சனி, 20 மார்ச், 2010

பேய் விரட்டும் பூஜையில் வைக்கப்பட்ட மதுவைக் குடித்த இருவர் பலி!

பேய் விரட்டும் பூஜையில் வைக்கப்பட்ட மதுவைக் குடித்த இருவர் பலி!
தூத்துக்குடி, மார்ச் 18_- தூத்துக்குடியில், இளம்-பெண்ணிற்கு பேய் பிடித்-துவிட்டதாகக் கூறி, அதை விரட்ட நடத்தப்-பட்ட பரிகார பூஜையில் வைக்கப்பட்ட மதுபா-னத்தை குடித்த மூதாட்டி உள்பட இருவர் உயிரிழந்-தனர்.

தூத்துக்குடி, லூர்தம்-மாள்புரம் முனியசாமி; கூலித்தொழிலாளி. மன-தளவில் பாதிக்கப்-பட்டு இருந்த அவரது மனைவி லதாவுக்கு, பேய் பிடித்து-விட்டதாகக் கூறிய உற-வினர்கள், பூஜை செய்து பேயை விரட்ட முடி-வெடுத்-தனர். அதற்கான ஏற்பாடுகளை முனிய-சாமி செய்தார். அதன்-படி, கடந்த 13 முதல் 16ஆம் தேதி (நேற்று முன்தினம்) வரை லதா வீட்டில் பேய் விரட்டும் பரிகார பூஜையை, திரேஸ்-புரம் குறி சொல்லும் கோடாங்கி பிச்சையா, செய்தார். உணவுவகை-கள், முட்டை,தேங்காய், இளநீர், பழம், மதுபானம், சுருட்டு உள்ளிட்டவை-களை வைத்து நடத்தப்-பட்ட அந்த பூஜையில், அவர்களது உறவினர்-களும் கலந்து கொண்ட-னர். நேற்று முன்தினம் பூஜை முடிந்தவுடன், அதில் படையல் வைக்கப்-பட்ட அனைத்து பொருள்-களையும் முனியசாமி தரப்பினர் திரேஸ்புரம் கடலில் சென்று போட்-ட-னர்.

ஆனால், பூஜையில் வைக்கப்பட்ட மது-பான-மான ரம், தனக்கு வேண்-டுமென, பூஜையில் கலந்து கொண்ட அவர்களது உறவினர் திருமணமா-காத முனியம்மா, கேட்டு வாங்கிக் கொண்-டார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பாட்டி-லில் இருந்த அந்த ரம்மை குடித்த முனி-யம்மா, அதை உறவினர்-களான கந்தசாமி, துரை, ஆகியோருக்கும் கொடுத்து குடிக்கச் செய்தார். சிறிது நேரத்தில் மூவரும் மயங்-கினர். அதில், முனியம்மா இரவு 10.30 மணியளவில் இறந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கந்தசாமி, நேற்று அதிகாலை 1 மணியளவில் இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் துரை, தூத்-துக்-குடி தனியார் மருத்துவ-மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக, தாளமுத்து-நகர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக