ஞாயிறு, 28 மார்ச், 2010

பூனைக்குட்டி வெளியே வந்தது

சர்ச்லைட்

வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை இந்தி-யாவிற்குள் கொண்டுவர துடியாய்த் துடிக்கிறது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை என்ற கல்வித் துறை.

அதற்குப் பல சப்பையான காரணங்களைச் சொன்னார்கள், சொல்லுகிறார்கள்!

அதில் முக்கியமானது, பல கோடி அந்நியச் செலாவணி நமது பணம் வெளிநாடுகளுக்குச் செல்வதை இதன்மூலம் தடுக்க உதவிடும்; ஏனெனில், வெளிநாடுகளுக்குச் செல்லும் பல மாணவ, மாணவிகள் இங்கேயே தங்கி, அப்பல்-கலைக் கழகங்கள் இங்கேயே வந்துவிடுவதால், இவைகளில் சேர்ந்து படிப்பார்கள் என்று கூறப்பட்டது.

அப்படி நடக்க அதிக வாய்ப்பே இல்லை என்று அந்த மசோதாவை தயாரித்ததாகச் சொல்லப்படும் திரு. எம். ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் நேற்று நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஏற்பாடு காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிடாது.

காரணம்,

வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் சேர விரும்பும் இந்திய நாட்டு மாணவர்கள் இரு வகை:

1. வெளிநாட்டிற்குப் போய் அறிவைத் தேடுபவர்கள் ஒருவகை.

2. வெளிநாட்டிற்குக் குடிபெயர இந்தக் கல்வி வாய்ப்பைப் பயன்படுத்துவோர் மற்றொரு வகை.

அப்படிப்பட்ட இரண்டாம் வகையினர் வழக்கம்போல வெளிநாடுகளுக்கு, இங்கே அந்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் வந்தாலும்கூட போகமாட்டார்கள் என்பது, மேற்சொன்ன நமது பணம் வெளிநாட்டிற்குப் போவது இதன்மூலம் தடுக்கப்படும் என்பது பொய்யான வாதமாகி விடுகிறதல்லவா?

இரண்டாவதாக, இந்த வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் மிகவும் தரம் வாய்ந்ததாக உள்ள பல்கலைக்கழகங்கள் நமது நாட்டில் தொடங்கப்படுவதால், தரமான உயர்கல்வியை (நம் நாட்டு புகழ் பெற்ற சென்னை, கொல்கத்தா, மும்பை போன்ற பல்கலைக் கழகங்கள் தராத கல்வியை) அளிக்க முடியும் என்கிறார் நமது மத்திய கல்வி அமைச்சர்.

ஆனால், அதையும் போட்டு உடைத்து-விட்டார் இந்த கல்வி நிபுணர்.

ஹார்வர்டு போன்ற வெளி நாட்டுப் பல்கலைக் கழகங்கள் இங்கே அமையப் போவதில்லை. வெளிநாடுகளில் உள்ள முதல் நிலைபிரபல பல்கலைக் கழகங்கள் எவையும் இங்கே வரப்போவதில்லை, வராது.

அடுத்த மட்டத்தில் உள்ளஇரண் டாம் படிநிலை, 3 ஆம் படிநிலைப் பல்-கலைக் கழகங்கள்தான் வரும் நிலை உள்ளது.

ஏன் வரும் தெரியுமா?

இவைகள் தங்களை உலக அளவில் விளம்பரப்படுத்திக் கொள்ளவே அவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள, விளம்பரம் பெற, தரப் போட்டியில் ஈடுபடத்தான் வரும் என்று கூறப்படுகிறதே தவிர, நம் நாட்டு மாணவர்கள் தரத்தை உயர்த்த எவ்வளவு தூரம் பயன்படும் என்பது புரியாத புதிர்!

3. பின் ஏன் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்-களுக்கு வேகமான கதவு திறப்பு என்றால், இந்த மசோதாவின் கர்த்தாவின் கருத்து, பல பல்கலைக்-கழகங்கள் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்-களோடு ஒப்பந்தம் போட்டுள்ளது. மத்திய கல்வி அமைப்புகளுக்குத் தெரியவில்லையாம்? அதைத் தடுக்கத்தானாம்! என்னே விசித்திரவாதம்!

உள்நாட்டுப் பல்கலைக் கழகங்களின் வேரில் வெந்நீர் ஊற்றும் அரிய தொண்டு அல்லவா இது?

இந்த நிபுணர் கருத்தும், மனிதவள மேம்-பாட்டுத் துறை அமைச்சரின் கருத்தும் முரண்-பாடுகள் நிறைந்தவையாக உள்ளதல்லவா?

கல்வியாளர்களே,

பெற்றோர்களே,

சிந்தியுங்கள்!
விடுதலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக