பூசம் .புஷ்ய சம்மந்தமானது பௌஷ்யம்.புஷ்யத்திற்கு திஷ்யம் என்றும் பெயர்.பௌர்ணமி திஷ்யத்திலே வரும் மாதம் தைஷ்யம்.அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய் தை என்றாயிற்று.

மக நக்ஷத்திரத்தில் பௌர்ணமிய வருவதால் மாகி என்றாயிற்று.இதில் கி என்பது சி யாக மருவி மாசி ஆயிற்று.

பூர்வ பல்குனியை பூரம் என்றும் உத்தர பல்குனியை உத்திரம் என்கிறோம்.இந்த இரு நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் பல்குனி எனப்படும.அதில் ல எழுத்து மருவி பங்குனி ஆயிற்று.

இப்படி சம்ஸ்கிருத வார்த்தைகளே மருவி தமிழ் மாதப்பெயர்களாக அமைந்துள்ளன.

தமிழ் ஆண்டுகள் குறித்த அறிஞர்களின் கருத்து.

சுறவம் முதல் சிலை வரையிலான அய்யன் வள்ளுவன் ஆண்டே தமிழாண்டு.
தமிழ் ஆண்டுகள் குறித்த அறிஞர்களின் கருத்து.


பிரபவ முதல் அட்சயவரை உள்ள 60 ஆண்டுகள் நமது தமிழ் ஆண்டுகள்
இல்லை என்பது தமிழ் அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். இதில் வரும்
ஆண்டுகளின் பெயர் ஒன்றுகூட தமிழில்லை. 60 ஆண்டுகளும் பற்சக்கர
முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தை கணக்கிடுவதற்கு
உதவியாக இல்லை. இதற்கு வழங்கும் கதையோ அறிவுக்கும், அறிவியலுக்கும்,
காலத்திற்கும், கருத்துக்கும் பொருத்தமாக இல்லை.


இவ்வாறு தமிழருக்கு தமிழில் தொடராண்டு இல்லாத குறையை உணர்ந்த
தமிழ் அறிஞர்கள்,புலவர்கள் தமிழ்க்கடல் மறையடிகள் தலைமையில் கூடினர்.

1921-
ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடந்த கூட்டத்தில்
திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது என்றும், அதையே தமிழராண்டு
எனக்கொளவது என்றும், திருவள்ளுவர் காலம் கி.மு. 31 என்றும் முடிவு செய்தனர்.
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் சுறவம் [தை] இறுதி மாதம் சிலை

[
மார்கழி] என்றும், புத்தாண்டு துவக்கம் சுறவம்[தை] முதல் நாளே என்றும்
முடிவெடுத்தனர்.


ஆங்கில ஆண்டுடன் 31 -யைக் கூட்ட வருவது திருவள்ளுவர் ஆண்டு.

2002 + 31 = 2033.
தமிழக அரசு திருவள்ளுர் ஆண்டு முறையை 1971 முதல்
நாட்குறிப்பிலும் 1972 -ல் அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து
அலுவல்களிலும் பின்பற்றி வருகிறது.


தமிழ் திங்கள் (மாதம்)

```````````````````````````````
பன்னிரண்டு ஓரை[ராசி]களின் பெயர்களே பனனிரண்டு திங்களின் பெயர்களாக
வழங்கி வந்தன.


அவை:--

1.
சுறவம் (தை)

2.
கும்பம் (மாசி)

3.
மீனம் (பங்குனி)

4.
மேழம் (சித்திரை)

5.
விடை (வைகாசி)

6.
ஆடவை (ஆனி)

7.
கடகம் (ஆடி)

8.
மடங்கல் (ஆவணி)

9.
கன்னி (புரட்டாசி)

10.
துலாம் (ஐப்பசி)

11.
நளி (கார்த்திகை)

12.
சிலை (மார்கழி)



இவை இன்றும் பழந்தமிழ் சேர நாடான கேரள நாட்டில் வழக்கில் உள்ளது.


1. மே"ம் 2. ரி"பம் 3. மிதுனம் 4. கடகம் 5. சிம்மம் 6. கன்னி

7.
துலாம் 8. விருச்சிகம் 9. தனுசு 10. மகரம் 11. கும்பம் 12. மீனம்.


என்னும் பன்னிரண்டு ராசி(ஓரை)களில் கடகம்,கன்னி,துலாம்,கும்பம்,மீனம்
ஆகிய ஐந்தும் தமிழ்ப் பெயர்களே.


மே"ம், ரி" பம், மிதுனம், சிம்ம, விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய
ஏழு பெயர்களும் தமிழிலிருந்து வடமொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டன.


அவை முறையே மேழம், விடை, ஆடவை, மடங்கல், நளி, சிலை, சுறவம்
என்று தமிழில் பாவாணர் அவர்களால் மீட்கப்பட்டது


செவ்வாய், 21 செப்டம்பர், 2010

அயோத்தி: இறுதித் தீர்ப்பு

செப்டம்பர் 24




வரும் 24 ஆம் தேதி அன்று - அயோத்தி தொடர் பான - நீண்ட கால நிலுவையில் உள்ள வழக்கின் இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. பிரச்சினை செய்யப்பட்ட - அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பதற்கான தீர்ப்பு இது.



தீர்ப்பு யாருக்குச் சாதகமாக இருந்தாலும், கலவரம் வெடிக்கும் என்ற அச்சத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக விரிவாகச் செய்யப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.



ஏதோ அயோத்தியில் மட்டுமல்ல; இந்தியா முழுமையுமே அதன் பிரதிபலிப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் துணை இராணுவப் படை உள்பட களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். பல இடங்களிலும் கொடி அணிவகுப்பும் நடத்தப்பட்டுள்ளது.



தீர்ப்பு பாதகமாக இருந்தால் உச்சநீதிமன்றத் திற்குச் செல்லுவோம் என்று இப்பொழுதே லால்கிஷண் அத்வானி புலம்ப ஆரம்பித்துவிட்டார்.



நீதிமன்றம் கூறும் ஒரு தீர்ப்பு நாட்டில் கலவரங்களை உண்டாக்கும் என்ற ஒரு நிலை - நாடு நாகரிகத் துடன்தான் இருக்கிறது என்பதற்கு அடையாளமா?



மதம் என்றால் ஒழுக்கத்தை வளர்க்கக் கூடியது என்று சொல்லுவதெல்லாம் எவ்வளவு பெரிய மோசடி என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?



மதம் யானைகளுக்குப் பிடிக்கலாம்; ஆனால், மனிதனுக்குப் பிடிக்கலாமா? மதம் யாருக்குப் பிடித் தாலும் அது ஆபத்துதான் என்பது யதார்த்தமானது.



மத சம்பந்தமான இதுபோன்ற பிரச்சினையில் - ஏற்கெனவே ஒரு நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்திருந்தது. 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் எந்த நிலைப்பாடோ அது தொடரும் என்று ஒரு முடிவு எடுக் கப்பட்டு இருந்தது. அயோத்தி பிரச்சினையில் அது ஏன் கடைப்பிடிக்கப்படவில்லை என்பது புதிராக உள்ளது.



இந்த ஒரு பிரச்சினையோடு இது முடிந்துவிடக் கூடியதுதானா? வேறு சில இடங்களில் உள்ள வழி பாட்டு நிலையங்கள்பற்றியும் பிரச்சினை எழுப்பப்பட் டால், அதன் விளைவு என்ன என்பதைச் சிந்திக்க வேண்டாமா?



இன்றைக்கு இருக்கிற பெரும்பான்மைக் கோயில் கள் ஒரு காலகட்டத்தில் புத்த விகார்களாக இருந் திருக்கின்றன என்பதற்கு எவ்வளவோ ஆதாரங்கள் உண்டே!



திருப்பதி வெங்கடாசலபதி கோயிலே புத்த விகாராக இருந்ததுதான் என்று ஆய்வுகள் கூறு கின்றன. காஞ்சிபுரத்தில் உள்ள மீனாட்சி கோயில் தாராதேவி ஆலயம் என்பதற்கும், ஏகாம்பரநாதர் கோயில் புத்தர் கோயில் என்பதற்குமான ஆதாரங் களை மயிலை சீனி. வெங்கடசாமி பவுத்தமும் - தமிழும் என்ற நூலிலே குறிப்பிட்டுள்ளார்.



பல இந்துக் கோயில்களின் இடிபாடுகளில் புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அயோத்தியில் பிரச்சினை எழுப்பும் இந்துத்துவாவாதிகள், இந்தப் பிரச்சினைகளையும் திறந்த மனத்தோடு எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.



அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் - ராமன் பிறந்த இடம்தான். இதனை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது - இது எங்கள் நம்பிக்கைப் பிரச்சினை என்று இந்துத்துவாவாதிகள் தொடக்க முதலே கூறிக் கொண்டுதான் வந்திருக்கின்றனர்.



பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் இஸ்லாமியர் களுக்குத்தான் சொந்தம் என்று நீதிமன்றம் கூறினால், அதனை இந்துத்துவாவாதிகள் காவிக் கூட்டம் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இதற்கான முன்னோட்டமாகத்தான் தொடர்ந்து அவர்கள் கூறிக்கொண்டு வந்ததாகும்.



நீதிபதி லிபரான் ஆணையம் வெளியிட்ட தகவல் களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையே! பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பேயியையும் சம்பந்தப்படுத்தி அந்த ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், பூமிக்கும், ஆகாயத்துக்குமாகத் தாவிக் குதிக்கவில்லையா? நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் முடக்க வில்லையா?



மற்ற மற்ற பிரச்சினைகளில் எல்லாம் நீதிமன்ற கருத்துகளை எடுத்துக்கூறி வக்காலத்து வாங்கிப் பேசும் சோ ராமசாமி போன்றவர்கள், லிபரான் ஆணையத்தின் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல்தானே எழுதுகோலைப் பிடித்தனர்.



இந்தியாவில் இந்து ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்று கூக்குரல் போடுபவர்கள், இசு ரேலுடன் சேர்ந்து இந்து ராஜ்ஜியத்தை வெளியில் இருந்து அறிவிக்கத் திட்டம் போட்டவர்கள், நீதிமன்ற தீர்ப்புகளை எல்லாம் மதிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.



தீர்ப்பு அவர்களுக்குப் பாதகமாக இருந்து சங் பரிவார்க் கும்பல் கலவரங்களில் ஈடுபட்டால், அதோடு அந்த அமைப்புகளுக்கு முடிவுரை எழுதுவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கவேண்டும் என்பதே நாட்டின் நலம் விரும்பிகளின் எதிர்பார்ப்பாகும். நடுவண் அரசு இதில் தெளிவாக இருந்தாகவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
                                   http://www.viduthalai.in/

புதன், 15 செப்டம்பர், 2010

அனுமதியற்ற கோயில்களை அகற்றுக!

அகற்றாத மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் வரவேண்டும்!

உச்சநீதிமன்றம் கண்டிப்பு

தமிழ்நாட்டில் 77,450 கோயில்கள் அனுமதி பெறாதவை

 
புதுடில்லி, செப். 15- பொது இடங்களில் அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருக்கும் வழிபாட்டு இடங்களை அகற்றாமலோ, வேறு இடங்களுக்கு மாற்றா மலோ இருக்கும் மாநி லங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் வந்து பதில் கூறவேண் டும் என்று உச்சநீதி மன்றம் கண்டிப்பான ஓர் ஆணையை செப் டம்பர் 14 இல் பிறப் பித்தது.

தங்களுடைய பதிலை அளிப்பதற்கு உச்சநீதி மன்ற அமர்வு (பெஞ்ச்), இரண்டு வார கால அவ காசம் அளித்துள்ளது. பலமுறை இதைப்பற்றிய விசாரிப்பு நடந்தும், பல மாநிலங்கள், இதைப் பற்றிய பிரமாணப் பத் திரமோ, நடவடிக்கை எடுத்துள்ளதுபற்றிய தகவலோ தரவில்லை என்பது குறித்து உச்ச நீதிமன்றம் தன் அதிருப் தியைத் தெரிவித்தது.

தமிழ்நாட்டின்தான் அதிகம்

தமிழ்நாட்டில்தான் அனுமதியற்ற வழி பாட்டு இடங்களின் எண்ணிக்கை மிக அதிக மாகும். 77,450 கோயில் கள் தமிழ்நாட்டிலும், 58,253 ராஜஸ்தானிலும், 15,000 குஜராத்திலும் அனுமதி பெறாமல் பொது இடங்களில் கட் டப்பட்டுள்ளன.

அருணாசலப் பிர தேசத்தில் பொது இடத் தில் ஒரு வழிபாட்டுத் தலம்கூட இல்லை என்று அம்மாநில அரசு வழக் கறிஞர் குறிப்பிட்டதைக் கேட்டு, அது மிகவும் நாகரிகமான மாநிலம் என்ற புகழ்ச்சியை உச்ச நீதிமன்றத்திடம் பெற்றது.

அனுமதி பெறாத கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருத்துவா ரங்கள் மற்றும் பிற வழி பாட்டு இடங்களைப் பொது இடங்களில் இருந்தும், பாதைகளில் இருந்தும் அகற்றுமாறும், அவை போக்குவரத் துக்கு இடைஞ்சல் என் றும், நெரிசலை உண் டாக்குகின்றன என்றும், கூட்ட நெருக்கடிக்குக் காரணமாக இருக்கின் றன என்றும் உச்சநீதி மன்றம் கூறியிருந்தது.

அனுமதி பெறாதவை

உச்சநீதிமன்றத்தின் பல விசாரணைகள் இது குறித்து நடந்தன. அப் பொழுது மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள், அனுமதியற்ற வழிபாட்டு இடங்களை அகற்றி விடுவதாகவும், அவற்றால் உண்டாகும் அசவுகரியங்களைத் தாங்களும் உணர்வதாக வும் தெரிவித்திருந்தன. ஆனால், சொன்னதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எதுவும் நடைபெற வில்லை. 2009 ஆம் ஆண் டில், மத்திய, மாநில அரசுகள், அனுமதி பெறாத கோயில்களைத், தெருக்கள், சாலைகள், பூங்காக்கள் முதலிய இடங் களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கக் கட்டளையிட்டது.

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

ஆரியம் - மதம் - கடவுளுக்கு எதிராக

திராவிட நாடு இதழில் (16ச்.1.1944) மூட நம்பிக்கை, கடவுள், மதம், ஆரியத்திற்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள் வருமாறு:
1) நமது நாட்டில் சைவ சமயத்திற்கு முன்னால் ஏதாவது சமயம் இருந்ததா?

2) அது எது?

3) சைவ சமயம் என்பது எப்போது உண்டாயிற்று?

4) அதற்கு முதல் கர்த்தா அல்லது சமயாச்சாரி என்பவர் யாவர்?

5) சைவ சமயத்திற்கு மற்ற சமயத்தில் இல்லாத தனிக் கொள்கைகள் என்ன?

6) அதற்கு ஆதாரம் யாது?

7) சைவம் என்பது சிவன் என்னும் ஒரு உருவமுள்ள கடவுளை, வழிபடு கட வுளாகக் கொண்டதா?

8) அல்லது தனித் தெய்வமில்லாமல் ஏதாவது கொள்கைகளை மாத்திரமோ, அல்லது குணத்தை மாத்திரமோ அடிப் படையாகக் கொண்டதா?

9) சிவன் என்பது ஒரு கடவுள் பெயரா?

10) ஒரு தன்மையா?

11) ஒரு குணமா?

12) சிவனுக்கு உருவம் சொல்லப்படு கிறதே- அது ஏன்?

13) அதற்குப் பெண்டு பிள்ளைகளும் இருப்பதாக காணப்படுகிறதே, ஏன்?

14) சைவ சமயம் சம்பந்தமான பல கடவுள்களுக்கு உள்ள ஆயிரக்கணக் கான பெயர்கள் வடமொழியில் இருப் பானேன்?

15) ஆயிரக்கணக்கான கடவுள் களுக்கும் அவர்களது பெண்டு பிள்ளை களுக்கும் வேறு வேறு பெயர்கள் ஏன்?

16) சைவத்திற்கும், சமணக் கொள் கைகளுக்கும், பவுத்த கொள்கை களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

17) ஆரிய வேதத்தையும், ஜீவபலி வேள்வியையும் சைவம் ஒப்புக் கொள் ளுகின்றதா? மறுக்கின்றதா?

18) சைவ சமயாச்சாரியர்கள் என் பவர்கள் ஆரிய வேதத்தையும், அதில் காணும் வேள்விகளையும் ஒப்புக் கொள்கின்றனரா? மறுக்கின்றனரா?

19) சமணர்கள் வேத வேள்வியை நிந் தனை செய்தார்கள் என்றால் அது எந்த வேதத்தையும், வேள்வியையும்?

20) சைவ சமயத்திற்குள்ள சித்தாந் தமும், ஆகமமும் வடமொழியா? தென் மொழியா?

21) சைவ சமயத்தையே சேர்ந்த சைவக் கடவுள்கள் இருக்கும் தனித்தனி ஊர்களுக்கு தனித்தனி பெருமை ஏன்?

22) சமயாச்சாரிகள் என்போர்களால் பாடப்பட்ட ஊர்களுக்கும், பாடப்பட்ட கடவுள்களுக்கும் மாத்திரம் அதிக மதிப்பு ஏன்?

23) சைவ சமயாச்சாரியார்களும், சைவ சமய பக்தர்களும், பவுத்தர்களையும், சமணர்களையும் துன்புறுத்தியதேன்?

24) துன்புறுத்தவில்லையானால் தேவாரம் முதலியவைகளில் அவர்களை கண்டபடி இழித்துக் கூறி வைத்திருப் பதேன்?

25) வடமொழிக் கதைகளையும் வட மொழி புராணங்களையும் தள்ளிவிட்டால் சைவர்களுக்கு ஏதாவது கடவுள் உண்டா?

26) சைவத்திற்கு ஏகக் கடவுள் வணக்கமா? பல கடவுள் வணக்கமா?

27) எத்தனைக் கடவுள்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன?

28) இதோடு தீர்ந்ததா? இனியும் உண்டாகுமா?

29) சைவ சமயத்திற்கு கோயில் கொள்கை உண்டா?

30) விக்ரக ஆராதனை உண்டா?

31) வேறு ஒருவன் அர்ச்சகனாக இருந்துதான் கடவுளை வணங்க வேண்டுமா?

32) ஆகிய இவைகளுக்கு ஆதாரம் ஏது?

33) சைவர்களில் ஒவ்வொருவரும் அவரவர் வணங்க வேண்டிய கடவுளை நேரில் பூசனை புரிய அவரவருக்கு உரிமையுண்டா?

34) சைவத்தில் ஜாதி வித்தியாசம் உண்டா?

35) சைவக் கோயில்களில் இப் போது ஜாதி வித்தியாசம் பாராட்டப்படு கின்றதா?

36) அது சைவத்திற்கு முரணானது அல்லவா?

37) முரணானால் அம்முரணுக்கு இதுவரை சைவர்கள் ஏதாவது பரிகாரம் செய்தார்களா?

38) கடவுளை வணங்க கற்பூரம் கொளுத்தி வைத்து வணங்க வேண்டும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? எந்த ஆகமத்தில் சொல்லுகிறது?

39) ஏதாவது ஓர் ஆகமத்தில் சொல் லப்பட்டால் அது ஆரியர்களின் ஆகமமா? தமிழர்கள் ஆகமமா?

40) கற்பூரம் கொளுத்தும் வழக்கம் எது முதல் அனுஷ்டிக்கப்பட்டு வரு கிறது?

41) பிள்ளையார் என்ற ஒரு கட வுளுக்குச் சைவத்தில் இடம் இருக் கின்றதா?

42) கந்தபுராணத்தைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றனரா?

43) ஒப்புக் கொள்ளுவதானால் அது சைவத்தில் பொருந்தியதுதானா?

44) சைவர்கள் சிவரகசியத்தையும் சிவ மகாபுராணத்தையும், சிவபராக்கிர மத்தையும் ஒப்புக் கொள்ளுகின்றார் களா?

45) நால்வர்கள் பிரம்மாவையும், விஷ்ணுவையும் ஒப்புக் கொள்ளுகின் றார்களா?

46) அவைத் தனித்தனி கடவுள் களா?

47) நால்வர்கள் விஷ்ணுவைத் தாழ்த்திப் பாடி இருந்தால் அது மதத் துவேஷம், அல்லவா?

48) மனு ஸ்மிருதியையும், பராசர ஸ்மிருதியையும் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

49) சமணர்கள் கழுவேற்றப்பட்ட தைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின் றார்களா? கோயில்களில் இன்னமும் திருவிளையாடல் புராண கதை உற்சவங் கள் நடக்கின்றதை மறுக்கின்றார்களா?

50) திருநீறு எதற்காகப் பூசுவது?

51) இலிங்கத்திற்கும், ஆவுடையா ருக்கும் சொல்லும் கதையை ஒப்புக் கொள்ளுகின்றார்களா, இல்லையா?

52) ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்தப் பழக்கம் உள்ள வடமொழி ஆதா ரத்திற்கு என்ன பதில் சொல்லக் கூடும்?

53) இலிங்கம் எனும் வார்த்தை என்ன பாஷை? அதற்கு என்ன அர்த்தம்? எந்த ஆதாரப்படி?

54) கைலயங்கிரி எது? சுப்பிரமணி யன் எது? கந்தன் எது? குமரன் எது?

55) மலையரசன் மகனென்றால் என்ன?

56) இப்பொழுது இதுவரை நடந்து வந்த கோயில் முறை, பூசை முறை, உற்சவ முறை முதலியவைகளால் ஏற்பட்ட நன்மைகள் என்ன?

57) இவை இப்படியே நடக்க வேண் டியது தானா?

58) இவைகளின் பேரால் பல லட்சம் ரூபாய்கள் செலவாகின்றதே நியாயம் தானா?

59) அதை நிறுத்தி அச்செலவையும், காலத்தையும் வேறு வழியில் திருப்ப லாமா? அல்லது இப்படியே இருக்க வேண்டுமா?

60) சைவர்கள் மேல்லோகத்தை ஒப்புக் கொண்டார்களா?

61) மறுபிறப்பை ஒப்புக் கொள்ளு கின்றார்களா?

62) திதிகளை ஒப்புக் கொள்ளுகின் றார்களா?

63) பிராமணர்களை ஒப்புக்கொள்ளு கின்றார்களா?

64) சமயாச்சாரிகளின் அற்புதங் களை எல்லாம் அப்படியே நடந்ததாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

65) மற்றும் சைவப் புராணங்களில் உள்ள எல்லா அற்புதங்களையும் நடந்த தாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

66) ஒவ்வொரு கோயிலுக்கும், ஒவ் வொரு சாமிக்கும் ஏற்பட்ட ஸ்தலமூர்த்தி தீர்த்த புராணங்களை உண்மை என் பதற்காக ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

67) சைவர்களுக்குச் சரியான முறை எது?

68) சைவர்களுக்கு அல்லது சைவ சாமிகளுக்குத் தேவதாசி முறைகள் உண்டா?

69) வருணாசிரமம் உண்டா?

70) உண்டென்றால் ஆதாரம் எது?

71) இல்லை என்றால் ஆதாரம் எது?

72) இப்பொழுது அமலில் இருப் பதற்குக் காரணம் என்ன?

73) சைவ மடங்கள் எதற்கு?

74) அவைகள் இதுவரைச் சாதித்த தென்ன?

75) அம்மடங்கள் இனியும் அப்படியே இருக்க வேண்டியதுதானா?

76) இம்மடங்களைத் திருத்த இதுவரை எந்த சைவராவது முயற்சி செய்தது உண்டா?

77) இப்பொழுதுள்ள சைவர்களில் சைவ சமயத்தைப் பற்றி அபிப்ராயம் சொல்ல நிபுணர் யார்?

78) அருகதை உடையவர் யார்?

79) பாரதம், இராமாயணம், பாகவதம் முதலிய வைணவப் புராணங்களில் வரும் சிவனைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளு கின்றார்களா?

80) வடமொழியும், அம்மொழியில் உள்ள நூல்களும் இன்றி சைவத்தை விளக்க முடியுமா?



-

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

இந்துமுன்னணியே, ஓடாதே,நில்!

                                                                                                                 மின்சாரம்


  • திண்டுக்கல்லில் கலவரத்தைத் தூண்டும் தி.க.வினர்மீது வழக்கு



  • குன்னூரில் விநாயகன் பற்றி துண்டு அறிக்கைககள் கொடுத்த மாவட்ட தி.க., தலைவர்மீது வழக்கு



  • ராஜபாளையத்தில் துண்டறிக்கை கொடுத்த தி.க.வினர் விசாரிக்கப்படுகின்றனர்.



                   என்கிற சேதிகள் நாளேடுகளில் வெளி வந்துள்ளன.



ஆமாம், திராவிடர் கழகத் தோழர்கள் செய்த குற்றம் என்ன? விநாயகன்பற்றி விழிப்புணர்வூட்டும் துண்டு அறிக்கைகளை பொது மக்களிடம் கொடுத்தார்களாம்.



திராவிடர் கழகத்தினர்களுக்கு பகுத் தறிவுக் கருத்துக்களைப் பரப்பவும், மூடநம்பிக்கை இருளை விரட்டியடிக்கவும் உரிமை இல்லையா?



பக்தியை மட்டுமே பரப்பி மக்களின் புத்தியை நாசப்படுத்த வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமா?



பக்தியின் பெயரால் புத்தியைக் கெடுத்துக் கொண்டு, பொருளையும் பொழுதையும் நாசப்படுத்திக் கொண்டுதான் இருக்க வேண்டுமா?



அவர்களைச் சிந்திக்க வைக்கும் சீரிய வழியில் பகுத்தறிவுப் பணிகளை மேற் கொள்ளக் கூடாதா?



இந்தப் பணியை திராவிடர் கழகம் இன்று நேற்றா செய்து வருகிறது  75 ஆண்டுகளுக்கு மேலாகச் செய்து வருகிறதே.



அப்பொழுதெல்லாம் இல்லாத சட்டம் இப்பொழுது மட்டும் ஆகாயத்திலிருந்து பொத்தென்று குதித்து விட்டதா? விநாயகன் கனவில் வந்து காவி உடை இந்து முன்னணியினர் கூறுவதை காக்கிச் சட்டை காவல் துறையினர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினாரா?



துண்டு அறிக்கைகளில் கூறப்பட்டவை உண்மையற்றவை என்று விவாதிக்க முன் வரட்டுமே!. தி.க.வினர் வெளியிட்ட துண்டு அறிக்கையில் இந்தந்தத் தவறுகள் இருக் கின்றன என்று கூறி மறுத்து அறிக்கை களை வெளியிடட்டுமே!



அதுதானே அறிவுடைமை? அறிவு வேலை செய்யாத இடத்தில் ஆத்திரம்தான் அலைமோதும். அந்த நிலையில்தான் இந்து முன்னணியினர் இருக்கின்றனர். இப்படிப் பட்ட காவிகளின் புகாரை ஏற்றுக் கொண்டு, காக்கிச் சட்டைகள் கருப்புச் சட்டைக் காரர்கள் மீது வழக்குத் தொடுப்பது என்றால், இது எவ்வளவு பெரிய பொறுப்பற்ற செயல்?



சேலத்தில் ராமனை செருப்பாலடித்த வழக்கே ஒன்றுமில்லாமல் போய்விட்டது. அந்த வழக்கினை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதே! ராமன், சீதை, லட்சுமணன் உருவங்களைக் கொளுத்தி இராவண லீலாவை அன்னை மணியம்மையார் நடத்திக் காட்டினார்களே (25.12.1974). விநாயகர் உடைப்புப் போராட்டத்தையே தந்தை பெரியார் நடத்தினாரே _ இவ்வளவுக்கும் அப்போது ஆச்சாரியார் முதல் அமைச்சர்; ஆண்டவனைக் காப்பாற்ற வேண்டும் என்று அவாளுக்கு இல்லாத அக்கறை, ராஜாவை விஞ்சும் விசுவாசிகளாக இருக்கும் சில காவல்துறை அதிகாரிகளுக்கு வந்திருக்கிறது போலும்.



விநாயகர்பற்றி அவன் பிறப்புப் பற்றி விநாயகர் புராணம் கூறுகிறது; கந்தபுராணம் பேசுகிறது -_ அபிதான சிந்தாமணி என்னும் புராணக் களஞ்சியம் புட்டுப் புட்டு வைக்கிறது.



தேவாரத்தில் திருஞான சம்பந்தனே பாடியிருக்கிறான்: சிவன் ஆண் யானையாகவும், பார்வதி பெண் யானையாகவும் மருவிப் புணர்ந்து பிள்ளையாரை பெற்று எடுத்தார்கள் என்பது தேவாரம் கூறும் ஆதாரம் பிடியதன் உருவுமை கொள மிகு கரியது



வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்




கடிகண பதிவர அருளினன் மிகு கொடை




வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே



நாகை மாவட்டம் கீழ்வேளூர் -_ திருத்துறைபூண்டி மார்க்கத்தில் வலிவலம் எனும் ஊரில் கோயில் கொண்ட சிவனைப் பற்றிதான் திருஞான சம்பந்தன் இப்படிப் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் அந்த வலிவலம் கோயிலிலேயே கூட பொறிக்கப்பட்டுள்ளதே!



இந்து முன்னணியினருக்கு எரிச்சல் வந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? விநாயகன் ஆபாசமாகப் பிறந்தான் என்று கூறும் தேவாரத்தை அல்லவா தீயில் போட்டுப் பொசுக்க வேண்டும்!



பார்வதியின் உடல் அழுக்கி-லிருந்து பிள்ளையார் பிடித்து வைக்கப்பட்டவர் என்று சிவபுராணத்-திலும், கந்தபுராணத்திலும் கூறப்பட்-டுள்ளதே - _ இந்தப் புராணங்-களையல்லவா பூமியில் போட்டுப் புதைப்பதற்கு முன் வர வேண்டும்.







சூரபத்மனை எதிர்த்த போரில் அண்ணன் சுப்பிரமணியன் தோற்ற நிலையில், தம்பியாகிய விநாயகன் களத்தில் குதித்தான் என்றும், அசுரர்களை அழிக்க அழிக்க வீரர்கள் புற்றீசலாக வந்து கொண்டே-யிருந்தனர் என்றும், வல்லபை என்ற பெண்ணின் குறியிலிருந்து அவர்கள் உற்பத்தியாகி வந்தனர் என்றும், விநாயகன் தன் துதிக்கையால் வல்ல-பையின் பெண்குறியை அடைத்தான் என்றும், அதனால்தான் விநாயகனுக்கு வல்லபை கணபதி என்று பெயர் வந்தது என்றும் கந்தபுராணம் கதைக்கிறதே -_ மானம், வெட்கம், ரோஷம் இருந்தால் இந்த இந்து முன்னணிகள் கந்தபுராணத்தைக் கொளுத்தும் போராட்டத்தையல்லவா நடத்த வேண்டும்?



விநாயகர்பற்றிய வரலாற்றினை அறிவுடையோர் அருவருக்கத் தக்கதான ஒரு கதை வடிவிற் கட்டிவிட்டார்கள் என்று சைவ மெய்யன்பராகிய மறைமலை அடி-களார் அவர்கள் எழுதியிருக்கிறாரே! (சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ள கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா என்னும் நூலில் விநாயகனின் ஆபாசம் குறித்து வேதனையோடு எழுதியுள்ளாரே!)



மறைமலை அடிகள் என்ன கருஞ்சட்டைக்காரரா?



இந்தக் கணபதி ஓர் இறக்குமதிச் சரக்குதானே! கி.பி.641-_42இல் பல்லவ மன்னனின் சேனாதிபதியான பரஞ்-சோதி படையெடுத்து புலிகேசியைத் தோற்கடித்து வாதாபியை வென்று, அதன் அறிகுறியாக அங்கு இருந்த இந்த விநாயகனைக் கொண்டு வந்து, திருச்செங்காட்டாங்குடி என்னும் ஊரில் கோயில் கட்டி வைத்தான் என்று தமிழ் அறிஞர் பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் எம்.ஏ; பி.எல்., எம்.ஓ.எல் அவர்கள் எழுதியுள்ளாரே_



(பிறந்தது எப்படியோ? _ பாரி நிலையத்தார். வெளியீடு -_ 1951) மறுப்பு உண்டா?







சிவசேனா வீரர் பால்தாக்கரேயை விட வா இவர்கள் விநாயகர்களின் பக்தர்கள்?



1995இல் ஒரு விநாயக சதுர்த்தி யின்போது அவரின் மனைவி விநாயகப் பூஜையில் மூழ்கி இருந்த நிலையிலேயே மரணம் அடைந்தார்; எவ்வளவோ முயற்சித்தும் மனை-வியைக் காப்பாற்ற முடியவில்லை. சீ... என்ன கடவுள் என்ன விநாயகன்? எல்லாம் பொய்! பொய்!! என்று கூறி வீட்டில் இருந்த விநாயகன் உள்பட சாமிப் படங்-களையெல்லாம் தூக்கி வெளியில் எறிந்தாரே (தி வீக் 19.11.1993), அவர் என்ன நாத்திகரா?



கடவுளை அவமானப்படுத்தி விட்டனர் தி.க.வினர் என்று காவல்நிலையத்தில் படைஎடுக்கும் இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்-கிறார்கள்? விநாயகர் ஊர்வலம் நடத்தி அந்தச் சிலைகளை நீர் நிலைகளில் தள்ளி, ஏறி மிதித்து, அடி அடி என்று அடித்து மூழ்கடிக்கிறார்களே _ அது மட்டும் விநாயகன் அவமதிப்பு இல்லையா?



இந்து முன்னணியே, ஓடாதே நில் ஒழுங்காக நின்று பதில் சொல்!



திராவிடர் கழகம் வெளி-யிட்டுள்ள துண்டறிக்கையில் வல்ல-பை-யின் குறியில் விநாயகனின் தும்பிக்கை இருப்பது போன்ற படம் வெளியாகியுள்ளது. இது ஒன்றும் திராவிடர் கழகத்தரின் கற்பனையோ, வக்கிரப் புத்தியோ அல்ல.



எத்தனை எத்தனைக் கோயில் தேர்களில் இந்த உருவம் வடிக்கப்-பட்டுள்ளது. எத்தனை எத்தனைக் கோபுரங்களில் இந்த வல்லபை கணபதி காட்சிப் படுத்தப்பட்-டுள்ளார்!



வல்லபை கணபதி கோயிலே தருமபுரிக்குப் பக்கத்தில் இருக்கிறதே! ஆத்திரம் வந்தால் இந்து முன்னணி ஆத்திகப் பிரமுகர்கள் சம்மட்டியை எடுத்துக் கொண்டு போய் வல்லபை கணபதிக் கோயிலை இடித்துத் தள்ள வேண்டியதுதானே! தேர்-களைக் கொளுத்த வேண்டியது-தானே! மானமுள்ள நம் தமிழச்சிகள் எந்த வகையில் எது கொண்டு வல்லபை கணபதியைச் சாத்த வேண்-டுமோ அது கொண்டு சாத்த வேண்-டி-யதுதானே!



மூலத்தை விட்டு விட்டு மூளை கொண்டு ஆராய்பவனைக் காய்ந்-தால், காய்கிறவனுக்குக் கடுகளவும் புத்தியில்லை என்றுதான் பொருள்.



ஆத்திரப்படாமல், அருமைத் தோழா, ஒரே ஒரு நொடி -_ ஆம் ஒரே ஒரு நொடி _ இந்த ஆபாசக் கடவுள்களின் பிறப்பு _ வளர்ப்பு செய்திகளைச் சிந்தித்துப் பாருங்கள்.



கண்டிப்பாகச் சீற்றம் வரும் _ இந்துமதக் கடவுள்கள்மீதும், அவற்றைக் கற்பித்த காட்டு விலங் காண்டிகள்மீதும். ஆறுவது சினம் - _ அவ்வை வாக்கு!

                                                                                                                       www.viduthalai.com                                   

நமது கடமை

                                                                                                                                       பெரியார்

உலக முழுமையும், அந்தந்த நாடுகளில் அந்தக் கட்சிகள் அரசியலைப் பிடித்து அந்தந்த தேசவாசி களுக்கு நன்மை புரிகின்றோமென்று சொல்லிக் கொண்டு, பற்பல துவாராக்களில் உழைத்து வருகின்றன. நமது ஆங்கில நாட்டின் நாஷனலிட் கட்சி, அதாவது தேசிய கட்சி என்று வழங்கும் ஒருசார்பார், தோழர் ராம்சேமக்டொனால்டின் தலைமையின்கீழ் ஆங்கில நாட்டு அரசியலை நடத்தி வருகின்றார்கள். இவர்களுடைய முக்கியப் போக்கு என்னவெனில், இருக்கும் சமுகத்திட்டத்தை வைத்துக் கொண்டு அங்கோர் சீர்திருத்தம், இங்கோர் சீர்திருத்தத்தைக் காட்டி, ஆண்டு வருவதாகும். பிரான் நாட்டிலும், பழைய சேம்பர் ஆவ் டிப்புடி என்ற பழைய பார்லிமெண்டை வைத்துக் கொண்டு, முதலாளி, சிறுமுதலாளி இயக்கங்களைப் பாதுகாத்து வருகின்றனர். ஜெர்மனியில் ஏகாதிபத்திய கெய்சர் ஆட்சியை உடைத்தும், மழைநின்றும் தூவானம் நிற்க வில்லை என்பது போல் ஜெர்மனியைப் பிடித்த சனியன் ஒழியவில்லை. அவ்வுலகில், பெரும் பான்மையோர் தொழிலாளர், விவசாயிகளாக விருக்கின்றனர், ஏகாதிபத்திய அரசில் பட்டு வந்த கஷ்டங்களுக்கு விமோசனங்களை அத்தேசவாசி கள் தற்போது பாசிடின் கையில் அகப்பட்டுக் கொண்டு வருந்துகின்றனர். அமெரிக்க நாடு டிமேக்கிராட்டிக் களென்றும், ரிப்பப்ளிக்கர்களென் றும், இவ்விரு கட்சிகளின் நடுவில் தவித்தியங் குங்காலை, ரூவெல்ட் என்னும் பெரியோர் சோஷலிசத்தை முதலாளித் திட்டத்துக்குள் நுழைத்து பார்க்கலாமாவென்று பரிட்சித்து வருகின்றார். மற்ற அமெரிக்க அய்ரோப்பிய சிற்றரரசுகளிலும் மேல் போன்ற பெரிய அரசுகள் தட்டுத் தடுமாறிக் கொண்டு வருவதைப்போல், தடுமாறிக்கொண்டிருக்கின்றன. இந்த ராஜ்யங்களில் ஒன்றிலேனும், சாந்தமாகிலும், சமாதானமாகிலும், ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அய்ரோப்பிய, அமெரிக்க உலகமெங்கும் குழப்பங் களே அதிகரிக்கின்றன; கஷ்டங்களும் அதிகரிக் கின்றன.

அய்ரோப்பா, அமெரிக்க உலகம் நிலை குலைந்து வருந்தி வருங்காலை, ஏனைய நாடு களில் அதனினும் பதின்மடங்கு கேடாயிருப்பதைக் காணலாம். ஜனப்பெருக்கிலும், தரித்திரத்திலும் உயர்ந்த நாடு சீன தேசமெனலாம். அதில் 40 கோடி மக்கள் இரண்டு, மூன்று தளகர்த்தராட்சியில் கட்டுண்டு கலகங்களிலேயே மூழ்கிக் கிடக்கின்ற னர். அந்நிய அரசுகளால் அந்நாட்டு கட்சிகள் தூண்டப்பட்டு, முன்னுக்குப் போக வொட்டாமல் தடுக்கப்பட்டு வருகின்றனர். அந்நாட்டு தேசியக் கட்சியார் மாலுமியற்ற கப்பல்போல் தட்டுத் தடுமாறி நிற்கின்றனர். இன்னது வேண்டுமென்ற துணிவும் அற்று, நாற்பது கோடி மக்கள் பற்றில்லாத வாழ்க்கையில் மிதந்து வருகின்றனர். விளையும் நிலங்கள் தேசமுழுவதும் நிறைந்திருந்தும், உலக நதிகளுக்கெல்லாம் நதிகள் நிலங்களை நீர்ப்பாய்ச்சச் செய்ய வந்தும் அடுத்தடுத்து பஞ்சங்களால் கோடிக் கணக்கான மக்கள் பசியால் சாகின்றனர். இந்தப் பயங்கரமான துர்பாக்கியத்தில் சீனர் இருந்தும், முதலாளி ஆதிக்கத்தில் கட்டுண்ட ஜப்பான் தேசம், அதன் உள்நாட்டுக் குழப்பத்தையும் வறுமையை யும் கவனியாது, சீன தேசத்தைப் படையெடுத்து, சென்னை ராஜதானிக்கொப்பான நீர்வளம், நிலவளம் பொருந்திய மஞ்சூரிய நாட்டைப் பிடித்துக் கொண்டது. தன்னுடைய நாட்டில் உண்டாகியி ருக்கும் அதிருப்திக்குப் பரிகாரம் ஒன்றும் தேடாது அயல்நாடுகளைப் பிடிக்கும் வண்ணம் தனது போர்த்தளத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலக சமாதானத்தை உருவமாக எடுத்திருக்கும் சோலை நிலங்களை, அபகரிக்கவும், ஜப்பான் பார்க் இத்தியாதி குழப்பத்தில் உலக பேரரசுகளும் சிற்றரசுகளும் தடுமாறிக் கொண்டிருக்க, நமது இந்திய தேசத்தின் நிலைமை என்ன? இந்த வேதமோதும் நாடாகிலும் சுகப்பட்டு வாழ்கின்றதா?

சுயராஜ்யம் யாருக்கு என்ற புத்தகத்தின் முதல் பாகத்தை வாசித்தவர்கள், நமது இந்திய நாட்டின் தற்கால நிலைமையை எளிதில் உணர்ந் திருக்கலாம். பகிர் முகத்தில் விசேஷமொன்றுமில்லா மையாகத் தோன்றினபோதிலும் அந்த முகத்தில் அதிருப்தியே நிறைந்துள்ளது. ரயில்கள் ஓடுகின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில்களுக்கும், குளங்களுக்கும் யாத்திரை செல்கின்றனர். தேரும், திருவிழாக்களும் கோவில்களில் குறையவில்லை. சர்க்கார் வரி வசூலாகி வருகின்றது. சேனை, சிப்பந்தி களும், போலீசும், தத்தம் காபந்துகளைச் செய்து வருகின்றனர். இதன் மத்தியில் மக்கள் வாழ்க்கை பரிதாபகரமாக இருந்து வருவது பார்வையிலேயே தோன்றும். இந்த உள்நாட்டு மக்களின் தீமையைப் பரிகரிக்க இதுவரை ஆண்டுவந்த அரசியல் திட்டங் களுக்குப் பதிலாக புதியதோர் திட்டம் வருகையை யாவரும் எதிர்பார்க்கின்றார்கள்.

இந்தத் திட்டமாவதென்ன? அரசியல் மத்திய சபையில், 100-க்கு 200 பேர் அங்கத்தினர் நிய மிக்கப்படப்போகின்றனர். இவர்களை நியமிக்க முப்பது லட்சம் வாக்காளர்கட்குப் பதில், மூன்று கோடி வாக்காளர்கள் வரப்போகின்றார்கள். நிலம், நீர், வீடுவாசல் இல்லாத இருபது கோடி மக்களுக்கு ஓட்டுரிமை இல்லை. மகம்மதியர்களுக்குச் சில தனிப்பிரதிநிதிகளும். இந்துக்களுக்குச் சில தனிப் பிரதிநிதிகளும் சிற்சில மாகாணங்களில் கொடுக்கப் படுகின்றன. முதலாளி வகுப்பைச் சேர்ந்த நிலச் சுவான்தார்களும், வர்த்தகர்களும் சட்டசபைகளில் நிறைந்திருக்கப் போகின்றார்கள். தனிச் சொத் துரிமை, மதப் பாதுகாப்பு, ஜாதிக்காதரவு புதிய திட்டத் திலும் காக்கப்படப் போகின்றன. இனி தேச மக் களுக்கு என்ன வேண்டும்? இந்தப் பாதுகாப்புக ளோடு அய்ந்நூற்றம்பத்தாறு சிற்றரசுகளும் ஏகா திபத்திய ஆட்சியில் கலந்து கொள்ள போகின்றனர். இவர்களுடைய நவரத்தினங்களிழைத்த தலைப் பாகைகளும், வயிர முடிகளும், வயிரத் தோடாக் களும், நவரத்தினமிழைத்த கண்ட சரங்களும், காதுகளில் ஜொலிக்கும் வயிரக் கடுக்கன்களும், மகத்தான சட்டசபைகளில் ஜொலிக்கப் போகின்றன. இந்தக் காட்சியைக் காணும் முப்பது கோடி மக்களின் பசி ஆறிவிடுமன்றோ? தீரா வியாதிகளும் தீர்ந்து விடுமன்றோ? நாடும், நகரமும் தேசம் முழுமையும் பாலும், தேனும், தினைமாவும் நிறைந்தோடுமன்றோ? இந்த முக்கிய அம்சங்களை எதிர்த்து முட்டுக்கட்டை போடவோ, ஒத்துழைக் கவோ, காங்கிர சுயராஜ்யக்கட்சி மறு ஜென்ம மெடுத்துள்ளது கெல்கர்கள், தங்களது சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துகின்றனர். மூஞ்சேக்களும் இந்து மகா சபைகளை வலுப்படுத்தப் பார்க்கின் றார்கள். அரசாங்கமும் இந்தக் கட்சிகளை எதிர்பார்க்கப் போகின்றது. இதன் மத்தியில் சோஷியலிடுகள் வேலை என்ன?

முக்கியமாக நமது பல்வேறுபட்ட, பல பெயர் களால் வழங்கப்பட்ட சங்கங்களை ஒன்றுபடுத்த வேண்டும். பலவிதக் கொள்கைகளையும் அபிப் பிராயங்களையும், ஒரே முகமாக மாற்றி, தேசத் திலுள்ள மக்களுக்கு உணவும், நிலமும் உலக சமாதானமும் அடைய வேண்டி அதற்கு வேண்டிய நடவடிக்கைகளைத்தேட வேண்டும். தற்காலத்திற்கு வேண்டியவை மக்களது உடலும் உயிரும் பொருந்தி வாழவேண்டியதே. இந்தத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் ஒருவரே. மற்ற எல்லாவிதக் கட்சியினரும் பயனற்ற வியர்த்தமான காரியங் களை மேல் போற்றிக் கொண்டு, அரசாங்கத்தில் நுழைகின்றவர்கள், ஜாதி, மதம், பொருள், செல்வம். செல்வாக்கு, சுகபோகம் இவைகளை நாடுகின்ற வர்களால் தற்கால அரசுகள் நடத்தப்பட்டு வருகின் றன. ஆனால் சோசியலிஷ்ட்களோவெனில் எது ஒழிந்தால் மக்கள் சுகப்படுவார்கள்? அவர்களைப் பிடித்தாட்டும் தீவினைகள் ஒழியும் என்ற மனப் பான்மை மேற்கொண்டவர்கள், இந்த மனப்பான் மையைப் பெருக்கவைப்பதுதான் நமது முக்கிய கடமை.

                                                                              'புரட்சி' - தலையங்கம் - 22.4.1934

கோயில் விழாக்களுக்கான செலவைத் தடுத்து

தந்தை பெரியார்

5.9.1970 முதல் 10.9.1970 வரை மதுரை மாவட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவுத் தொகுப்பு

நம் இயக்க பிரசாரம் தான் மக்களை மாற்றமடையச் செய்து வருகிறது. மற்ற இயககங-களுக்கு எல்லாம் வேறு வேலை இருககிறது. தேர்தலில் ஈடு-படுவது, பதவிக்குச் செலவது என்பது இருககிறது. நம் இயக்கம் ஒன்று-தான் தேர்த-லுக்கு நிற்காமல் பிரசாரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பிரசாரம் செய்கிறது. இந்நாட்டிலுள்ள பெருமபாலான மக்களின் நம்பிககைக்கு, நடப்பிற்கு விரோத-மான கருத்துகளை எடுத்துச் சொல்லிவரு-வது நம் இயக்கம் ஒன்று தானாகும். இத-னால் எந்தச் சிறு பலனும் நாம் அடைவது கிடையாது.

1925-இல் சுயமரியாதை இயக்கம் ஆரமபிக்கப்பட்டது. அன்று நம் கொள்கை எதுவோ அது தான் இனறைக்கும் நம் கொள்கை-யாகும். இடை-யில் நம் மக்களின் நலனை முனனிடடுக் காமராஜரை ஆதரிக்க நேர்ந்த போது, சமுதாயக் கொள்கைகள் தீவிர-மாக பிரச்சாரம் செய்யாமல் இருக்க வேணடியதா-யிற்று. தற்போது நம் கொள்கை உள்ளவர்கள் ஆட்சிக்கு வந்திருப்பதால் சமுதாயக் கொளகை-களைத் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றோம். இந்தியாவி-லேயே சமுதாயததிற்காக இருக்கிற இயக்கம் திராவிடர் கழகம் ஒன்றுதான் ஆகும். அது அரசியலில் ஈடுபடு-வது கிடையாது- பதவியை இலடசியம் செய்வது கிடையாது.

திராவிடர் கழகத்திற்குக் கடவுள், மதம், சாஸ்திரம், தேசம், மொழி இவறறில் பற்று கிடை-யாது. மனித சமுதாயப் பற்று ஒன்று தான் உண்டு. தேசப்பற்று, மதப்பற்று, மொழிபபற்று, கடவுள் பற்று என்பது எல்லாம் வாய்பபால் ஏறபடு-வதே ஒழிய, இயற்கையானதல்ல. இதெலலாம் காலப் போக்கில் சுய-நலககாரர்களின் பிரசாரத்தால் ஏறபட்டதேயாகும்.

என்னைப் பொருத்தவரை இநநாட்டை இநநாட்டுககாரன் ஆள வேண்டும் என்கிற கடடாயம் கிடையாது. எந்த நாட்டுக்காரனாக இருநதாலும், நம்மை மனிதனாக மதித்து நடத்தக் கூடியவனாக இருந்தால் அவனை நான் வரவேற்பேன்.

நாம் மனிதர்களாக வாழவது பெரிதா? நம் மதம், நம் மொழி, நம் நாடு, நம் கட-வுள் என்று சூத்திரர்களாக, இழி-மக்களாக அறிவற்றவனாக இருப்பது பெரிதா? நம்மை நாய்க்கன், மராட்டி-யன், சேரன், சோழன், வெங்காயம் எல்லாம் ஆண்டி-ருக்கின்றான். அதன் பயன் என்ன? நாம் சூத்திரரகளாகத் தானே இருக்கினறோம்?

நம் இழிவை நீக்குகிறவன் எவன் ஆட்சி செய்தாலும் அவனை வர-வேறபேன். நம் மக்களுக்கு அறிவை கொடுககக்கூடிய மொழி எதுவாக இருந்தாலும் அந்த மொழியை வரவேற்பேன். பொது-வாக நம் மக்களுக்கு நமக்கு என்ன தேவையோ, அதை எது கொடுககிறதோ அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என் கருத்தாகும்.

இப்போது இந்தியா சுதநதிரம் அடைந்து- அது ஏற்படுததிக் கொண்ட அரசமைப்புச் சட்டத்தின் பெயரால் ஆட்சி நடைபெறுகிறது. இந்த அர-சமைபபுச் சட்டம் என்ன என்றால், மதம் பாது-காக்கபபட வேண்டும் அவனவன் நமபிக்கை பாதுகாக்கப்பட வேண்டும் எனபதாகும். இந்தச் சட்டத்தைக் கொண்டு நம் இழிவைப் போக்கிக் கொள்ள முடி-யாது. இந்த சட்டத்தை மதிக்காத வேறு எவ-னாவது வந்தால்தான் இந்த இழிவு ஒழிக்கப்பட முடியும். அடுத்து நம் மககளின் இழி-விற்குக் காரணமாக இருப்பது, அவரகள் நம்பி வணங்குகின்ற கட-வுளே ஆகும். அறிவோடு பார்ததால் எந்த மனி-த-னுமே கட-வுளை நம்புவது கிடையாது. பட்டை அடித்துக் கொள்ப-வன், நாமம் போட்டுக் கொளகிறவன் எல்லாம், தம் மடத-தனத்தால் போட்டுக் கொளகின்ற-வனே தவிர பக்திக்காகப் போட்டு கொள்வது கிடை-யாது.

இந்த நாட்டு மக்களின் இழிவினைப் போக்க வேண்டு-மானால் அது நம் இயக்கம் ஒன்றினால் தான் ஆகும். நம் மக்களின் இழிவை நிலை நிறுத்து-வதறகுக் கடவுள், மதம், சாதி, சமீப காலம் வரை இருந்த ஆட்சி, அரசியல் கட்சி-கள் யாவும் பாதுகாப்பாக இருககின்றன. நம் இயக்கம் ஒன்று தான் இவை யாவும் ஒழிக்கப்பட்டு நம் சமுதாய இழிவு நீக்கத்திற்காகப் பாடு-பட்டு வருகிறது. நம் நாட்டில் தோன்றிய சமுதாய சீர்திருத்த-வாதிகள் எனபோர்கள் அனை-வரும் கட-வுள், மதம், சாதி, பழைமை காப்பாற்றபபட வேண்டும்,- அதில் கைவைக்கக் கூடாது என்று சொல்லி அவற்றைக் காப்பாற்று-வதை சீர்திருத்தமாகக் கொண்டிருந்த-வர்களே ஆவார்கள்.

இந்தக் காந்தி, மகாத்மா என்று பார்ப்பானால் பட்டம் சூட்டப்பட்டவர். அவரை அறியாத பாமரப் பொது மக்கள் இவரை பெரிய மகாத்மா என்று சொலவாரகள். எங்களைப் பொருத்த-வரை அவர் சாதாரண மனிதர் தான். அவர் பெயரைச் சொல்லி ஓட்டிற்கும், பத-விக்கும் நிற்பவர்கள்தான் அவரைப் பெரிய மனிதராக்கிக் காட்டுகிறார்கள். மக்களி-டையே அவருக்குச் செலவாக்கு இருப்பதால், இன்றைய ஆட்சியாளரும் அவர் பெய-ரைச் சொல்லிக் கொண்டு அதன் மூலம் பலன் பெறப் பார்ககினறனர். இந்தக் காந்தி வருணாசிரமம்,- சாதி காப்பாறறப்படவேண்டும் என்று சொல்லி அதற்காகத் தொணடாற்றி வந்தவரே ஆவார். தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் மக்களுக்குத் தனி கோயில், தனிப் பள்ளிக் கூடம், தனிக் கிணறு ஏற்பாடு செய்து கொடுக்கவேணடும் என்று சொனனவர்தான். அதன்படி நடந்து கொணடவர்தான். மக்கள் சமத்துவமாக வாழ வேண்டும் என்கின்ற எண்ணம் இல்லாதவர் ஆவார்.

காங்கிரசில் சாதி முறை காப்பாறறப்பட-வேண்டும். சாதி முறைப்படி நடந்து-கொள்ள வேண்டும் என்று சொன்னதாலேயே நான் அதை விட்டு வெளியேறினேன். நமககிருக்கிற சூத்திரத் தன்மையைப் பற்றி, இழிசாதி- ஈனசாதித் தன்மையைப் பற்றி யாருமே கவ-லைப்படவில்லை. நம் பண்டார சன்னதிகள் முதற்கொண்டு இதை ஏற்றுக்கொண்டு இருபபவர்களே ஆவார்கள். இந்த இழிநிலைக்கு 4-ஆம் சாதித் தன்மைக்கு அடிபபடையாக இருப்பது கடவுள் ஆனதால், அதை ஒழிக்க-வேண்டும் என்று நாங்கள் பாடுபட்டு வருகினறோம். சுயமரியாதை இயக்கம் ஒன்று தான் இதற்காகத் தொணடாற்றி வருகிறது. தி.மு.கழ-கத்தின் கொள்கையும் இது தானாகும். அர-சியலில் ஈடு-பட்டிருப்பதால் வெளியில் சொலலாமல் மறைத்துக் கொண்டிருககின்றனர்.

இந்தக் கோயில்களை எலலாம் இடித்துத் தரைமட்டம் ஆக்க வேணடும், அதில் உள்ள குழவிக் கற்களை எல்லாம் உடைத்து ரோட்டிற்கு ஜல்லி-யாகப் போட வேண்டும். பார்ப்பானை எல்லாம் இந்த நாட்டை விட்டு விரட்ட வேண்டும். அல்லது அவன் நமமோடு சேர்ந்து மணவெட்ட, மூட்டை சுமக்க, ஏர் உழ வரவேண்டும். அரசாங்கம் நாம் சொல்கிறபடி நடக்கககூடியதாக இருக்க-வேண்டும். கோயில்களை இடிக்க, சிலை-களை உடைக்க, கோயில் கட்டு-வதைத் தடுக்க அரசாங்கம் ஆதரவு கொடுப்பதாக இருக்கவேணடும். தேர்த திருவிழா- உறசவங்களை எல்லாம் தடை செய்யக் கூடிய-தாக இருக்க வேண்டும். இந்தக் கோயிலகளுக்கு உற்சவங்களுக்கு, திரு-விழாக்களுக்கு செலவழிக்கிற பணததைக் கொண்டு மககளுக்கு விஞ்ஞான, அதிசய- அற்புதங்களைக் கண்டுபிடிககச் செலவிட வேண்டும். அபபடிச் செய்தால் நாம் மற்ற மேல் நாட்டுககாரனைவிட, சிறந்த விஞஞானச் சாதனஙகளைச் செய்ய முடியும். இபபோது நாம் மேல் நாட்டுககாரன் கண்டு பிடித்த சாதனஙகளைக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.

                                                                                                                                                                         விடுதலை- 3.9.1970

பெரியார் பிஞ்சு பழகு முகாம்

விநாயகனை கைது செய்து




கோவை, செப்.12- மூலக்கடவுளாம், முழு முதற்கடவுளாம், எதையும் விக்னம் இல் லாமல் நிறைவேற்றுப வன் எனக் கூறப்படும். விநாயகன் கடவுள் - சிவ பெருமானின் மூத்த மகன் என்று ஆத்திகர் களால் அழைக்கப்படும் விநாயக கடவுளை கோவை செல்வபுரம் கல்லாமேடு பகுதி காவல்துறையினர் கைது செய்து சிறை வைத்தனர்.

விநாயகனை கூண் டோடு தூக்கும் பொழுது தடுத்த ஆண், பெண், குழந்தைகள் உள்பட 146 பேரையும் காவல் துறை யினர் கைது செய்தனர். இதுபற்றிய செய்தி வரு மாறு:

கோவை செல்வபுரம் கல்லாமேடு பண்ணாரி மாரியம்மன் கோவில் பகுதியில், இந்து முன் னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட் டது. மூன்றரை அடி உயர விநாயகர் பொம்மையை நேற்று முன்தினம் வைத் தனர். சதுர்த்தி விழாவை யொட்டி, 20 ஆண்டு களாக அந்த இடத்தில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலை வைப் பது வழக்கமாம். கடந்த ஆண்டு இந்து முன்ன ணியைச் சேர்ந்த ஒருவர் இறந்ததால், சிலை வைக்கவில்லையாம்.

இந்த ஆண்டு வழக் கம் போல் சிலை வைப்பதற்கு காவல்துறை யினரிடம் இந்து முன்ன ணியினர் அனுமதி கோரினர். சிலை வைக்கக் கூடாது காவல்துறை எதிர்ப்பு

வேண்டுகோளை நிராகரித்த காவல்துறை யினர் , பிள்ளையார் பொம்மையை வைக்கக் கூடாது என தடை விதித்தனர். இதை ஏற்றுக் கொள்ளாத இந்து முன்னணியினர், பொறுப்பாளர் குணசே கரன் தலைமையில் மூன்றரை அடி விநாயகர் பொம்மையை நேற்று முன்தினம் இரவு அங்கே வைத்தனர். தகவலறிந்த காவல்துறை துணை ஆணையர் நாகராஜன், உதவி ஆணையாளர்கள் குமாரசாமி, பாலாஜி சரவணன் ஆகியோர், "சிலை வைக்கக்கூடாது' என எதிர்ப்பு தெரிவித் தனர். காவல்துறையினரிடம், முறையாக அனுமதி பெறாமல் விநாயகர் சிலையை வைக்கக் கூடாது எனக் கூறி, அப்புறப்படுத்த முயன்ற னர். இதை கவனித்த பெண்கள், விநாயகரை சுற்றிவளைத்து அப்புறப் படுத்தவிடாமல் தடுத் தனர்.

இதையடுத்து, காவல் துறையினரால் அங் கிருந்த இந்து முன்னணி தொண்டர்களை கைது செய்து வேனில் ஏற்றி னர். விநாயகரை சுற்றி வளைத்து நின்ற பெண் களை தவிர்த்து, விநாய கர் சிலையை காவல் துறையினரால் கைப் பற்ற முடியவில்லை. விநாயகன் கைது!

அதனால், கடவுள் விநாயகனையும், பெண் களையும் சேர்த்து கைது செய்து காவல்துறை யினர் வேனில் ஏற்றினர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று மொத்தம் 146 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்தவர்களை பாது காப்பாக வைக்க கோவை நகரிலுள்ள பல திருமண மண்டபங் களை காவல்துறையினர் தேடி அலைந்தனர். விசேச நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த தால் காலியாக எதுவும் இல்லை. கோவை அண் ணாமலை ஓட்டல் பகுதியில் வாகனத்தை நிறுத்தி கைது செய்தவர் களை இறங்க அறிவுறுத் தினர். ஒருவரும் இறங்கா மல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஸ்டேட் பாங்க் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காவல்துறையினர், கைது செய்தவர்களை காவல் பயிற்சி பள்ளி மைதானத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கைது செய்யப்பட்டவர்களை இறக்கி விட்டனர். விநாயகனையும் இறக்கி வைத்தனர். இதை யடுத்து, கைது செய்யப் பட்டவர்களுக்கு மதிய உணவு காவல்துறையின ரால் வழங்கப்பட்டது. வாங்க மறுத்து அனை வரும் பட்டினிப் போராட் டத்தில் ஈடுபட்டனராம்.

நேற்று காலை நைட்டி அணிந்த நிலையில் கைது செய் யப்பட்ட பெண்கள் பலர் உணவருந்தாமல் காவல் பயிற்சி மைதானத் திலேயே வைக்கப்பட் டனர். இதனிடையே இந்து முன்னணி நிரு வாகிகள் மற்றும் காவல் துறையினருக்குமிடையே சிலை வைப்பது தொடர் பாக பேச்சு வார்த்தை நடந்ததாம். இதில் எந்த முன்னேற்றமும் நேற்று மாலை வரை ஏற்பட வில்லையாம்.
                                                         நன்றி- விடுதலை

தந்தை பெரியார் 132 வது பிறந்த நாள் விழா

வியாழன், 9 செப்டம்பர், 2010

தமிழ் இனி தலைநிமிரும்!

ஒரு மிகப்பெரிய சரித்திர நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. ஆனால், நாம் அதன் முக்கியத்துவத்தையும், இதனால் தமிழுக்கு ஏற்படவிருக்கும் வளர்ச்சியையும் உணராமல் இருக்கிறோம். தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு ஒதுக்கீடு என்பது என்ன சாதாரண விஷயமா?

முன் எப்போதும் இல்லாத பேரழிவைத் தமிழ்மொழி சமீபகாலமாகச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. வேறு எந்த மொழியினரும் காட்டாத பிறமொழி மோகத்தைத் தமிழன் ஆங்கிலத்திடம் காட்ட முற்பட்டிருக்கும் காலகட்டம் இது. தமிழில் படிப்பது இருக்கட்டும், தமிழில் பேசுவதேகூட கௌரவத்துக்கு இழுக்கு என்று இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஒரு தவறான கருத்து வேரூன்றிவிட்டிருக்கும் அவலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வீட்டிலும்கூட ஆங்கிலம் பேசினால்தான் பெருமை என்று கருதிப் புளகாங்கிதப்படும் நிலைமை. இப்படி ஒரு சூழலில், தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் அவசரச் சட்டம், இருட்டுக் குகையில் வெளியில் செல்ல வழி தெரியாமல் திணறுபவனுக்கு எங்கோ ஒரு ஒளிக்கீற்று திடீரெனத் தெரியவந்தாற்போன்ற பேருவகையை, நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவிலுள்ள வேறு எந்த மாநிலத்தவரும் மொழியினரும், ஆங்கிலம், இந்தி என்று எத்தனை மொழிகள் தெரிந்திருந்தாலும், தங்களுக்குள் தங்கள் வீட்டில், நண்பர்களுடன் பேசும்போது தாய்மொழியில் மட்டுமே பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழன் மட்டும்தான் தமிழ் தெரியாது என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்ளும் ஒரு இனத்தவனாகக் காணப்படுகிறான். பலர் தங்கள் குழந்தைகள் தமிழ் தெரியாமல் வளர்வது தவறில்லை என்று கூடக் கருதுகிறார்கள்.

இதற்கு முன்பே தலையங்கத்தில் நாம் குறிப்பிட்டிருக்கும் விஷயம்தான் என்றாலும் அதை மீண்டும் கூறுவதில் தவறில்லை. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தங்கள் குழந்தைகளுக்கு, அதுவரை தங்கள் தாய் தகப்பன் பெயரைச் சூட்டி மகிழ்ந்தது போய், நல்ல தமிழில் பெயர்களைச் சூட்டவேண்டும் என்கிற தமிழ் உணர்வு மேலெழுந்தது. தமிழ்ச்செல்வன், கயல்விழி, தென்னவன், நெடுஞ்செழியன் என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்ட குழந்தைகள் படித்து வளர்ந்து திருமணம் செய்து கொண்டபோது, எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தங்களது குழந்தைகளுக்கு வைத்த பெயர்கள், எந்தவித அர்த்தமும் இல்லாத சினிமா நடிக, நடிகைகளின் பெயரும், ரமேஷ், சுரேஷ், ராஜேஷ் போன்ற வடமொழிப் பெயர்களும். இப்போது அதுவும்போய் சன்னி, புன்னி என்று அர்த்தமில்லாமல் பெயர் சூட்டும் அவலநிலை ஏற்பட்டு விட்டிருக்கிறது.

தமிழகத்தில் மட்டும்தான், தாய்மொழியில் படிக்காமல் தமிழே தெரியாமல் ஒரு குழந்தை படித்து முனைவர் பட்டம் வரை பெற முடியும் என்கிற நிலைமை தொடர்கிறது. தற்போதைய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் செய்த ஒரு மகத்தான முடிவு, தமிழைக் கட்டாயப் பாடமாக அறிவித்தது. அத்துடன் நின்றுவிடாமல் இப்போது அரசு வேலைவாய்ப்பிலும் தமிழ்ப் பாடமொழியில் படித்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்குவது என்று பிறப்பித்திருக்கும் அவசரச் சட்டம், தமிழன்னைக்குச் செய்திருக்கும் அளப்பரிய திருத்தொண்டு.

நமக்குத் தெரிந்து தொல்காப்பியர் காலத்திலிருந்தோ, அதற்கு முன்போ கூட வடமொழி இருந்திருக்கிறது. வடமொழியால் சங்க இலக்கியங்கள் தடைபடவில்லை. தமிழின் வளர்ச்சியை வடமொழி தடுக்கவில்லை. சொல்லப் போனால், தமிழ்தான் சம்ஸ்கிருதத்துக்கே தந்தை மொழியாக இருந்திருக்கக்கூடும் என்பதற்குப் பல சான்றுகளை முன்வைக்க முடியும். வடமொழிக்குப் பிறகு ஒன்பதாம் நூற்றாண்டில், இஸ்லாமியப் படையெடுப்பைத் தொடர்ந்து உருது தமிழகத்துக்கு வந்தது. உருது தமிழுக்கு வளம் சேர்த்ததே அன்றி, தமிழ் வளர்ச்சியைத் தடை செய்துவிடவில்லை. அதேபோல, விஜயநகர சாம்ராஜ்யப் படையெடுப்பால் வந்த தெலுங்கும், மராட்டியப் படையெடுப்பால் வந்த மராட்டியும் தமிழின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கவில்லை. இந்த மொழிகளால் எல்லாம் தமிழை வழக்கொழிந்து போக வைக்க முடியவில்லை.

ஆனால் ஆங்கிலேயர்கள் நுழைந்து வெறும் நானூறு ஆண்டுகள் கூட ஆகவில்லை. நாம் தமிழைத் தமிழனிடம் தேடவேண்டிய அவலநிலை அரங்கேறி விட்டிருக்கிறது. இதற்குக் காரணம், வடமொழியோ, உருதோ, தெலுங்கோ, மராட்டியோ ஆட்சி மொழிகளாக இங்கே கோலோச்சவில்லை. ஆங்கிலேயர்கள் வந்தவுடன், ஆங்கிலம் படித்தவர்களுக்குத்தான் அரசு வேலைவாய்ப்பு என்று ஆகிவிட்டபோது, தமிழ் தமிழனின் மனதிலிருந்து தடம்புரளத் தொடங்கிவிட்டது. மொழிப்பற்றை அவனது வயிற்றுப் பசி விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், அமைந்த மாநிலங்களில் மாநில மொழிகள் ஆட்சி மொழியாக்கப்பட்டிருக்கவேண்டும். ஆங்கிலமும், இந்தியும் தொடர்பு மொழிகளாக உயர்மட்ட அளவிலும், மாநில மொழிகள் அன்றாட அலுவல் மொழியாகவும், மாநில மொழி படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்றும் அரசு முடிவெடுத்திருந்தால், இந்த அளவுக்கு ஆங்கில மோகம் வளர்ந்திருக்காது. தமிழும் இத்தகைய பின்னடைவைச் சந்தித்திருக்காது.

தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அறிவித்தபடி, இப்போது முதல்வர் கருணாநிதி சொன்னதைச் செய்து காட்டிவிட்டார். ஏன் 20 விழுக்காடு மட்டும் ஒதுக்கீடு? தமிழ் மொழியைப் படித்தவர்களுக்கு மட்டுமே வேலை என்று சட்டம் இயற்றக்கூடாதா என்று சிலர் விதண்டாவாதம் பேசக்கூடும். அப்படிச் செய்திருந்தால், ஆந்திரத்தில் ஏற்பட்டதுபோல, பிரச்னை உச்ச நீதிமன்றம் வரை சென்று, சட்டம் ரத்தாகி இருக்கும். "முதலில் 20 விழுக்காடு ஒதுக்கீடு சட்டமாகட்டும், பிறகு படிப்படியாக உயர்த்திக் கொள்ளலாம்' என்கிற முதல்வரின் சாதுர்யமான முடிவு அவரது நீண்ட அரசியல் அனுபவத்தையும், நிர்வாகத் திறமையையும் வெளிச்சம் போடுகிறது.

ராஜாஜியின் சாதனை என்று நினைவுகூற மதுவிலக்கு; காமராஜின் சாதனை என்று சரித்திரம் பதிவு செய்வது இலவசக் கல்வித் திட்டம்; அண்ணாவின் பங்களிப்பு என்பது தமிழ்நாடு என்கிற பெயர்மாற்றம்; எம்.ஜி.ஆரை நினைவில் நிறுத்துவது சத்துணவு. முதல்வர் கருணாநிதியைப் பற்றி வருங்காலம் பதிவு செய்யப் போவது, தமிழ் வழிக் கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தவர் என்பதாகத்தான் இருக்கும்.

அதற்காக, தமிழகம் இந்தச் சட்டத்தைக் கரவொலி எழுப்பி வரவேற்க வேண்டும். இப்படி ஒரு சட்டத்தைப் பிறப்பித்து தமிழுக்கு மறுவாழ்வளித்த தமிழக முதல்வருக்கு ஒவ்வொரு தமிழனும் தலைவணங்கி நன்றி செலுத்தவேண்டும்!

இந்த ஒரு சட்டத்தின் விளைவாகத் தமிழ் மீண்டும் தலைநிமிரும்!

                                              நன்றி-  தினமணி (09-09-10)