சனி, 3 ஏப்ரல், 2010

சானியா மிர்சா


டென்னிஸ் விளை-யாட்டு வீராங்கனை சானியா மிர்சாவின் திரு-மணம் தேவையற்ற சர்ச்-சைக்கு உட்படுத்தப்பட்டு விட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டுக்காரர் சோயிப் மாலிக்கும், சானியாவுக்கும் திருமணம் வரும் 15ஆம் தேதி அய்-த-ரா-பாத்தில் நடைபெற உள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை _ இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் எப்படி திருமணம் செய்துகொள்ள-லாம் என்ற வினாவை இந்துத்துவாவாதிகள் கிளப்பு-கின்றனர்.

இந்து மக்கள் கட்சி என்றும் பஜ்ரங் தள் என்னும் (பஜ்ரங் என்றால் குரங்கு என்று பொருள்) சொல்லிக் கொள்ளும் இந்து வெறி அமைப்புகள் சானியாவின் படங்களைத் தீயிட்டுக் கொளுத்தியி-ருக்கின்றனர்.

ஒருவர் யாரைத் திரு-மணம் செய்துகொள்வது என்று அந்த ஒருவரின் தனிப்பட்ட உரிமையாகும். அதில் குறுக்கிட இந்தக் குரங்குகள் கூட்டத்திற்கு அதி-காரம் கொடுத்தவர்-கள் யார்?

இந்துத்துவா கும்பலின் கண்மூடித்தனமான மத-வெறி-தான் இதில் தலை கொழுத்து நிற்கிறதே தவிர, அறிவுப்பூர்வமான தலையீடு இதில் கிஞ்-சிற்றும் இருக்கிறதா?

இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும் திரு-மணம் செய்துகொள்ளக் கூடாது என்று தடை சட்ட ரீதியாக ஏதேனும் உள்ளதா?

இவ்வளவுக்கும் பார்த்-தால் திருமணம் செய்து-கொள்ளப் போகும் இரு-வரும் இஸ்லாமியர்கள் _ மத மறுப்புத் திருமணம்-கூட இல்லை. சானியா இந்துவாக இருந்து, பாகிஸ்-தான் முஸ்லிமை திரு-மணம் செய்துகொண்-டால், அடேயப்பா நாடே பற்றி எரிந்திருக்குமோ!

பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட இந்தியா வந்த நிலையில் ஆடுகளத்-தையே சேதப்படுத்திய வானரக் கும்பல் ஆயிற்றே!

பிரிட்டீஷ் ராணியும், போப்பும் இந்தியா வந்த-போதுகூட, அவர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய வானரப் படை-கள் எதைத்தான் செய்ய-மாட்டார்கள்?

மத உணர்வோடு இது-போன்ற போக்கிரித்தன-மான வேலைகளில் ஈடு-படுபவர்களை இரும்புக்-கரம் கொண்டு ஒடுக்க-வேண்டாமா?

வன்முறைக்கு வைத்-தியம் சட்டரீதியான அடக்குமுறைதான். இல்லாவிட்டால், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்தான்!

- மயிலாடன் www.viduthalai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக