சனி, 3 ஏப்ரல், 2010

சானியா மிர்சா


டென்னிஸ் விளை-யாட்டு வீராங்கனை சானியா மிர்சாவின் திரு-மணம் தேவையற்ற சர்ச்-சைக்கு உட்படுத்தப்பட்டு விட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டுக்காரர் சோயிப் மாலிக்கும், சானியாவுக்கும் திருமணம் வரும் 15ஆம் தேதி அய்-த-ரா-பாத்தில் நடைபெற உள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை _ இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் எப்படி திருமணம் செய்துகொள்ள-லாம் என்ற வினாவை இந்துத்துவாவாதிகள் கிளப்பு-கின்றனர்.

இந்து மக்கள் கட்சி என்றும் பஜ்ரங் தள் என்னும் (பஜ்ரங் என்றால் குரங்கு என்று பொருள்) சொல்லிக் கொள்ளும் இந்து வெறி அமைப்புகள் சானியாவின் படங்களைத் தீயிட்டுக் கொளுத்தியி-ருக்கின்றனர்.

ஒருவர் யாரைத் திரு-மணம் செய்துகொள்வது என்று அந்த ஒருவரின் தனிப்பட்ட உரிமையாகும். அதில் குறுக்கிட இந்தக் குரங்குகள் கூட்டத்திற்கு அதி-காரம் கொடுத்தவர்-கள் யார்?

இந்துத்துவா கும்பலின் கண்மூடித்தனமான மத-வெறி-தான் இதில் தலை கொழுத்து நிற்கிறதே தவிர, அறிவுப்பூர்வமான தலையீடு இதில் கிஞ்-சிற்றும் இருக்கிறதா?

இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும் திரு-மணம் செய்துகொள்ளக் கூடாது என்று தடை சட்ட ரீதியாக ஏதேனும் உள்ளதா?

இவ்வளவுக்கும் பார்த்-தால் திருமணம் செய்து-கொள்ளப் போகும் இரு-வரும் இஸ்லாமியர்கள் _ மத மறுப்புத் திருமணம்-கூட இல்லை. சானியா இந்துவாக இருந்து, பாகிஸ்-தான் முஸ்லிமை திரு-மணம் செய்துகொண்-டால், அடேயப்பா நாடே பற்றி எரிந்திருக்குமோ!

பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட இந்தியா வந்த நிலையில் ஆடுகளத்-தையே சேதப்படுத்திய வானரக் கும்பல் ஆயிற்றே!

பிரிட்டீஷ் ராணியும், போப்பும் இந்தியா வந்த-போதுகூட, அவர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய வானரப் படை-கள் எதைத்தான் செய்ய-மாட்டார்கள்?

மத உணர்வோடு இது-போன்ற போக்கிரித்தன-மான வேலைகளில் ஈடு-படுபவர்களை இரும்புக்-கரம் கொண்டு ஒடுக்க-வேண்டாமா?

வன்முறைக்கு வைத்-தியம் சட்டரீதியான அடக்குமுறைதான். இல்லாவிட்டால், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்தான்!

- மயிலாடன் www.viduthalai.com

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

தமிழீழத் தேசியத் தலைவரின் இல்லம் சிங்களக் காடையர்களால் உடைக்கப்பட்டு வருகின்றது


போர்க்காலத்திலும் அதன் பின்னரும் அந்த வீட்டினை மிகப் பெறுமதியான பொக்கிசமாகவே தமிழ் மக்கள் மதித்துவந்தார்கள். போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு செல்கின்ற மக்கள் அனைவரும் வல்வெட்டித்துறைக்குச் சென்று அந்த வீட்டில் இருந்து மண் எடுத்துச் செல்வதும், புகைப்படம் எடுத்துச் செல்வதுமான செயற்பாடுகள் இடம்பெற்று வந்தன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இரவு வேளைகளில் வீட்டினை உடைக்கும் நடவடிக்கை இடம்பெற்றுவருவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் தொடராக தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து மாவீரர் நினைவாலயங்கள் அனைத்தும் சிங்களப் படைகளால் அழிக்கப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் இராணுவ நிலையங்களும், தென்னத் தோட்டங்களும் அமைக்கப்பட்டன. இதனை விடவும் வன்னியில் துயிலுமில்லங்களை அழித்ததுடன் அவற்றில் சிலவற்றில் இருந்து மண் அகழ்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வீதிப் புனரமைப்பிற்கு அந்த மண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வன்னியில் அழிக்கப்பட்ட துயிலும் இல்லங்களுக்கு மேலாக விடுதிகளை அமைப்பதற்கான முனைப்புகள் முன்னெடுப்படுவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைவிடவும் யாழ்ப்பாணம் வன்னிப் பகுதிகளில் காணப்படும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நினைவுச் சின்னங்கள், தூபிகள், நினைவிடங்கள் அனைத்தும் சிங்களப் படையினரால் அழிக்கப்பட்டு சர்வதேச போரியல் தர்மங்களை மீறி அவர்களது காடைத்தனங்கள் வெளிப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வியாழன், 1 ஏப்ரல், 2010

உலகைப் படைத்தது கடவுள் என்ற நம்பிக்கைக்கு கல்தா!


உலகம் தோன்றியது எப்படி?
பெருவெடிப்பு (பிக் பாஃங்க்) சோதனை வெற்றி

ஜெனீவா, ஏப். 1_- உலகம் எப்படி தோன்றி-யது என்பது பற்றிய இரண்டாம் கட்ட, பிக் பாங் (பெருவெடிப்பு) பரி-சோதனை வெற்றியடைந்-துள்ளது. அணுக்கள் ஒன்று திரண்டு ஒரு பந்து போல இருந்த போது, அதில் திடீரென ஏற்பட்ட பெரிய வெடிப்பினால் அந்த அணுக் கூட்டம் சிதறி பரவ ஆரம்பித்தது. அதனால் ஏற்பட்டதே இந்த உலகம். இப்போ-தும் அந்த வெடிப்பினால் இந்த உலகம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்ட சில கோடி ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் இந்த உலகம் பழைய நிலைக்கு அதா-வது மீண்டும் ஒன்று திரண்டு விடும் என்பது தான், நவீன அறிவியலில் இந்த உலகம் தோன்றிய-தற்கு கூறும் காரணம். இந்தக் கொள்கை புதிய அறிவியலில், பிக் பாங் தியரி (பெரு-வெடிப்-புக் கொள்கை) எனப்-படும். இந்த பெருவெடிப்-புக் கொள்கையைப் பரி-சோதிப்பதற்காக, பிரான்ஸ் சுவிட்சர்லாந்து எல்லை-யில் அமைந்துள்ள சுவிட்-சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில், அணு ஆராய்ச்-சிக்கான அய்ரோப்பியக் கூட்டமைப்பான, செர்ன் (சி.இ.ஆர்.என்.,), பூமிக்-கடியில் 27 கி.மீ., அள-வில் ராட்சத சுரங்க வடி-விலான ஒரு பரிசோத-னைக் கூடத்தை அமைத்-துள்ளது. காந்த ஈர்ப்பு முறையில் அமைந்த இதில், அணுக்கள் மோதும் போது ஏற்படும் பிரம்-மாண்ட சக்தி மதிப்-பிடப்-படும்.

இந்தக் கூடம், லார்ஜ் ஹெட்ரான் கொலைடர் எனப்படும். கடந்த ஆண்-டில், இந்தக் கூடத்தில் பெருவெடிப்புக் கொள்-கையின் அடிப்படையில் அணுக்களில் உள்ள துகள்-களை மோதவிட்டு முதற்-கட்டப் பரிசோ-தனை நடத்தப்பட்டது. இந்-நிலையில், புதிய அறிவிய-லில் உலகத் தோற்றம் குறித்த பல்வேறு சந்-தேகங்களுக்கு விடை-யளிக்கும் விதத்தில் இரண்-டாம் கட்ட சோதனை நடந்தது. அந்தச் சோதனை வெற்றியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்-கின்-றன. இதைத் தொடர்ந்து, செர்ன் அமைப்பின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள், சோதனை வெற்றியடைந்-ததைக் கொண்டாடும் வகையில் பலமாகக் கை-தட்டினர்.

இந்த வெற்றி, புதிய அறிவியலில், இயற்பியல் துறையில் பல்வேறு புதிய பரிமாணங்களை வளர்க்-கும் என்று நம்பப்படு-கிறது. ஒரே நாளில் இதற்-கான விடை தெரியாது. காலப்போக்கில் அணுக்-கூறுகள் மோதும் போது ஏற்படும் சக்திகள் குறித்த ஆய்வின் முடிவில், உல-கம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்-படும். வரலாற்றுப்பூர்வ-மான பிரம்மாண்டமான தகவல் சேகரிப்பு இதன் மூலம் துவங்கியது என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர்.

ஆவியா? வாயுவா?

செய்தியும் - சிந்தனையும்

ஏடுகளிலும், இதழ்களிலும்தான் எத்தனை எத்தனை செய்திகள், தகவல்கள், ஒப்பனைகள்!

ஏதாவது ஒரு துரும்பு கிடைத்தால் அதைத் தூணாக்கிக் காட்டினால்தான் மக்கள் மயங்குவார்கள்; அற்ப விட்டில் பூச்சிகளாக தங்களால் விரிக்கப்பட்ட வலையில் வீழ்வார்கள் என்கிற தந்தி-ரத்தை ஏடு நடத்தும் வியாபாரிகள் கண்டு-பிடித்துள்ள தொழில் நுட்பம்.

காது, மூக்கு வைத்து கதை கட்டினால்-தான் மக்கள் வாய் பிளப்பார்கள் என்ற இரகசியத்தைத் தெரிந்து கொண்டு விட்டார்கள்.

திடீர் என்று ஒரு தகவல்: வேப்ப மரத்தில் பால் வடிகிறது _ பக்தர்கள் கூட்-டம்! (இது எதனால் வருகிறது என்று தாவர இயல் அறிஞர்கள் தெளிவுபடுத்திய பிறகும்கூட, தங்களின் வியாபாரத் தந்திரத்தை கைவிடுவதாக இல்லை).

காளைமாட்டின் கண்ணில் எம்.ஜி.ஆர். உருவம் என்று இன்னும் சில நாள்கள் கழித்து அவிழ்த்து விடுவார்கள்.

அதற்குப்பிறகு அம்மன் கண்கள் திறந்தன_ அதில் கண்ணீர் வடிந்தது என்று கட்டி விடுவார்கள்.

இப்படி குறிப்பிட்ட காலத்திற்கொரு-முறை மாயாஜால வித்தைகளைக் கட்டுரைகளாக்கி மக்களின் பர்சுகளைக் காலி செய்து விடுவர்கள்.

இப்பொழுது கரூர் பக்கத்திலிருந்து ஒரு தகவல்_ குமுதம் ரிப்போர்ட்டர் (1.4.2010) கட்டிக் கொண்ட புண்ணியம்!

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகாவில் உள்ள தரகம்பட்டியருகில் உள்ளது சந்தனத்தான் மேடாம்.

இரவு நேரங்களில் நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறதாம்.. யாரோ சொன்னார்களாம். இது ஒன்று போதாதா? தொலைக்காட்சி-களும், ஊடக செய்தியாளர்களும் படையெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

சில பெரிசுகளை சந்தித்துப் பேட்டிகள். டி.வி.யில் முகம் தெரியும் என்ற ஆசை பெரிசுகளுக்குக்கூட பீறிட்டு விட்ட கால கட்டம் இது. அவரவர்களும் மனம் போன வாக்கில் அவிழ்த்துவிட ஆரம்பித்து விட்டனர். இந்த ஆவி, பிசாசு, முனீஸ்வரன், கொள்ளிவாய்ப் பிசாசு என்கிற சமாச்-ரங்கள் எல்லாம் பெரும்பாலும் நம் நாட்டுக் கிராமத்துப் பெண்களிடத்தில்தான் ஸ்பரிசம் அதிகம்.

கருப்பாய் வாந்தி எடுத்தான் என்று ஆரம்பித்து கடைசியில் குடை குடை-யாய் வாந்தி எடுத்தான்; காக்கா காக்-காயாய் வாந்தி எடுத்தான் என்கிற-வரை வால் நீண்டு கொண்டு போகுமே!

அந்தப் பகுதியில் பார்ப்பனர்கள் ராஜாக்களிடமிருந்து பெற்ற தங்கக் காசுகளைப் புதைத்து வைத்திருந்தன-ராம். அதைக் கேள்விப்பட்ட கொள்-ளையர்கள் அந்தப் பகுதிக்குச் சென்ற-போது, புதைத்து வைத்த இடத்தைப் பார்ப்பனர்கள். சொல்ல மறுத்து விட்டனராம்.

கொள்ளையர்கள் அந்தப் பார்ப்பனர்களைக் கொன்று போட்டுச் சென்று விட்டனராம். அந்தத் தங்கக் காசுகளை யாரும் எடுத்துப் போய் விடக் கூடாது என்று கொலை செய்யப்பட்ட பார்ப்பனர்களின் ஆவி இரவு நேரங்களில் நெருப்பாய்க் கொதிக்கின்றனவாம்!

இன்னொரு தகவல்:

ராஜா ஒருவர் நடனப் பெண்ணிடம் தவறாக நடந்து வந்ததாகவும், அந்த நடனப் பெண் அரண்மனைக்குள் தீக்-குளித்து பலியானதாகவும், அந்தப் பெண்ணின் ஆவிதான் தீயாக எரிகிறது என்றும் இன்னொருவர் கதைத்துள்ளார்.

அடேயப்பா, இவர்களெல்லாம் சினிமா கதை மற்றும் வசனம் எழுதக் கிளம்பினால், எழுத்தாளர்கள் எல்-லாம் வீட்டுக்குப் போகவேண்டியது-தான்!

அந்த இடத்திற்குச் சென்றவர்கள் ஆவி அடித்து செத்துப் போய் விட்டார்களாம்.

அந்த இடத்துக்குச் சென்ற ஒரு பெண் கிணத்தில் விழுந்து செத்துப் போச்சாம் ஆனால் காலில் செருப்புடனும், கையில் கொடு வாளுடனும் சென்ற-வரை அந்த ஆவியால் ஒன்றும் செய்ய முடியவில்லையாம்!

அப்படியென்றால் ஆவியின் சக்தியைவிட செருப்புக்கு அதிக சக்தி உண்டு என்று தானே அர்த்தம்?

இவ்வளவையும் ஒண்ணே முக்-கால் பக்கம் எழுதித் தள்ளிவிட்டு கடைசி ஒரு பத்தியில், இதுகுறித்து கரூர் அரசு கல்லூரி வேதியியல் பேரா-சிரியர் ஜஸ்வந்த் தெரிவித்த கருத்-தினை வெளியிட்டுள்ளது.

பாழடைந்த கிணறுகளில் தேங்கி நிற்கும் கழிவுகளால் மீத்தேன் என்கிற விஷவாயு உருவாகித் தீப்பந்துபோல் எரியும். அதேபோல சில இடங்களில் புதையுண்ட மரங்கள் மக்கிப் போய் பீட் (றிமீணீ) வகை கரிகள் உருவாகும். இப்படி மாஸ்கேஸ், பீட் ஃபார்மேஷன் ஆகிய இருவகை செயல்பாடுகளால் மட்டுமே இந்தப் பகுதியில் நெருப்பு உருவாகலாம். அந்தப் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்ட பெரிய குழி இருந்து, அது காலப் போக்கில் மூடப்படும்போது அதனடியில் பெரிய வெற்றிடம் உருவாகும். அதனால்தான் கல்லைத் தூக்கிப் போடும்போது சத்தம் வருகிறது. உள்ளே இருக்கும் மக்கிய பொருள்கள் பகலில் அடிக்கிற வெயிலை உள்ளே கிரகித்துக் கொள்வதால், இரவு நேரங்களில் சூடான வாயுவாக வெளியேறும்போது, ஜுவாலையாகத் தோன்றவும் வாய்ப்புள்ளது என்றார்.

குமுதம் ரிப்போர்ட்டர்,
1.4.2010 பக்கம்!)

கடைசியாக என்ன எழுதுகிறது இந்த ரிப்போர்ட்டர்? என்னவாக இருந்தால் என்ன? சந்தனத்தான் மேட்டில் தீயோடு தினந்-தோறும் அந்த நடனக் கதையும், புதுப்-பொலிவு பெற்றுக் கொண்டிருக்கிறது _ சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் என்கிறது இந்த இதழ்:

இப்படி ஒரு கட்டுரை குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த இதே கால கட்டத்தில் திருவில்லிப்புத்தூரையடுத்த தைலாபுரம் ஊரணியிலிருந்து ஒரு தகவலை தினமலர் (28.3.2010) வெளி-யிட்டுள்ளது.

அந்தத் தகவல் இதோ: ஊரணியில் தீப்பொறி பாதிப்பு ஏற்படாது: கனிமவளத் துறை ஆய்வில் தகவல் விருதுநகர் மாவட்டம் திருவில்லி-புத்தூரை அடுத்த அழகாபுரி அருகே இலந்தைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட தைலாபுரம் ஊரணியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆழப்படுத்தும் பணி நடந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை அப்-பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கிரிக்-கெட் விளையாட, ஸ்டெம்ப் நடு-வதற்காக மண்ணை தோண்டியுள்-ளனர். அப்போது திடீரென வெள்ளை புகை வந்து தீப்-பொறி வந்துள்ளது. இதையடுத்து,ஏற்பட்ட பரபரப்பால் ஊரணியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கனிம வளத்-துறை அதிகாரிகள் வந்து மண்ணை பரிசோதனை செய்தனர். அத்துறையை சேர்ந்த விஜயகுமார் கூறியதாவது: ஊரணி மண்ணில் சுண்ணாம்பு படிவம் உள்ளது. இப்படிவம் உள்ள இடத்தில் மண்ணை வெயில் நேரத்தில் தோண்டி-னால், புகையோ, தீயோ ஏற்படாது. இரவு நேரத்தில் பகலில் அடிக்கும் வெயிலை சுண்ணாம்பு படிவம் ஈர்த்து வைத்துக் கொள்ளும். இரவில் சுண்ணாம்பு படி-வத்தை கடப்பாரை கொண்டு தோண்டும் போது புகை, தீப்பொறி வரும். நாங்கள் பகல் நேரத்தில் பரிசோதித்ததில் எந்த வித புகையோ, தீயோ ஏற்படவில்லை. இருந்தும் இரவிலும் பரிசோதனை செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க-வுள்ளோம். மற்றபடி மீத்தேன் போன்ற விஷ வாயுக்களோ, எரிமலையோ இல்லை. இது குறித்து மக்கள் பீதி-யடைய வேண்டாம், என்றார்.

ஒரு முட்டாள்தனமான_ அறிவுக்குப் பொருத்தமற்ற ஒன்றை, மூடநம்பிக்கை-யில் மூழ்கிப் போன மக்களின் வாயி-லிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பீதியைக் கிளப்பும் வகையில் இதழ்கள் வெளியிடுகின்ற-னவே_ அறிவியல் கண்டுபிடித்த கருவி-களைக் கொண்டு அச்சிட்டு களேபரம் செய்கிறார்களே!

இதுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் குடிமக்களின் அடிப்-படைக் கடமையா?

மக்களிடம் விஞ்ஞான மணப்பான்-மையை ஒவ்வொரு குடிமகனும் பரப்ப, வளர்க்கப் பாடுபட வேண்டும் என்பது, ஏடுகளுக்கும், இதழ்களுக்கும், ஊடகங்-களுக்கும் பொருந்தாதா?

லண்டன் தொலைக்காட்சியில் உத்திராட்சக் கொட்டையின் மகிமையை ஒளிபரப்பிய நிலையில், அரசு உடனடி-யாக அதனை மேலும் ஒளிபரப்ப விடாமல் தடை செய்ததே! அது நாடா _ இது நாடா?

நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது?

கருஞ்சட்டை

பார்ப்பனியமும் – சென்னை பதிவர் குழுமமும்

யார் அழைத்தென்றே தெரியாமலே மற்றுமொரு பதிவர் சந்திப்பு மாதிரி குழுமினோம். பெயர் பட்டியலில் இருந்த லக்கியும் நான் பொறுப்பள்ள என சொல்ல இதனை ஆரம்பித்து வைத்தது யாரோ வாசுதேவாயா தண்டோராய கேபிளாய நமஹ.

வழக்கம்போல் பேப்பரும் பேனாவாக குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார் போட்டோவில் மிடுக்காகவும் நேரில் தளர்வாகவும் இருந்த மற்றொமொர் பார்ப்பனர். School புத்தி. எனது பையனை UKG படிக்கும் schoolலின் வளாகத்தில் கையில் பேப்பரும் புத்தகங்களுமாய் கடைசி நேரத்திலும் குழந்தைகளுக்கு வகுப்பெடுக்கும் பார்ப்பனியமுகங்கள் நினைவில் வராமலில்லை.

கடைசிவரை வடை கிடைக்கவில்லை, டீயும் இரண்டு மாரி பிஸ்கட்டும் கிடைத்தது. சரக்கு வழியில்லாமல் சென்றதால் யாரும் சரக்கு வாங்கிதரவில்லை. அப்புறம் ஆபிஸ் வந்து ஏஸியை போட்டுட்டு ஆர்.ஸியை திறந்தேன். சொல்ல மறந்துட்டேன் சிவராம் பேசும் போது முதலில் கையைதட்டி பின்னூட்டமிட்டேன்.

உரையாடல் அமைப்பு தன் சொந்த காசு போட்டு செலவு செய்யக்கூடாது என்று ஆர்வமிகுதியில் பேசினார், டீ.வி.ஆர். வாய்விட்டு சிரிக்கலாம் வாங்க.அதற்கு பைத்தியக்காரன் எழுந்து நாங்கள் தற்கொலை தான் செய்துக்கொள்வோம். இப்படிதான் இருப்போம் இதுதான் எங்களுக்கு பிடித்து இருக்கிறது. யாரிடமும் சென்று யாசகம் கேட்கமாட்டோம் என்று சொன்னது அவரது சார்ப்னஸயும் அல்ர்ட்னஸையும் பறைசாற்றியது.

என்னுடைய கேள்வி.. எல்லா front seatயையும் பார்ப்பனர்களே முந்திக்கொள்வது ஏன்? அவர்களே தங்களை முன்னின்று ப்ரதானமாய் அனைத்திலும் முன்னிருத்திக்கொள்வது ஏன்? Reverse psychology உள்ளுக்குள் வீக்கா feel பண்ணறதாலயிருக்குமோ?

ஒரு புத்தகத்தில் ‘சாரு’ சொல்லுவார். ”அது என்ன விசுவ் இந்து பரிசத், பஞ்ரங் தள், பி.ஜே.பியை விடுங்கள் மத்த எல்லா கட்சிகளிலும் இவர்களே முக்கியமான பதவிகளில் ஆக்கரமித்து கொள்வது எப்படி?’ என.

எல்லோரும் பேசுகையில் அமைதி காத்த கூட்டம் சுகுணாதிவாகர் பேசும்போது மட்டும் சலசலவென சத்தம் அதிகமான போது, சடாரென எழுந்த நர்சிம், ’பேசுராங்கயில்ல அமைதியாயிருங்க’ என சத்தமிட்டுபின் அமைதியானது கூட்டம்.இது ஒன்றே போதும் அவர் தலைவராக, பல்வேறு சாதனைகள் அவர்பின் இருப்பினும்.

அப்புறம் வேறு யாருக்கொல்லாம் பதவிகள் கொடுக்கலாம். லக்கி(உபதலைவர்), கேபிள் சங்கர்(கொ.ப.செ), வானம்பாடிகள்(அமைப்பாளர்). உறையாடல் அமைப்பு ஒரு உள்துறையாக(கட்டற்ற சுத்ந்திரத்துடன்) செயல்படலாம். வால்பையன் போன்றோர் பகுத்தறிவு பட்டறை நடத்தலாம். என்னை போன்றோர் கவிதை எழுதி மற்றோர் உயிரை வாங்கலாம்.


(தமிழ் ஏன் தாழ்ந்து கிடக்கிறது என்று? தமிழ்நாட்டின் பிராமண புத்திஜீவி வர்க்கம்தான் இதற்கு முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும். அவர்களுக்குத்தான் இங்கே ஆங்கிலம் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள்தான் ஆங்கிலத்தில் சரளமாக எழுதக் கூடியவர்களாகவும், பேசக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரிந்த கலை இலக்கியம் என்ன? எஸ்.வி. சேகர், க்ரேஸி மோகன் நாடகம், ஜனரஞ்சகப் பத்திரிகைகள்… அவ்வளவுதான். -
www.charuonline.com

நித்யானந்தா உள்ளிட்ட மோசடி சாமியார் கும்பலை கைது செய்க!


உள்நாட்டு, வெளிநாட்டு சொத்துகளை அரசுடைமையாக்குக!
கி.வீரமணி வேண்டுகோள்!


ரூ.5 ஆயிரம் கோடியில்
நித்யா சுகபோக வாழ்க்கை அம்பலம்

பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்த திருவண்ணா-மலையைச் சேர்ந்த ராஜசேகரன் என்ற ஓர் 32 வயது இளைஞன் திடீரென நித்தியானந்தாவாக அவதாரம் எடுத்து, காவி உடை தரித்து, உள்நாட்டிலும், வெளி-நாட்டிலும் ஆன்மிக வியாபாரம் செய்து, சுமார் ரூ.5 ஆயிரம் கோடி சொத்துகளைச் சேர்த்து, பல ஊர்-களிலும் மடங்கள், தியான பீடங்கள் என்று அமைத்து, அதில் சினிமா நடிகைகள், வாழ்க்கையில் விரக்தி அடைந்த மணவிலக்குப் பெற்ற பெண்கள், விதவைகள், குடும்பப் பெண்கள் முதலிய பலருடன் யோகா, தியானம் என்பவைகளைக் காட்டி அவர்களின் கற்-பையும் சூறையாடி, சுகபோக வாழ்க்கை நடத்தியுள்ளது அம்பலமாகி உள்ளது!

இந்த கிருஷ்ணருக்கு வந்து பணிவிடை செய்த பெண்களுக்கெல்லாம் கோபிகா என்ற அடை-மொழியில் பெயர்கள்! என்னே ஆன்மிகம்! என்னே கடவுள் பக்தி!!

லீலைகள் - அசிங்கங்கள்

இளம் பையன்கள் எல்லாம் கடத்தப்பட்டும், ஓடோடி வந்து இந்த ஆ_சிரமத்தில் தங்கியவர்களுடன் லீலை-கள் ஆத்ம போதனை என்று எழுதமுடியாத அசிங்-கங்களின் அரங்கேற்றங்கள் எல்லாம் நடந்ததுபற்றி, தொலைக்காட்சிகளும், மீடியாக்களும், நக்கீரன் போன்ற ஏடுகளும் வண்டி வண்டியாக தகவல்களைத் தந்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன!

தவியோ தவி என்று தவித்து!

பல படித்த பாமர முண்டங்கள் இந்த மோசடிப் பேர்வழி விரித்த ஆன்மிகப் பயிற்சி தியான, யோகா பயிற்சி வலைகளில் நன்றாக மாட்டிக்கொண்டு, அறுத்-தெறியத் தெரியாது வேடனிடம் சிக்கிய புள்ளி மான்-களாக ஆகி, தவியோ தவி என்று தவிக்கின்றார்கள்! அவமானத்தில் தலைகுனிவுடன் உள்ளார்கள்.

ஏதோ ஒரு குப்பையைக் கிளறினால் ஏதேதோ வரு-மாமே அதுபோன்று இந்த ஆசாமிபற்றி வரிசையாக அருவருப்புச் செய்திகள்.

சொகுசானந்தாவுக்கு எப்படி இவ்வளவு சொத்துகள்?

குறுகிய காலத்தில் இந்த சுந்தர கோஷ் சொகு-சானந்தாவுக்கு இவ்வளவு சொத்துகள் சேர்ந்தது எப்படி?

இந்த மோசடிப் பேர்வழியை வளர்த்துவிட்ட குற்றவாளிகள்_ பெரிதும் வார ஏடுகளே!

மீடியாக்களின் எல்லை மீறல் விளம்பரங்கள் _ விதவிதமான போஸ்களில் அந்தப் பித்தலாட்டக்-காரனின் படம், வாரந் தவறாமல் கட்டுரை _ அதையும் பேச்சுகள், எழுத்துகள் மற்றும் சி.டி., புத்தகங்கள் தமிழ், இங்கிலீஷ் மற்றும் பல மொழிகளில் எழுதிட பல கூலி _ போலி எழுத்தாளர்கள் (நிலீஷீ, ஷ்க்ஷீவீமீக்ஷீ, பிவீக்ஷீமீறீவீஸீரீ), ஏஜண்டுகள், கங்காணிகள் இத்தியாதி! இத்தியாதி!!

அமைச்சர்கள், அதிகாரிகள்

இதில் ஒரு மகாவெட்கக்கேடு, நன்றாகப் படித்த-வர்-கள், பெருநிலை அதிகாரிகள், கருநாடக முதலமைச்சர் போன்ற பெரும் பதவியாளர்கள் எல்லாம் அவருடைய மடத்திற்கும், கூட்டங்களுக்கும் சென்றதால், அதைவிட பெரு விளம்பரம்; தொத்து நோய் போன்ற பக்திப் பரவசம்; பணத்தைத் தண்ணீராகச் செலவிட்டு, ஒரு கார்ப்பரேட் (வியாபாரக்) கம்பெனி போல இவரது அமைப்புகள் நடந்தன!

வெளிநாட்டில், அமெரிக்கா, கனடா போன்ற பல நாடுகளில் இவரது லீலா வினோத திருவிளை-யாடல்-க-ளுக்கு தனித்தனி பாஷ் (றிஷீலீ) மாட மாளிகை, கோபு-ரங்-கள், கோயில்கள் என்ற திரையுடன்!

சீடர்கள், சீடிகள் எல்லாம்!

இப்போது இங்குள்ள சீடர்களால், சீடிகள் எல்லாம் அம்பலத்திற்குப் பல செய்திகளை அடுக்கடுக்காகக் கொண்டு வரப்படுகின்றனவோ, அதுபோல அமெரிக்-காவில் இவரது கிருஷ்ண லீலைகளை அமெரிக்கவாழ் சீட கோடிகளே, அங்குள்ள அரசு (பிராசிகியூஷன்) வழக்குரைஞருக்குப் புகார் மனுவாகக் கொடுத்துள்ளனர்.

பல இடங்களிலும் அப்ரூவர்கள் யாரும் கேட்-காமலேயே சுயம்புவாகக் கிளம்புகின்றனர்!

நித்யானந்தா என்ற காவி உடை ஏமாற்றுப் பேர்வழி ஆன்மிக வேடத்தில் பல மோசடிகள் செய்து வருகிறார்.

தேசத்தின் மானம் கப்பல் கப்பலாக ஏறி!

1. கலிபோர்னியாவில் நித்யானந்தா பவுண்டேசன் 2. லைஃப் பிள்ளீஸ் பவுண்டேசன் 3. நித்திய யோகா 4. வேதிக் டெம்பிள் 5. தியான பீட பவுண்டேசன் என்று பல வகையிலும் 2003 இல் தொடங்கி அவ-ரோடு ஒட்டி உறவாடிய பக்தன் டக்ளஸ் மெக்கெல்லர் என்ற அமெரிக்கர் அந்த கலிபோர்னியா அட்டர்னி _ ஜெனரலுக்குப் புகார் மனுக்களை ஆதாரத்தோடு தந்து, கிரிமினல் மற்றும் சிவில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுள்ள செய்தி, நாறடிக்கின்றது!

இந்தத் தேசத்தின் மானம், மரியாதை எல்லாம் கப்பல் கப்பலாக ஏறி வெளிச்சம் போட்டுக் காட்டி நம்மை வெட்கப்பட வைத்து வருகிறது!

நித்யானந்தா டக்ளஸ் மெக்கல்லர் என்பவர் சுவாமி நித்திய பிரபா கூறுகையில், அறையில் பெண்களுடன் இருக்கும்போது அறைக்கு வெளியே என்னைத்தான் பாதுகாவலராக நிறுத்தி வைப்பார் என்றும், நித்யானந்தா நடத்தும் யாகங்களில் _ யாக குண்டத்தில் காய்ந்த கஞ்சா விதைகளைப் போடுவார்.

2007 ஆம் ஆண்டு நித்யானந்தா தமிழ் சினிமா நடிகை ஒருத்தரை கலிபோர்னியாவுக்குக் கூட்டி வந்-தாரு; அவங்க பேரு எனக்கு நினைப்பில்லே, ஆனா அவர்-கள் திருமணம் ஆனவங்க என்பது மட்டும் தெரி-யும். அந்த நடிகைகூட என் வீட்டுல 15 நாள் தங்கி-யிருந்தார். அந்த நடிகைக்கும், நித்திய ஆனந்தாவுக்கும் செக்ஸுவல் ரிலேஷன் ஷிப் இருந்ததை நான் புரிஞ்சுகிட்டேன். அதைப் பத்தி அவரிடமே கேட்டேன்.

கடவுளை அடைய ஆனந்த வழியாம்!

கடவுளை அடைய ஆனந்தமான வழி இதுதான்னு என்கிட்டே சிரிச்சுக்கிட்டே சொன்னாரு என்று கூறு-கிறது அந்தக் கடிதம். அது மட்டுமா?

ஆசிரமத்திற்கு வந்த பல பெண்களோடு குரூப் செக்ஸ் வெச்சுகிட்டதையும் என்னால் உணர முடிந்தது. பல பெண்களோடு சந்தோஷமாக இருக்கிறதை அவர் மறைக்கவோ, மறுக்கவோ இல்லை!

பிரத்தியேகமான அறை

சனாதன கோயிலில் நித்தியானந்தாவின் பயிற்சிப் பட்டறைகள் நடக்கும். கோயிலோட கர்ப்பக்கிரகத்திற்குப் பக்கத்திலேயே சகல வசதிகளோடு கூடிய சொகுசு அறை இருக்கு. அவருக்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேகமான அறை அது! ................ இதற்குமேல் எழுதி நம் தரத்தைத் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.

ஆன்மிகத்தை உலகமயமாக்கி...?

இதுபோன்ற பல்வேறு குற்றங்களை _ சர்வதேச ரீதியில் செய்து, ஆன்மிகத்தை உலக மயமாக்கி கோபியர் கொஞ்சும் ரமணா, கோபாலகிருஷ்ணா என்ற கலியுக புருஷன் இந்த கிரிமினல் பேர்வழி சட்டத்தின் பிடிகளிலிருந்து தப்பிட, ஆசிரமத்தை வேறு ஒரு ஆனந்தாவிடம் விட்டுவிட்டு, இவர் தனியே ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபடப் போவதாக ஒரு கபட நாடகம் போட்டுள்ளார்! இதை அரசுகள் ஏற்கப் போகின்றனவா? சட்டப் பிடியிலிருந்து தப்புவதற்குத்தானே இந்த தற்காலிக ஏற்பாடு?

மோசடி கும்பலுக்கு
சரியான தண்டனை

காலாவதியான மருந்துகள் விஷயத்தில் கடும் நடவடிக்கை எவ்வளவோ, அதைவிட மோசமான தேசியக் குற்றம் _ காலாவதியான பக்தி, மத வேடங்கள் அணிந்து பல்லாயிரக் கோடிகள் சொத்து சேர்த்த குற்றவாளி ஏதோ ராஜபோக வாழ்வு வாழ விட்டுவிடுவதாகும்.

1. இந்த மோசடிக் கும்பலைக் கைது செய்து சட்டத்-தின்முன் நிறுத்தி சரியான தண்டனை வழங்கவேண்டும்.

அரசுடைமையாக்க வேண்டும்!

2. அந்த ஆசிரமங்கள் _ உள்நாட்டு, வெளி-நாடு-களிலும் உள்ளவைகளை அரசுடைமைகளாக்கி எடுத்துக்கொண்டு, மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்திடவேண்டும்.

கருநாடக அரசும், மத்திய அரசும் இதுபற்றி அலட்சியமாக இருக்கக் கூடாது.

அரசுகள் வெறும் ஓட்டுக் கண்ணோட்டத்தோடு பார்க்காமல், நாட்டுக் கண்ணோட்டத்தோடு, பார்க்க முன்வரவேண்டும் என்பதே நமது வேண்டுகோளாகும்.

செவ்வாய், 30 மார்ச், 2010

சாமியார்களுக்கெல்லாம் இது கெட்ட நேரம்

என். நரசிம்மன்

(மார்ச் 18 ஆம் தேதி தான் பிடாடி ஆசிரமத்திற்கு கட்டா யம் வருவேன் என்று சாமி நித்யானந்தா உறுதிபடக் கூறினார்; ஆனால் அவ்வ று வரவேயில்லை - மாய மாக மறைந்துவிட்டார்!)

நான் கோயில்களுக்கெல்லாம் அதிகமாகப் போவதில்லை. கடந்த முறை அமெரிக்க நாட்டின் சீட்டிலுக்கு நாங்கள் சென்றிருந்தபோது உங்களின் பிறந்த-நாளன்று, கடவுளின் ஆசி பெற ஒரு கோயிலுக்கு நாம் செல்ல வேண்டும் என்று என் மனைவி கல்யாணி கூறினார். 2009 ஆகஸ்ட் 27 தேதி எனது 70 ஆவது பிறந்த நாள்.

சீட்டில் நகரத்து நித்யானந்தசாமி வேதகோயில்

போயிங் விமான நகரமாக சீட்டில் நகரின் ரெட்மாண்ட் பகுதியில் உள்ள நித்யானந்தா வேத கோயில்தான் அருகில் உள்ள கோயில் என்று எனது மருமகள் மஞ்சுளா கூறினார். இந்தப் பெயரை அப்போதுதான் முதன் முதலாக நான் கேட்-டேன். கிர்க்லேண்டில் வசிக்கும் எங்-களது இளைய மகன் கவுரங்கும், மரு-மகள் மஞ்சுளாவும் மாலை 6 மணிக்குப் பிறகு அவர்களது டயோடா பியரிஸ் காரில் எங்களை அழைத்துக் கொண்டு சென்றனர். அப்போது அங்கு வந்திருந்த எங்களது மூத்த மகன் கவுரவ்கும் சேர்ந்து கொண்டார். ஒரு சில நாட்களுக்கு முன்புதான் அந்தக் காரை வாங்கியிருந்த கவுரங், தான் ஒரு நாத்திகன் என்றும், கவுரவ் கோயில்களுக்கும் திருவிழாக்-களுக்கும் அங்கு கொடுக்கப்படும் சாப்பாடு அயிட்டங்களுக்காகத்தான் செல்கிறார் என்றும் கூறினார்.

நித்யானந்த வேதக் கோயிலின் வாசலில் இருந்த உயரமான பெண் தொண்டர் ஒருவர் எங்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். வாழ்க்கைக்கு வேதப் பேரறிவைக் கொண்டு வரும் நோக்கத்தில் நித்யானந்த பரமஹம்சர் கட்டியுள்ள நான்கு கோயில்களில் இதுவும் ஒன்று என்று அவர் கூறினார். நாங்கள் பெங்களூரு-வைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்தவுடன், தானும் பெங்களூருவுக்கு அருகில் பிடாடியில் உள்ள ஆசிரமத்தில் சில வார காலம் தங்கிவிட்டு இப்-போதுதான் திரும்பியிருப்பதாக அப்பெண் தொண்டர் கூறினார்.

புன்னகையுடன் கூடிய இளைஞரான நித்யானந்த சாமியின் புகைப்படம் வருபவர்களை வரவேற்பது போல் தோற்றமளித்தது. அவரது சிறிய உடலுக்கு அவர் அணிந்திருந்த காவித் தலைப்-பாகை பொருத்தமில்லாதது போலத் தோன்றியது. தரைதளத்தில் ஆசிரமம் அமைந்திருந்த அந்தக் கட்டடம் நகரின் மிகவும் முக்கியமான வணிக வளாகப் பகுதியில் அமைந்திருந்தது. நித்யானந்தா வேத மய்யம் என்ற பெயர்ப்பலகை தனது செயல்பாடுகளைப் பற்றி விளக்குவதாக நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டிருந்-தது. முன்னதாக இருந்த வரவேற்பறையை அடுத்து உள்ளே சற்று பெரிய அறை ஒன்று இருந்தது.

கோயிலின் கருவறைக்குச் செல்லும் வழியில் இருந்த ஹால் பெரியதாக இருந்தது. அழகான, நல்ல நிறம் கொண்ட ஒரு பூசாரி, வழிபாடு சடங்குகளைச் செய்து கொண்டும் மேற்பார்வையிட்டுக் கொண்டும் இருந்தார். அவருக்கு வயதில் இளைய பயிற்சித் தொண்-டர்கள் உதவி செய்து கொண்டிருந்-தனர். ஊதுவத்தி எரியும் வாசம் வந்து கொண்டிருக்க, கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டப்பட்டு, தீர்த்தமும், குங்குமமும், பூக்களும் பிரசாதமாக வழங்கப்பட்டன. அங்கு வந்திருந்த பக்தர்களில் சில அயல்நாட்டினரும் இருந்தனர். வெளியே வரும் வழியில் இருந்த சிறு அறை ஒன்றில் இலை-களால் ஆன கோப்பைகளில் பிரசாதங்கள் வைக்கப்பட்டிருந்தன. குறைந்த அளவு நன்கொடை 1 டாலர் என்று பெயர்ப்பலகை தெரிவித்தது.

சோதனை செய்து வெற்றி கண்ட ஆன்மீக வியாபாரம்

சில வார காலத்தில் சுவாமிஜி வர இருக்கும்போது நடத்தப்பட இருக்கும் பயிற்சி முகாமுக்கு ஆள்களை சேர்ப்பதில் தொண்டர்கள், குறிப்பாக பெண் தொண்டர்கள் மும்முரமாக இருந்தனர். தங்குமிடம், உணவு உள்-ளிட்ட இந்த முகாமுக்கான நன்-கொடைக் கட்டணம் 6,000 டாலர்கள். மற்ற ஆன்மிகத் தலைவர்களால் சோதனை செய்து வெற்றி பெற்ற ஆன்மிக வியாபாரம் இது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. அவரது ஆசிகளையும், தங்களைக் குணப்படுத்தவேண்டும் என்று கோரியும் வரும் இமெயில் கடிதங்-களைக் கையாளக்கூட இயலாத அளவுக்கு அவரைப் பின்பற்றும் தொண்டர்கள் கூட்டம் பெருகியது. தனது ஆசிகளைக் கோரும் இத்த-கைய தொண்டர்கள் தினமும் காலை 7 மணி முதல் 7.20 வரை வரதமூர்த்-தியைத் தொழ வேண்டும் என்று ஆலோசனை கூறி சாமிகள் கேட்டுக் கொண்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த கணினியில் எங்கள் வருகையைப் பதிவு செய்த பின் நாங்கள் வெளி-யேறினோம்.

நாங்கள் இந்தியாவிற்குத் திரும்பிய பின் சிறிது காலம் சென்றபின், தனது நகைச்சுவைப் பேச்சுக்குப் பெயர்-போன ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி ஒருவரைப் பார்த்து, சாமி நித்யானந்தாவைப் பற்றி கேள்விப்-பட்டிருக்கிறீர்களா என்று கேட்டேன். கேள்விப்பட்டது மட்டுமல்ல; பிடாடி அருகே உள்ள அவரது ஆசிரமத்-திற்கும் நான் சென்றிருக்கிறேன். நான் சென்றிருந்தபோது அவர் அங்கிருக்கவில்லை; ஆனால் விருந்தோம்பல் நன்றாகவே இருந்தது என்று கூறிய அவர், பாமர மக்களை எவ்வாறெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.

கள்ளக் காதல் மட்டுமா?
கள்ள நோட்டுகளுமா?

சாமி நித்யானந்தாவுடன் தமிழ் சினிமா நடிகை ஒருவர் சல்லாபம் செய்த வீடியோ காட்சிகள் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்தது இது. யூடியூப் மற்றும் கூகுல் ஆகிய-வற்றின் மூலம் அவருக்குக் கிடைத்த விளம்பரத்தைவிட மிகப் பெரிய விளம்பரம் இந்த தொலைக் காட்சி ஒளிபரப்பின் மூலம் நித்யானந்தா-வுக்குக் கிடைத்தது. பாலியல் திறமை மட்டுமல்லாமல், கள்ள நோட்டு அடிக்கும் திறமையும் அவருக்கு இருக்-கிறது என்று பேசப்படுவதற்குக் காரணமாக, அவரிடமிருந்து பணத்-தைத் திருடிக் கொண்டு போன ஒருவனிடம் இருந்த அந்தப் பணம் கள்ள நோட்டுகள் என்று கண்டு பிடிக்கப்பட்டது அமைந்தது.

தற்போது நடைபெறும் கும்ப-மேளாவிற்குப் பிறகு மார்ச் 18 ஆம் தேதிதான் பிடாடி ஆசிரமத்திற்குக் கட்டாயமாக வருவேன் என்று உறுதிபடக்கூறிய நித்யானந்தா அவ்வாறு வரவில்லை என்பதுடன் மாயமாக மறைந்துவிட்டார். கற்பழிப்பு, முறையற்ற பாலியல் உறவு போன்ற ஏழு குற்றச்சாற்றுகள் அவர் மீது காவல்துறையால் பதிவு செய்யப்-பட்டுள்ளன. அவரது பக்தர்களும் மற்ற பொதுமக்களும் அவரது வருகைக்-காகக் காத்திருக்கின்றனர்.

இப்போதெல்லாம் சாமியார்களுக்-குக் கெட்ட காலம்தான். ஒன்று வானத்து நட்சத்திரச் சேர்க்கை-களாலோ, அல்லது திரை நட்சத்திரச் சேர்க்கைகளாலோ அவர்களுக்குக் கெட்ட பெயர்தான்.

விபசார தரகர் டில்லி திவேதி சாமியார்

அதிகம் படிக்கவே செய்யாத 39 வயது திவிவேதி டில்லியில் செக்யூரிடி பாதுகாவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் மசாஜ் பார்லர் பணியாளராக மாறினார். சதைத் தொழில் நடத்தியதற்காகவும், திருட்டுக் குற்றத்துக்காகவும் பல முறை கைது செய்யப்பட்ட இவர் தன்னைத்தானே சந்த் சாமி பீமானந்த்ஜீ மகராஜ் சித்ர-கூட்வேல் என்று அழைத்துக் கொண்-டார். உயர்ரக விபச்சார விடுதியாக செயல்பட்டு வந்த அவரது ஆசிர-மத்தில் இல்லாமல், இப்போது அவர் சிறையில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறார். ஆளுக்குத் தகுந்தபடி ஒழுக்கக் கொள்கையை மாற்றிக் கொள்ளும் உடுப்பி மடம்

இது போன்று எவரோ ஒருவரை வைத்துக் கொண்டு மொத்த ஆன்மிக பெருமக்களையும் குறைகூறக்கூடாது என்று சிலர் கூறுவர். ஆனால் இது தவறான கருத்தாகும். மிகவும் தொன்மை வாய்ந்ததும், பாரம்பரியம் மிக்கதுமாகக் கருதப்படுவதுமான மாத்வ பிரிவைச் சேர்ந்த உடுபி ஷிரூர் சாமி லட்சுமிவார தீர்த்த மடத்துக்கு மூன்றாவது முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பரய சாமிக்கு 15 ஆண்டு காலமாக ஒரு பெண்-ணுடன் பாலியல் தொடர்பு உள்ளது என்று தெரிந்த பிறகும் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் என்றால் என்னவென்று சொல்வது?

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த மடத்து தலைவராக தேர்ந்-தெடுக்கப்பட்ட ஒருவர் கடல் கடந்து பயணம் செய்தவர் என்ற ஒரே கார-ணத்துக்காக கிரஷ்ண விக்ரகத்தைத் தொடக்கூட அனுமதிக்கவில்லை. அதற்கு முன்பு, தனது பக்தர் ஒருவரின் மகளின் மீது தான் காதல் கொண்டு விட்டதாகவும், அவரை மணந்து கொள்ள இருப்பதாகவும் வித்யா பூஷண சாமி கூறியபோது, அவ-ருக்கு எதிராக மாதவ மடம் திரண்டு எழுந்தது. அவர் தனது துறவைக் கைவிட்டு-விட்டார் என்ற போதும், அவரது நேர்மைக்காகப் பாராட்டப்-பட்டார். அவரது பஜனைகளுக்கு மக்கள் கூட்டம் குவிந்தது; அவரது நிகழ்ச்சிகளின் குறுந்தகடுகள் பெரும் அளவில் விற்பனை ஆயின.

பெண் துறவிகளை கருவுறச் செய்த ஜைனத்துறவி

யார் அதிக அளவு எண்ணிக்கையி-லான பக்தைகளைக் கெடுத்தது என்பதில் ஜெய்பூரில் இருந்த இரு ஜைன முனிவர்களிடையே போட்டி ஏற்பட்டது. இதுபற்றி பக்தர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தபோது, ஒரு முனிவர் தற்கொலை செய்து கொண்டார். வேறு இடத்தில் இருந்த மற்றொருவர் புலியை-யும் சைவமாக வளர்க்க முடியும் என்று சொல்லி வந்தவர். இந்த முனிவர், இரண்டு பெண் ஜைனத் துறவிகளைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வந்தார். பல முறை அவர்-கள் கருவுற்று, பின்னர் அவரால் கருக்-கலைப்பு செய்யப்பட்டவர்கள். இந்-நிகழ்ச்சியைத் தொடர்ந்து எழுந்த கூச்சலும், எதிர்ப்பும் அதிக நாள்கள் நீடிக்கவில்லை. தவறு செய்தவர்களைத் தண்டித்து வெளியேற்றுவது என்பது இல்லாமல், பணபலத்தினால் இந்த நிகழ்ச்சி பற்றிய விவரமே மூடி மறைக்-கப்பட்டு புதைக்கப்பட்டது.

பாதிரியாரின் ஒழுக்கக் கேட்டை பார்த்ததால் கொலை செய்யப்பட்ட பெண்

அதனைஅடுத்து, கேரளாவில் பாதிரியார் ஒருவரால் நடத்தப்பட்ட கிறித்-தவ அமைப்பைச் சார்ந்த கன்னியாஸ்திரீ ஒருவரும் ஓர் ஆணும் கொலை செய்-யப்பட்ட வழக்கு ஒன்று எழுந்தது. பாலியல் உறவு கொண்டிருந்ததைக் கண்-டதுதான் கொலையுண்ட பெண் செய்த குற்றம். இந்த வழக்கை மூடி முறைக்க அனைத்து வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மத்தியப் புலனய்வுத் துறை அதிகாரி ஒருவரின் தீவிர விசாரணையில் முழு உண்மையும் வெளிவந்தது.

வெளிச்சத்துக்கு வரும் நிகழ்ச்சி ஒன்று என்றால், வெளியே வராதவை நூறு இருக்கின்றன

வெளிச்சத்துக்கு வரும் ஒவ்வொரு வெட்கப்படத்தக்க நிகழ்ச்சி ஒன்று என்றால், இது போன்ற செய்தி வெளி-வராத நிகழ்ச்சிகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அப்படியிருக்கும்போது மக்கள் கூட்டம் ஏன் சாமியார்களையும், சாமி-யாரிணிகளையும் தேடிச் செல்கிறது? ஆன்மிக ஆறுதலைத் தேடிச் செல்-கிறோம் என்று அவர்கள் கூறுவதே ஒரு ஏமாற்றுவேலை. தங்களின் உண்மை-யான அல்லது கற்பனையிலான பிரச்-சினைகள் இது போன்ற சாமியார்களின் பக்கத்தில் இருந்தால் தீர்ந்துவிடும் என்று இந்தப் பக்தர்கள் (இவர்களும் சில-நேரங்களில் கயவர்களே) கருதுவதுதான் உண்மையான காரணமாக இருக்கக்-கூடும்.

நன்றி: தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ், 29.3.2010

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

விடுதலை