புதன், 21 ஏப்ரல், 2010

சபரிமலையில் தமிழன்

இரண்டாம் தரக் குடிமகனா?

சு. செந்தில்குமரன்

மாநிலம், மொழி வேறுபாடுகளைக் கடந்து ஆண்டுதேறும் லட்சக்கணக்கில் சபரிமலை யாத்திரை சென்றுவரு-கிறார்கள் தமிழர்கள். அப்படிச் செல்லும்போது அங்கே எல்லோரையும் போல, தமிழர்கள் உள்ளிட்ட மற்றவர்-களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தில் விளைந்ததுதான் இந்தக் கட்டுரை...

ஒன்பது முறை பெரிய பாதையில் எரிமேலி,காளைகட்டி, அழுதா நதி, அழுதா ஏற்றம் , கல்லிடுங் குன்றம், அழுதா இறக்கம், கருங்குழி மாரியம்மன் கோவில், கரிமலை ஏற்றம், கரிமலை பகவதி கோயில், கரிமலை இறக்கம், பெரியானை வட்டம், சிறியானை வட்டம், பம்பா, கன்னி மூல கணபதி , நீலிமலை ஏற்றம், நீலிமலை இறக்கம், சரங்குத்தி சபரி பீடம், சன்னிதானம், பதினெட்டு படிகள், அய்யப்பன் , புல்மேடு என்று பயணித்து, பம்பாவிலும் சன்னிதானத்-திலும் புல் மேட்டிலும் இருந்து ஜோதி தரிசனம் செய்தவன் என்ற முறையிலும் ஓரிரு முறை சித்திரைக் கனி தரிசனம் செய்தவன் என்ற முறையிலும் நன்கு ஆய்ந்து நான் எழுதும் கட்டுரை இது. மெக்காவிற்கு அடுத்த-படியாக உலகின் இரண்டாவது பெரிய பக்திப் பயணம் என்ற பெருமை, சபரி-மலை பெரிய பாதை சாமி தரிசனத்துக்கு உண்டு. ஆனால், சபரி மலை யாத்திரை பிரபலமான விதம்?

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு எல்லா மலையாளிகளின் குல தெய்-வமும் முருகன்தான். சரியாகச் செல்ல வேண்டுமானால் பழனிமலை முருகன். இன்றும் மிக வயதான மலையாளத் தாய்மார்களும், பெரியவர்களும், பக்திப் பரவசத்தேடு கண்ணில் நீர் பெருக மலையேறுவதைப் பழனியில் பார்க்க முடியும் _ சற்றுக் கூர்ந்து கவனித்தால்.

தமிழுக்கு எதிராக மலையாளப் போக்கு பரபரப்பாக வளர்ந்தபோது, பக்தி என்ற பெயரில் மலையாளிகளின் பணம், பழனி உண்டியலில் விழுவதை, பொறாமை கொண்டவர்களால் பொறுக்க முடியவில்லை. அவர்களுக்கு ஒரு மாற்று தேவைப்பட்டது. மலையாளிகளின் பணம் பழனிக்கும் தமிழ் மண்ணுக்கும் வருவதைத் தடுக்கவேண்டும்.

தேடியபோது அவர்களின் கண்ணில்-பட்டதுதான் மலைகளுக்கும், அருவி-களுக்கும் அடர்ந்த கானகத்துக்கும் உள்ளே இருந்த அந்த அற்புதமான சிறிய அய்யப்பன் கோயில். விடுதலை உணர்வுள்ள புலிகள் உலவிய காடு அது. பிடித்து அடைப்பது முடியாது. ஆனால் சபரிமலையில் ஆதியில் கோயில் கட்டியவர்களுக்கும், நியமங்கள் அமைத்தவர்களுக்கும், ஏன் அன்றைய அய்யப்பனுக்கும்கூட இந்தப் பிரிவினை வஞ்சகம் தெரியாது.

அதற்கு அய்யப்பனின் வரலாறே சாட்சி. அரக்கனை அழிக்க பெண் உரு பூண்ட நாராயணனுக்கும் சிவனுக்கும் உருவான அய்யப்பன், பந்தள ராசன் என்பவனின் வளர்ப்பு மகன் ஆகிறார். பந்தள ராசன், தமிழ் மூவேந்தர்களில் தெற்குப் பகுதிக்குச் சொந்தமான பாண்டிய வம்சத்தில் வந்தவன்தான். பழசிராஜா வம்சத்திலே, வடக்கன் வம்சத்திலே வந்த-வன் அல்ல. இதை அப்படியே சொன்-னால்-தான் தமிழர்கள் அய்யப்பனை நாடி வருவார்கள். மறைக்க முடியாது என்ற நிலைமை அந்தக் காலத்தில்.

தவிர ஒரு மலை ஏறி முருகனை தரிசிப்-பதைவிட, பல மலைகள் கடந்து அய்யப்பனை பார்க்கப் போகிற த்ரில், போதை முதலிய பழக்கங்களில் ஊறி-யிருக்கிற மக்களை, 42 நாள் கட்டாய-மாக விரதத்தில் இருக்கச் செய்வதன் மூலம், பெண்கள் சபரிமலை பயணத்-தைத் தன் வீட்டு ஆண்களிடம் ஊக்-குவித்த தன்மை.

முருகனின் தம்பியானார் அய்யப்-பன், சிவன் என்ற பொதுவான தகப்-பனின் மகன் என்பதால். தவிர, அய்-யப்பன் கோயில் பயணத்தின் பெரும்-பாலான பகுதிகள், தமிழர்கள் பெரும்-பான்மையாக வசித்த பகுதிகள். மொழி-வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு அவை கேரளாவோடு சேர்க்கப்பட்டு தமிழனும் தமிழும் புறக்கணிக்கப்படும் வரை அவை பெரும்பாலும் தமிழ் நிலப் பகுதி-களாகவே இருந்தன.

எனவே, சபரிமலை என்பது தமிழர்-களின் கோயிலாகவே இருந்த காலம் உண்டு. பூஜை செய்பவர்கள் தவிர, இன்-றைக்கும் பல மலையாளிகள் சபரி-மலைக்கு இருமுடி சுமந்து வருவது இல்லை. பதினெட்டாம்படி ஏறாமல் பக்கவாட்டில் வந்து, ஆனால் முதல் மரியாதையோடு சாமி கும்பிட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.

சபரிமலையைப் பிரபலமாக்கியவர்-கள் என்றால், எம்.என்.நம்பியார் என்று சொல்வார்கள். இருக்கட்டும். ஆனால் எம்.என்.நம்பியாருக்கு சபரிமலையைப் பற்றி அய்யப்பனைப் பற்றிச் சொல்லி மாலை போட வைத்தவர் நவாப் ராஜ-மாணிக்கம் பிள்ளை என்ற பச்சைத் தமிழர். அய்யப்பனின் தீவிர பக்தர் அவர். அவரது நாடகக் குழுவில் இருந்த-போதுதான், அய்யப்பன் என்ற கடவுள் இருப்பதே நம்பியாருக்குத் தெரியவந்தது. அந்தக் காலத்தில் பெரிய பாதையில் மலை ஏற, இப்போது இருக்-கிற குறுகிய பாதைகள்கூடக் கிடை-யாது. தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்கிற அய்யப்ப சாமிகள் இரு-முடி-யோடு, கூடவே ஒரு கூரிய கத்தியும் கொண்டு செல்வார்கள்.

வழியெங்கும் செடி-கொடிகளை வெட்டி பாதையமைத்துக்கொண்டே செல்வார்கள். அவ்வளவு சிரமப்பட்டு சபரிமலையைச் செப்பனிட்டவர்கள் தமிழர்கள். தமிழர்களைப் பார்த்துதான் தெலுங்கர்கள், கன்னடர்கள், வட இந்தியர்கள் வந்தனர். மலையாளிக்கும் தமிழர்கள் கடைப்பிடிக்கிற அதே நியமங்களோடு இருமுடி ஏற்றினார்கள். மலையாளிகள் பழனிக்குத் தந்த முக்கியத்துவம் குறைந்தது. சபரிமலை புகழ் பெற்றது.

ஆக, உலகில் இரண்டாவது நீண்ட புனிதப்பயணம் என்கிற பெருமை-யுடன், சபரிமலைக்கு இவ்வளவு பெய-ரும், புகழும் கிடைத்ததில் தமிழர்-களுக்கு கணிசமாகப் பங்கு உண்டு. ஏன்... ஆண்டவன்களுக்குப் பிறந்த ஆண்டவனான அய்யப்பனின் வளர்ப்புத் தந்தையான பந்தள ராசனே ஒரு தமிழன்தானே...

ஸ்டாப்... ஸ்டாப்.... சரண கோஷத்தில் மனம் கரையும் நேரத்தில் இதெல்லாம் இப்போது எதற்கு? என்று கேட்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரையே. சபரிமலை வரலாறு பற்றிய தமிழ் வெளியீடுகளில்தான் பந்தள ராசனுக்கு, உரிய முக்கியத்துவம் தரப்-படு-கிறது. ஆனால், அய்யப்பன் பற்றி வரும் தற்போதைய மலையாள வெளி-யீடுகளில் பந்தள அரசன் பெயரும் அவன் ஒரு பாண்டிய மன்னன், தமிழன் என்பதும் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. சும்மா ஒப்புக்குச் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள். போகப் போக இதுவும் இல்லாமல் போய்விடலாம் என்ற நிலை.

அதே முன்பு அய்யப்பன் பற்றிய மலையாள வரலாற்று வெளியீடுகளில் பந்தள ராசன், அவன் பாண்டிய மன்னன், அதுவும் மூவேந்தர்களில் ஒருவன் என்று வணங்கி வணங்கி விலாவாரியாகச் சொன்ன காலங்கள் உண்டு.

இப்போது அயாள் ஒரி பாண்டி-யானு... என்று பாண்டி என்ற சொல்-லையே கேவலமாகச் சொல்லும் மலை-யாளிகளால், அய்யப்பனே அந்தப் பாண்டியின் மகன் என்ற உண்-மையை ஏற்க விரும்பவில்லை. சபரி-மலை சன்னிதானத்தில் பதினெட்டாம் படி ஏறி தளத்தில் நாம் நடக்கும் இடத்தில் முன்பெல்லாம் சாமியே சரணம் அய்யப்பா என்ற வாசகம் மிகப்பெரிய வடிவில் தமிழிலும் மலையாளத்திலும் வைக்கப்பட்டு இருக்கும். சில வருடங்களுக்கு முன்பு தமிழைத் தூக்கி எறிந்துவிட்டார்கள்.

அய்யப்பனின் திருவாபரணப் பெட்டி தனது சபரிமலை நோக்கியப் பயணத்தில் செங்கோட்டை சிவன் கோயிலுக்கும் வந்து போவது காலம்-காலமான அய்தீகம். அங்கும் வழி-படும் பக்தர்கள் ஏராளம். அதைத் தடுத்தால் அவர்களும் கேரளாவிற்-குள் வந்து வழிபடுவார்கள். இன்னும் கொஞ்சம் கல்லா கட்டலாம் என்று கேரள அரசு முடிவு செய்தபோது, அய்-யப்பனின் தீவிர பக்தரான செங்-கோட்டை குருசாமி நாடார் என்பவர், கேரள அரசின் கையில் காலில் விழுந்து அந்த உரிமையை மீட்டு வந்தார். அதற்குள் அவருக்கு நுரை தள்ளிவிட்டது.

பழைய கதையை விடுங்கள், நீங்கள் இந்த ஜோதி தரிசனத்திற்கு சபரி மலை போகிறீர்களா? கேரளா-வின் பதிவு எண் கொண்ட வாகனத்-தில் போனால் பிரச்சினையில்லை. பம்பா நதி வரை வாகனம் போகலாம். அதே தமிழ்நாட்டின் பதிவு எண் கொண்ட வாகனத்தில் போனால்... அய்யோ பாவம்... வெகு தூரத்திலேயே நீங்கள் உங்கள் வாகனத்தைவிட்டு இறங்கவேண்டும். மலையேறி சாமி கும்பிட்டு உடல்சோர்ந்த பின்னரும் சுமார் ஒன்பது கிலோ மீட்டர் நடந்த பின்னர்தான் உங்கள் வாகனத்தை அடைய-முடியும். ஏனென்றால் நீங்கள் தமிழன்.

இன்னும் சில வருடம் போகட்டும் மலையாளியாக இருந்தால் பதினெட்-டாம் படிவரையே வாகனம் செல்லும் வசதி கிடைக்கலாம். தமிழர்கள் தரிசனம் முடிந்த பின்னரும் ஒரு பெரிய பாதைப் பயணம் நடக்க வேண்டி வரலாம். பயணப்பாதைகளி-லும் கோயிலிலும் பெரும்பாலும் அய்யப்பா சேவாசங்கம் நடத்துவது தமிழர்கள்தான். அங்கு எல்லோருக்கும் சம உரிமை உண்டு. ஆனால், மலை-யாளிகள் நடத்தும் கடைகள், சன்னி-தானக் கடைகள் இவற்றில் தமிழனுக்கு என்றால் விலை அதிகம். சன்னிதான அலுவலகத்தில் தமிழன் இரண்டாம் தரக் குடிமகன்தான்.

தவிர்க்க முடியாதது மலையாள காவல்-துறையினரின் அராஜகம். எந்த ஒரு விஷயம் என்றாலும் மலையாளிகளி-டம் மென்மையாகவும், தமிழர்களிடம், கடுமையாகவும் நடந்துகெள்வார்கள். இருமுடி சுமந்து செல்லும் பக்தர்கள் சன்னிதானத்தில் நுழைந்ததும் அப்படியே பதினெட்டாம் படியேறி அய்யப்பனிடம் இருமுடியைக் கட்டிவிட்டு பிறகுதான் முடியைப் பிரிக்கவேண்டும் என்பார்கள்.

அந்த ஆசையில் தமிழ் பக்தர்கள் கியூவில் நிற்க, அது நடை அடைக்க-வேண்டிய நேரமாகவும் இருந்து, அந்த சமயத்தில் தமிழ் பக்தர்களுக்குப் பின்னால் மலையாளிகள் வந்து.. அவர்கள் நடை அடைக்கும்முன்பு அய்யப்பனைப் பார்க்க ஆசைப்பட்டு-விட்டால் போச்சு. மலையாள காவல்-துறையினரிடம் கண் காட்டினால்,

அவர்கள் தமிழ் பக்தர்களைப் பிடித்து வெளியே இழுத்துத் தள்ளிவிட்டு, மலையாள பக்தர்கள் பார்க்க வசதி செய்து தருவார்கள். பாவம் பாண்டிய பந்தள ராசன்!

இப்படியாக, தமிழன் வளர்த்த சபரி-மலையில் மலையாளிகள் தமிழனைப் புறக்கணிப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிறது. சரங்குத்தியில் குத்தப்படும் ஒவ்வொரு சரமும் தமிழினத்தின் நெஞ்சில் குத்தப்படும் ஊசியாகவே மாறிக் கொண்டிருக்கிறது சபரிமலையில்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்-பட்டபோது, கடவுள் மறுப்புக்கொள்-கையை வெளியே முழங்கிக்கொண்டு, தமதுவீட்டுப் பெண்களை ரகசியமாகக் கோயிலுக்கு அனுப்பிய இரட்டை வேடக்காரர்களே மக்களிடம் ஆரவாரச் செல்வாக்கு பெற்றிருந்தனர். எனவே கண்ணகிக் கோயில், சபரிமலைப் பாதையின் பெரும்பகுதி, திருப்பதி, காள-ஹஸ்தி பேன்ற தமிழனின் பக்தி கலா-சாரச் செல்வங்கள் வேறு மாநிலங்-களுக்குப் பறிபோனதை வேடிக்கை பார்த்தனர். தமிழன் எல்லாம் இழந்தான்.

ஒருவேளை இவர்கள் மக்களை வாழ வைக்கிற நல்லாட்சி கொடுத்தி-ருந்-தால் மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை-யாவது குறைந்திருக்கும்.

அப்படியில்லை. விளைவு?-

இவர்களை நம்புவதைவிட, கட-வுளை நம்புவதே மேல் என்ற மன-நிலைக்கு தமிழன் வந்தான். அந்தக் கடவுள்கள் எந்த மாநிலத்தில் இருந்-தாலும் பரவாயில்லை என்று ஓடி வணங்கி, தான் சிறுகச்சிறுக சம்-பாதிக்கும் பணத்தின் ஒருபகுதியை வேற்று மாநில அரசுகளுக்குக் கொட்டி-விட்டு அவப்-பெயரையும் சம்பாதித்து வருகிறான்.

அதன் விளைவுதான் திருப்பதி, சபரிமலை என்று அபயம் தேடிப்போகிற இடங்களிலும்கூட தமிழன் அவலம் சுமக்கும் நிலை.

சரணம் சொல்வதும், சரணம் அடை-வதுமே தமிழனின் தலையெழுத்தாகி-விட்டதோ!
www.viduthalai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக