சனி, 5 ஜூன், 2010

ரயில் மறியல்


சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில்
ரயில் மறியல்-தடையை மீறி பல்லாயிரவர் கைது


சென்னை, ஜூன் 5_ சேது சமுத்திர திட்-டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுக்க மாவட்டத் தலைநகரங்-களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்-றது. மறியல் போராட்-டத்துக்கு அனுமதி மறுக்-கப்பட்டது. தடையைமீறி ஆயிரக்கணக்கான கருஞ்-சட்டைத் தோழர்கள் கைதானார்கள். நாடு முழுக்க திராவிடர் கழ-கத்தில் பல்லாயிரக்கணக்-கில் கைதாகினர்.

தமிழர்களின் நீண்ட-கால ஒட்டு மொத்த எதிர் பார்ப்பான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் பலவேறு கார-ணங்களால் முடக்கப்-பட்டு வருகிறது.

ராமன் என்கிற புராண கற்பனைப் பாத்திரத்தை முன்னிறுத்தி, ராமன் கட்டிய பாலம் என்று கூறி, அதனை இடிக்கக்-கூடாது என்று உச்ச நீதி மன்றத்தில் ஜெயலலி-தாவும், சுப்பிரமணிய-சாமியும் வழக்குத் தொடுத்துள்ளனர்.

விஞ்ஞான மனப்பான்-மையை வளர்க்க வேண்-டும் என்று இந்திய அர-சமைப்புச் சட்டம் கூறு-கிறது. அரசமைப்புச் சட்டத்தின் சரத்துகளைக் காப்பாற்ற வேண்டிய உச்சநீதிமன்றமோ புரா-ணக் கருத்துக்கு ஆதர-வாக திட்டத்தைச் செயல்-படுத்த இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சேது சமுத்திரக் கால்-வாய்த் திட்டம் நிறை-வேறினால் வெளிநாட்-டுக் கப்பல்கள் இலங்-கையைச் சுற்றி வருவது நிறுத்தப்படும். இதனால் இலங்கை அரசுக்குக் கிடைக்கும் வருமானம் பாதிக்கப்படும். இலங்கை அரசுக்கு அனுகூலமாக இந்திய அரசு செயல்படு-கிறது என்று கருதவும் இடம் உள்ளது.

பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தி-யும், தமிழ்நாடு முதல் அமைச்சரும் மதுரையில் தொடக்க விழாவில் கலந்துகொண்டு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை தமிழ்நாட்-டுக்கு அர்ப்பணிப்பதாகக் கூறினார்கள்.

இவ்வளவு நடந்தும் அந்தத் திட்டம் முடக்கப் படுகிறது என்றால், தமிழ்-நாட்டு மக்கள் இதற்கு மேலும் பொறுமை காக்க முடியுமா?

தமிழின மக்களின் எழுச்சியை வெளிப்-படுத்த வேண்டாமா?

வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமைக் குரலை எப்பொழுதும் கம்பீரமாக எழுப்புவது_- போராடுவது திராவிடர் கழகம்தானே!

தமிழின மக்களின் பூகம்ப உணர்வுகளைப் புலப்படுத்துவோம்.

எனவே சேது சமுத்-திரத் திட்டத்தை மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உடனே செயல்-படுத்திட வேண்டும் என்-பதை வலியுறுத்தி இன்று 5.6.2010 காலை 11 மணிக்கு தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடை-பெற்றது.

சென்னையில் திராவி-டர் கழக தலைவர் கி.வீர-மணி அவர்களது தலை-மையில் ஆயிரக்கணக்கா-னோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்-டனர்.

சென்னை

சென்னையில் திராவி-டர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களது தலைமையில் ரயில் மறி-யல் நடைபெற்றது. வடசென்னை, தென்-சென்னை, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, ஆவடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் இந்த ரயில் மறியலில் பங்-கேற்று கைதாகினர்.

முன்னதாக சென்னை_ பெரியார் திடலில் ஏரா-ளமான திராவிடர் கழ-கத் தோழர்கள், தோழி-யர்கள், ரயில் மறியலில் பங்கேற்க இன்று (5.6.2010) காலை 9 மணிக்கே வந்துசேர்ந்தனர்.

மறியல்

சென்னையில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களது தலைமையில் ரயில் மறியல் போராட்-டத்தில் கலந்து கொள்ள சென்னை_ பெரியார் திடலில் குழுமியிருந்த திராவிடர் கழக தோழர்-கள், தோழியர்கள், பாப்-புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, சமாஜ்வாடி கட்சி, மற்றும், திராவிட இயக்கத் தமிழர் பேர-வையினர் மறியல் போராட்-டத்தில் கலந்து கொள்ள சென்னை_ பெரியார் திடலிலிருந்து வரிசை-யாகப் புறப்பட்டனர்.

கலி. பூங்குன்றன்

பெரியார் திடல் வாயிற்-படியில் மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடிய தோழர்-களிடையே திராவிடர் கழகப் பொதுச்செய-லாளர் கலி. பூங்குன்றன் மறியல் போராட்ட நோக்-கத்தை எடுத்துரைத்தார்.

பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பு

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாநில பொதுச் செயலாளர் அகமது ஃபக்ருதீன் உரை-யாற்றினார். அவர் தனது உரையில் குறிப்பிட்ட-தாவது:

தமிழர்களுக்கு வள-மான திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை இந்து மத வெறி கும்-பலான விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க., ஆகிய சக்திகள் தடுத்து நிறுத்துகின்றன.

சேது சமுத்திரத் திட்-டத்தை நடைமுறைப் படுத்த அவர்கள்தான் கையொப்பமிட்டனர். அவர்கள் கையொப்ப-மிட்ட சேது சமுத்திரத் திட்டத்தையே எதிர்க்கட்சியாக நின்று எதிர்க்கிறார்கள்.

திராவிடர் கழகம் இத்தகைய மதவாத சக்தியை எதிர்த்து மறியல் போராட்டம் அறிவித்-திருப்பதை நாங்கள் பாராட்டி வரவேற்-கி-றோம்.

தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், இவர்கள் எல்லாம் சூத்-திரர்கள். அதேபோல் முஸ்லிம் சமுதாய மக்கள் இவர்கள் நமது பார-த-மாதா (இந்தியா)மீது கால் வைத்துவிட்-டார்-கள். இவர்களை எல்லாம் நாட்டை விட்டே அப்-புறப் படுத்தி வெளியேற்ற-வேண்டும் என்று அவர்-கள் சட்டம் கொண்டு வரக்கூடிய மதவெறி எண்ணம் படைத்தவர்-கள். அவர்களுடைய எண்-ணத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்றார்.

சமாஜ்வாடி எஸ். வாசு

அடுத்து சமாஜ்வாடி கட்சி பொருளாளர் எஸ். வாசு தனது உரையில் குறிப்பிட்டதாவது: இலங்கையில் தமிழர்-களை அழித்து இலங்கை நாட்டில் முழுவதுமே சிங்களவர்களைக் குடியேற்றத் திட்ட-மிட்டு உள்ளார்கள். அதே போல இந்த நாட்டிலும் இந்து மதத்திற்கு எதிரான-வர்-களை வெளியேற்ற இந்து மத உணர்வுகளை இங்-குள்ள மக்கள் மத்தியில் ஊட்ட நினைக்கும் மத-வாத சக்திகள்தான் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்கிறார்கள். இந்தத் திட்டம் நிறைவேற நாம் பாடுபடவேண்டும் என்றார்.

தமிழர் தலைவர்

இறுதியாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி ரயில் மறியல் போராட்-டத்தில் கைதாவதற்கு முன்பு உரையாற்றிய-தாவது:

சேது சமுத்திரத் திட்-டத்தை மத்திய அரசு உ_ மறியலில் கலந்திட நாம் கூடி இருக்கின்றோம். இங்கு வராதவர்களும் வர இயலாதவர்களும் அதே உணர்வோடு உள்ளவர்-கள் என்பதை நாம் அறிந்-திருக்கின்றோம்.

தமிழர்களின் 150 ஆண்டு கால கனவான சேது சமுத்திரத் திட்-டத்தை உடனே நிறை-வேற்றிட வேண்டும் என்-பதை வலியுறுத்தி இன்-றைக்கு தமிழ் நாடு முழு-வதும் திராவிடர் கழகத் தோழர்கள் மற்றும் பல்-வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சென்னையிலிருந்து கன்னி-யாகுமரி வரை, திருத்தணி வரை இந்த ரயில் மறியல் போராட்-டத்தில் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டனர்.

பெரியார் - அண்ணா விரும்பிய திட்டம்

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பச்சைத் தமிழர் காமரா-சர் போன்ற தலைவர்கள் வலியுறுத்திய திட்டம்.

தினத்தந்தி நிறுவனர் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவராக இருந்த சி.பி. ஆதித்தனார் அவர்கள் தமிழன் கால்வாய் திட்-டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை அன்-றைக்கே வலியுறுத்தியவர் பிறகு நாம் தமிழர் தலை-வர் இயக்கத்தை திராவிட முன்னேற்றக் கழகத்து-டன் இணைத்துக் கொண்-டார்.

மத்தியில் உள்ள அய்க்-கிய முற்போக்குக் கூட்-டணி அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட வலி-யுறுத்-தினார்.



மதுரையில் தொடக்க விழா

மதுரையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 2006ஆம் ஆண்டு என்று கருதுகின்றேன். பிரதமர் மன்மோகன்சிங், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் பிரதமர், சோனியா உட்பட பல-ரும் சேது சமுத்திர திட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். மீண்டும் காங்கிரஸ் அரசே வெற்றி பெற்று ஆட்சி-யில் அமர்ந்தது.

கலைஞர் அவர்கள் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறிட கப்பல்--து-றை-யையே கேட்டு வாங்கி தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு அவர்கள் அந்தத் திட்டத்தை நிறை-வேற்றிட பொறுப்பேற்-றார். 2500 கோடி ரூபாய் திட்டம்.

பா.ஜ.க. அரசு ஒப்புதல் தந்த திட்டம்

பாரதீய ஜனதா அரசு-தான் சேது சமுத்திரத் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளை நடத்தியது. 1, 2, 3, 4, 5 ஆகிய வழித்-தடங்களில் சேது சமுத்-திரத் திட்டத்திற்கு சரி-யான வழித்தடம் எது என்று பல்வேறு நிபுணர் குழுக்கள் ஆய்ந்து கடை-சியாக ஆறாவது வழித் தடம்தான் சரியான வழித்-தடம் என்று முடிவுக்கு வந்தனர். பிரதமர் வாஜ்-பேயி தலைமையிலான அன்றைய அரசுதான் இதற்கு ஒப்புதல் தந்தது.

மீன்வளம் எந்த விதத்-திலும் பாதிக்காது. பவ-ளப் பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று முடி-வெடுத்து அறிவித்தனர்.

எதிர்க்கிறவர்கள் யார் தெரியுமா?

இன்றைக்கு அதே பாரதீய ஜனதா கட்சி-யினர்தான் சேது சமுத்-திரத் திட்டத்தை நிறை-வேற்றக்கூடாது என்று மதவாதம் பூசி எதிர்க்-கிறார்கள்.

சேது சமுத்திரத் திட்-டத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்-டன. இன்னும் 12 கி.மீ. தூரத்தில் மணல் திட்டு-களை அகற்ற வேண்டும் என்பதுதான் பாக்கி.

ஆதம் பாலம் என்ற மணல் திட்டினை ராமர் பாலம் என்று கூறி அதை அகற்றக் கூடாது என்று அதிமுக பொதுச் செய-லாளர் ஜெயலலிதா, சுப்-பிரமணியசாமி, சோ போன்றவர்கள் இன்-றைக்கு எதிர்க்கிறார்கள்.

காரணம் சேது சமுத்-திரத் திட்டம் வெற்றி-கர-மாக நிறைவேறிவிட்-டால் ஒன்று அய்க்கிய முற்-போக்குக் கூட்டணிக்கு பெருமை ஏற்பட்டு-விடுமே. அதே போல தமிழகத்தில் கலைஞர் ஆட்சிக்குப் பெருமை ஏற்பட்டு-விடுமே என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இன்றைக்கு ராமன் பெயரைச் சொல்லி இடிக்காதே ராமன் பாலத்தை என்று மதச் சாயத்தைப் பூசி எதிர்க்-கிறார்கள்.

ஜெயலலிதா அடித்த பல்டி

அதிமுக பொதுச் செய-லாளர் இந்த அம்மை-யார் ஏற்கெனவே இரண்டு முறை தனது தேர்தல் அறிக்கையில் சேது சமுத்-திரத் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்-தியவர்தான். இப்பொழுது திடீரென்று தலை குப்புற மாறி சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக்-கூடாது என்று உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று தடுத்திருக்கிறார்.

மாபெரும் துரோகம்

இது அண்ணா அவர்-களுக்கு செய்யப்பட்ட துரோகம் மட்டுமல்ல , தமிழக மக்களுக்கு இழைக்-கப்பட்ட அநீதியாகும்.

இந்தத் திட்டம் நிறை-வேறினால் தமிழக மக்-களின் பொருளாதாரம் மேம்படும், தென்னக மக்களுக்கு வளம் கொழிக்-கும் திட்டமாகும்.

மத்திய அரசு விரைவுபடுத்த வேண்டும்

இன்றைக்கு இத்த-கைய மக்கள் நல்வாழ்வுத் திட்டத்தை உச்ச நீதி-மன்றத்தை ஒரு கருவி-யாகப் பயன்படுத்தி தடுத்-திருக்கின்றார்கள்.

உச்ச நீதிமன்றமோ இந்த வழக்கை ஊறுகாய் ஜாடியில் போட்டதைப் போன்ற செயல் அக்கிர-மத்திற்கு சிகரம் வைத்தது போன்றதாகும்.

நல்லதோர் மக்கள் நலத் திட்டத்தை மூட நம்பிக்கை மூலம் தடுக்கப் பார்க்கிறார்கள்.

இல்லாததைச் சொல்லி ஒரு திட்-டத்தைத் தடுக்-கிறார்கள் இருக்கின்ற பாபர் மசூதியை இடித்த கூட்டத்தினர்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மத்திய அரசு சேது சமுத்திரத் திட்டத்தில் மவுனம் காக்கக் கூடாது. நீதி-மன்றத்தில் இது சம்பந்-தப்பட்ட வழக்கை விரை-வுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசுக்கு உறுதுணையாக...

தமிழக அரசுக்கு உறு-துணையாக மத்திய அரசு செயல்படவேண்டும். கலைஞர் அரசுக்கு, தமி-ழக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்பட வேண்டும். இந்தத் திட்-டம் நிறைவேறுகிறவரை திராவிடர் கழகம் ஓயாது. காவல்துறையினர் நமது ரயில் மறியல் போராட்-டத்திற்கு அனுமதி மறுத்து உள்ளார்கள். அவர்கள் கைது செய்யும் பொழுது எந்தப் பொதுச் சொத்-துக்கும் பாதிப்பில்லாமல் நாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இவ்வாறு தமிழர் தலைவர் பேசினார்.

நிறைவாக சேது சமுத்-திரத் திட்டத்தை வலி-யுறுத்தி தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஒலி முழக்கம் எழுப்-பி-னார்.

தமிழர் தலைவர் 47 ஆவது முறையாக கைது

பிறகு காவல் துறை-யினர் தமிழர் தலைவர் கி. வீரமணி மற்றும் தோழர்களைக் கைது செய்து போலீஸ் வண்டி-யில் ஏற்றிக் கொண்டு சென்றனர். 47ஆவது முறை-யாக தமிழர் தலைவர் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா. கிருஷ்ணன், வட-சென்னை மாவட்ட தலைவர் கே. தங்கமணி ஆகியோர் தமிழர் தலைவருக்கு சால்வை அணிவித்தனர்.



சேலம்

சேலத்தில் திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார் தலைமையில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் க.சண்முகம், சேலம் மாவட்ட தலைவர் பொறியாளர் செல்வராஜ், செயலாளர் இளவரசன், மேட்டூர் மாவட்ட தலைவர் தி.இராமகிருஷ்ணன், செயலாளர் கவிஞர் சுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர்கள் பெ.சவுந்தரராசன், எடப்பாடி எஸ்.இராமன், ஆத்தூர் மாவட்டம் சந்திரன் மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ், மாவட்ட மாணவரணி தலைவர்கள் தமிழ்பிரபாகரன், இரா.இளஞ்செழியன், மேட்டூர் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன், நாமக்கல் மாவட்ட தலைவர் எம்.பழனியப்பன், செயலாளர் ஆ.கு.குமார், மாவட்ட அமைப்பாளர் சேலம் பரமசிவம், வை.நடராசன், மாவட்ட இளைஞரணி தலைவர் கு.பூபதி, செயலாளர் அ.சரவணன், ஒன்றிய தலைவர் சத்தியசீலன், செல்வகுமார், சு.சரவணன், ஆ.ஆசைதம்பி, பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா சேலம் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஹக்கீம், ஆத்தூர் மாவட்ட தலைவர் வி.சுகுமார், சேலம் மாநகர தலைவர் வடிவேலு, செயலாளர் இளவழகன், சிந்தாமணியூர் கி.வசந்தா, கடவுள் இல்லை சிவக்குமார், சேலம், அப்பாயி, உரத்தநாடு நகர இளைஞரணி தலைவர் பு.செந்தில்குமார், மேட்டூர் மாவட்ட துணைத் தலைவர் செவாழ்துரை, தஞ்சை ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கி.சவுந்தரராசன், மேட்டூர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெயபிரகாஷ் உள்பட பெரியார்பெருந்தொண்டர்கள் மகளிரணியினர், மாணவரணியினர், இளைஞரணி-யினர் என சுமார் 150 பேர் கலந்துகொண்டு கைதாகி இலெட்சுமி திருமண மண்டபத்தில் அடைக்கப்-பட்டனர்.

மதுரை

மதுரையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் மாநில சட்டத்துறை தலைவர் மகேந்திரன் தலைமையிலும் புறநகர் மாவட்ட தலைவர் ம.பவுன்ராஜா, மாநகர தலைவர் அழகர், மாநகர செயலாளர் திருப்பதி, புறநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மதுரை மண்டல தலைவர் செல்வம் ரயில் மறியல் போராட்டம் பேரணியை துவக்கி வைத்தார். புறநகர் மாவட்ட அமைப்பாளர் அழகர்சாமி, து.தலைவர் எரிமலை, துணைச் செயலாளர் வழக்கறிஞர் கணேசன், மாநகர துணைத் தலைவர் வேங்கை மாறன் மற்றும் தோழர்கள் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மாவட்ட தலைவர் நஸ்ருதீன், மத்திய பகுதி செயலாளர் கிராசன், அப்துல் நஜீப் உள்ளிட்ட சுமார் 25 பேரும் கைதாகினர்.

விருதுநகர்

விருதுநகர் பேருந்து நிலையம் அருகில் பேரறிஞர்அண்ணா சிலை முன்பிருந்து மாநில மாணவரணி துணைச் செயலாளர் ம.கதிவரன் தலைமையில் சேதுசமுத்திரத் திட்டத்தை விரைவுபடுத்திட வலுயுறுத்தி ரயில் மறியல் போராட்டத்திற்காக பரணி புறப்பட்டது. நகரின் முக்கிய வீதிவழியாய் வலம்வந்த பேரணி ரயில்வே பீடர்ரோடு காவல் நிலையம் முன்பு 23 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாவட்ட தலைவர் வ.மணி தலைமையில், மாவட்ட செயலாளர் தி.ஆதவன், மண்டல இளைஞரணி அமைப்பாளர் இல.திருப்பதி, தி.க மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.அழகர், தி.க மாவட்ட இளைஞரணி செயலாளர் ச.சுந்தரமூர்த்தி, திருவில்லிபுத்தூர் நகர செயலாளர் பூ.சிவக்குமார், அருப்புக்கோட்டை நகர செயலாளர் வ.முரளி, திருத்தங்கல் நகர செயலாளர் மா.நல்லவன், சிவகாசி நகர தலைவர், மா.முருகன், அருப்புக்கோட்டை _சு.செல்வராசு, இரா.விஜயகுமார், பா.இராஜேந்திரன், கா.திருவள்ளுவர், இரா.சத்யபிரியா, அ.தங்கசாமி, சிவகாசி க.காளிராஜன், பாளையம்பட்டி இரா.முத்தையா, விருதுநகர் கே.வெயில்ராஜ், பட்டம்புதூர் சு.சண்முகசுந்தரம், சிவகாசி, எஸ்.பி.மணியம், ம.ஜெயசந்திரன், அ.சின்னதுரை மற்றும் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் கைதாகினர்.

கரூர்

கரூரில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் மாவட்ட தி.க தலைவர் மு.க.இராசசேகரன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் ம.காளிமுத்து, கவிஞர் பழ.இராமசாமி, சே.அன்பு, அ.பாரதமணி, ஆ.சங்கரன், திமுக கைலாசம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்: வே.ராஜீ.மா.து.செ, க.நா.சதாசிவம் மா.து.செ.சு.சாமியப்பன், மா.தெ.அ, தே.அலெக்ஸ், ம.செகநாதன் மா.இ.செ, பெரியார் பிஞ்சு தயாதரன், மேகநாதன், தி.செல்வராஜ், நகர செயலாளர் ம.சதாசிவம், ச.அ.காமராஜ், க.இராசலிங்கம், ந.தமிழ்சொக்கன், குளித்தலை திராவிடமணி, கே.கருப்பண்ணன், கோ.முத்துவீரன், இரா.கிருஷ்ணன், இரா.குப்புசாமி, எஸ்.டி.குப்புசாமி, ஜவஹர், எஸ்.பழனிச்சாமி, மா.இராமசாமி, சொக்கலிங்கம், மா.கணேசன், ச.குமார், இரா.பெருமாள், பி.பிரபாகரன், கே.சீதாராமன், கி.ஆண்ட்ரூஸ், வைரவன், கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு ரயில் மறியலில் ஈடுபட்டனர். இரயில் மறியலில் மொத்தம் 40 பேர் கலந்துகொண்டு சிறையில் கைதாகினர்.

தருமபுரி

ரயில் மறியல் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது காவல்துறையின் தடையை மீறி நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தலைமை செயற்குழு உறுப்பினர் பழனி.புள்ளை-யண்ணன், தலைமையில், தருமபுரி மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், செயலாளர் வீ.சிவாஜி மற்றும் திராவிடர் கழகத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு செங்குந்தர் திருமண நிலையத்தில் அடைக்கப்பட்டனர்



திருவாரூர்

திருவாரூரில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்திற்கு ராயபுரம் இரா.கோபால் தலைமை வகித்தார். மண்டல தலைவர் எஸ்.எஸ்.மணியம் ரயில் மறியல் போராட்டத்தைத் துவக்கி வைத்தார். திருத்துறைப்பூண்டி மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.-சீனிவாசன், சவு.சுரேஷ், மாவட்ட செயலாளர் ஆர்.கே.ராஜேந்திரன், மாநில திராவிடர் கழக தொழிலாளர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் கணபதி, மாவட்ட இணைச் செயலாளர் கல்யாணி, தலைமை கழகப் பேச்சாளர் சிங்காரவேலன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க, கழகத் தோழர்கள் சேதுக் கால்வாய்த் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பியவாறு ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

கழகத் தோழர்களுடன் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜப்ரே ஆலம் பாதுஷா தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர், எழுச்சியுடன் நடந்த மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட தோழியர்கள் உள்பட 150 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

காஞ்சிபுரம்

சேது சமுத்திரத் திட்டத்தை விரைவுபடுத்தக்கோரி திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை எம்.ஏ.பி.எல்., தலைமையில் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகில் 5.6.2010 காலை 10 மணிக்கு ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. காஞ்சி மாவட்ட தி.க. தலைவர் டி.ஏ.ஜி. அசோகன், செங்கை கழக மாவட்ட தி.க. தலைவர் அ.கோ.கோபால்சாமி, செய்யாறு கழக மாவட்ட தி.க. தலைவர் அ.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மறியல் ஆர்ப்பாட்ட முழக்கங்களை காஞ்சி மாவட்ட அமைப்பாளர் பா.கதிரவன் முழங்க, அனைவரும் முழங்கினர். பின்னர் கழகப் பொருளாளர் சாமிதுரை ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரை ஆற்றினார்.

பொதுக்குழு உறுப்பினர்கள் பா.அருணாசலம், டி.பி.திருச்சிற்றம்பலம், இரா.கோவிந்தசாமி, ஆ.சண்முகம், கி.இளையவேள், மா.சுந்தரபிரபாகரன் கழகத் தோழர்கள், சென்னை நடராசன், செ.ரா.முகிலன், துரை.முத்து, அ.நாகராசன், சீத்தாவரம் மோகன், த.சத்தியா, தியாகராஜன், கோவிந்தராஜ், சந்திரன், சுப்பிரமணி, ரவி, குழந்தைவேலு, திராவிடநேசன், பகலவன், க.கோதண்டன், வெங்கடேசன், தங்கம் பெருமாள், கஜபதி, உமாபதி, ராசு, குமரவேல், பூ.சுந்தரம், சீனிவாசன், ராஜேந்திரன், பக்தவச்சலம், புவியரசி, மாணவரணி அருண், பிரபாகரன், அர்ஜூன், மணிமாறன், அரவிந்த், கோபி, கார்த்திக் பாபு, வடமணப்பாக்கம் வெங்கட்ராமன், வெங்கடேசன் ஆகியோர் மறியலில் பங்கேற்று கைதாயினர். டிஏஜி அன்பழகன், செய்யாறு அருணாசலம் முதலியோர் கழகப் பொருளாளருக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் மாவட்ட தி.க.இளைஞரணி தலைவர் தா.சுரேஷ் வரவேற்று பேசினார். மாவட்ட திராவிடர் கழக தலைவர் ப.சங்கரநாராயணன் தலைமை தாங்கி உரையாற்றினர்.

மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாவட்ட தி.க.பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். பாப்புலர் பிரண்ட் ஆஃப் இண்டியா அமைப்பின் மாநில பேச்சாளர் அபுதாகிர், ரயில் மறியல் போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி கருத்துரையாற்றினார்.

திராவிடர் கழக அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் தா.சுவாமிநாதன் செயலாளர் நாகலிங்க பெருமாள், குருந்தன் கோடு ஒன்றிய தி.க.தலைவர் சுப்பிரமணியம், நாகர்கோவில் நகர தி.க. தலைவர் கவிஞர் சேக் முகமது, வள்ளியூர் ஒன்றிய தி.க.தலைவர் குணசீலன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் வெற்றிச் செல்வன், இளஞ்சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், நகர பொறுப்பாளர் ராஜன், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் மணிமேகலை, தி.க. இளைஞரணி பொறுப்பாளர் சதா, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இண்டியாவினுடைய மாவட்ட தலைவர் பைசல் அகமது, மாவட்ட செயலாளர் ருகில் ஜக், மாநில செயற்குழு உறுப்பினர் துல்பிகர் அலி, நகர தலைவர் நூருல் அமீர், திராவிடர் கழக பொறுப்பாளர்கள் பன்னீர்செல்வன், அய்யப்பன், தியாகி குமாரசாமி, மோகன்தாஸ், கிருஷ்ணேஸ்வரி, கென்னடி, ராஜன் மற்றும் திராவிடர் கழகம், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இண்டியா, விடுதலைச்சிறுத்தைகளின் பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பேராட்ட முழக்கமிட்டபடி நாகர்கோவில் கோட்டாறு ரயிலடியிலிருந்து ரயில் நிலையம் நோக்கி வந்தனர்.

சரியாக 10.50 மணிக்கு புறப்பட இருந்த கன்னியாகுமரி _ பெங்களூரு அதிவிரைவு வண்டியை மறிப்பதற்காக தோழர்கள் வந்தபோது மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் கோட்டாறு காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ் தலைமையில், காவல்துறையினர் தோழர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றியபோது தந்தை பெரியார் வாழ்க சேது கால்வாய்த் திட்டத்தை உடனடியாக நிறைவேற்று என்று முழக்கமிட்டபோது கைதாயினர்.

தோழர்களை கைது செய்த காவல் துறையினர் தங்கவேல் மண்டபத்தில் தங்க வைத்தனர்.



தூத்துக்குடி

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் 5.6.2010 சனியன்று துணைப்பொதுச்செயலாளர் இரா.குண-சேகரன் தலைமையில் மாவட்ட தலைவர் இர.கனகராசு, மாவட்ட அமைப்பாளர் மா.பால்-ராசேந்திரம், பொதுக்குழு உறுப்பினர் தி.ப.பெரியார-டியான் ஆகியோர் முன்னிலையில் காலை 8 மணியளவில் தூத்துக்குடி நகராட்சி முன்பிருந்து கழகத் தோழர்கள், பெரியார் பிஞ்சுகள், மகளிரணியினர் உள்பட 50_க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக ஒலி முழக்கமிட்டுச் சென்றனர். நிறைவேற்று நிறைவேற்று உடனடியாக நிறைவேற்று தந்தை பெரியார் வாழ்க, தமிழர் தலைவர் வாழ்க என்று தோழர்கள் எழுச்சி முழக்கமிட்டுத் தூத்துக்குடி கீழுர் ரயில்நிலையம் சென்றனர். அங்கு நெல்லை செல்லவிருந்த ரயில்முன் சென்று கழகக் கொடிகளுடன் தோழர், தோழியர் மறியல் செய்தனர். சரியாக 8.40 மணியளவில் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட தோழர்களைக் கைது செய்து சிற்றுந்துகளில் ஏற்றி வடக்கு ரத வீதி ராசி திருமண மண்டபத்தில் கொண்டு வைத்தனர். வழிநெடுகிலும் தோழர்கள் உடனடியாக சேதுக்கால்வாய் திட்டத்தை பயன்படுத்தச் செய் என மத்திய அரசை வலியுறுத்தி முழக்கமிட்டனர். மறியலில் மாவட்ட துணைத் தலைவர் பொ.செல்வராஜ், பொறியாளர் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ச.சக்திவேல், வ.தமிழரசி, பொன்னை நாராயணன், ஆதிச்சநல்லூர் சிதம்பரம், சிவகளை ஆ-.முருகன், சிவகளை ஞானதேசிகன், புதுக்கோட்டை மு.பால்ராசு, விளாத்திகுளம் த.நாகராஜன், த.பெரியார்தாசன், நகர தலைவர் இரா.ஆழ்வார், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கா.சு.மணி, பன்னீர்செல்வன், அசோக்ராஜ், பிரசாத், ஆர்.யுவராஜ், திராவிட எழில், லிங்கராஜன், தங்கம்மாள், நீல்கமல், பார்வதி, சத்யவதி, சந்திரா, முத்துலெட்சுமி, மனோ, நகரச் செயலாளர் சி.மணிமொழியன், விஜயராஜன், செந்தில்குமார், மார்டீன் குமார், மழலைகள்_வெங்கட்மாதவன், கலைமணி, லெனின், பிரபா, மகாலெட்சுமி, பிரபாகரன், பிரவீன் ஆகியோர் கலந்துகொண்டு கைதாகினர்.

விருத்தாசலம்

சேதுக் கால்வாய்த் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி, மத்திய அரசை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில், விருத்தாசலம் தொடர்வண்டி சந்திப்பு அருகில் உள்ள தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, சேதுக்கால்வாய்த் திட்டத்தினால் ஏற்படும் பயனையும், புராண இதிகாச குப்பைகளால் தமிழனின் 200 ஆண்டு கால கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டம் முடங்கி விடக் கூடாது என்பதையும் எடுத்துக்கூறி, 100_க்கும் மேற்பட்ட தோழர்களின் எழுச்சி முழக்கங்களோடு ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது.

போராட்டத்தில் மாநில மாணவரணி துணைச் செயலாளர் த.சீ.இளந்திரையன் தலைமையில், மாவட்ட தலைவர் அ.இளங்கோவன், மாவட்ட செயலாளர் ஜெ.கி.அருள்ராஜ், மாநில ப.க.அமைப்புச் செயலாளர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட தி.க. அமைப்பாளர் வை.இளவரசன், தலைமை கழகப் பேச்சாளர் முத்து கதிரவன், மாவட்ட துணைத் தலைவர் தங்க.இராசமாணிக்கம், மாவட்ட ப.க.செயலாளர் இரா.செழியன், ஒன்றிய செயலாளர் சி.கிருட்டிணமூர்த்தி, கழக முன்னோடிகள் தா.கோ.சம்பந்தம், ஒன்றிய தலைவர் வலசை அரங்கநாதன், விருத்தாசலம் நகர ப.க.தலைவர் நா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் தோழர்கள் மாவட்ட இளைஞரணி தலைவர் வெ.அறிவு, கே.ஆனந்தன், பட்டி.தாமோதரன், மண்டல மாணவரணி செயலர் பெரியார் செல்வம், மாவட்ட மாணவரணி தலைவர் இரா.தமிழரசன், ஒன்றிய செயலாளர் ப.வேல்முருகன், பெண்ணாடம் நகர தலைவர் க.நாராயணசாமி, சிதம்பரம் நகர அமைப்பாளர் செல்வரத்தினம், நல்லூர் ஒன்றிய தலைவர் கருப்புசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கட இராசா, திட்டக்குடி ஒன்றிய தலைவர் பழநியாண்டி, கழுதூர் ஆறுமுகம், காட்டுமன்னார்குடி ஒன்றிய செயலர் குணசேகரன், முருகன், ஒன்றிய இளைஞரணி தோழர்கள் தமிழ்ச்செல்வன், சுதாகரன், மாணவரணி தோழர்கள் செல்வமணி, உத்தண்டி, வெண்கரும்பூர், புகழேந்தி, பெண்ணாடம் அமைப்பாளர் ந.சுப்பிரமணியன், நல்லூர் ஒன்றியம் ஆறுமுகம் மற்றும் பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இண்டியா மாவட்ட செயலர் அபுசாலிக் தலைமையில் 20-_க்கும் மேற்பட்டோர் உள்பட 100_க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரம்

சேது சமுத்திரத்திரத் திட்டப்பணிகள் நடைபெறும் ராமேசுவரம் நகரில் ரயில் மறியலில் ஈடுபட்ட 75 கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். ராமனாதபுரம், சிவகங்கை, காரைக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் பெருமளவு கலந்துகொண்டனர்.

தி.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மண்டலத் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், ராமனாதபுரம் மாவட்டத் தலைவர் மா.முருகேசன், சிவகங்கை மாவட்ட தலைவர் ச.இன்பலாதன், காரைக்குடி மாவட்டத் தலைவர் சாமி சமதர்மம், மாவட்ட செயலாளர்கள் கோவி.அண்ணா ரவி, ச.அரங்கசாமி, ஜெ.தனபாலன், மாவட்ட அமைப்பாளர்கள் உ.சுப்பையா, பா.ஜெயராமன், எம்.பெரியார் குணா, பொதுக்குழு உறுப்பினர்கள் செயா திராவிடமணி, மணிமேகலை சுப்பய்யா, வீர.சுப்பய்யா, வீர.ஜெயராமன் .தி.தொ.க மாநில துணைத் தலைவர் கோவிந்தராஜன் உள்ளிட்ட தோழர்கள் முன்னதாக திட்டக்குடி கடை வீதியில் இருந்து ஊர்வலமாக முழக்கமிட்டவாறு வந்தனர். ராமேசுவரம் ரயில் நிலையத்தின் அருகில் மறியல் செய்ய வந்தபோது காவல்துறையினரால் கைது செய்து ஒரு திருமன மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடலூர்

சேதுக்கால்வாய் திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட மத்திய அரசை வலியுறுத்தி 5.6.2010 காலை 11.30 மணியளவில் திராவிடர் கழகம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் கடலூர் துறைமுகம் தொடர்வண்டி சந்திப்பில் திராவிடர் கழகத் துணைப்பொதுச்செலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடந்தது. மாவட்ட தி.க தலைவர் அரங்க.பன்னீர்செல்வம், செயலாளர் சொ.தண்ட பாணி, அமைப்பாளர் நா.தாமோதரன், புதுவை தி.க தலைவர் வ.சு.சம்பந்தம், செயலாளர் சிவ.வீரமணி, துணைத் தலைவர்கள் வே.அன்பரசன், அறிவழகன், துணைச்செயலர் சிவராசன், கண்ணன், பழனி, துரை.சிவாஜி, ஜி.கிருஷ்ணமூர்த்தி, மண்டல இளைஞரணி செயலாளர் சி.மணிவேல், மாவட்ட இளைஞரணி நிருவாகிகள் இசக்கிமுத்து, நா.உதயசங்கர், நா.பஞ்சமூர்த்தி, மகளிரணி மாவட்டதலைவர் சீனியம்மாள், சுமதி, தென்றல், செந்தமிழ்செல்வி, ஒன்றிய தி.கநிருவாகிகள் கோ.குப்புசாமி, கோ.இந்திரசித், இரா.குணசேகரன், பா.செந்தில்வேல், செ.பன்னீர்செல்வம், யாழ்திலீபன், கு.தென்னவன், ஏ.பி.ராமதாசு, கோ.புத்தன், பா.ஆறுமுகம், ந.புலிக்கொடி, இரா.சுந்தரமூர்த்தி, இரா.முத்தையன், அதியமான் நெடுமானஞ்சி, ச.கண்ணன், சஞ்சீவிராயர், தொண்டங்குறிச்சி நடராசன், பிரசாத், பாஸ்கர், சமாஜ்வாடி கட்சி தலைவர் இளங்கோ, என்.செந்தில், வி.வீரமணி, பாப்புலர் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் ஆபுருத்தீன், விவ்கத் அலி, மன்சூர் அலி, அப்துல்ரஜீம், பாபு அஷ்கர் அலி ஆகியோர் உள்பட 215 தோழர்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்-பட்டனர்.

திருச்சி

தமிழர்களின் நீண்டநாள் திட்டமான சேதுகால்வாய் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டி திருச்சி இரயில்வே சந்திப்பில் தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ்

முன்னதாக காலை 10.30 மணிக்கு மத்திய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றார். மேலும் தந்தை பெரியார் சிலைக்கு தலைமை நிலையச் செயலாளர் அன்புராஜ் மாலை அணிவித்து கழக கொடியினை ஏற்றி வைத்தார்.

இந்த மறியலுக்கு மாவட்ட தி.க. தலைவர் மு.சேகர், மாவட்டச் செயலாளர் மா.செந்தமிழினியன், இலால்குடி மாவட்ட தி.க. தலைவர் தே.வால்டேர், மாவட்டச் செயலாளர் ப.ஆல்பர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த மறியல் போராட்டத்தில் சமாஜ்வாடி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நீலமேகம், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் திருச்சி மாவட்டத் தலைவர் முபாரக் அலி, செயலாளர் அக்பர்பாஷா உள்ளிட்ட திருச்சி, இலால்குடி மாவட்டத்திலிருந்தும், மேலும் மாநகர இளைஞரணி அமைப்பாளர் மா.குணசேகரன், அவர்களின் கர்ப்பிணிப் பெண் அமுதா, பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் பேரா.ப.சுப்பிரமணியன், கழகப் பேச்சாளர் அதிரடி. அன்பழகன், வழக்கறிஞர் பூவை.புலிகேசி உள்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மறியல் போராட்டத்தை விளக்கி தலைமைக் கழகப் பேச்சாளர் அதிரடி க.அன்பழகன் விளக்கி உரையாற்றினார். சட்டஎரிப்பு வீரர் வே.முத்துக்குமாரசாமி, திருவரங்கம் நகரத் தலைவர் த.குமார், திருவரங்கம் நகரச் செயலாளர் இரா.மோகன்தாஸ், நகரத் துணைச் செயலாளர் த.அண்ணாதுரை, இளைஞரணி ச.கண்ணன், தமிழ்ச்செல்வம், தி.சண்முகம், காட்டூர் சங்கிலிமுத்து, தி.மகாலிங்கம், பெரியார் மாளிகை மூர்த்தி, பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் கலைச்செல்வன், அதிரடி. அன்பழகன், கவிஞர்.துரை காசிநாதன், ஜெயில்பேட்டை மா.தமிழ்மணி, மணப்பாறை கிளை குணசேகரன், விஜயராகவன், மண்வாசம், பிரான்சிஸ், தா.சங்கீதா, அய்யப்பன்( உறையூர்) தங்கம், கள்ளிக்குடி ஜி.அமுதா, தை.நாத்திகன் (மா.இளைஞரணி) சோமரசம் பேட்டை தியாகராஜன், மணிமாறன் (மே.க.கோட்டை) ப.சந்துரு, பங்கஜம்மாள், ரெஜினாமேரி, (பூலாங்குடி காலனி) செ.தமிழ், திருவெறும்பூர் ஜெயராமன், வழக்கறிஞர் வீரமணி, திருஞான சம்பந்தம் (தீரன்நகர்) மணப்பாறை பொ.திருமால், சக்திவேல், மணப்பாறை எம்.புண்ணியமூர்த்தி, எஸ்.பி.செல்வம், பெல்.ம.-ஆறுமுகம், வி.வடிவேல், வடக்கு தாராநல்லூர், மணிவேல், ஓட்டுநர் நல்லுச்சாமி, திராவிடமணி, இனாம்குளத்தூர் வேங்கையன், மணவை டைலர் சேகர், சக்திவேல், மாத்தையா, கார்த்தி, செபாஸ்டின், மு.நற்குணம், எம்.முருகன், விக்கி, முருகேசன், துறையூர், எ.அருள், ஜெயில்பேட்டை, திருவாணைகாவல் நாகராசு, ஆரோக்கியராசு (பொதுக்குழு உறுப்பினர்). திருச்சி மாநகரம்: மாவட்டத் தலைவர் மு.சேகர், கணபதி அய்யா, விடுதலை செல்வம், நீலமேகம், அ.மாவடியான், உண்மை கிருட்டிணன், உண்மை துரை, அன்னம்மாள், கணேசன், மு.இளவரி, விடுதலை செல்வம், திருவெறும்பூர் மாரியப்பன், நேதாஜி, ஸ்டாலின், துவாக்குடி இராமலிங்கம், திருவரங்கம் கோவிந்தன், மலர்மன்னன், த.விடுதலை, நிர்மலா துரைராசு, வி.பன்னீர்செல்வம், சித்தார்த்தன், சக்கரவர்த்தி, மாவட்ட மாணவரணி ப.பாலகிருஷ்ணன், பா.கலைச்செல்வன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில்: மாவட்டத் தலைவர் முபாரக் அலி, மாவட்டச் செயலாளர் அக்பர் பாஷா, அப்துல் ரகீம், முகமது சித்திக், அபூபக்கர், சாகுல் அமீது, சிராஜீதின், அப்துல்லா, சாதிக்அலி, காஜாமொய்தீன், மொய்தீன், முகமதுஅலி, முகமது கவீர், சவுகத்அலி, அமானுல்லா, அஸ்ரப், பக்கீர், முகமது சித்திக், முகமதுஅலி, சாகுல், அசாரூதீன், அமானுல்லா, ஹபீபுல்லா, ஹசன்முகமது, இர்பான், முகமது முபாரக், யாசர் அரபாத், அஜீஸ், முகமுது ரியாஸ், முகமது தௌபிக், முகமது இலியாஸ், முகமது ஆரிப், உத்மான் ஆகியோர் கைதாகினர். சோலையார்பேட்டை

சோலையார் பேட்டையில் ரயில் மறியல் போராட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.கே.சி.எழிலரசன், மாவட்ட செயலாளர் க.மகேந்திரன் தலைமையில் சோலையார் பேட்டை யில் நிலையத்தில் தடையை மீறி ரயில் மறிக்க ஈடுபட்டபோது கழக தோழர்கள் 500 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக