திங்கள், 7 ஜூன், 2010

ராஜபக்சே திருத்தவே முடியாத ஒரு சிங்களத் தீவிரவாதி:


சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ பரபரப்பு

சிங்கப்பூர்: இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்-கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்-பூரின் நவீன சிற்பியும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ பரபரப்பாக கூறியுள்ளார். ‘Citizen Singapore: How To Build A Nation’ என்ற நூலில்தான் இவ்வாறு ராஜபக்சே குறித்து படு காட்டமாக கூறியுள்ளார் லீ.

அதில் சில பகுதிகள்...

இலங்கையில் சிங்களவர்கள் எப்-போது முதல் இருக்கிறார்களோ அப்-போதிலிருந்தே தமிழர்களும் இருக்-கின்றனர்.

தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது.

இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்டுவிட்டனர். இதன் மூலம் இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தமி-ழர்கள் அடங்கிக் கிடக்க மாட்டார்-கள். சிங்களவர்களுக்குப் பயந்து ஓடி விடவும் மாட்டார்கள்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்-தவோ முடியாது என்று கூறியுள்ளார் லீ.

நூலாசிரியர் கேட்ட சில கேள்வி-களுக்கு லீ அளித்துள்ள பதில்கள்...

இலங்கை இன்று மகிழ்ச்சியுடன் இல்லை. மெஜாரிட்டியான சிங்கள-வர்கள், விடுதலைப் புலிகளை அழித்து-விட்டனர். உண்மைதான். ஆனால், சிறுபான்மையினரான தமி-ழர்களை வெல்லும் தகுதியும், துணிச்-சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை. யாழ்ப்பாணம் தமிழர்களை அவர்-களால் நிச்சயம் வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி, ஒடுக்க முயலுகிறார்கள். முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இது-தான் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முய-லுகிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்து விட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன். இலங்கையில் இன்று நடந்துகொண்டிருப்பது அப்பட்ட-மான ஓர் இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை.

தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடி-யாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அதற்கேற்பத்தான் சிங்கள அரசு இப்போது நடந்து-கொண்டிருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை, சிங்-களவர்களை விட தமிழர்களுக்குத்-தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதி-யானவர்கள் தமிழர்கள்தான். மலே-சியா, சிங்கப்பூரில் போய்ப் பார்த்தால் மலாய் இனத்தவரை விட சீனர்களும், தமிழர்கள் உள்-ளிட்டோரும்தான் கடுமையாக உழைக்கிறார்கள். அதேபோல இஸ்ரேலியர்களும், ஜப்பானியர்-களும் மிகக் கடுமை-யான உழைப்பாளிகள். எதிர்கால உலகம் சீனர்கள் மற்றும் ஆசியர்களிடம்-தான் இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார் லீ.

இந்த நூலை முன்னணி பத்-திரிகையாளரும், லாஸ் ஏஞ்சல்-ஸைச் சேர்ந்தவருமான பேராசி-ரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு எழுதியுள்ளார். இதை வெளியிட்ட நிறுவனம் டைம்ஸ் குழுமத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழவே முடியாது, தமிழ் ஈழம் மலர்ந்தால்தான் இலங்கையில் அமைதி திரும்பும் என்பதை தனது கருத்தின் மூலம் அழுத்தம் திருத்தமாக லீ வலி-யுறுத்தியுள்ளார் என்பது குறிப்-பிடத்தக்கது.

எனக்கு நீ வேண்டாம், தேவை-யில்-லாத சுமை என்று ஒரு நாள் மலேசியா, சிங்கப்பூரை தனியாக கழற்றி விட்டது. அப்போது நிலை குலைந்து போனார்கள் சிங்கப்பூர் மக்கள். ஆனால் அவர்களைத் தேற்றி, தனது தலைமையில் சிங்-கப்பூரை இன்று அட்டகாசமான பொருளாதார சக்தியாக மாற்றிய பெருமைக்குரியவர் லீ குவான் யூ என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக