வெள்ளி, 9 ஏப்ரல், 2010

கடவுள் படங்களை அகற்றிட துணிந்து நடவடிக்கை எடுத்தார் அண்ணா

ஆக்கிரமிப்பு கோயில்களை அகற்றிடவும் மாவட்ட ஆட்சியருக்கு சுற்றறிக்கை
கோபுர சின்னத்திற்குப் பதிலாக திருவள்ளுவர் உருவம் பொறிக்கவேண்டும்!
முதலமைச்சர் கலைஞருக்கு கி.வீரமணி கனிவான முக்கிய வேண்டுகோள்
கடவுள் படங்களை அகற்றச் சொன்னவர் அண்ணா. நடைபாதைக் கோயில்கள் சாலைகளை ஆக்கிரமித்து அனுமதியின்றி கட்டப்பட்டதை இடிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பே உள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும், முதல்வர் கலைஞர் சுற்றறிக்கை அனுப்பி ஆக்கிரமிப்பு கோயில்களை அகற்றிடவேண்டும். கோபுர சின்னத்தையும் மாற்றி மதச் சார்பின்மையைக் காப்பாற்றிட தமிழக அரசும், முதல்வரும் துணிந்து முன்வரவேண்டு மென்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

தமிழக அரசுக்கு வேண்டுகோள்

நேற்று (8.4.2010) சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை-பற்றிய விவாதத்தின்போது பேசிய விடுதலை சிறுத்-தைகள் கட்சியின் சட்டமன்றத் தலைவர் திரு. ரவிக்-குமார் அவர்கள் மிக அருமையான, ஆக்க ரீதியான ஒரு வேண்டுகோளை தமிழக அரசுக்கு வைத்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் கோபுர சின்னத்தை மாற்றி...

தமிழ்நாடு அரசின் அடையாளமாக (Emblem of the State) கோபுரத்தைத் தற்போது போட்டிருப்பதை மாற்றி,திருவள்ளுவரைப் போட்டு பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று போடலாம் என்று கூறி-யிருக்கிறார்.

இது பாராட்டி வரவேற்கவேண்டிய முக்கியக் கருத்-தாகும். மதச் சார்பின்மை (Secular) அரசுதான் மத்திய, மாநில அரசுகள்.

அப்போதே திராவிடர் கழகம் கண்டனம்

இதில் ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் சின்னமே; சிறீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்தான் அது! 1947 வாக்கில் யாரையும் கலக்காமல் காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக (ஓமாந்தூரார் ஆட்சிக்காலத்தில்) எடுக்கப்பட்ட முடிவு அது.

அப்போதே திராவிடர் கழகமும், விடுதலையும் _ மதச் சார்பின்மைக் கொள்கைக்கு விரோதமானது இது என்பதைச் சுட்டிக்காட்டி தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது!

அசோக ஸ்தூபி சக்கரம்

இந்திய அரசுக்கு அசோக ஸ்தூபி சக்கரம் உள்பட தேர்வு செய்துள்ளது நியாயமானது. எம் மதத்தையும் சாராத ஒன்று. இஸ்லாமியரின் மசூதி, கிறித்துவரின் சர்ச், சீக்கியரின் தங்கக்கோயில் என்பது போன்ற பன் மதத்தவரின் பல சின்னங்கள் இருக்கும்போது, திடீ-ரென்று இந்துத்துவா எப்படியோ நுழைந்துவிட்டது! இது நியாயமற்றது, முரணானது.

பல ஆண்டுகாலமாக இருந்து வருகிறது என்ற சமாதானத்தையோ, விளக்கத்தையோ யார் எந்தத் தரப்பிலிருந்து கூறினாலும் ஏற்க இயலாது.

தமிழ் வருட ஆபாசத்தை கலைஞர் அரசு ஒழித்தது

கணினி ஆன்லைன் நிருவாகம், வீடியோ கான்ஃபரன்சிங் பல ஆண்டுகாலமாக இல்லை. அதனை நாம் ஏற்கவில்லையா?

பல ஆண்டுகாலமான தமிழ் வருடப் பிறப்பு என்ற ஆபாசத்தைக் கலைஞர் அரசு துணிச்சலுடன் ஒழித்துக்-கட்டி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு ஆணைமூலம் அறிவித்து மிகச் சிறப்பாக கொண்டாடிடவில்லையா?

( ஏடுகள் விக்குருதி வெங்காயம் என்று விளம்பரப்படுத்திட முயன்றாலும், அம்முயற்சி வெற்றி அடையப் போவதில்லை. பழையன கழிதல் _ காலத்தின் கட்டாயம்).

அண்ணா கடவுள் படங்களை அகற்றினார்

அறிஞர் அண்ணா அவர்கள் பதவிக்கு வந்தவுடன், அரசு அலுவலகங்களில் உள்ள கடவுள், கடவுளச்சிகள் படங்களை அகற்றிட அத்துணை அரசு தலைமை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை விடுத்து, அகற்றும் பணியும் தொடங்கியதே!

ஆச்சாரியார் போன்றவர்கள் எதிர்த்ததைக்கூட, அறிஞர் அண்ணா உறுதியாகப் புறந்தள்ளினார்களே _ பல ஊர்களில் அரசு மருத்துவமனைகள், வட்டாட்-சியர் அலுவலகங்களில், (நடைபாதை ஆக்கிரமிப்பு கோயில்கள் தனி) ஆங்காங்கு இந்து முன்னணி தூண்டுதலில் கோயில் கட்டி, திராவிடர் கழகம், பகுத்தறி-வாளர் கழகத்தவரின் சட்டபூர்வ நடவடிக்கையால் இடித்துத் தள்ள நீதிமன்ற ஆணை _ தீர்ப்பும் பெறப்-பட்டுள்ளது!

உச்சநீதிமன்ற தீர்ப்பேயுள்ளது!

உச்சநீதிமன்றமே நடைபாதை கோயில்கள், அனுமதியின்றி ஆக்கிரமிப்புக்களாகக் கட்டப்படும் கோயில்களை இடிக்கவேண்டும் என்ற ஆணையை _ தீர்ப்பினை வழங்கியுள்ளது.

இதுகுறித்து எல்லா மாவட்ட ஆட்சியருக்கும் மாண்பு-மிகு முதல்வர் அவர்கள் ஒரு சுற்றறிக்கை _ ஆணை _ தாக்கீது அனுப்பி, அகற்றிட வேண்டியவை-களை அகற்றிடவேண்டும்!

விஸ்வரூப அனுமார்

மதக்கலவரங்களுக்கு வித்திட ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியினர் அரசு வளாகங்களில் கோயில் கட்டுவது, நெடுஞ்சாலைகளில் விஸ்வரூப அனுமார் சிலையை வைப்பது இப்படிப் பலவும் செய்கின்றனர்! குறிப்பாக, முஸ்லிம், கிறித்துவர் வாழும் பகுதிகளில்!

இந்த அரசே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று சட்டமன்றத்தில் முதல்வர் அண்ணா அவர்கள் சொன்னார்கள்; என்ற போதிலும், முதல்வர் கலைஞர், துணை முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டு திறந்து வைக்கும் தந்தை பெரியார் சிலைகளுக்குக்கூட முறைப்படி, சட்டப்படி அனுமதி வாங்காமல் நாம் ஓர் இடத்தில்கூட வைப்பதில்லையே!

கோபுரச் சின்னம் நீண்ட கால அநீதி!

மதவெறி மாய்த்து மனிதநேயம் காக்கப்படவேண்டும்; கோபுரம் போன்ற குறிப்பிட்ட மதச் சின்னம் இடம்பெற அனுமதித்ததே நீண்ட கால அநீதி; அதைச் சரிப்படுத்திட வேண்டும்.

முதல்வருக்கு வேண்டுகோள்!

துணிந்து நல்ல முடிவெடுத்து ஜனநாயகத்தின் முக்கிய கூறுபாடான, மதச் சார்பின்மையைக் காப்-பாற்-றிட தமிழக அரசும் முதல்வர் அவர்களும் முன்வர-வேண்டும்.

தந்திகள், தீர்மானங்களும் குவியட்டும்!

முற்போக்குச் சக்திகள் அனைத்தும் இதற்குப் பேராதரவு அளிப்பது உறுதி! உறுதி!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக