சனி, 3 ஏப்ரல், 2010

மனிதனைக் கடவுள் படைக்கவில்லை!

இடைவெளி சுருங்குகிறது

சு. அறிவுக்கரசு

அறிவியல் ஆய்வுகள் முற்றுப் பெறுவது இல்லை. அவை முடிவற்றவை. எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் தொடர்ந்து நடைபெறக் கூடியவை. நடைபெறவேண்டியவை. ஆய்வு முடிந்து விட்டது என்று யாரும் ஓய்வு கொள்ள முடியாது. ஆய்வு... ஆய்வு... மேலும் ஆய்வு... என்று போகப் போகப் புதுப்புது முடிவுகள் தோன்றும்... தெரிய வரும்... அதன் பிறகும்... அதன் பிறகும்... இதுதான் அறிவியலின் சிறப்பே!

எந்தக் கேள்விக்காவது விடை தெரியவில்லை என்றால் அதனை நிரப்பு-வதற்குப் பக்தர்களுக்குக் கிடைத்துள்ள பதம்தான் கடவுள் என்பது. கோடிட்ட இடங்களை நிரப்புக எனும் கேள்விக்குப் பள்ளியில் பதில் எழுதிய பழக்கம் இன்னும் விட்டுப் போகவில்லை அவர்-களுக்கு. ஆனால்... அறிவைப் பயன்-படுத்துபவர்களுக்கு...? ஆய்வு தேவைப்-படுகிறது. விடையைக் காணும் முயற்சி-யில் இறங்கவேண்டி வருகிறது. செய்-யும்போது விடை கிடைக்கிறது - காலந்தாழ்ந்தாவது!

விநாடி வினா-விடை நிகழ்ச்சியைப் போல, இயற்கை தொடர்பான அனைத்-திற்கும் விடை அளித்திட வேண்டும் என எதிர்பார்ப்பது அவசரக்காரனுக்கு அடையாளம் மட்டும் அல்ல... அறிவற்ற அவசரமும் கூட!

ஆற அமர ஆராய்ச்சி செய்ததன் பயனாக மனிதனின் (பரிணாம வளர்ச்சி) படிநிலை வளர்ச்சி பற்றிய ஆய்வில் ஒரு முக்கிய படிநிலை புலப்பட்டிருக்-கிறது என்பது, இயற்கை (Nature) ஏட்டில் மார்ச் 25 ஆம் தேதி ஏட்டின் மூலம் தெரிய வருகிறது (தரவு: தி இந்து 25.3.2010).

சிம்பன்சி வகைக் குரங்குகளிலிருந்து படிநிலை வளர்ச்சி அடைந்து இன்றைய மனிதன் உருவானான் எனும் முடிவில் ஒரு தொடர்பு (லிங்க்) கிடைக்கவில்லை என்று அறிவியல் ஆய்வாளர்கள் ஒத்துக் கொண்டிருந்த நிலை இதன் மூலம் மாறுகிறது. உண்மையை ஒப்புக் கொள்ளும் அறிவு நாணயம் புத்தி-யைப் பயன்படுத்துபவர்களுக்கு உண்டு; வரும்! பக்தியில் திளைப்பவர்களுக்கு வரவே வராது. - பூனைக்கு இறக்கை உண்டு, நான் பார்த்தேன் என்பார்கள், இந்த வேதத்தில் கடவுளால் அருளப்-பட்ட வாசகம் தெரிவிக்கிறது என்பார்கள்.

இதோ தொடர்பு

இத்தகைய முக்கியமான தொடர்புச் சங்கிலி புதிய மரபணுவை வரிசைப்-படுத்தி ஆய்ந்ததில் கிடைத்துள்ளது. அந்த மரபணு மிடோ கான்ட்ரியால் டி.என்.ஏ. எனப்படுகிறது. சுருக்கமாக mt DNA என்கிறார்கள். இந்த மர-பணுவை மனிதனுக்கு முந்திய ஓர் உயிரில் (Hominin) இருந்து எடுத்து ஆய்வுக்குப் பயன்படுத்தியுள்ளனர். இந்த உயிர் ரஷியாவின் சைபீரியப் பாலை நிலப் பகுதியான அல்டாய் மலை-யில் வாழ்ந்ததாகும். தற்கால மனிதர்-களும், அவனுக்கும் முந்திய நியாண்டர்தால் மனிதனும் வாழ்ந்திருந்த காலத்தில் உடன் வாழ்ந்த உயிராகும். இந்த உயிர் அல்டாய் மலையில் டெனி-சோவா குகையில் வாழ்ந்துள்ளது 2008 இல் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்குப் பயன்பட்டுள்ளது. இதன் காலம் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தியது என்கிறார்கள்.

தற்கால மனிதர்கள் (ஹோமியோ சேபியன்கள்) நியாண்டர்தால் மனிதர்-கள் ஆகியோருக்கும் அல்டாய் மலை-மனிதனுக்கும் மாறுபாடுகள் தெரிகின்-றன. இத்தகைய மாறுபாடுகளின் அளவை நெக்ளியோடைட் (Necleotide) என்பதால் நிருணயிக்கி-றார்கள். அதன்படி, ஹோமியோசேபி-யன் மனிதனுக்கும் நியாண்டர்தால் மனிதனுக்கும் உள்ள வேறுபாட்டின் அளவு 202 என்றும், இதுவே அல்டாய் மனிதனுக்குள்ள வேறுபாடு அளவு 385 என்றும் கணக்கிட்டுள்-ளனர். என்றால், வேறுபாட்டின் அளவை விளங்கிக் கொள்ளமுடியும். இந்த ஆராய்ச்சி முடிவு மனிதப் படிநிலை வளர்ச்சி எனும் மரத்தில் துண்டு விழுந்த இடத்தை நிரப்புகிறது. கோடிட்ட இடத்தை அறிவியல் தொடர் ஆராய்ச்சி நிரப்பியிருக்கிறது. அவசரக்கார, அறிவற்றவர்கள் போலக் கடவுளைக் கொண்டு நிரப்பவில்லை.

படிப்படியாய்...

சிம்பன்சி குரங்கு இனத்தின் ஒரு கிளைப் பிரிவாக 60 லட்சம் ஆண்டு-களுக்கு முன்பு மனித இனம் பிரிந்-தது. அல்டாய் மனிதன், நியாண்-டர்தால் மனிதன், ஹோமோசேபியன்-(இன்றைய)மனிதன் ஆகியோரின் மூதாதை ஒருவராகவே 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. அதன் பின் கிளைகளாக வளர்ச்சி பெற்றது என்பது முடிவு. அல்டாய் மனிதன் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வரை வாழ்ந்துள்ளான் என்று நிறுவியுள்ள-னர். இவர்களுக்கு 100 கி.மீ. தூரத்தில் நியாண்டர்தால் மனிதர்கள் வாழ்ந்தி-ருக்கிறார்கள்.

இந்தோனேஷியாவில் ஹோமோ புளோரசியன்கள் எனும் மனிதர்கள் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்திருந்தனர் என்பதை முந்திய ஆய்வுகள் எடுத்துக் காட்டி-யுள்ளன. 19 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோஎரக்டஸ் எனும் மனித இனத்தவர் ஆப்ரிக்கக் கண்-டத்திலிருந்து வெளியேறிச் சென்றுள்-ளனர். இவர்களுக்குப் பிறகு வேறு இரண்டு வகையினர் அங்கிருந்து வெளியேறி உள்ளனர் என்பதையும் தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்-கின்றன. இவர்கள் ஹோமோ ஹெய்டல்பெர்ஜென்சிஸ் அல்லது ஹோமோ ரொடீசியன்சிஸ் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இவ்வகையினர் நியாண்டர்தால் மனித இனத்தின் மூதாதையர். 3 லட்சத்-திலிருந்து 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தனர் என்றும் இன்றைய மனித இனத்தவர் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தனர் என்பதும் ஆய்வுகளின் மூலம் அறியப்படும் உண்மை.

மனித இனம் உருமலர்ச்சி பெற்று வளர்ந்த பகுதி, பூமிப்பந்தின் மய்யப் பகுதியாகவும் மிகுந்த வெப்பம் நிறைந்த பகுதியாகவும் இருக்கின்ற காரணத்தால், மனித இனத்தின் எலும்புகள், பற்கள் போன்றவை மட்கிஅழிந்து போகாமல் கிடைக்கும் வாய்ப்பு குறைந்து போய்-விட்டது. இதனால் ஆய்வுக்கும் மர-பணுக்களைக் கண்டறியும் சோதனை-களுக்கும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இந்நிலையில், குளிர்ப்பகுதி-யான கிரீன்லாந்தில் கிடைத்த எஸ்கிமோ ஆணின் மயிரிலிருந்து எடுக்கப்பட்ட நியூக்ளியர் மரபணுக்கள் ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது ஊக்கம் தருவதாக உள்ளது. மயிர் என்று அலட்சியப்படுத்தப்படாமல் ஆய்வுக்குப் பயன்படுவதாக இருப்பதால், ஆய்வுகள் தொடரும் எனும் நம்பிக்கை நிறையவே வளர்கிறது. வெப்பப் பகுதிகளில் கிடைக்கும் மயிர்களிலிருந்து மரபணு பிரித்தெடுக்க முடியுமா என்பது பற்றிய ஆய்வுகள் தொடர்கின்றன.

சிறு துரும்பு வேண்டுமானால் பல் குத்த உதவலாம். ஆனால் அதனிலும் மெல்லிய மயிர் - மரபணு - மனிதனின் படிநிலை வளர்ச்சி- ஆகியவை பற்றிய ஆராய்ச்சிக்கு உதவுகிறது. மனிதனைக் கடவுள் படைத்தது எனும் மடமையை உடைக்க உதவுகிறது.

புத்தி வந்தால் பக்தி போகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக