ஞாயிறு, 28 மார்ச், 2010

மூடநம்பிக்கையின் முடைநாற்றம்


கிருட்டினகிரி, மார்ச் 28_ கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலு-வலக வளாக சுற்றுச் சுவருக்கு அருகாமையில் தேசிய நெடுஞ்சாலைத்-துறைக்கு சொந்தமான மரங்கள் இருக்கின்றன. இதிலுள்ள கொன்றை (எ) (பட்டாகத்தி) மரத்தில் சென்ற 28.2.2010 ஞாயிற்-றுக்கிழமை அதிகாலை-யில் திடீரென (கடவுள்) அம்மன் தோன்றியுள்ள-தாக மூடநம்பிக்கை செய்-தியைப் பரப்பி வந்துள்ள-னர். தேசிய நெடுஞ்சா-லைத் துறை மூலம் இந்த மரத்திற்கு நெம்பர் எழுத வெட்டிவிடப்பட்ட அந்த பகுதி பட்டை வளர்ந்து வந்துள்ளது. இதற்கு காது, மூக்கு, கண், வாய் இவற்றை வைத்து ஒரு மந்திரவாதியை அழைத்து மஞ்சள், பொட்டு வைத்து மஞ்சள் சேலைகட்டி, மாலை அணிவித்து வணங்கி வருகின்றனர். இப்படிப்பட்ட காட்டு-மிராண்டித் தனமான செய்தியை பரப்பி வருப-வர்கள் திம்மாபுரம் கிரா-மத்தை சேர்ந்த நடராசன் மனைவி லட்சுமி, வட்-டார வளர்ச்சி அலுவல-கத்தில் சிமென்ட் மூட்டை தூக்கும் அலுவலகத்தின் பின் பக்கம் குடியிருந்து வரும் சக்திவேல் ஆகிய இருவரும் சேர்ந்து இந்த மூடநம்பிக்கை செய்தியை பரப்பி உண்டியல் வசூல் பணியை மேற்கொண்டு வந்துள்ளனர். லட்சுமி என்பவர் இந்த மரத்தின் அருகில் தேநீர்க் கடை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட்டார வளர்ச்சி அலு-வ-லக சுற்று சுவருக்கு உள்ளே ஆவின் தேநீர் கடை வைத்துள்ளனர். இதனால் இந்த லட்சுமி-யின் தேநீர் கடை வியா-பாரம் குறைந்துவிட்டது. இதனால் பரப்பரப்பான இந்த மூடநம்பிக்கை ஏற்பாடு செய்து பரப்பி-யுள்ளனர். இச்செய்தியை அறிந்த மாவட்ட தி.க செயலாளர் கோ.திராவி-டமணி, ஒன்றிய செயலா-ளர் சி.சீனிவாசன் இரு-வரும் நேரில் சென்று பார்த்து இது மூடத்த-னமான மோசடி செய்தி என்று கூறி, 1.3.2010 அன்று கிருட்டினகிரி மாவட்ட ஆட்சியர் வே.க.-சண்முகம், தேசிய நெடுஞ்-சாலைத்துறை கோட்டப்-பொறியாளர், ஆகி-யோரை நேரில் சந்தித்து இது போன்ற பரப்பரப்பான மூடநம்பிக்கை செய்தியை பரப்பி மக்களை மூடத்-தனத்தில் ஆழ்த்துபவர்-கள் மீது உரிய நடவ-டிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொண்டு உள்-ளனர்.

மாவட்ட ஆட்சியரும், கோட்டப்பொறியாளரும் உரிய நடவடிக்கை எடுப்-பதாக கூறியுள்-ளனர். உதவி கோட்டப் பொறி-யாளர் அந்த இடத்தில் எந்த வித கட்டடமோ, ஆக்கிர-மிப்போ வராத வகையில் நாங்கள் பார்த்-துக்கொள்-கிறோம் என்று உறுதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக